Manjal Roja
()
About this ebook
'வந்தது யாரோ' இச்சிறுகதையில், மஞ்சு படிப்பில் கெட்டிக்காரியானவள். எதைச் சொன்னாலும் பொருட்படுத்தாது அஜாக்கிரதையாக இருப்பவள். தன் குறையை உணர்ந்து கொள்வதற்கு, அவளது பெற்றோர் எடுத்த முடிவு என்ன? என்பதையும், 'மஞ்சள் ரோஜா' இச்சிறுகதையில், வாடிநின்ற ரோஜாச் செடியை தன்னுடைய முழு ஈடுபாட்டோடு முயற்சித்து மீண்டும் உயிர் பிழைக்க வைத்தாளா அனிதா? அவளது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதையும் போன்ற இன்னும் சில சுவாரஸ்யமான சிறுகதைகளையும் காண வாசிப்போம் வாருங்கள்...!
Read more from W.R. Vasanthan
Appaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsThalaratha Ullam Rating: 0 out of 5 stars0 ratingsIniya Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsMalaikkottai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsMangatha Thangam Rating: 0 out of 5 stars0 ratingsUdhayan Engey? Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Anbu Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsOli Sudar Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsJameen Kottai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manjal Roja
Related ebooks
Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Suvadugalum Thadangalum Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Manmatha Veshangal Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Uyir Nee..! Udal Naan..! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsPathinooravathu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsAthu Vanthu Nirkirathu..! Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsDear Mr. Bharath Rating: 0 out of 5 stars0 ratingsIyandhira Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Uruga Marukkum Mezhuguvarthi Rating: 5 out of 5 stars5/5Manathodu Veesum Thendral Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsPonnin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsNaan Naanavena? Rating: 4 out of 5 stars4/5காத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsThiththippaay Sila Poigal... Rating: 4 out of 5 stars4/5Vasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Kann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsEzhuththilla Osaigal Rating: 5 out of 5 stars5/5Kadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Arugil Varum Rating: 0 out of 5 stars0 ratingsSaraiyu Kaathirukkiral Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Vanavasam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manjal Roja
0 ratings0 reviews
Book preview
Manjal Roja - W.R. Vasanthan
https://www.pustaka.co.in
மஞ்சள் ரோஜா
(சிறுகதைகள்)
Manjal Roja
(Sirukathaigal)
Author:
வி.ர. வசந்தன்
W.R. Vasanthan
For more books
https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
இந்தத் தோட்டத்தில் பூத்திருக்கும் மலர்கள்
1. வழி தெரியாதா பாட்டி?
2. வந்தது யாரோ?
3. மழையில் நனைந்தால் என்ன?
4. மஞ்சள் ரோஜா
5. ஆசை மனம்
6. சோர்ந்தது நெஞ்சம்
7. முள்ளும் மலரும்
8. பாடுவாயா தோழி?
9. சுதந்திரப் பறவை
10. கண்கள் நகரவில்லை
11. புல்லும் ஆயுதம்
12. ஒளி வீசும் குத்து விளக்கு
1. வழி தெரியாதா பாட்டி?
அந்த இரயில் நிலையத்தின் முன் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ரிக்ஷாக்களில் உட்கார்ந்திருந்த ரிக்ஷாக்காரர்கள், பிளாட்பாரத்தில் இரயில் வந்து நிற்பதைப் பார்த்ததும் பரபரப்படைந்து சவாரிக்கு ஆள் பிடிப்பதற்காக எழுந்து ஓடினர்.
கதிர்வேலுவும் தன் ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு, பெட்டிப் படுக்கைகளோடு வெளிவந்த கூட்டத்தினுள் புகுந்தான். எங்க சார் போகணும், நம்ம ரிக்ஷாவில் குந்துங்க சார்
, பஸ் ஸ்டாண்ட்தானே ரிக்ஷாவில போகலாங்க
என்று ஒவ்வொருவரிடமாகச் சென்று கோரிக்கை விடுக்கலானான். அவன் அழைப்புக்குச் செவி கொடுக்காமல் பலரும் விலகிப் போய்க் கொண்டிருந்தனர்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து இரயில் நிலையம் வெறிச்சோட ஆரம்பித்தது. கதிர்வேலுவுக்கு சவாரி ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் மனச்சோர்வுடன் திரும்பிச் செல்ல நினைத்தபோது, இரயில் நிலையத்தின் வாசலைத் தாண்டி, பெரிய நார்க்கூடை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு ஒரு வயதான மூதாட்டி அங்குமிங்கும் பார்த்து விழித்தவாறு வெளியே வருவதைப் பார்த்தான்.
கதிர்வேலுவின் மூளைக்குள் மின்னலொன்று பளிச்சிட்டது. பார்த்த உடனேயே தெரிந்து போயிற்று, அந்த மூதாட்டி ஊருக்குப் புதியவர் என்பது.
அவன் அந்த மூதாட்டியின் அருகே ஓடிச் சென்று, பெரியம்மா... வாங்க, ரிக்ஷா இருக்குது, எந்த இடத்துக்குப் போகணும்?
என்று கையிலிருந்த கூடையை உரிமையுடன் வாங்கிக் கொண்டான்.
