Oli Sudar
()
About this ebook
எண்ணெயும் திரியும் இருந்துவிட்டால் விளக்கு எரிந்துவிடுவதில்லை. அதில் சுடரையும் ஏற்றிவைக்க வேண்டும். அதுபோலவே அறிவாற்றலும், சிந்தனைத் திறனும் மட்டுமே ஒரு குழந்தை ஒழுக்கத்துடன் வளர போதுமானதாக இல்லை. நற்போதனைகளை அவர்கள் மனத்தில் சுடராக ஏற்றி வைப்பதாலேயே அவர்கள் ஒளி சிந்தும் விளக்குகளாக முடியும். ஒவ்வொரு குழந்தையின் மனமும் ஒரு சுடரொளியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதே சிறுவர் இலக்கியம் படைப்பதன் குறிக்கோளாக இருக்கிறது.
Read more from W.R. Vasanthan
Appaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsMalaikkottai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Anbu Rating: 0 out of 5 stars0 ratingsManjal Roja Rating: 0 out of 5 stars0 ratingsUdhayan Engey? Rating: 0 out of 5 stars0 ratingsThalaratha Ullam Rating: 0 out of 5 stars0 ratingsJameen Kottai Rating: 0 out of 5 stars0 ratingsMangatha Thangam Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsIniya Idhayam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oli Sudar
Related ebooks
Ennulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratingsAndha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Nandha Rating: 0 out of 5 stars0 ratingsVaa Pon Mayile Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Ennai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsKozhaigal Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5கஸ்தூரி மானே... Rating: 0 out of 5 stars0 ratingsPani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPencil Meesai Rating: 5 out of 5 stars5/5Kaatrodu Oru Yudham Rating: 0 out of 5 stars0 ratingsNetru Varai Nee... Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Kathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Enakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5En Vazhvin Thean Thuli... Rating: 4 out of 5 stars4/5Kaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsNenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oli Sudar
0 ratings0 reviews
Book preview
Oli Sudar - W.R. Vasanthan
https://www.pustaka.co.in
ஒளிச் சுடர்
(சிறுவர் கதைகள்)
Oli Sudar
(Siruvar Kathaigal)
Author:
வி.ர. வசந்தன்
W.R. Vasanthan
For more books
https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. சமய சஞ்சீவி
2. மாதவன் மனம் மாறினான்!
3. ஒரே மரத்தின் கிளைகள்
4. முரட்டுக் கதாநாயகன்
5. கால்கள் இருந்தும் ஊன்றுகோலா?
6. காணாமற்போன பயணச்சீட்டு
7. சுவரொட்டி
8. அருமைத் தம்பி
9. எது பெரிது?
10. அன்றைக்கு விழுந்த அடி!
11. ஏன் இந்த ஏமாற்றம்?
12. பாதுகாவல்
முன்னுரை
எண்ணெயும் திரியும் இருந்துவிட்டால் விளக்கு எரிந்துவிடுவதில்லை. அதில் சுடரையும் ஏற்றிவைக்க வேண்டும். அதுபோலவே அறிவாற்றலும், சிந்தனைத் திறனும் மட்டுமே ஒரு குழந்தை ஒழுக்கத்துடன் வளர போதுமானதாக இல்லை. நற்போதனைகளை அவர்கள் மனத்தில் சுடராக ஏற்றி வைப்பதாலேயே அவர்கள் ஒளி சிந்தும் விளக்குகளாக முடியும்.
ஒவ்வொரு குழந்தையின் மனமும் ஒரு சுடரொளியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதே சிறுவர் இலக்கியம் படைப்பதன் குறிக்கோளாக இருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும் இந்நோக்கத்திற்காக அர்ப்பணித்தவரும், குழந்தைகளுக்காக எழுத முன்வருபவர்களை, தோழமையுடன் அணைத்து, அன்பு செலுத்தி, ஆதரித்தவருமான குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களுக்கு இந்நூலைச் சமர்ப்பித்து அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
வி.ர. வசந்தன்
1. சமய சஞ்சீவி
என்றும் வேலை முடிந்து வீடு திரும்பியதும், எல்லோரிடமும் சிரித்துப் பேசி, கலகலவென்று இருப்பார் அப்பா. ஆனால் இன்று சோர்ந்துபோய், சிந்தனையில் மூழ்கி இருப்பதைக் கவனித்தாள் இந்திரா.
இரயில் நிலைய அதிகாரியாக வேலை பார்க்கும் அவருக்குத் தினமும் வந்து சொல்வதற்கு ஏதாவது நிகழ்ச்சிகள் இருக்கும். இன்று அவர் எதுவுமே பேசாமல் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதைப் பார்த்த அவள் காரணம் புரியாமல் திகைத்தாள்.
அப்பாவிடம் சென்று, ஏம்பா, என்னவோபோலச் சோர்ந்து போய் இருக்கீங்க?
என்று கேட்டாள்.
