Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parisu Tharum Perumai!
Parisu Tharum Perumai!
Parisu Tharum Perumai!
Ebook168 pages59 minutes

Parisu Tharum Perumai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல நல்ல கருத்துக்களைக் கருவாகக்கொண்டு இக்கதைகள் உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுதற்குரியது. தான் சந்தித்த அனுபவங்களின் தாக்கத்தாலும் நற்பழக்கங்களை உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தாலும் உருவான விழிப்புணர்ச்சியூட்டும் பல கதைகள் அடங்கிய நூலே இது! மாணவர் உலகம் படித்துப் பயன்பெற வித்தியாசமான பார்வையில் படைக்கப்பட்ட படைப்பு!

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580160409425
Parisu Tharum Perumai!

Read more from S.R.G. Sundaram

Related to Parisu Tharum Perumai!

Related ebooks

Reviews for Parisu Tharum Perumai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parisu Tharum Perumai! - S.R.G. Sundaram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரிசு தரும் பெருமை!

    (சிறுகதைகள்)

    Parisu Tharum Perumai!

    (Sirukathaigal)

    Author:

    எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

    S.R.G. Sundaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srg-sundaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் சிறப்பு

    நூல் மதிப்புரை

    நூலாசிரியர் உரை

    பரிசு தரும் பெருமை!

    நல்ல நல்ல சாரணர்கள்!

    கண்ணாடி காட்டிய இரகசியம்!

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

    பாடும் பேனா!

    ஒன்றாக நிற்போம்!

    நேரம் தவறலாமா?

    சின்னச் சின்ன எறும்புகூட...

    நாளை நாளை எண்ணாதே!

    எது அவசியம்?

    தேடுவது ஏன்?

    தொலைபேசியில் ஒருநாள்!

    மாட்டுப் பொங்கல்!

    மஞ்சு ஏன் மாறினாள்?

    அழகு!

    நூலாசிரியர் பற்றி...

    சிறுவர் இலக்கியங்களுக்காக இந்நூலாசிரியர் பெற்றுள்ள விருதுகளும் பரிசுகளும்

    என்றும் சுவைதரும் எமது நூல்கள்

    சென்னை, கர்நாடக மாநில உயர்நீதி மன்றங்களின் முன்னாள் நீதியரசரும், மத்திய நிர்வாக சென்னை தனிநீதிமன்றத்தின் முன்னாள் துணைத் தலைவரும், இலக்கிய ஆர்வலரும், பெருமதிப்பிற்குரியவருமான

    நீதியரசர் திரு. கே. எஸ். பக்தவத்சலம் அவர்களின்

    ஆசிரியர் சிறப்பு

    குழந்தை இலக்கியச் செம்மல், கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், எம்.ஏ;

    (அகவை 83ல்)

    பிறந்தநாள்: 21.08.1940

    1. குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும் என்பதே இவரது குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமான கொள்கை.

    2. தன் பதினேழாவது அகவை முதல் இன்றுவரை தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற்கானப் பன்முகப் படைப்புகளில் ஈடுபட்டு வருகிறார். கதை, பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், கட்டுரைகள் நூல்கள் எனப் பலப்பல.

    3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், ரா. அய்யாசாமி (வானொலி அண்ணா), கூத்தபிரான் - இவர்களது வழிகாட்டுதலால் தன் குழந்தை இலக்கியப் பாதையை வகுத்துக் கொண்டவர்.

    4. குழந்தை இலக்கியத்தின் அவசியம், அதன் சிறப்பு, தமிழ் மொழிப்பற்று இவை பற்றிய சித்தனைகளைப் பரப்பி வருகிறார்.

    5. குழந்தை இலக்கிய எழுத்தாளராக, சிறுவர் சங்க அமைப்பாளராக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நூல்கள் படைப்பவராக, பல பிரபல நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக எனக் குழந்தை இலக்கியப் பணியில் பல கோணங்களில் ஆர்வமுடன் இன்றும் செயலாற்றி வருகிறார்.

    6. பொதிகை, ஜெயா, மக்கள், கலைஞர் தொலைக்காட்சிகளும், சென்னை வானொலியும், தென்றல் (வட அமெரிக்க மாத இதழ்) தினமணி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, பொதிகை மின்னல், ஆத்திமாலை, அமுதசுரபி, சென்னை எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் இவரைப் பேட்டி கண்டுள்ளன. அளித்துள்ள பேட்டிகள்: 18.

