Mangatha Thangam
()
About this ebook
இந்த நாடகத்தில் வரும் கதிரவன் நேர்மைக்கும், சத்தியத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறான். தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட நற்குணங்களை கடைசி வரை விடாது. உண்மைகாகப் போராடி வெற்றியடைந்தானா? இல்லையா? தன் மன ஒளியால், இருண்டு கிடக்கும் நெஞ்சங்களில் ஒளியேற்றப்பட்டதா? படிக்கும் சிற்றர்களின் நெஞ்சங்களில் 'சத்திய தீபம்' ஏற்ற உதவுமா? என்பதை, வி.ர. வசந்தனின் 'மங்காத தங்கம்' நாடகக் கதையின் வாயிலாக காணலாம்...!
Read more from W.R. Vasanthan
Appaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsThalaratha Ullam Rating: 0 out of 5 stars0 ratingsJameen Kottai Rating: 0 out of 5 stars0 ratingsOli Sudar Rating: 0 out of 5 stars0 ratingsUdhayan Engey? Rating: 0 out of 5 stars0 ratingsManjal Roja Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Anbu Rating: 0 out of 5 stars0 ratingsIniya Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsMalaikkottai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mangatha Thangam
Related ebooks
Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsMutru Pulliyil Arambam Rating: 5 out of 5 stars5/5Indhumathi Muthukkal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsBrindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Mudiyatha Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsGopura Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Part-2 Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Annachi vs Annachi Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Mom From India Rating: 0 out of 5 stars0 ratingsPaalangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pizhaigal Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsVeppamara Theankoodu... Rating: 0 out of 5 stars0 ratings47 Natkal Rating: 4 out of 5 stars4/5Gopuram Rating: 0 out of 5 stars0 ratingsPongalo Pongal Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsMullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsSirithu Sirithu Ennai... Rating: 5 out of 5 stars5/5Visithira Arasar Rating: 0 out of 5 stars0 ratingsRajamadhangi Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Thotravan Theerpu Rating: 5 out of 5 stars5/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Mangatha Thangam
0 ratings0 reviews
Book preview
Mangatha Thangam - W.R. Vasanthan
https://www.pustaka.co.in
மங்காத தங்கம்
Mangatha Thangam
Author:
வி.ர. வசந்தன்
W.R. Vasanthan
For more books
https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அறிமுக உரை
காட்சி - 1
காட்சி - 2
காட்சி - 3
காட்சி - 4
காட்சி - 5
காட்சி - 6
காட்சி - 7
காட்சி - 8
காட்சி - 9
காட்சி - 10
காட்சி - 11
காட்சி - 12
காட்சி - 13
காட்சி - 14
காட்சி - 15
காட்சி - 16
காட்சி - 17
காட்சி - 18
காட்சி - 19
காட்சி - 20
அறிமுக உரை
இளம் நாற்றுகள் வேர்ப் பிடித்து, மெல்லிய பச்சைப்பட்டாகக் காற்றில் அசைந்தாடிச் சிரிக்கும் அழகான வயல்வெளியைக் கண்ணுறும்போது நமக்குள் ஒரு சிலிர்ப்பு தோன்றுகிறது. மனதில் குளிர்ச்சாரல் வீசுகிறது. அதே வேளை, நாளை பயன்பெறும் நோக்கில், அதைப் பேணி வளர்த்த விவசாயியின் உழைப்பும், கரிசனையும் நம் மனவெளியில் நிழலாடுகிறது.
சிறுவர் இலக்கியம் என்ற பசும் வயல் தமிழ் மண்ணில் செழித்து நிற்க, நீரும், எருவும் இட்டு வளர்த்தவர் குழந்தைக் கவிஞர் அமரர் அழ. வள்ளியப்பா அவர்கள். அவரது உழைப்பும் உறுதுணையுமே இத்துறைக்கு ஆணிவேர்.