அந்த மூதாட்டி நிதானமாக மூச்சுவிட்டு, தன்னை இளைப்பாற்றிக்கொண்டு, புதுசா வீடுகளெல்லாம் கட்டி இருக்கே... மணிவண்ணன் நகருன்னு, அங்கதாம்பா போகணும்
என்று சொல்ல, அவன் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.
மணிவண்ணன் நகர், இரயில் நிலையம் இருந்த இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தது. மிஞ்சி மிஞ்சிக் கேட்டாலும் நான்கு ரூபாய்க்குமேல் கிடைக்காது. காலையிலிருந்து சவாரி ஒன்றுகூட கிடைக்கவில்லை. இப்போது ஏதாவது பணம் சம்பாதித்துக்கொண்டு போய், தாயிடம் கொடுத்தால்தான் மதியமாவது கஞ்சி குடிக்கலாம். இல்லையென்றால் பட்டினிதான்.
தான் ரிக்ஷா மிதிக்கும் பணத்திற்கெல்லாம் சாராயத்தைக் குடித்துவிட்டு, எப்போதும் வயிற்று வலி, வயிற்று வலி என்று திண்ணையில் படுத்துக்கிடக்கும் தகப்பன், வேலை செய்வதற்கு உடம்பில் சக்தியில்லாமல் இரத்தச்சோகை பிடித்த தாய், உடம்பில் ஒட்டுத் துணிகளோடு ஒரு வேளை சோற்றுக்குத் தவிக்கும் தம்பி தங்கைகள். இதுதான் கதிர்வேலுவின் வீட்டுச் சூழ்நிலை. இதில் பள்ளிக்கூடம் செல்வது என்பது அவனைப் பொறுத்தமட்டில் ஒரு எட்டாத கனவு.
மூன்றாவது வகுப்போடு அவன் பள்ளிப்படிப்பை நிறுத்தியாயிற்று. அக்கம் பக்கத்தில் எடுபிடி வேலைக்குப்போய் தினமும் ஐந்தோ, பத்தோ சம்பாதித்துக் கொண்டு வருவான். அதுதான் அவர்களது பசியின் கொடுமைக்கு பல நேரம் பரிகாரமாக அமைந்தது.
குடித்துக் குடித்து வயிறெல்லாம் புண்ணாகி, எழுந்து நடக்கவே முடியாத நிலை தகப்பனாருக்கு உருவாகிவிடவே, அவர் ஓட்டிய சைக்கிள் ரிக்ஷாவை இப்போது கதிர்வேலு ஓட்டும்படி ஆயிற்று.
வெகு அருகில் இருக்கும் மணிவண்ணன் நகருக்குப் போக வேண்டும் என்று மூதாட்டி கூறியதும் பெரிதும் ஏமாற்றமடைந்தவன் சட்டென்று சமாளித்துக் கொண்டவனாக, மணிவண்ணன் நகரா... அது எங்கே இருக்கு
என்று தெரியாதவனைப்போல் கேட்டான்.
சரியாகப் போச்சு... ரிக்ஷாக்காரப்புள்ள, உனக்கே தெரியாதா
என்றாள் அந்தப் பாட்டி சலிப்புடன்.
சரிதான், பாட்டி ஊருக்குப் புது ஆள் என்று நிச்சயப்படுத்திக்கொண்ட கதிர்வேலு, சற்று யோசிப்பவனைப்போல, பாவனை செய்துவிட்டு, ஓகோ, புதுசா நிறைய வீடுங்க கட்டறாங்களே, அதுதானே? தெரியும், தெரியும்... அது ஊருக்கு ஓதுக்குப்புறமா ரொம்ப தூரம் தாண்டியில்ல இருக்கு? ம், ஏறுங்க போகலாம்
என்றான்.
சற்று நேரம் எதையோ யோசிப்பதைப்போல, தயங்கி நின்ற மூதாட்டி மெதுவாக, தம்பி, அங்க போக எவ்வளவு பணம் கேட்பே?
என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
கதிர்வேலு சற்றுகூடத் தயங்காமல், வழக்கமா அங்கு போகப் பன்னிரண்டு ரூபா வாங்குவோம்
என்றான்.
பன்னிரெண்டு ரூபாயா!
என்று திடுக்கிட்டவள், ரயில் நிலையத்துல இருந்து பத்து நிமிஷத்துல போயிடலாம்னு எம்மகன் எழுதியிருந்தானே... கொஞ்சம் பார்த்துக் கேளப்பா
என்றதும்,
பத்து நிமிடத்திலே போக என்ன பக்கமாகவா இருக்கு? சரி சரி, பத்து ரூபா கொடுங்க
என்றவாறு அவன் கூடையை வண்டியில் வைத்தான்.
தெய்வமே
என்ற முனகலுடன் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்த பாட்டி, பார்த்து கவனமா போப்பா
என்றவாறு பின்புறம் சாய்ந்து கொண்டாள்.
நீங்க கவலையேபடாதீங்க பாட்டி, சரியாக் கொண்டுபோய் சேர்த்துருவேன்" என்ற கதிர்வேலு, ரிக்ஷாவில் குதித்தேறி விறுவிறுவென்று மிதிக்கலானான்.
ரிக்ஷா பிரதான சாலையை அடைந்ததும், மணிவண்ணன் நகர்