    7. இவரது சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.ஃபில்.’ முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சார்ந்த பத்து நாள் குழந்தை இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்டு கதையாக்கம் பற்றி உரையாற்றி, கதைகள் புனைந்து தந்துள்ளார்.

    9. அரசு மற்றும் தனியார்துறை இவருக்களித்துள்ள விருதுகள் பல. அவற்றுள் வள்ளியப்பா இலக்கியவட்ட விருது, என்.சி.இ.ஆர்.டி(NCERT) விருது, சென்னைத் துறைமுக விருது, பாரதி பணிச்செல்வர் விருது, கவிமாமணி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    10. சிறுவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 21

    11. பெரியவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 10

    12. பல நூல்கள் ஏறக்குறைய ஐம்பது பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக இருந்து வந்துள்ளன.

    13. இவரது படைப்புகள் வெளியாகியுள்ள சிறுவர் ஏடுகளும் பல. அண்மையில் வானொலியிலும் (நவம்பர் 2022, பிப்ரவரி 2023), பொதிகை தொலைக்காட்சியிலும் (பிப்ரவரி 2023), சிறுவர் நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

    14. பல பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

    15. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற பாப்பா மகிழ பத்துக் கதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

    16. படைத்துள்ள சிறுவர் இலக்கிய நூல்கள் - 16, பெரியவர் இலக்கிய நூல்கள் - 9.

    17. புத்தகப் பூமாலை எனும் இவரது நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் சிகரம் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கு, இவரது கரங்களால் உருவாக்கப்பட்ட புத்தகங்களாலான ஐந்தரை அடி நீள புத்தக மாலை அணிவிக்கப்பட்டது. புரட்சி மாலை எனப் பத்திரிகையுலகால் பாராட்டப்பட்டது.

    18. உரத்த சிந்தனை அமைப்பின் பல கிளைகளுள் ஒன்றான மடிப்பாக்கம் கிளையின் பொறுப்பாளராகப் பணியாற்றி பாராட்டு பெற்றுள்ளார். இவா நடத்தும் பாற்கடல் சிறுவர் சங்கம் பற்றிய நேர்முகப் பேட்டிக்கட்டுரை அமுதசுரபி ‘மே-2022’ இதழில் வெளியாகியுள்ளது. சென்ற 29.05.2022 அன்று, இவர் நடத்திவரும் பாற்கடல் சிறுவர் சங்கம் தனது 44-ஆம் ஆண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.

    யூ-டியூபில்

    19. யூ-டியூபில் Drama by Parkadal Siruvar Sangam' என்று டைப் செய்தால் இவர் எழுதித் தயாரித்த நீலக்கடல் ஓரத்திலே" (கடல் மாதா) எனும் பாட்டுடை நடனத்தைக் (15 மணித்துளிகள்) கண்டுகளிக்கலாம்!, இந்நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டு பராட்டப்பட்ட நாடகமாகும்.

    20. ‘சுந்தரம் தாத்தா கதைகள்' என்ற தலைப்பிலும் இவரது கதைகள், பாடல்கள் திருமதி வேதவல்லி, திருமதி சுமித்ரா இவர்களால், குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன.

    21. தொகுப்பு நூல்களில் 2021ம் ஆண்டு சாகித்ய அகேடமியின் சிறுவர் நாடகக் களஞ்சியம் நூலிலும், 2000 ம் ஆண்டில் பழனியப்பா பிரதர்ஸ், 2008-ல் மணிவாசகர் பதிப்பகம் ஆகியோரின் தொகுப்பு நூல்களிலும் இவரது நாடகம் மற்றும் சிறப்பு குழந்தை இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

    22. இவரது இலக்கியப் பயணம் இன்றும் தொடர்கிறது.

    நூல் மதிப்புரை

    எந்தக் குழந்தையும் பிறக்கும்போது நல்லவனாகவோ கெட்டவனாகவோ பிறப்பதில்லை. பெற்றோர்களின் வளர்ப்பு முறைகளால், சமுதாயச் சூழ்நிலைகளால், அவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தித் தரும் வழிகளால் அக்குழந்தைகள் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ உருவாக்கப்படுகிறார்கள்.

