Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engum Nee...! Endrendrum Nee...!
Engum Nee...! Endrendrum Nee...!
Engum Nee...! Endrendrum Nee...!
Ebook73 pages38 minutes

Engum Nee...! Endrendrum Nee...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற முகுந்தன் போதை மருந்தின் தாக்கத்தால் தெளிவற்ற நிலையில் நாடு திரும்புகிறான். இவனின் தந்தை தன் நண்பனின் மகள் மருமகளாய் வந்தால் மகனை குணப்படுத்தி விடலாம் என்று நம்புகிறார். திருமணம் நடக்கிறதா...? முகுந்தன் குணமடைகிறானா... என்பதைப் பற்றிய கதைதான் இது!

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580144708994
Engum Nee...! Endrendrum Nee...!

Read more from Ilamathi Padma

Related to Engum Nee...! Endrendrum Nee...!

Related ebooks

Reviews for Engum Nee...! Endrendrum Nee...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engum Nee...! Endrendrum Nee...! - Ilamathi Padma

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எங்கும் நீ…! என்றென்றும் நீ…!

    Engum Nee...! Endrendrum Nee...!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் -- 3

    அத்தியாயம் --4

    அத்தியாயம் -- 5

    அத்தியாயம் -- 6

    அத்தியாயம் --7

    அத்தியாயம் -- 8

    அத்தியாயம் -- 9

    அத்தியாயம் --10

    அத்தியாயம் -- 11

    அத்தியாயம் – 1

    கனக சுப்புவிற்கு இரண்டு பிள்ளைகள் ஒரே ஒரு பெண்! கனகசுப்புவின் மனைவி இருக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மங்களம் என்றைக்கு இறந்தாளோ… அன்றே எல்லாம் தலைகீழ் ஆகி விட்டது. இரண்டு மருமகள்களும் வேலை செய்ய போட்டி போட்டனர். பெரியவன் மனைவியோடு மாமியார் வீட்டோடு தங்கி விட, சின்னவன் மும்பைக்கு மாற்றலாகிப் போனான். பெண் காவ்யா காலேஜ் பைனல் இயர் படித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் வீட்டை விற்று தங்களுக்கு சேர வேண்டிய பங்கை கேட்ட போது இடிந்து போனார். விற்க முடியாது என்ற போது, தாத்தா கட்டிய வீடு எங்களுக்குத்தான் உரிமை என்று குரல் உயர்த்தி பேசினர்.

    நூறாண்டு கட்டிடம்! சாரங்கள் அமைத்து கட்டிய வீடு. கம்பி வேய்ந்த முற்றமும், விசாலமான சமையலறையும், நான்கு அறைகள் கொண்ட வீட்டை எத்தனை சுலபமாக விற்க சொல்கிறார்கள்…? வெங்கலப்பூண் வைத்த உஞ்சல் மூன்று தலைமுறைகள் கைப்பட்டு கட்டு மெருகேறி பளபளப்பாய் இருந்த்து. தடவித் தடவிப் பார்த்தார். எப்படியானாலும் இந்த வீடு ஐம்பது லட்சத்துக்கு மேல் போகும். தனது ஓய்வூதியத்தில்தான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். மனைவியின் நகைகளையும், தனது வைப்பு நிதியையும் வைத்து காவ்யாவின் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். உங்களில் யாராவது ஒருவர் இந்த வீட்டை எடுத்துக் கொண்டு மற்ற இருவருக்கும் பணத்தைக் கொடுங்கடா என்று கேட்டுப் பார்த்தார்.

    யாருக்கு வேணும் பழைய வீடு… நாங்கள் 'டூப்புளவ்ஸ்' வாங்கலாம்னு இருக்கோம் என்று கறாராய் பேச, கனகசுப்பு தனது நண்பர் வேலாயுத்த்திடம் சொல்லி வருத்தப்பட்டார். தாடையை வருடியபடி அமைதியாக இருந்த வேலாயுதம் தொண்டையைக் கணைத்தபடி …ஒரு யோசனை சொல்லட்டுமா… வீட்டை நான் வாங்கிக்கிறேன்! ஆனால் ஒரு நிபந்தனை! என் பிள்ளைக்கு உன் பெண்ணைக் கொடுக்கனும் என்ற போது ஆடிப் போனார். முகுந்தன் நல்ல அறிவாளிதான்! லண்டனுக்குப் போய் படித்தவன்தான். ஆனால் சரியில்லாத சேர்க்கையால் போதை மருந்து உட்கொண்டு புத்தி பேதலித்து, தன்னைப் பற்றிய பிரஞை இல்லாமல் வந்து சேர்ந்தான். இப்படியான இரண்டுங்கெட்டான் பிள்ளைக்கு என் பெண்ணைக் கொடுக்கனுமா… பதறிய மனசை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார் கனசுப்பு.

    கனகு… ரொம்ப யோசிக்காதே… உன் பெண் ராணி மாதிரி இருக்கலாம். எடுபிடி வேலையிலிருந்து சமையல் வரை செய்ய ஆள் இருக்கு! இருக்கிற நகையை போடு போதும்! கல்யாண செலவு என்னோடது. உன் சேவிங்ஸ் உன்னிடமே இருக்கட்டும். பின்னாடி பார்த்துக்கலாம். உன் பெண் காவ்யாவிற்கு அதிர்ஷ்டம்! மறுக்காதே. என் பிள்ளை இப்படியே இருக்க மாட்டான்.

    "நான் காவ்யாவை கலந்து பேசிட்டு சொல்றேன் வேலாயுதம்! என்று முணுமுணுத்தார்.

    "அப்ப சரி! நான் புறப்படுறேன். இரண்டு மூன்று நாட்களில் முடிவெடுத்தால் நல்லது! என்றபடி விடை பெற்று சென்றார்.

    கனக சுப்பு மகளை

    Enjoying the preview?
    Page 1 of 1