Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Vizhigal Urangidumo…?
Kaadhal Vizhigal Urangidumo…?
Kaadhal Vizhigal Urangidumo…?
Ebook117 pages38 minutes

Kaadhal Vizhigal Urangidumo…?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்!
வேகமாய் வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர் நான் விடாமுயற்சியோடு நம்பிக்கை இழக்காமல்... ஏகப்பட்ட ஏமாற்றங்களையும், பொருட்படுத்தாமல் போராடி எழுத்துலகில் எனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறேன்.
இக்குறுநவால் தொகுப்பில்
காதல் விழிகள் உறங்கிடுமா...? - நாயகி கலைவாணி ஒரு அற்புதமான பெண்!
கலைவாணி உங்கள் இதயத்தில் வீணை வாசிக்கப் போகிறாள். யதார்த்தமான காதல் கதை இது!
தொடர்ந்து தங்களது ஆதரவை வேண்டும்...
பின்னத்தூர்
க.மகேஷ்வரன்
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580128305669
Kaadhal Vizhigal Urangidumo…?

Read more from Maheshwaran

Related to Kaadhal Vizhigal Urangidumo…?

Related ebooks

Reviews for Kaadhal Vizhigal Urangidumo…?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Vizhigal Urangidumo…? - Maheshwaran

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    காதல் விழிகள் உறங்கிடுமா...?

    Kaadhal Vizhigal Urangidumo…?

    Author :

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    என்னுரை

    வணக்கம்!

    வேகமாய் வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர் நான் விடாமுயற்சியோடு நம்பிக்கை இழக்காமல்… ஏகப்பட்ட ஏமாற்றங்களையும், பொருட்படுத்தாமல் போராடி எழுத்துலகில் எனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறேன்.

    இக்குறுநாவல் தொகுப்பில், ‘காதல் விழிகள் உறங்கிடுமா…?’ நாயகி கலைவாணி ஒரு அற்புதமான பெண்!

    கலைவாணி உங்கள் இதயத்தில் வீணை வாசிக்கப் போகிறாள். யதார்த்தமான காதல் கதை இது!

    தொடர்ந்து தங்களது ஆதரவை வேண்டும்…

    பின்னத்தூர்

    க. மகேஷ்வரன்

    1

    சாயங்காலம் ஐந்து மணி.

    மேற்குபக்க வானத்தில் சூரியன் புதைந்துக் கொண்டிருந்தான். இரை தேடி முடித்த பறவைக் கூட்டம் கூடுகளை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்ப் பறந்தன. தங்கத்தை உருக்கி சரிகையாய் வைத்துத் தைத்ததுபோல வெண்பஞ்சு மேகங்கள் ஒளிர்ந்தன. தோட்டத்தில் பூத்திருந்த குண்டு மல்லிகை மொட்டுக்களைப் பறித்து சரமாய்த் தொடுத்து, பந்தாய்ச் சுருட்டி, வெண்கல அர்ச்சனைக் கூடைக்குள் வைத்து எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள் கலைவாணி.

    அத்தே கௌம்புங்க கோயிலுக்குப் போகலாம்!

    ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருந்த அபூர்வத்தின் தலைமாட்டில் வந்து நின்று மெல்லிய குரலில் சொன்னாள்.

    நா வரலை கலைவாணி. நீ மட்டும் போயிட்டு வா

    ஏந்த்தே? இன்னைக்கு பிரதோஷம்.

    என்னால எழுந்திரிக்க முடியலை. ஒரே தலைவலி விண்விண்ணுன்னு தெறிக்குது! அபூர்வம் முனகினாள்.

    துளியும் கசங்காத பட்டுச்சேலை! கழுத்தில் தடிமனாய் தங்கச் சங்கிலி! காதுகளில் டாலடிக்கும் வைரக் கம்மல்! மூக்கில் எட்டுக்கல் வைரமூக்குத்தி என பணக்கார களை சொட்டியது.

    தலைவலிதானே? இருங்கத்தே. இதோ நா தைலம் தேய்ச்சு விடறேன்!

    பதறியபடியே அர்ச்சனைக் கூடையைக் கீழே வைத்துவிட்டு தைலபாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள் கலைவாணி.

    நேரமாயிடுச்சு! நீ கோயிலுக்குக் கௌம்பு கலைவாணி! தைலத்தை நா தேய்ச்சுக்கறேன்.

    முனகியபடியே மெதுவாய் எழுந்து உட்கார்ந்தாள் அபூர்வம்.

