Ponnin Punnagai
()
About this ebook
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.
37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.
இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.
சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
Read more from Ja. Ra. Sundaresan
Veli Thaandiya Velladugal Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Thullal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Ezhuthathey! Rating: 0 out of 5 stars0 ratingsOru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPamara Geethai Rating: 0 out of 5 stars0 ratingsPaasangu Rating: 0 out of 5 stars0 ratingsEllam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsThedinal Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Kadhambavin Yethiri Rating: 0 out of 5 stars0 ratings1990’il Veliyana Aazhamana Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNerungi Nerungi Varugiral Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsPennendral... Rating: 0 out of 5 stars0 ratingsMullin Kadhal Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ponnin Punnagai
Related ebooks
Paarkathey! Patharathey! Rating: 5 out of 5 stars5/5Kichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsOru Kurangu Ammavagirathu Rating: 0 out of 5 stars0 ratingsManjal Roja Rating: 0 out of 5 stars0 ratingsIniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Malarodu Thaniyaga... Rating: 5 out of 5 stars5/5August Athirchi Rating: 4 out of 5 stars4/5Uruga Marukkum Mezhuguvarthi Rating: 5 out of 5 stars5/5Pakkathil Paruva Nila Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Oviyam Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsDear Mr. Bharath Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsEn Birundhavanam Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Collection - 4 Rating: 3 out of 5 stars3/5Adhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsசத்தமில்லாத நயாகரா Rating: 0 out of 5 stars0 ratingsSaththamillatha Nayaakara Rating: 0 out of 5 stars0 ratingsSappendru Oru Arai Rating: 0 out of 5 stars0 ratingsParaloga Payanam Rating: 0 out of 5 stars0 ratingsMarumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malavika!! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ponnin Punnagai
0 ratings0 reviews
Book preview
Ponnin Punnagai - Ja. Ra. Sundaresan
http://www.pustaka.co.in
பொன்னின் புன்னகை
Ponnin Punnagai
Author:
ஜ.ரா.சுந்தரேசன்
Ja. Ra. Sundaresan
For more books
http://www.pustaka.co.in/home/author/jarasu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பார்வதி
காலையில் நடந்த கலாட்டாவினால் சமையலறை கொல்லன் பட்டறை போலக் காட்சி அளித்தது. அதெல்லாம் சரிப்படுத்தி வைக்கச் சொல்லி. சரோஜா!
என்று அழைத்தால் அவள் புழக்கடையில் அசடு வழிய நிற்கிறாள். வெள்ளிக்கிழமையும் அதுவும் வேலை தலைக்குமேல் இருக்கிறபோது மகராஜி கொலு உட்கார்ந்து கொண்டாள். இனி மேல் அவளை நம்பியும் தான் பிரயோசனமில்லை. நேற்று அவளைப் பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளை தான் பெண் பிடித்திருப்பதாகச் சொல்லிவிட்டாரே?
வெந்நீர் மருகிக்கொண்டிருந்தது. ராஜப்பாவைக் காணோம். அவனுக்கு ஒரு கை எண்ணெய் வைத்துவிட்டு நானும் குளித்தானால் சமையல் காரியத்தில் இறங்கலாம்.
ராஜா. ராஜா, ராஜாக்' கண்ணு!
- என்று அழைத்து ஒவ்வோர் அறையாகப் பார்த்தேன்.
அவனைச் சக்கையாகப் பிழிந்த, துணி உலர்த்தும் கோல் மூலையில் நின்றுகொண்டிருந்தது. அதை எட்டாய் ஒடித்து அடுப்பிலே போட்டேன்.
மன்னி, ராஜா விறகு ரூமிலே இருக்கிறான்.
என்று முகுந்தன் காட்டிக் கொடுத்தான்.
அடி வாங்கி வைத்துவிட்டாயல்லவா? மனம் குளிர்ந்ததா? ரொம்பச் சமர்த்துத்தான் போ!
- என்று அவனை நான் கோபித்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
ஆமாம். இந்த முகுந்தனால் தான் தினமும் ராஜப்பாவுக்கு அடி. திட்டு, குட்டு சகலமும்.
ராஜப்பாவைவிட முகுந்தனுக்கு ஒரே ஒரு வயதுதான் குறைவு.
ராஜப்பாவை நான் பெற்றெடுத்த மறு வருடம் மாமியாருக்கு அவன் பிறந்தான். வயது தாண்டிப் பிறக்கிற பிள்ளைகள் மக்காக இருக்கும் என்று சொல்வார்கள். எங்கள் வீட்டு விஷயத்தில் நேர்மாறாகத் தான் அமைந்து விட்டது ,
முகுந்தன் படிப்பிலே எவ்வளவு படுசுட்டியாக விளங்கினானோ அவ்வளவு மட்டியாக ராஜப்பா இருந்தான்.
இன்றைக்குக் காலங் காலையில் பழியைக் கட்டிக் கொண்ட பெருமை எதிர் வீட்டு வண்டிக்குக் கிடைத்தது.
எதிர் வீட்டு வராகசாமியின் வில் வண்டியின் இரண்டு சக்கரங்களும் பட்டறைக்கு அனுப்பப்பட்டிருந்தன. பழுது. பார்க்கப்பட்ட வண்டி, தரையிலே உட்கார்ந்து கிடந்தது.
