Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appaavi Varikuthirai
Appaavi Varikuthirai
Appaavi Varikuthirai
Ebook136 pages39 minutes

Appaavi Varikuthirai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதை படிப்பது என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. பறவைகள், விலங்குகளை வைத்து கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்த கதை கற்பிக்கும் நீதியை அறிய வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580160509839
Appaavi Varikuthirai

Read more from W.R. Vasanthan

Related to Appaavi Varikuthirai

Related ebooks

Reviews for Appaavi Varikuthirai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appaavi Varikuthirai - W.R. Vasanthan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அப்பாவி வரிக்குதிரை

    (சிறுகதைகள்)

    Appaavi Varikuthirai

    (Sirukathaigal)

    Author:

    வி.ர. வசந்தன்

    W.R. Vasanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    இடம் பெறும் கதைகள்

    முன்னுரை

    1. நரி சொன்ன ஆலோசனை

    2. குரங்கு நண்பன்

    3. தாய் சொல் கேளாத கிளி

    4. ஆபத்தை அறியாத மான்குட்டி

    5. அகம்பாவம் பிடித்த மயில்

    6. ஊனமுற்ற காட்டுப் பன்றி

    7. பொல்லாத முதலை

    8. குழியில் விழுந்த குட்டி யானை

    9. குள்ள வாத்தும் கோணல் கழுத்துக் கொக்கும்

    10. அப்பாவி வரிக்குதிரை

    11. முரட்டுக் காண்டாமிருகங்களும் முட்டாள் நீர்யானைகளும்

    12. பச்சோந்தியும் பவளக்கண் புறாவும்

    முன்னுரை

    அன்புச் சிறுவர் சிறுமியரே,

    கதை கேட்பதென்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா, அதாவது அல்வா சாப்பிடுவதுபோல இனிக்கும்தானே? அதிலும் பறவைகள், விலங்குகள் கதை என்றால் மிகவும் விரும்பிக் கேட்பீர்கள். அதனால்தான் உங்களுக்காக 12 உருவகக் கதைகளை எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறேன்.

    உருவகக் கதைகள் என்றால் என்ன? ஆமையை முயல் முந்திய கதை, தாகமெடுத்த காகம், சிங்கமும் சுண்டெலியும் என்று பல கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அல்லது யூடியூப் போன்ற மின்னணு வலைத்தளங்களில் இயங்கு படங்களாக (அனிமேஷன்) பார்த்திருப்பீர்கள். அவற்றில் மிருகங்கள், பறவைகள், மரங்கள், மலைகள் எல்லாம் மனிதர்களைப்போல சிந்தித்து, மனிதர்களைப்போல பேசி கதை சொல்லும். அதாவது மனித குணத்தையும், மிருகங்களின் குணத்தையும் ஒன்றிணைத்து கதைப்பாத்திரங்களை உருவாக்கி எழுதுபவைதான் உருவகக் கதைகள். இவ்வாறு உருவாக்கம் செய்வதற்கு ‘ஆந்த்ரோபோமார்பிஸம்’ (Anthropomorphism) என்று பெயர்.

    கிரேக்க நாட்டில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் அடிமையாக வாழ்ந்த ஈசாப் (Aeosop) என்பவர்தான் முதலில் உருவகக் கதைகளைச் சொன்னார். பின்னாளில் அவை தொகுக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின.

    உருவகக் கதைகளின் சிறப்பே அவற்றின் முடிவில் ஒரு நல்ல நீதி அல்லது கருத்து வலியுறுத்தப்படுவதுதான். அப்படி ஒரு நற்கருத்தை சொல்வதற்காகவே அந்தக் கதைகள் கட்டமைக்கப்படும்.

    அதே நோக்குடனேயே இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகளை எழுதியுள்ளேன். இக்கதைகளில் சுண்டெலி, யானை, நரி, குரங்கு, முதலை, காண்டாமிருகம், நீர்யானை, மான், காட்டுப்பன்றி, முதலை, பச்சோந்தி, கிளி, புறா, மயில், வாத்து, கொக்கு, மீன்கொத்தி போன்ற மிருகங்களையும். பறவைகளையும் கதை பாத்திரங்களாகப் படிப்பீர்கள்.