இளம் நாற்றுகளான சிறுவர்களின் மன வயலில் களை வளர்ந்து, காடு மண்டி விடாதிருக்க, அரிய கருத்துகளை எளிய இனிய சந்தப் பாடல்களில் பாடிப் பாடி பண்படுத்தியவர். அத்துடன் நில்லாமல் சிறுவர் இலக்கியத்துக்குத் தன் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்திருந்தார் அப்பெருந்தகை. அவர் உரமூட்டி வளர்த்த பல எழுத்தாளர்களுள் நானும் ஒருவன் என்பதில் எனக்குப்பெருமை.
அன்னார் உருவாக்கி, உயிர் தந்து காத்த குழந்தை எழுத்தாளர் சங்கம் 1987-ஆம் ஆண்டு நடத்திய இலக்கியப் போட்டியில், நாடகத் துறையில், ஏ.வி.எம் நிறுவனத்தினர் வழங்கும் முதற் பரிசான தங்கப்பதக்கத்தைப் பெற்று சிறப்படைந்தது இந்த ‘மங்காத தங்கம்’.
அதே வருடம், கோவை மாநகரில் நடைபெற்ற எட்டாவது குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் மத்திய அமைச்சராக இருந்த திரு. ப. சிதம்பரம் அவர்களால் பரிசு வழங்கி பாராட்டப் பெற்றது. சென்னைத் தொலைக்காட்சியும் அதைப் பேட்டியுடன் ஒளிபரப்பியது.
பலமுறை சுத்தம் செய்து, புடமிட்ட பின்னரே மண்ணோடு மண்ணாக மருவிக்கிடக்கும் தங்கம் மங்காத தங்கமாக மின்னுகிறது. அவ்வாறே வாழ்வில் சந்திக்க நேரிடும் இடையூறுகளிலும், துன்பங்களிலும் தங்கள் நற்குணங்களை மங்காமல் காத்துக்கொள்பவர்களே புடமிட்ட தங்கங்களாக ஜொலிக்கிறார்கள்.
இந்த நாடகத்தில் வரும் கதிரவன் நேர்மைக்கும், சத்தியத்திற்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறான். தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட இந்த நற்குணங்களைக் கடைசி வரை விடாது, உண்மைக்காகப் போராடி வெற்றியடைகிறான். தன் ஒளியால் இருளை விரட்டும், வானத்துக் கதிரவனைப்போல, இந்தக் கதிரவனும் தன் மன ஒளியால், இருண்டு கிடக்கும் நெஞ்சங்களில் ஒளியேற்றுகிறான். மங்காத தங்கமாய் ஜொலிக்கும் அவனது அக அழகு மற்றவர்களை ஈர்த்து, அவர்கள் உள்ளத்து இருளைப் போக்குகிறது.
உயரிய பண்புகள் அனைத்தும் சமுதாயத்தில் சரிந்து வரும் ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் வெளி வருவது பொருத்தமானது எனக் கருதுகிறேன். படிக்கும் சிறார்களின் நெஞ்சங்களில் சத்திய தீபத்தை ஓரளவேனும் ஏற்ற உதவுமாயின், அதுவே எழுதிய நோக்கத்தின் வெற்றியாகும்.
கதைக்கான காட்சிகளைக் கண்டவாறு, ஒவியங்களாகத் தீட்டும் வாய்ப்பினையும் பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நூலை அழகிய வடிவில் அச்சிட்டு உங்களுக்கு வழங்கும் கங்கை புத்தக நிலையத்தாருக்கு என் மனங்கனிந்த நன்றி என்றும் உரியது.
- வி.ர. வசந்தன்
நாடக மாந்தர்கள்
கதிரவன்: காவேரி பால் பண்ணை - பால் ஊற்றும் சிறுவன்.
முருகன்: காவேரி பால் பண்ணை - பால் ஊற்றும் மற்றொரு சிறுவன்.
பிரகாஷ்: கோமாதா பால் பண்ணை உரிமையாளரின் மகன்.
முத்தையா: கதிரவனின் தகப்பனார்.
பசுபதி: கோமாதா பால் பண்ணை உரிமையாளர்.
தங்கராஜூ: காவேரி பால் பண்ணை உரிமையாளர்.
இராமசாமி: காவேரி பால் பண்ணை நிர்வாகி.
