Thaiman Ula!
()
About this ebook
“தோகை ராஜா” இச்சிறுகதையில், பள்ளியில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பரிசாக மயிலை பெற்றாள் பூரணி. அவளின் அப்பாவால் மயிலுக்கு நேர்ந்தது என்ன? அதன்பின் நடந்தது? என்ன என்பதையும் மாணவர்களுக்கான சுற்றுலாப் போட்டிதான் “தாய்மண் உலா” போட்டி. இப்போட்டிக்கு பத்து மாணவர்கள் தேர்வாகி சிங்கம், புலி என சிறு குழுவாக பிரிகின்றனர். இறுதியில் எந்த குழு வெற்றி பெற்றது? என்பதையும் தேசிய உணர்வின் சிறப்பைச் சித்தரிக்கும் இன்னும் சில சிறுகதைகளையும் வாசிப்போம் வாருங்கள்...
Read more from S.R.G. Sundaram
Pongal Parisu! Rating: 0 out of 5 stars0 ratingsVidumuraiyil Vilaiyada Vinotha Vidukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPappa Magizha 10 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSirikka Sirikka Nadikalam! Rating: 0 out of 5 stars0 ratingsNooravathu Iragu Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsPuthaga Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsParisu Tharum Perumai! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thaiman Ula!
Related ebooks
Puthaga Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsParisu Tharum Perumai! Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kanigal! Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nool Vaangalam - Part 1 & 2 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ennum Vinthaiyil (Vi)chithira Kavi Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsEn Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsMazhalai Ulagu Rating: 0 out of 5 stars0 ratingsVaasa Kootti Manaparapi Vandhe Paaradi Naadiyamba Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsGnanathin Vaayil Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Ilakkiya Aaraichi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsThinathorum Deiveegam Rating: 0 out of 5 stars0 ratingsManida Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsPaanaikkul Pona Yaanai! Rating: 0 out of 5 stars0 ratingsAppavai Azhaithu Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Rating: 0 out of 5 stars0 ratingsSilaiyum Neeye Sirpiyum Neeye Rating: 0 out of 5 stars0 ratingsIraivanai Naadu! Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Valaitheduthu Rating: 0 out of 5 stars0 ratingsPatta Kettu Manu Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsThaatha Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sankara Vijayam Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalin Snegithar AL. Valliappa 100 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsSathanai Semmal Sa.Ve.Su. Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thaiman Ula!
0 ratings0 reviews
Book preview
Thaiman Ula! - S.R.G. Sundaram
https://www.pustaka.co.in
தாய்மண் உலா!
(வல்லரசிற்கு வலிமையூட்டும் சிறுவர்களுக்கான சிறுகதைகள்)
Thaiman Ula!
Author:
எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்
S.R.G. Sundaram
For more books
https://www.pustaka.co.in/home/author/srg-sundaram
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியர் சிறப்பு
ஒப்பில்லாப் பரிசு!
நன்றி சொல்ல நல்ல நாள்!
எது சுதந்திரம்?
மூன்றும் தெரியுமா?
தோகை ராஜா!
பல்சக்கரம்
இராணுவப் பொம்மை
வானில் பறந்த வாணம்!
தாமரைக் குளம்
பகிர்ந்தால் வெற்றி
தாய்மண் உலா!
துளஸியம்மா!
நூலாசிரியர் பற்றி...
சிறுவர் இலக்கியங்களுக்காக இந்நூலாசிரியர் பெற்றுள்ள விருதுகளும் பரிசுகளும்
என்றும் சுவைதரும் எமது நூல்கள்
மாணவர்கள் சிறந்தால்
மண்ணுலகம் மாண்புறும்!
ஆசிரியர் சிறப்பு
குழந்தை இலக்கியச் செம்மல், கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், எம்.ஏ;
(அகவை 83ல்)
பிறந்தநாள்: 21.08.1940
1. குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும்
என்பதே இவரது குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமான கொள்கை.
