Parakkum Yaanaiyum Pesum Pookkalum
By Umayavan
()
About this ebook
குழந்தைகள் கற்பனை உலகில் வாழ்பவர்கள் அவர்களுடைய இலக்கியம் மனமகிழ்ச்சிதான். மனித இயலுக்கு மீறிய வலிமை உடைய, பீமன், அனுமன் ஆகியோர் பற்றிய கதைகளில் அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். அறிவியல் புதுமைகளும் விழிப்புணர்வும் மேம்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும் 'ஹாரிபாட்டர்' புத்தகங்களும், திரைப்படங்களும் வெற்றி பெற்று வருவதற்கு இதுதான் காரணம்.
குழந்தைகளிடத்தில் அறிவியலைத் திணிப்பதை நான் வரவேற்கவில்லை. தேவையான நேரத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உண்டு.
"குழந்தைகளே... ஆகாய விமானம் என்று சொல்லக்கூடாது. அதைப் பறவைக்கப்பல் என்று சொல்லுங்கள்" எனப் புலவர் தணிகை உலகநாதன் ஒரு மாணவர் கூட்டத்தில் பேசினார். “கப்பல் எப்படி ஆகாயத்தில் பறக்கும்?” என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.
"சரி. சரி. உங்களுக்கு இந்த வயதில் அது தெரியாது" என்றார் தணிகை உலகநாதன். உண்மைதான். தேவையான நேரத்தில் அது நல்ல தமிழ்ச்சொல் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மகாகவி பாரதியார் ‘கற்பனையூர்' என்ற மொழி பெயர்ப்புக் கவிதையில்,
‘குழந்தைகள் ஆட்டத்தின் கனவையெல்லாம் – அந்தக் கோல நன்னாட்டிடைக் காண்பீரே.’
என்று பாடியுள்ளார். அவர்களது அரசாங்கம் கற்பனையும் மகிழ்ச்சியும் நிறைந்தது.
இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்ட கவிஞர் உமையவன், அருமையான கற்பனை மூலம் இந்த நூல் முழுதும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். அனைத்துக் கதைகளையும் குழந்தைகள் விரும்புவார்கள். நல்ல படங்களுடன் இந்நூல் வெளிவரவேண்டும், என்பது என் விரும்பம்.
சுட்டி எலி (சுண்டெலி) பற்றி ஒரு கதை. தேர்ந்த சிறுகதையாசிரியரைப் போல அருமையான திருப்பத்துடன் கதையை முடித்திருக்கிறார்.
தின்பண்டங்கள் உள்ள ஜாடி திறந்திருக்கிறது. சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த எலிகள் ஜாடிக்குள் சென்று ஒரு கை பார்க்கின்றன. ஜாடி மூடப்படும்போது சுட்டி எலி தவிர மற்றவை தப்பி விடுகின்றன.
(அடடா... நம் எலி உலகில் நண்பர்களைக் காண முடியாமல் அகப்பட்டுக் கொண்டோமே) என சுட்டி எலி வருந்துகிறது.
இங்கே ஒரு திருப்பம்.
வீட்டுக்காரர் வீடு மாற்றுகிறார். சாமான்களுடன் ஜாடியும் செல்கிறது. சுட்டி எலியின் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பாருங்கள்.
இங்கே மறுபடியும் ஒரு திருப்பம்.
வண்டி நிற்கிறது.
'தப்பித்தோம்' என்று சுட்டெலி மகிழ்கிறது. பழைய வீட்டுக்காரர் ஜாடியைத் திறந்தார்
சுட்டெலி வெளியே குதித்து, தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டது.
இந்த ஒரு கதை பெரிய பெரிய படங்களுடன் பலமொழிகளில் வெளிவந்தால் உமையவன் சர்வதேச எழுத்தாளர் ஆகிவிடுவார்.
என்னுடைய கவிதைகளைப் போலவே, அணிந்துரையும் சுருக்கமானது.
குழந்தைகளே! படித்து மகிழுங்கள். பெரியவர்களே..... கொஞ்சநேரம் குழந்தைகளாக மாறுங்கள்.