    கருவுற்ற ஒரு தாய் உயரிய இலட்சியங்களையும், சிறந்த அறிவுரைகளையும் உள்ளடக்கியப் புத்தகங்களைப் படிப்பதனால், அவளுக்குப் பிறக்கவிருக்கும் ஒரு குழந்தை சிறந்த மனிதனாக உருவாகி வளரும் வாய்ப்பினைப் பெறுகிறது என்று கூறுவர். மகாபாரதத்தில் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோது, போர் முறைகளில் ஒன்றான பத்ம வியூகத்தைப் பற்றியும், அதனைத் தகர்த்து உள்ளே முன்னேறும் முறை பற்றியும் கண்ணன் வாயிலாகக் கேட்க நேரிடுகிறது. ஆனால் அதே வியூகத்திலிருந்து வெளிவரும் முறையை கருக் குழந்தை அபிமன்யு அறிந்துகொள்ள முடியாமற் போய்விடுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பிற்காலத்தில் போர்க்களத்தில் பத்மவியூ கத்திற்குள் செல்ல முடிந்த அபிமன்யு வெளிவரும் முறை அறியாது இன்னுயிர் இழக்கின்றான். வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் காணக் கிடைக்கும் இவை போன்ற பல உதாரணங்கள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை கருவிலே உருவாகும் அருமைக் குழத்தைகளைப் பாதிக்கும் தன்மையை உணர்த்தவல்லன.

    இந்த அருமைக் குழந்தைகள் அனைவரும் விரும்பிக் கேட்பது கதைகள்! உண்ணும்போதும், உறங்கும்போதும் குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகமிகப் பிடிக்கும். இந்தச் சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகளுக்கு அவர்கள் பயனுறும் வகையில் நல்ல பயனுள்ள கதைகளைச் சொல்வதால் அல்லது படிக்கக்கூடிய மாணவ மணிகள் அத்தகைய பயனுள்ள பண்படுத்தக்கூடிய கதைகள் அடங்கிய புத்தகங்களைப் படிக்கச் செய்வதால் அவர்களது வாழ்வு சிறப்புறும். அதனால் நம் நாடும் பயனடையும்!

    நண்பர் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் அவர்கள் இந்த அற்புதமான அவசியமான பணியைத்தான் குழந்தைகள் உலகிற்கும் மாணவர் உலகிற்கும் ஆற்றி, இவ்வழி இந்த நாட்டிற்கும் நற்பணி ஆற்றியிருக்கிறார்கள் - ஆற்றி வருகிறார்கள்.

    குழந்தைகளுக்காக நண்பர் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் இதுவரை பல கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவைகள் அத்தனையும் குழந்தைகளுக்கு நல்ல பயன் தருவதாக அமைந்துள்ளன. அதைப் போன்றே இப்பொழுது அவர் எழுதிப் படைத்திருக்கும் ‘பரிசு தரும் பெருமை’ என்ற (பதினைந்து சிறுகதைகள் அடங்கிய) இச்சிறுகதைத் தொகுப்பு நூல், சிறுவர் சிறுமியர் உலகம் சிறப்படையும் வகையில் அமையும் என்றும், இவ்வழிச் சிறப்புறும் மாணவமணிகளால் வீடும், நாடும் பயன்பெறும் என்றும் நம்புகிறேன்.

    இந்தக் கதைத் தொகுப்பில் அடங்கியிருப்பவை பதினைந்து சிறுகதைகள். இவை ஒவ்வொன்றும் மாணவர் உலகம் மாண்புறும் வகையில் சிந்திக்கப்பட்ட கருத்துக்கள் பலவற்றைக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

    சிறுவர், சிறுமியர் தங்கள் அறிவிற்கும், முயற்சிக்கும் திறமைக்கும் கிடைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அதைப் பாதுகாக்க வேண்டும், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் வேலைகளைக் கவனம் சிதறாமல் ஒருமுனைப்பட்ட மனத்தோடு செய்ய வேண்டும். பேராசைப்படுதல் பேரிழப்பைத் தரும். பிறர் பொருள்கள்மேல் பற்று வையாமை, ஒற்றுமை உணர்வினை

    Enjoying the preview?
    Page 1 of 1