2. தன் பதினேழாவது அகவை முதல் இன்றுவரை தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற்கானப் பன்முகப் படைப்புகளில் ஈடுபட்டு வருகிறார். கதை, பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், கட்டுரைகள் நூல்கள் எனப் பலப்பல.
3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், ரா. அய்யாசாமி (வானொலி அண்ணா), கூத்தபிரான் - இவர்களது வழிகாட்டுதலால் தன் குழந்தை இலக்கியப் பாதையை வகுத்துக் கொண்டவர்.
4. குழந்தை இலக்கியத்தின் அவசியம், அதன் சிறப்பு, தமிழ் மொழிப்பற்று இவை பற்றிய சித்தனைகளைப் பரப்பி வருகிறார்.
5. குழந்தை இலக்கிய எழுத்தாளராக, சிறுவர் சங்க அமைப்பாளராக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நூல்கள் படைப்பவராக, பல பிரபல நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக எனக் குழந்தை இலக்கியப் பணியில் பல கோணங்களில் ஆர்வமுடன் இன்றும் செயலாற்றி வருகிறார்.
6. பொதிகை, ஜெயா, மக்கள், கலைஞர் தொலைக்காட்சிகளும், சென்னை வானொலியும், தென்றல் (வட அமெரிக்க மாத இதழ்) தினமணி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, பொதிகை மின்னல், ஆத்திமாலை, அமுதசுரபி, சென்னை எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் இவரைப் பேட்டி கண்டுள்ளன. அளித்துள்ள பேட்டிகள்: 18.
7. இவரது சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.ஃபில்.’ முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சார்ந்த பத்து நாள் குழந்தை இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்டு கதையாக்கம் பற்றி உரையாற்றி, கதைகள் புனைந்து தந்துள்ளார்.
9. அரசு மற்றும் தனியார்துறை இவருக்களித்துள்ள விருதுகள் பல. அவற்றுள் வள்ளியப்பா இலக்கியவட்ட விருது, என்.சி.இ.ஆர்.டி(NCERT) விருது, சென்னைத் துறைமுக விருது, பாரதி பணிச்செல்வர் விருது, கவிமாமணி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
10. சிறுவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 21
11. பெரியவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 10
12. பல நூல்கள் ஏறக்குறைய ஐம்பது பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக இருந்து வந்துள்ளன.
13. இவரது படைப்புகள் வெளியாகியுள்ள சிறுவர் ஏடுகளும் பல. அண்மையில் வானொலியிலும் (நவம்பர் 2022, பிப்ரவரி 2023), பொதிகை தொலைக்காட்சியிலும் (பிப்ரவரி 2023), சிறுவர் நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.
14. பல பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
15. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற பாப்பா மகிழ பத்துக் கதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.
16. படைத்துள்ள சிறுவர் இலக்கிய நூல்கள் - 16, பெரியவர் இலக்கிய நூல்கள் - 9.
17. புத்தகப் பூமாலை எனும் இவரது நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் சிகரம் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு, இவரது கரங்களால் உருவாக்கப்பட்ட புத்தகங்களாலான ஐந்தரை அடி நீள புத்தக மாலை அணிவிக்கப்பட்டது. புரட்சி மாலை
எனப் பத்திரிகையுலகால் பாராட்டப்பட்டது.
18. உரத்த சிந்தனை அமைப்பின் பல கிளைகளுள் ஒன்றான மடிப்பாக்கம் கிளையின் பொறுப்பாளராகப் பணியாற்றி பாராட்டு பெற்றுள்ளார். இவா நடத்தும் பாற்கடல் சிறுவர் சங்கம் பற்றிய நேர்முகப் பேட்டிக்கட்டுரை அமுதசுரபி ‘மே-2022’ இதழில் வெளியாகியுள்ளது. சென்ற 29.05.2022 அன்று, இவர் நடத்திவரும் பாற்கடல் சிறுவர் சங்கம் தனது 44-ஆம் ஆண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
யூ-டியூபில்
19. யூ-டியூபில் Drama by Parkadal Siruvar Sangam' என்று டைப் செய்தால் இவர் எழுதித் தயாரித்த
நீலக்கடல் ஓரத்திலே" (கடல் மாதா) எனும் பாட்டுடை நடனத்தைக் (15 மணித்துளிகள்) கண்டுகளிக்கலாம்!, இந்நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டு பராட்டப்பட்ட நாடகமாகும்.