    தைலபாட்டிலின் மூடியைத் திறந்து, பரிவும், பாசமுமாய் அபூர்வத்தின் நெற்றியில் அழுந்தத் தேய்த்தாள் கலைவாணி.

    இதமாய் சுகமாய் இருந்தது!

    கண்களை மூடிக்கொண்டாள் அபூர்வம்!

    அத்தே கொஞ்சம் காபி கலந்து எடுத்து வரட்டுமா? என்றாள் அதீத அக்கறையோடு.

    வேணாம் கலைவாணி! தைலம் தேய்ச்சாச்சுல்லே? இனி வலி நின்னுடும். நீ கோயிலுக்குக் கௌம்பு கலைவாணி.

    அபூர்வம் அவசரப்படுத்தினாள்.

    அர்ச்சனைக் கூடையைக் கையிலெடுத்துக் கொண்டு எழுந்து வெளியே நடந்தாள் கலைவாணி.

    கலை என்றபடியே மாடியறையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார் சபேசன்.

    என்ன மாமா?

    கோயிலுக்கு நீ மட்டும் தனியாவா போறே?

    அத்தைக்குத் தலைவலியாம்! நா மட்டும்தான் போறேன் மாமா.

    சரி… காருலேயே போயிட்டு வந்துடு! நடந்தெல்லாம் போக வேணாம் கரிசனமாய்ச் சொன்னார்.

    பக்கத்துல இருக்கற கோயிலுக்கு எதுக்கு மாமா காரெல்லாம்? நா காத்தாட நடந்தே போயிட்டு வந்துடறேன்!

    விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள்! கலைவாணியைப் பற்றி சுருக்கமாய்…

    கலைவாணிக்கு அப்பா, அம்மா யாரும் கிடையாது. இளம்வயதிலேயே இருவரையும் பறி கொடுத்திருந்தாள்.

    அபூர்வமும், சபேசனும், அவளுக்கு மாமா, அத்தை உறவு முறை. அவர்கள்தான் அவளை வளர்த்து ஆளாக்கினார்கள்.

    ப்ளஸ்-டூ வரைக்கும் படித்திருக்கும் கலைவாணிக்கு இப்போது இருபத்திரண்டு வயது நடக்கிறது!

    சபேசன் - அபூர்வம் தம்பதியின் ஒரே மகன்… பிரகதீஸைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காகக் காத்திருக்கிறாள்.

    பிரகதீஸ் எந்த நேரமும் பிசினஸ் பிசினஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறான். கல்யாணப் பேச்சை எடுத்தாலே நழுவி ஓடிப்போய் விடுகிறான்! பெரும்பாலும் ஆபீஸ், ஹோட்டல் என்று தங்கிவிடுவான்! வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோதான் வீட்டுப் பக்கம் வருவான்.

    பிரகதீஸ் மீது கலைவாணிக்கு கொள்ளைக் காதல்! ‘இவன்தான் தன்னை கட்டிக் கொள்ளப் போகிறான். இவன்தான் தன்னுடைய கணவன். இவன்தான் தனக்கு எல்லாமே!’ என்று கற்பனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் கலைவாணி.

    கலைவாணி மாநிறம்தான் என்றாலும் லட்சணமாய் இருப்பாள். தெய்வீக அழகு என்பார்களே அதுபோன்ற அழகு அவளிடம் குவிந்திருந்தது. கோலம் போடுவது, விதவிதமாய் சமைப்பது, தோட்டத்தைப் பராமரிப்பது. அபூர்வம், சபேசனைக் கவனித்துக் கொள்வது என எல்லாமே கலைவாணிதான்.

    அரண்மனை போன்ற அந்த பங்களாவில் தேவதையைப்போல வலம் வந்து கொண்டிருந்தாள்.

    2

    டேய் கவுதம் உம் மனசுல என்னடா நெனைச்சுக்கிட்டிருக்கே? மகனை வாஞ்சையோடு பார்த்தாள் பவானியம்மாள்.

    தும்பைப்பூ போன்ற வெண்மையான சேலைகட்டி, நெற்றியில் பட்டையாய் விபூதி பூசியிருந்தாள். கழுத்தில் தங்கம் வைத்துக் கட்டப்பட்ட முத்துமாலை அணிந்திருந்தாள். தலைமுடி பாதிக்குப் பாதி நரைத்துப் போயிருந்தது. முகத்திலும், கண்களிலும் சாந்தம் வழிந்தது.

    "திடீர்னு எதுக்கும்மா இந்தக்

    Enjoying the preview?
    Page 1 of 1