Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mazhai Megam
Mazhai Megam
Mazhai Megam
Ebook117 pages43 minutes

Mazhai Megam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மழை உலகின் உயிர்ப்பு அதே போல் என்பவள் ஒரு ஆண்மகனின் உயர்வுக்கு உயிராய் இருப்பவள், இப்படியான ஒரு துணையை இழக்கும் போது, அவளைப் போல ஒருவள் தேடி வரும் போது ஏற்றுக் கொள்வதும், ஐக்கியமாவதும் எத்தனை உயர்வையும், உன்னத்த்தையும் தரும் என்பதை இந்த கதை பிரதிபலிக்கிறது.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580144707124
Mazhai Megam

Read more from Ilamathi Padma

Related to Mazhai Megam

Related ebooks

Reviews for Mazhai Megam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mazhai Megam - Ilamathi Padma

    https://www.pustaka.co.in

    மழை மேகம்

    Mazhai Megam

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் -- 1

    அத்தியாயம் -- 2

    அத்தியாயம் -- 3

    அத்தியாயம் --4

    அத்தியாயம் -- 5

    அத்தியாயம் -- 6

    அத்தியாயம் -- 7

    அத்தியாயம் -- 8

    அத்தியாயம் -- 9

    அத்தியாயம் -- 10

    அத்தியாயம் -- 11

    அத்தியாயம் -- 12

    அத்தியாயம் -- 13

    அத்தியாயம் --14

    அத்தியாயம் -- 15

    அத்தியாயம் -- 16

    அத்தியாயம் -- 1

    எதிரில் வந்தவளை திகைப்புடன் பார்த்தான் கௌதம்! இது எப்படி சாத்தியம் சுவாதியை அப்படியே பிரதி எடுத்தது போல். மேவாயும் கண்ணும் மூக்கும் காதும் நீண்ட கழுத்தும் நிறமும் கூட அப்படியே இருக்கிறதே என்று வியந்தான்!

    ஆனால் இவள் சுவாதியில்லை அவள் இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. எப்படியும் இவளை ஒரு புகைப்படம் எடுத்து விட வேண்டுமென்று பின்தொடர்ந்தான். இவளைப் பாரேன் உன் மனைவி போலவே இருக்கிறாள் என சுரேந்திரனுக்கு காட்ட வேண்டும். தாயை இழந்த அதிர்ச்சியில் ஆறுமாதமாக பேசாமல் இருக்கும் திவ்யா இவளைப் பார்த்தால் ஒருவேளை சந்தோசத்தில் பேசலாம்...

    நினைத்தவுடன் சிலிர்ப்பை உணர்ந்தான் கௌதம். இவள் யார் எங்கிருக்கிறாள் என்ன பெயர் அருகில் சென்று கேட்போமா கேட்டால் பதில் சொல்வாளா... மனசு பரபரத்தது.

    இரண்டடி தூரம் இடைவெளியில் ஹலோ... என்றான்.

    திரும்பியவள் கேள்விக்குறியுடன் பார்க்க...

    மன்னிக்கனும் பார்ப்பதற்கு எனக்கு தெரிந்த பெண் போலவே இருந்ததால் அழைத்தேன். உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா

    சுமதி என்றவள் நிச்சயமாய் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை நான் சென்னைக்கு புதுசு என்றாள்.

    பெயரில் கூட கொஞ்சம் ஒற்றுமை இருக்குங்க எனக்குத் தெரிந்த பெண்ணின் பெயர் சுவாதி என்றான். இரட்டைப் பிறவிகளாய் இருந்து உங்க அம்மா அப்பா ஒரு குழந்தையை தத்துக் கொடுத்திருப்பாங்களோ இல்லேனா எப்படிங்க ஒரே மாதிரி இருக்க முடியும்..

    நல்லா கதை சொல்வீங்க போல என்று நகைத்தவளை பிரம்மிப்புடன் பார்த்தான் அதே சிரிப்பு!

    என்னோட பஸ் வந்தாச்சு சார் பார்ப்போம் என்றபடி ஓடிப்போய் ஏறிக்கொண்டாள்.

    வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் சொல்லி அங்கலாய்த்தான் நம்பவே முடியலை மஞ்சு என்றான்.

    ஒருத்தர் மாதிரி ஏழுபேர் இருப்பாங்கனு எங்க தாத்தா சொல்லி நான் கேட்டிருக்கேன். என் தோழி ரஞ்சனி வரும்போதெல்லாம் சொல்லுவா உன்ன மாதிரியே அப்படியே அச்சு அசலா ஒருத்தி என் வீட்டருகில் புதுசா குடித்தனம் வந்திருக்கா வந்து பாரேனு பலதடவை கூப்பிட்டு அலுத்துப் போய்ட்டா. உங்கம்மாவிடம் அனுமதி வாங்குவது அத்தனை லேசா என்ன....

    அப்படியா ஒருநாள் போவோம் என்ற கௌதம் நண்பன் சுரேந்தினை அலைபேசியில் அழைத்தான்.

