Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pamara Geethai
Pamara Geethai
Pamara Geethai
Ebook68 pages23 minutes

Pamara Geethai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீதை பிறந்த நாட்டில் நாமும் பிறந்துள்ளோம் என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பார்கள். எங்கு கீதை பேசப்படுகிறதோ பயிலப்படுகிறதோ, சிந்திக்கப்படுகிறதோ அங்கு மன அமைதியும் வாழ்க்கையின் நுட்பமும் உணரப்படுகிறது.

கீதை என்ற அற்புத நூலைத் துளியாவது நுகராதவர்கள் ஜென்ம நஷ்டப்பட்டவர்களே. கீதையை ஆராயாத அறிஞர் பெருமக்களில்லை. அற்புதமான மொழி பெயர்ப்புக்கள். ஆங்கிலத்தில் கீதையை ஆராய்ந்து வந்திருக்கும் நூல்களுக்கு அளவே இல்லை.

எனக்கு ஒரு சின்ன ஆசை ஏற்பட்டது. எந்த ஆன்மீக நூலுமே பாமரர்களுக்குப் புரிவதால் மட்டுமே புனிதமாகிறது என்பர் பெரியோர். 700 சுலோகங்கள் உள்ள கீதை நூலிலிருந்து கருத்துக்களை மட்டும் எளிமைப்படுத்தி - இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போல இதை எழுதியுள்ளேன். மகத்தான நூலான கீதையை நான் வடிகட்டவோ நீர்ப்படுத்தவோ செய்ததாக எந்த அன்பரேனும் நினைத்தால் பிழை பொறுத்தருளுக.

இங்ஙனம், ஜ.ரா. சுந்தரேசன்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124103317
Pamara Geethai

Read more from Ja. Ra. Sundaresan

Related to Pamara Geethai

Related ebooks

Reviews for Pamara Geethai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pamara Geethai - Ja. Ra. Sundaresan

    http://www.pustaka.co.in

    பாமர கீதை

    Pamara Geethai

    Author:

    ஜ.ரா.சுந்தரேசன்

    Ja. Ra. Sundaresan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    முன்னுரை

    கீதை பிறந்த நாட்டில் நாமும் பிறந்துள்ளோம் என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பார்கள்.

    எங்கு கீதை பேசப்படுகிறதோ பயிலப்படுகிறதோ, சிந்திக்கப்படுகிறதோ அங்கு மன அமைதியும் வாழ்க்கையின் நுட்பமும் உணரப்படுகிறது.

    சுவாமி சின்மயானந்தா, குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ. பி. ஆகியவர்களின் கருணையினால் கீதையை ஏட்டளவிலாவது ஸ்பரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது?

    கீதை என்ற அற்புத நூலைத் துளியாவது நுகராதவர்கள் ஜென்ம நஷ்டப்பட்டவர்களே.

    கீதையை ஆராயாத அறிஞர் பெருமக்களில்லை.

    கீதைப் பாராயணம் செய்யும் தமிழர்கள் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ஆன்மீகப் பெரியவரான அண்ணா அவர்களது கீதை உரையையும், சுவாமி சித்பவானந்தா (ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த் துறை) அவர்களின் உரையையும் படித்தேயிருப்பார்கள். அற்புதமான மொழி பெயர்ப்புக்கள்.

    ஆங்கிலத்தில் கீதையை ஆராய்ந்து வந்திருக்கும் நூல்களுக்கு அளவே இல்லை.

    எனக்கு ஒரு சின்ன ஆசை ஏற்பட்டது. எந்த ஆன்மீக நூலுமே பாமரர்களுக்குப் புரிவதால் மட்டுமே புனிதமாகிறது என்பர் பெரியோர்.

    700 சுலோகங்கள் உள்ள கீதை நூலிலிருந்து கருத்துக்களை மட்டும் எளிமைப்படுத்தி - இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போல இதை எழுதியுள்ளேன். மகத்தான நூலான கீதையை நான் வடிகட்டவோ நீர்ப்படுத்தவோ செய்ததாக எந்த அன்பரேனும் நினைத்தால் பிழை பொறுத்தருளுக.

    இந்தச் சிறிய படைப்பைத் தொடர் அத்தியாயங்களாக வெளியிட்ட சிரிப்பே சிறப்பு, தினமணி கதிர், மங்களம், சாவி ஆகிய பத்திரிகைகளுக்கு என் நன்றி. ஒரு கிஷ்டனையும், பார்த்தியையும் தத்ரூபமாக வடித்துத் தந்த ஓவியச் சக்கரவர்த்தி கோபுலு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வந்தனங்கள்.

    இங்ஙனம்

    ஜ.ரா. சுந்தரேசன்

    1

    பார்த்தி: இன்னாப்பா, ஒரு பீடி இருந்தா குடேன்.

    கிஷ்டன்: வுட்டுட்டேன் நைனா.

    பார்த்தி: ஏண்டா பாவி, எப்படிடா வுட முடிஞ்சது?

    கிஷ்டன்: எல்லாம் அப்பியாசம்தான்.

    பார்த்தி: என்னது - தேங்காய் பாயசமா?

    கிஷ்டன்: அப்பியாசம்டா. அப்பியாசம்னா பயிற்சி. தெனத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாப் பயிற்சி பண்ணிகினே வந்தியானா, சாதிக்க முடியாததைக் கூடச் சாதிச்சுடலாம். பீடி குடிக்கிறதில்லைனு வெச்சுக்கோ. மொத நாள் எட்டு பீடிக்குப் பதிலா ஏழு குடி, அடுத்த நாள் ஆறு, அப்புறம் அஞ்சு, இப்படி...

    பார்த்தி: நமக்கு அப்படியெல்லாம் முடியாதுடா சாமி.

    கிஷ்டன்: சரி. அப்ப ஒண்ணு செய்யி. உனக்கு மாரியத்தா மேலே நம்பிக்கைதானே?

    Enjoying the preview?
    Page 1 of 1