    உருவகக் கதைகளுக்கு ஏற்றவாறு அவற்றின் இயல்புகளை மனதில்கொண்டு இவை நல்லனவாகவும், கெட்டனவாகவும் உருவகிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்தக் கதை கற்பிக்கும் நீதியை நீங்கள் கற்றுக்கொள்ளும்படி விளக்கியிருக்கிறேன்.

    இந்தப் பண்புகளை உருவாக்க, மிருகங்கள் மற்றும் பறவைகளின் நடத்தைக்கான அறிவியல் காரணங்களையும் சிறிது ஆய்வு செய்துள்ளேன்.

    கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈசாப் அவர்களை குழந்தை இலக்கியத்தின் தந்தை என்று கொண்டாடுகிறோம். சென்ற 20-ஆம் நூற்றாண்டில், இந்தியாவில், அதுவும் நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு குழந்தைக் கவிஞரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவர்தான் குழந்தைகளுக்காக நூற்றுக்கணக்கான கதைகளையும், ஆயிரக்கணக்கான பாடல்களையும் எழுதிய கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்.

    அது மட்டுமல்லாமல், சங்கு, டமாரம், பாலர்மலர், பூஞ்சோலை, கோகுலம் போன்ற சிறுவர் பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து சிறுவர் இலக்கியம் வளர பாடுபட்டவர். குழந்தை எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தி ஏராளமான குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர்.

    வேறு எதையும் எழுதாமல், தன் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே எழுதிய அந்தப் பெருந்தகையாளரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    ஒருவேளை உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் பெற்றோரிடம் அல்லது தாத்தா, பாட்டியிடம் கேளுங்கள். ஏனென்றால், நிச்சயம் அவர்கள் கவிஞர் அழ. வள்ளப்பாவின் பாடல்களைப் பாடித்தான் வளர்ந்திருப்பார்கள். குறைந்தபட்சம் தங்கள் பள்ளி தமிழ் பாடநூலில் அவர் பாடல்களைப் படித்திருப்பார்கள். கணினியில் கூகுள் தேடலில் போய் தேடினாலும் அவரைப் பற்றிய தகவல்களையும், அவர் உங்களுக்காக எழுதி இருக்கும் கதைகள் மற்றும் பாடல்களையும் காணலாம்.

    அவர் 1922-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி அன்று பிறந்தவர். சென்ற ஆண்டு நவம்பரில், அதாவது 2021 நவம்பரில் அவரது நூற்றாண்டு விழா ஆரம்பமாகியது. எனவே, உங்கள் கைகளில் இருக்கும் இந்நூலை அவரது நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக வெளியிட்டுள்ளோம்.

    - வி.ர.வசந்தன்

    1. நரி சொன்ன ஆலோசனை

    ஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் நல்லயானை. யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. அது வாழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு குளம் இருந்தது. அங்குதான் அந்த யானை தண்ணீர் குடிக்கும்.

    அந்தக் குளக்கரையின் அருகில் இருக்கும் பொந்தில் ஒரு சுண்டெலி வாழ்ந்தது. அதற்கு இந்த யானையைக் கண்டால் ஒரே பயம். தான், சுதந்திரமாக விளையாடுவதற்கு யானை இடைஞ்சலாக இருக்கிறது என்று நினைத்தது சுண்டெலி. அதனால் யானையை எப்படியும் அங்கிருந்து துரத்திவிட வேண்டும் என்று மனதில் கறுவியது.

    எப்படி யானையைத் துரத்துவது என்று எண்ணிய சுண்டெலி, வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கையில் அதன் உதவிக்கு வந்து சேர்ந்தான் நரியண்ணன். இருவரும் நெடுநாட்களாக நண்பர்கள்.

    சுண்டெலியின் முகம் வாடியிருப்பதைப் பார்த்த நரியண்ணன், எலித்தம்பி, உனக்கு என்ன கவலை? முகம் வாட்டமாக இருக்கிறதே, ஏன்? என்று கேட்டது.

    "ஆமாம். அதோ நிற்கிறது பார், ஒரு யானை,

    Enjoying the preview?
    Page 1 of 1