    சொல்லு கௌதம்

    எங்கடா இருக்கிறாய்...

    ஆபீஸில் ...

    சன்டே கூட அங்கப் போய் உட்காரனுமா...

    விசயத்தைச் சொல்லுடா

    இன்னிக்கு ஒரு அதிசயம் நடந்தது. பாண்டிபஜார் வழியாக நடந்து வந்துட்டிருந்தேனா அப்ப நம்ம சுவாதி மாதிரியே ஒரு பெண்ணு எதிரில் எப்படி ஃபீல் பண்ணியிருப்பேன் சொல்லு....

    ப்ச்ச்... போடா

    நிஜமாடா

    சரி அதுக்கென்ன இப்ப....

    நம்ம திவ்யா அவளைப்பார்த்தால் பேச்சு வரலாம்னு தோணுதுடா

    விவரம் ஏதாவது தெரியுமா...

    பெயர் சுமதினு சொன்னாள் எங்க இருக்கானு தெரியலை கேட்பதற்குள் பஸ் ஏறி போய்ட்டா .

    ம்ம்ம்

    ...

    அடுத்த முறை பார்த்தால் எப்படியாவது விவரம் சேகரிக்கிறேன்

    ஓகேடாபை.

    சுவாதி போல் யாரேனும் இருக்க முடியுமா... அவளின் சாயல் கூட எந்தப் பெண்ணிடமும் இதுவரை பார்த்ததில்லையே... மேஜை

    இழுப்பறையிலிருந்த சுவாதியின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான் நினைவுகள் மத்தாப்பாய் கிளர்ந்தன !

    ஆனந்தமாய் துவங்கிய தனது வாழ்வு ஒரு நொடியில் மாயமாகும் என்று அறிந்தானில்லை!

    சிறுவயதில் தந்தையை இழந்தவனுக்கு தாயின் உழைப்பும் அவளின் கண்டிப்பும் அவனை பக்குவப்படுத்தியது. கல்லூயில் நுழையும் முன்பே அம்மா ஒரு எச்சரிக்கை மணியடித்து சொன்னது மனதில் பதிந்து போனது.

    சுரேந்திரா வயசுக்கோளாறு உன்னைத் தடுமாற வைக்கலாம். விழுந்து விடாமல் பேலன்ஸ் செய்ய கத்துக்கனும் பெண் என்பவள் ஆணை ஈர்க்கும் சக்தி பெற்றவள் அதை எப்படி எதிர்கொள்கிறாயோ அதைப் பொறுத்ததே உன் வாழ்வு!

    ஏம்மா பயமுறுத்துறே...

    பயமுறுத்தலை உனக்குப் புரிய வைக்கிறேன். அம்மாவை எப்படி மதிக்கிறாயோ அப்படி எல்லாப் பெண்களையும் மதிக்கக் கற்றுக்கொள். அதுதான் உன்னை உயர்த்தும்!

    மாமா பெண் கோதையைத்தான் நீ கட்டனும் நினைவிருக்கட்டும்!

    மன்னிக்கனும் மா அது முடியவே முடியாது.

    ஏன் முடியாது....

    சொல்லத் தெரியலை மா மனசு அவளை ஏற்க மறுக்கிறது நீ மாமாவிடம் எந்த வாக்குறுதியும் தராதே மா...

    அப்பா இறந்த பிறகு மாமாதான் உன்னை படிக்க வைத்தார் செய்நன்றி மறக்கக் கூடாது சுரேந்திரா. தவிர அவர் நினைப்பில் இது இருக்கலாம் இல்லையா...

    நீயாகவே அப்படி நினைக்காதேமா அவர் கேட்டாரா. அப்படிக் கேட்டால் நான் பேசிக் கொள்கிறேன் என்றதும் மேற்கொண்டு மகனிடம் பேசத் தயங்கினாள் தெய்வநாயகி. யாரையேனும் மனசில் வரித்திருப்பானோ என்ற எண்ணம் எழாமல் இல்லை .

    தெய்வா என்றழைத்தபடி வந்த அண்ணனை மகிழ்வுடன் எதிர்கொண்டு...

    வாங்கண்ணா இப்பதான் நினைச்சேன் வந்துட்டீங்க அண்ணி வரலையா...

    நித்ய கண்டம் பூர்ணாயுசு மாதிரி தான் அவள் நிலைமை அதில் இந்த பெண் வேறு எங்களை தலைகுனிய வச்சுட்டா கையும் ஓடலை காலும்

    ஓடலை .

    என்னாச்சு அண்ணா .....

    சுரேந்திரன் சொல்லலையா....

    இல்லையே அண்ணா ....

    யாரையோ லவ் பண்றாளாம் அவனைதான் கல்யாணம் பண்ணுவேனு உறுதியா சொல்லிட்டா. சுரேந்திரன்தான் அவங்க வீட்ல போய் பேசிட்டு வந்தான். நாளை அவங்க வர்றாங்க மா நீயும் வந்து ஒத்தாசைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1