அன்புடன்
கவிமாமணி இளையவன்
Read more from Umayavan
Mazhalai Ulagu Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Malai Rating: 0 out of 5 stars0 ratingsAagaya Veedu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Parakkum Yaanaiyum Pesum Pookkalum
Related ebooks
Malarum Ullam Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPappa Magizha 10 Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAppaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratingsPesum Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPaanaikkul Pona Yaanai! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Aathichoodi Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsPongal Parisu! Rating: 0 out of 5 stars0 ratingsThaatha Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKadal Kozhigal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsMallikavin Veedu Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsThalaiyali Rating: 0 out of 5 stars0 ratingsTherke Anbumaha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthapadatha Theerpugal Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsSiruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Devathai Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5Urulaikilangu Chellakutty Rating: 0 out of 5 stars0 ratingsVeril Pazhutha Palaa Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Ambani Thaan Rating: 0 out of 5 stars0 ratingsRayil Vandi Rating: 0 out of 5 stars0 ratingsSuvadugalum Suvadigalum Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Rating: 0 out of 5 stars0 ratingsIlaiya Bharatham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Parakkum Yaanaiyum Pesum Pookkalum
0 ratings0 reviews
Book preview
Parakkum Yaanaiyum Pesum Pookkalum - Umayavan
http://www.pustaka.co.in
பறக்கும் யானையும் பேசும் பூக்களும்
(சிறுவர்களுக்கான கதைகள்)
Parakkum Yaanaiyum Pesum Pookkalum
(Siruvargalukkana Kathaigal)
Author:
உழவுக்கவிஞர் உமையவன்
Uzhavu Kavingar Umayavan
For more books
http://www.pustaka.co.in/home/author/umayavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
அணிந்துரை - கவிமாமணி இளையவன்
அணிந்துரை - காந்தலக்ஷ்மி சந்திரமௌலி
என்னுரை
1. பறக்கும் யானையும், பேசும் பூக்களும்
2. தலையூரில் தரை இறங்கிய பேன்
3. சிறகு முளைத்த இறகுப் பந்து!
4. பறவைகள் நடத்திய பள்ளிக்கூடம்!
5. கற்பனைக் காடு!
6. ஜாடிக்குள் சுண்டெலி!
7. தாய்க்கோழியும், மஞ்சக் கோழிக்குஞ்சும்!
8. ஒரு கிராமத்துப் பயணம்!
9. எலிகள் கொண்டாடிய சுதந்திர தினம்!
10. வாக்கிங் சென்ற மரங்கள்!
11. பட்டாம்பூச்சிகள் கொண்டாடிய தீபாவளி!
12. மன்னனின் விபரீத ஆசை!
13. காட்டுலயும் டெங்குக் காய்ச்சல்!
14. கூவத்தில் கப்பல் விட்ட சிறுவன்!
15. விலங்குகள் கொண்டாடிய பொங்கல்
16. தன் குறிப்பு
*****
அணிந்துரை
சர்வதேச எழுத்தாளர் உமையவன்
குழந்தைகள் கற்பனை உலகில் வாழ்பவர்கள் அவர்களுடைய இலக்கியம் மனமகிழ்ச்சிதான். மனித இயலுக்கு மீறிய வலிமை உடைய, பீமன், அனுமன் ஆகியோர் பற்றிய கதைகளில் அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். அறிவியல் புதுமைகளும் விழிப்புணர்வும் மேம்பட்டிருக்கிற இந்தக் காலத்திலும் 'ஹாரிபாட்டர்' புத்தகங்களும், திரைப்படங்களும் வெற்றி பெற்று வருவதற்கு இதுதான் காரணம்.
குழந்தைகளிடத்தில் அறிவியலைத் திணிப்பதை நான் வரவேற்கவில்லை. தேவையான நேரத்தில் அதைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உண்டு.
குழந்தைகளே... ஆகாய விமானம் என்று சொல்லக்கூடாது. அதைப் பறவைக்கப்பல் என்று சொல்லுங்கள்
எனப் புலவர் தணிகை உலகநாதன் ஒரு மாணவர் கூட்டத்தில் பேசினார். கப்பல் எப்படி ஆகாயத்தில் பறக்கும்?
என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.