கோகுல்ராம்: சுகாதார ஆய்வாளர்.
வீரய்யன்: முருகனின் தகப்பனார்.
சுரேகா: பிரகாஷின் தங்கை.
பானுமதி: பிரகாஷின் தாயார்.
ஜானகியம்மாள்: கதிரவனின் தாயார்.
இலட்சுமி: முருகனின் தாயார்.
காட்சி - 1
இடம்: மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தி.
நேரம்: அதிகாலை.
பாத்திரங்கள்: கதிரவன், முருகன்.
(இன்னும் நன்றாக விடியாத அதிகாலையில் கதிரவனும், முருகனும் தங்கள் சைக்கிள்களில், பெரிய பால் கேன்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.)
முருகன்: என்ன கதிரவா, ரொம்ப சோர்வா இருக்கே, முகமெல்லாம் வாடி இருக்கு?
கதிரவன்: ஆமாம் முருகா, உடம்பும் சரியில்லை, மனசும் சரியில்லை.
முருகன்: என்னப்பா இது? இரண்டு நாளாவே உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டிருக்கே, ஆனா, பொழுது விடிஞ்ச உடனே பால் கேனோடு புறப்பட்டுர்றியே!
கதிரவன்: ஒருநாள் வரலேன்னாலும், முதலாளி தவறாம சம்பளத்தைப் புடிச்சிடுவாரு; உனக்குத்தான் தெரியுமே, மாசம் பிறந்ததும், தங்கராஜூ தர்ற நூற்று இருபது ரூபாயை நம்பி எங்க வீட்ல மூணு பேரு இருக்கோம்.
முருகன்: அதுக்காக உடம்புக்கு முடியல்லேன்னா கூடவா வேலைக்கு வரணும்; நானாவது பாலை ஊத்திட்டு, வெட்டியா ஊரைச் சுத்திக்கிட்டு இருப்பேன்; நீ பள்ளிக்கூடம் போயி பெரிய படிப்பெல்லாம் படிக்கிற, உடம்பு எதுக்காகும்?
கதிரவன்: நம்மால முடிஞ்ச வரை செய்யலாமே, முருகன். ராப்பகலா, எங்க அம்மா, கோமாதா பால் பண்ணை முதலாளி பசுபதி ஐயா வீட்ல பாத்திரம் விளக்கி, துணி துவைச்சு, சமையல் செஞ்சு ஓடாத் தேயறப்ப, நான் மட்டும் உடம்பைப் பாத்துட்டு இருக்க முடியுமா?
முருகன்: பாவம்டா, உங்க அம்மா, ரெண்டு கையும் இல்லாம, உங்க அப்பா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்கிறாரு; உங்க அம்மாதான் எல்லா பாரத்தையும் தாங்கறாங்க...ச், இது பரவாயில்லப்பா, (சலிப்புடன்) என் வீட்டைப் பாரு, அப்பான்னு ஒருத்தர் இருந்தும் இல்லாத மாதிரிதான்.
கதிரவன்: பெரியவங்களை, அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசக்கூடாது முருகா, ஆயிரம் குறைகள் இருந்தாலும், நம்ம பெத்தவங்க இல்லியா, அவங்க அன்புக்கு ஈடா இன்னொரு அன்பு நமக்குக் கிடைக்குமா சொல்லு?
முருகன்: அப்புறம் என்னப்பா, அவரை போதை தெளிஞ்சு நான் பாத்ததே இல்லை. அபூர்வமா, எப்பவாவது சுய நினைவோட இருந்தார்னா, எங்க அம்மாவைப்போட்டு அடிச்சு உதைப்பாரு; அதுவும் இல்லேன்னா, அவருக்கு இருக்கவே இருக்குது மாமியார் வீடு, அங்க போய் ஜாலியா உக்காந்துக்குவாரு.
கதிரவன்: (வியப்புடன்) மாமியார் விடா?
முருகன்: (சலிப்புடன்) ஜெயிலைத்தான் சொல்றேன், யாருடைய பணப் பையையாவது கிழிச்சிட்டு, ரெண்டு