ஒண்ணுமில்லம்மா. லேசாத் தலைவலி
என்று அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார் அப்பா. அதனால் திருப்தியடையாத அவள்,
இல்லை, நீங்க பொய் சொல்றீங்க. என்னமோ நெனச்சுக் குழம்பற மாதிரி இருக்கு என்னப்பா நடந்தது?
என்று விடாப்பிடியாகக் கேட்டாள். அதற்கு மேலும் அவரால் நடந்ததை மறைக்க இயலவில்லை. இந்த ஸ்டேஷனுக்கு நான் வந்து அஞ்சு வருஷம் ஆகுதம்மா. இதுவரை என்னைப் பத்தி ஒரு புகார்கூட வந்ததில்லை. ஆனா, இப்ப எம்மேலே முதல் தடவையாகக் குற்றம்சாட்டி மேலிடத்திலே இருந்து கடிதம் வந்திருக்கு
என்றார்.
அப்படி என்னப்பா தப்பு செய்தீங்க?
என்று கேட்டாள் இந்திரா.
அப்பாவின் முகம் மேலும் வாடியது. எனக்குத் தெரிஞ்சு ஒரு தப்பும் செய்யலேம்மா. இந்த ஸ்டேஷன் வழியா சட்டத்துக்கு விரோதமா சில பேரு சந்தன மரங்களைத் திருட்டுத்தனமாக் கடத்தறதா மேலிடத்துக்கு எப்படியோ தகவல் போயிருக்கு. அதை உடனே கண்டுபிடிச்சுத் தடுக்கணும் இல்லேன்னா, அதுக்கு நானும் உடந்தைன்னு சந்தேகப்படற நிலை வரலாம்னு எச்சரித்து, கடிதம் அனுப்பி இருக்காங்க
என்றார் அவர்.
உங்களுக்குத் தெரியாமல் அது எப்படிப்பா நடக்கும்?
என்று வியப்புடன் கேட்டாள் அவள்.
அதுதாம்மா எனக்கும் புரியலே. எனக்குக் கீழே வேலை செய்யறவங்களை எல்லாம் கேட்டாச்சு, அப்படி எதுவும் இல்லைன்னு சொல்றாங்க. நானும் எவ்வளவோ விழிப்பாத்தான் இருக்கேன். இப்படி ஒண்ணும் நடக்கிற மாதிரித் தெரியலை...
என்ற அப்பாவின் முகத்தில் கவலை பெரிதும் தெரிந்தது.
மறுநாள் இந்திராவுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை ஆதலால் அப்பாவோடு இரயில் நிலையத்திற்குச் சென்றாள். அடிக்கடி அந்த நிலையத்தைக் கடந்து செல்லும் இரயில்களை வேடிக்கை பார்ப்பதில் அவளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி. அந்தக் குக்கிராமத்தில் பொழுதுபோவதற்கு வேறு வழியுமில்லை. ஆனால், அன்று அவள் எண்ணமெல்லாம் வேடிக்கை பார்ப்பதில் செல்லாமல் அப்பாவின்மீது ஏற்பட்ட வீண்பழியையே சுற்றி வந்தது.
அப்போது நிலையத்தின் இரும்பு வேலிக்கு அப்பால், மண்சாலையில் ஒரு மாட்டுவண்டி, பெரும் பெரும் சாக்கு மூட்டைகளைச் சுமந்தவாறு வருவதைப் பார்த்தாள் அவள். அதற்குப் பின்னால் இரண்டு பேர் வண்டியின் வேகத்திற்கு ஏற்ப, சைக்கிளில் மெதுவாக வந்தனர்.
மாட்டுவண்டி இரயில் நிலையத்தின் முன்னால் வந்து நின்றது சைக்கிளில் வந்த இருவரும் வண்டியின்மீது ஏறி மூட்டைகளைக் கீழே இறக்கி, வண்டிக்காரனின் உதவியுடன் அவற்றை இரயில் நிலையத்திற்குள் கொண்டுவந்தனர். பிறகு, அலுவலில் இருந்த இந்திராவின் அப்பாவை அணுகி, வழக்கம்போலப் பருத்தி நூல் மூட்டைகளை வெளியூருக்கு அனுப்பக் கொண்டுவந்திருப்பதாகவும் அவற்றைப் பதிவு செய்யும்படியும் வேண்டிக்கொண்டனர்.
அவர் எழுந்து வெளியேவந்து மூட்டைகளைப் பார்வையிட்டார். மொத்தம் பத்து மூட்டைகள் இருந்தன. ஆங்காங்கே சிறு ஓட்டைகள் வழியாகப் பருத்திநூல் வெளியே தெரிந்தது. அவர்கள் வழக்கமாகப் பருத்திநூலை வெளியூருக்கு அனுப்பும் வியாபாரிகள் ஆதலால் அவர் மேற்கொண்டு எதுவும் சிந்திக்காமல் அவற்றை எடையிட்டு வைக்கும்படி தம் உதவியாளரிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த இந்திராவின் மனத்தில் சட்டென்று ஒரு சந்தேகம் எழுந்தது. அவள் எழுந்து அப்பாவிடம் ஓடினாள்.