சரி. சரி. உங்களுக்கு இந்த வயதில் அது தெரியாது
என்றார் தணிகை உலகநாதன். உண்மைதான். தேவையான நேரத்தில் அது நல்ல தமிழ்ச்சொல் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மகாகவி பாரதியார் ‘கற்பனையூர்' என்ற மொழி பெயர்ப்புக் கவிதையில்,
‘குழந்தைகள் ஆட்டத்தின் கனவையெல்லாம் – அந்தக் கோல நன்னாட்டிடைக் காண்பீரே.’
என்று பாடியுள்ளார். அவர்களது அரசாங்கம் கற்பனையும் மகிழ்ச்சியும் நிறைந்தது.
இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்ட கவிஞர் உமையவன், அருமையான கற்பனை மூலம் இந்த நூல் முழுதும் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். அனைத்துக் கதைகளையும் குழந்தைகள் விரும்புவார்கள். நல்ல படங்களுடன் இந்நூல் வெளிவரவேண்டும், என்பது என் விரும்பம்.
சுட்டி எலி (சுண்டெலி) பற்றி ஒரு கதை. தேர்ந்த சிறுகதையாசிரியரைப் போல அருமையான திருப்பத்துடன் கதையை முடித்திருக்கிறார்.
தின்பண்டங்கள் உள்ள ஜாடி திறந்திருக்கிறது. சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த எலிகள் ஜாடிக்குள் சென்று ஒரு கை பார்க்கின்றன. ஜாடி மூடப்படும்போது சுட்டி எலி தவிர மற்றவை தப்பி விடுகின்றன.
(அடடா... நம் எலி உலகில் நண்பர்களைக் காண முடியாமல் அகப்பட்டுக் கொண்டோமே) என சுட்டி எலி வருந்துகிறது.
இங்கே ஒரு திருப்பம்.
வீட்டுக்காரர் வீடு மாற்றுகிறார். சாமான்களுடன் ஜாடியும் செல்கிறது. சுட்டி எலியின் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்துப் பாருங்கள்.
இங்கே மறுபடியும் ஒரு திருப்பம்.
வண்டி நிற்கிறது.
'தப்பித்தோம்' என்று சுட்டெலி மகிழ்கிறது. பழைய வீட்டுக்காரர் ஜாடியைத் திறந்தார்
சுட்டெலி வெளியே குதித்து, தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டது.
இந்த ஒரு கதை பெரிய பெரிய படங்களுடன் பலமொழிகளில் வெளிவந்தால் உமையவன் சர்வதேச எழுத்தாளர் ஆகிவிடுவார்.
என்னுடைய கவிதைகளைப் போலவே, அணிந்துரையும் சுருக்கமானது.
குழந்தைகளே! படித்து மகிழுங்கள். பெரியவர்களே..... கொஞ்சநேரம் குழந்தைகளாக மாறுங்கள்.
அன்புடன் கவிமாமணி இளையவன்
நிறுவனர், இலக்கியச்சாரல்
*****
அணிந்துரை
சிறுவர் இலக்கிய எழுத்தாளர் உருவாகி வருகிறார்
'பறக்கும் யானை' சிறுவர்களுக்கே உரிய, சதா பயணிக்கும்; தேடுதல் நிறைந்த, ஆச்சரியத்திலாழ்த்தும், யோசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும் கதைகள் நிறைந்த புத்தகம்.
கவிஞர், மேடை பேச்சாளர், எழுத்தாளர் என்ற பன்முகம் கொண்ட உமையவன்’ ஒரு இளைஞர் என்று தெரிந்தபொழுது ஆச்சரியமாக இருந்தது.
இன்றைய பரபரப்பான சூழலில் இயங்கிவரும் ஓர் இளைஞர் மிக ஆழமான கருத்துக்களையும், தேவையான ஆலோசனைகளையும் சிறுவர் - சிறுமியருக்கு வழங்குகிறார் என்றால் சிறுவர் உலகிற்குள் பயணிக்கிறார் என்று தெரிகின்றது.
மொத்தம் 15 கதைகள் ஒவ்வொரு கதையிலும் ஓர் உயிரோட்டம் உள்ளது. நகைச்சுவை இழையாக ஓடுகிறது. சில சமயங்களில் 'சட்'