Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mattikita Maranam
Mattikita Maranam
Mattikita Maranam
Ebook96 pages46 minutes

Mattikita Maranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603335
Mattikita Maranam

Read more from Devibala

Related to Mattikita Maranam

Related ebooks

Reviews for Mattikita Maranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mattikita Maranam - Devibala

    http://www.pustaka.co.in

    மாட்டிக்கிட்டா மரணம்

    Mattikita Maranam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    மாமியார் 'சீரியஸ்' என்ற தந்தி வந்த அந்த நாள் இப்போதும் நினைவில் மின்னுகிறது.

    என் மனைவி அலறி அழத் தொடங்கினாள்.

    என்னங்க புறப்படுங்க எனக்கு மூச்சு முட்டுது. அம்மாவுக்கு அங்கே என்ன ஆச்சோ? சகுந்தலா பாவம் குழந்தை! என்ன கஷ்டப்படறாளோ? நான் இப்பவே போயாகணும்.

    சரி! உன்னை பஸ்... ஏத்தி விடறேன்

    என்னது? நான் மட்டுமா? நீங்க வர வேண்டாமா?

    தபாரு கெளசல்யா! எனக்கு லீவு இல்லை. திடீர்னு நான் வந்துர முடியுமா உன்னோட?

    இதுவே உங்கம்மாவா இருந்தா, இப்படி பேசிட்டு நிப்பீங்களா?

    சரி சரி நானும் வர்றேன். உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு.

    துணிகளை எடுத்து வெச்சுக்கோ.

    நான் போய் ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு சொல்லி விட்டு திரும்புவதற்குள் கௌசல்யா தயாராகிவிட்டாள்.

    எங்களது நாலு வயது மகன் அம்மாவைத் துளைத்துக் கொண்டிருந்தான்.

    கல்யாணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்த ரெட்டை வால்.

    கையில, கொஞ்சம் தாராளமாவே பணம் வெச்சுக்குங்க.!

    எதுக்கு?

    அது ஆம்பிளை இல்லாத வீடு. அம்மா நேயாளி. சகுந்தலா சின்னப் பொண்ணு. நாமதான் பொறுப்பா செயல்படணும்!

    மூத்தவள் என் மனைவி கௌசல்யா.

    அடுத்தவள் சகுந்தலா.

    எங்கள் கல்யாண சமயத்தில் சகுந்தலாவுக்கு பன்னண்டு வயது.

    இப்போது பத்தொன்பது.

    கல்யாணமான ரெண்டு வருடங்களில் பக்கவாதம் வந்து அதிக நாள் இருக்காமல் மாமனார் இறந்து விட்டார்.

    அப்போதே கெளசல்யா விடவில்லை.

    இருக்கற நிலபுலன்களையெல்லாம் வித்துட்டு! நீயும், தங்கச்சியும் என்னோட வந்துருங்கம்மா!

    எனக்கு எரிச்சலாக இருந்தது.

    'என் மனிதர்களை அண்ட விடமாட்டாள்!'

    'ஆனால் இவளது அம்மாவும் தங்கையும் நிரந்தரமாக வந்து விட வேண்டுமாம்!'

    ஆனால் நான் பேசுமளவுக்கு நிலைமை போகவில்லை.

    வேண்டாம் கெளசல்யா! நாங்க வரலை!

    ஏம்மா?

    "உங்கப்பா வாழ்ந்த இடம். நானும் அங்கேதான் சாகணும். நமக்கு பல வருஷங்களா பழகின கிராமம். நிலத்துலேருந்து கணிசமா, பணம் வருது. எனக்கும், உன் தங்கச்சிக்கும் கஷ்டம் இல்லை. அவளுக்கு இன்னும் அஞ்சாரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சாப் போதும். நான் இங்கேயே இருந்துர்றேன்.

    அம்மா பிடிவாதமாக இருந்து விட்டாள்.

    'வருஷத்துக்கு ஒருமுறை இவள் போய் கிராமத்தில் இரண்டு மாதங்கள் இருந்து விட்டு வருவாள்'

    'நான் விட்டு விடுவேன்'

    ‘அந்த இரண்டு மாதங்கள்தான் நிஜமாக நான் வாழும் மாதங்கள்'

    'என்னா அப்படி பாக்கறீங்க!"

    'என்னை பற்றி இனிமேலும் நீங்க தெரிஞ்சுகலைனா சரியில்லை. அரசபுரசலா ஊர்ல பேசிக்கறதைஅப்பட்டமா நானே உங்ககிட்ட சொல்லிர்றேன்.'

    'நான் ஜாலியான ஆசாமி'

    'வாழ்க்கை வாழறதுக்கு நினைக்கற ரகம்!'

    'என் பொண்டாட்டி கெளசல்யாவுக்கு நான் ராமனா இருக்கணும்னு ஆசை.'

    'என் பேரு கூட பட்டாபிராமன்தான்!'

    'ஆனா குணம்தான் நேர்மாறு!'

    ‘அவ கிராமத்துக்குப் போன அந்த ரெண்டு மாசம் தான் நான் நானா இருப்பேன்'

    வீட்ல வாங்கி வச்சிட்டு நடுக்கூடத்துல ஒக்காந்து மப்பும், மந்தாரமுமா இருக்கலாம்!'

    எந்த நேரமும் வாய்லேருந்து புகை மண்டலம் தூள் கிளப்பி, கனவு சீன்ல வாழலாம்!'

    அப்பப்ப கஞ்சா, அபின்...

    எல்லாத்துக்கும் மேலா பலான சங்கதி.

    ஏற்பாடு யாரு? நம்ம கபாலிதான்!'

    வீட்டுக்கு சப்ளை பண்ணுவான். பதினெட்டு முதல் இருபத்திரெண்டு வரை..

    அட்டகாசமான அயிட்டங்கள்.

    'அக்கம் பக்கம் கவனிக்காதானு கேக்கறீங்களா?'

    'அதெல்லாம் தெரியாத மாதிரி செட்டப் பண்ண மாட்டேனா?'

    திருடறவனுக்கு மறைச்சு வைக்கத் தெரியாட்டி எப்படி?'

    கெளசல்யா இல்லாத ரெண்டு மாசத்துல மனம் போன போக்கில வாழ்ந்திடுவேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1