20. ‘சுந்தரம் தாத்தா கதைகள்' என்ற தலைப்பிலும் இவரது கதைகள், பாடல்கள் திருமதி வேதவல்லி, திருமதி சுமித்ரா இவர்களால், குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன.
21. தொகுப்பு நூல்களில் 2021ம் ஆண்டு சாகித்ய அகேடமியின் சிறுவர் நாடகக் களஞ்சியம்
நூலிலும், 2000 ம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ், 2008-ல் மணிவாசகர் பதிப்பகம் ஆகியோரின் தொகுப்பு நூல்களிலும் இவரது நாடகம் மற்றும் சிறப்பு குழந்தை இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
22. இவரது இலக்கியப் பயணம் இன்றும் தொடர்கிறது.
சிறார் உலகிற்கு அர்ப்பணம்
தேசிய உணர்வின் சிறப்பைச் சித்தரிக்கும் சிறுகதைகள் அடங்கிய நூல் இது. எனவே இந்நூலினை, பல அருஞ்செயல்களைப் புரிந்து பாரத விருது, சஞ்சேசோப்ரா, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது, தேசிய விருது எனப் பலவித விருதுகளையும் பெற்றுள்ள, பெறுகின்ற, பெறவிருக்கும் தந்நலம் கருதா வீரதீரச் சிறுவர் சிறுமியர் உலகிற்கு அர்ப்பணம் செய்கிறேன்!
ஆசிரியர்
ஒரு வேண்டுகோள்!
பாரத மக்களுக்கு நாட்டுப்பற்றையும் ஆன்மிகத்தையும் வலியுறுத்தி வீரமுரசு கொட்டியவர் சுவாமி விவேகானந்தர். அவரது கல்வி பற்றிய கொள்கை:-
மாணவ நிலையிலிருந்து, நல்ல மனிதர்களை, பண்பாடுமிக்கச் சான்றோர்களை, நாட்டிற்கும் வீட்டிற்குமாக உருவாக்கும் வகையில் அளிக்கப்படும் கல்வியே (Man - Making Education) நமக்கு வேண்டும்
என்பதுதான். சங்க இலக்கியமான புறநானூற்றுத் தாயும்
"ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே,
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே"
என்றுதான் கூறுகின்றாள். தன் மகனை ஒரு செல்வந்தனாக்கி மகிழ வேண்டும் என்ற வேணவா அவளிடம் இல்லை. பதிலாகச் சான்றோனாக்கிப் பார்க்க வேண்டும் என்றே விழைகின்றாள். திருக்குறளும் சான்றோர்களுக்கே சிறப்பிடம் தருகிறது.
தேசிய உணர்வுடைய ஒரு மனிதனே முழுமையான மனிதனாக மேற்கூறிய சான்றோனாக எண்ணப்படுவான். எனவே தேசிய உணர்வைப் பெறுவதும் அதற்கொப்ப வாழக்கற்றுக்கொள்வதும்கூட கல்வியைச் சேர்ந்ததாகும்.
நாளைய பாரதம் இன்றைய மாணவர் கையில்! இது நூற்றுக்கு நூறு உண்மை. ஆம்! நாளைய பாரதத்தை ஆளவிருக்கும் இன்றைய பரம்பரை நீங்கள்தானே! இக்கூற்று செயல்வடிவமாகி வெற்றிக் கனிகளைப் பெற, ஒரு திறவுகோலும் வேண்டும். அந்தத் திறவுகோல்தான் தேசிய உணர்வு; அதாவது தேசத்தைப் பற்றிய அடிப்படைச் சிந்தனைகள்! இத்தேசிய உணர்வை இளம் வயதிலேயே