முகுந்தன் அந்த வண்டியைப் பார்த்துவிட்டு, அப்பா!" என்று அழைத்தான். (இவர். அவனுக்கு அண்ணா முறையானாலும், வயது வித்தியாசத்தாலும், குழந்தையிலிருந்து இவரே பார்த்துக்கொள்வதாலும், அப்பா என்றுதான் அழைப்பான். என்னை மட்டும் மன்னி என்பான்.)
அப்பா, எதிர் வீட்டிலேகூட ஒரு ஸ்லெட்ஜ் வண்டி இருக்கிறது பாருங்கள்,
என்றான் முகுந்தன்.
அவருக்குக் களிப்புத் தாங்கவில்லை,
முகுந்தனின் புத்திசாலித்தனத்தைப் பார். சக்ரமில்லாத எதிர் வீட்டு வண்டியை ஸ்லெட்ஜ் என்கிறான், வேடிக்கையாக! ஓ, நீயும் உன் பிள்ளை மாதிரிதானே? ஸ்லெட்ஜ் என்கிறது பனிப் பிரதேசத்தில் இருக்கிற ஒரு வகை வண்டி. சக்கரமில்லாமல் பனித் தரையிலே போகும்,
என்று எனக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் ராஜப்பா வந்தான், மார்க்கெட்டுக்குப் போய்ச் சமர்த்தாய் நான் சொன்ன காய்கறிகளை வாங்கிக் கொண்டு.
முதல் தினம் முழுதும் ராஜப்பா இந்த ஸ்லெட்ஜைப் பற்றிப் பாடப் புத்தகத்தில் படித்தது எனக்குக் கவனம் வந்தது. "ராஜப்பாவை' ஒன்றும் மக்கு என்று சொல்ல வேண்டாம். அவனையும் தான் கேளுங்கள், சொல்வான், என்றேன்.
ஏதோ கேட்கப் போகிறார்கள் பாட சம்பந்தமாக என்றதுமே அவன் முகத்தில் பீதி படர்ந்தது. நழுவப் பார்த்தான்.
ஏண்டா, ஸ்லெட்ஜ் என்றால் என்ன?
என்றார் இவர்.
ஸ்லெட்ஜா?... வந்து... வந்து.... அப்படியென்றால் பனிக்கட்டி வீடு அப்பா!
படித்தால்தானே கழுதை? நேற்றுப் பரீட்சையிலும் இப்படித்தான் எழுதினாயா?
இல்லை. ரைட்டாகத்தான் எழுதினேன்.
பொய்யா சொல்கிறே? நேற்று எழுதியிருந்தால் இன்று மறக்குமா? தடிக் கழுதை!
என்றார்.
நான் பேச்சை மாற்றுவதற்காக, சரி, சரி, ராத்திரி பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் அடியை
என்று சொல்லிவிட்டு. 'பாக்கி சில்லறையை அப்பா கிட்டே கொடுத்துவிட்டு நீ குளிக்க வா ராஜப்பா," என்றேன்.
மாட்டிக் கொண்டான் ராஜப்பா. காய்கறிக்காரி சில்லறையைக் கவனப் பிசகாகவோ, வேண்டுமென்றோ குறைத்துக் கொடுத்திருக்கிறாள். இந்தப் பிள்ளை. வாங்கிக் கொண்டு வந்து விட்டான். - முழிக்கிறதைப் பார் மட ராஸ்கல். தின்னத் தெரி கிறது! அறிவில்லையா? ரூபாயிலே ஆறணா போனால் எவ்வளவு? சொல்லு... சொல்லு... சொல்லு.
"பத்தணா!'- ராஜப்பா சொல்லவில்லை; முகுந்தன் கூறிவிட்டான்.
ராஜப்பா பயப்படப் பயப்பட அவருக்கு கோபம் உச்சிக்கு வந்து, மூலையிலிருந்த கோலை எடுத்துக் கொள்ள, அவன் என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள, அவர்' கண் மண் தெரியாது வீச, சமையலறைக்கு ராஜப்பா ஓடினான். அரிசித் தாம்பாளத்தை இடறி 'விட்டு எங்கும் அரிசி சிந்தியது.
ஐயோ, அரிவாள்மணை! அரிவாள்மணை! பட்டுக் கொள்ளப்போகிறீர்கள்!
என்று நான் கத்தினேன். அவர் வீசிய வீச்சில் பாதி அடி ராஜப்பாவுக்கும், பாதி அலமாரிப் பாத்திரத்துக்கும் விழுந்து தடதட வெனப் பேரொலி எழுப்பியது. நான் ராஜாவை இறுக அணைத்துக்கொண்டு, 'என்னத்திற்குப் போட்டுக் கொல்கிறீர்கள் தினமும்? இப்பொழுது படிப்பு வரவில்லையானால் இன்னும் கொஞ்ச நாள் கழித்து வருகிறது," என்று சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அதனால் அவர் நிறுத்திக் கொண்டு விடவில்லை.
நேற்று மாப்பிள்ளையுடன் வந்த தரகர் புன்னகையுடன் பிரவேசித்தார். அடடே! பிள்ளை விஷமக்காரனாக்கும்? வேண்டியதுதான். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஹி... ஹி
என்றார்.
இவர் கோபம் சட்டென்று தடுக்கப்பட்டது. முகத்தை மலர வைத்துக் கொண்டு, ஒன்றுமில்லை. பாருங்களேன் பின்னே! படி. படியென்று முட்டிக் கொள்கிறது...
என்றார்.
தரகர்