Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malarukku Thendral Pagaiyanal…
Malarukku Thendral Pagaiyanal…
Malarukku Thendral Pagaiyanal…
Ebook146 pages52 minutes

Malarukku Thendral Pagaiyanal…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு பணிவான வணக்கம். மறுபடியும் உங்களை சந்திக்க வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வித்தியாசமான, விழிப்புணர்ச்சியை, ஏற்படுத்தப் போகிற கருவை.... மையமாக வைத்து நான், தந்திருக்கும் இந்த நாவலை சிறந்த ரசிகத் தன்மை கொண்ட நீங்கள் மனப்பூர்வமாக ஏற்பீர்கள் என்பது என் நம்பிக்கை.
இந்நாவலில் வருகிற உதயா மாதிரி ஒளிமதி மாதிரி.... தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்கள் நூறாயிரம் பேர் உருவாக வேண்டும். அவர்களால் மட்டுமே சமுதாய அவலங்களை ஒழிக்க முடியும்...... அருமை தெரியாமல் புழுதியில் கிடக்கிற பொன் வீணைகளை சுருதி பிசகாமல் மீட்டமுடியும்.
தன் சுயநலத்திற்காக பொய் மேல் பொய்யாக சொல்லி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய சரண் போன்ற ஆண்களும், உண்மை எது பொய் எது என அறியாமல் அவசரத்தில் பிறர் மனதை காயப்படுத்துகிற அன்பரசி போன்ற பெண்களும் இந்நாவலை படித்த பிறகாவது திருந்த வேண்டும். கதையின் முடிவில் உதயா எடுத்த முடிவு சரிதானா? என வாசித்து விட்டு சொல்லுங்கள். நன்றி.
மீண்டும் சந்திப்போம்
மகேஷ்வரன்.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580128304792
Malarukku Thendral Pagaiyanal…

Read more from Maheshwaran

Related to Malarukku Thendral Pagaiyanal…

Related ebooks

Reviews for Malarukku Thendral Pagaiyanal…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malarukku Thendral Pagaiyanal… - Maheshwaran

    http://www.pustaka.co.in

    மலருக்கு தென்றல் பகையானால்…

    Malarukku Thendral Pagaiyanal…

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    http://pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    என்னைப் பற்றி!

    என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு பணிவான வணக்கம். மறுபடியும் உங்களை சந்திக்க வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    வித்தியாசமான, விழிப்புணர்ச்சியை, ஏற்படுத்தப் போகிற கருவை.... மையமாக வைத்து நான், தந்திருக்கும் இந்த நாவலை சிறந்த ரசிகத் தன்மை கொண்ட நீங்கள் மனப்பூர்வமாக ஏற்பீர்கள் என்பது என் நம்பிக்கை.

    இந்நாவலில் வருகிற உதயா மாதிரி ஒளிமதி மாதிரி.... தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்கள் நூறாயிரம் பேர் உருவாக வேண்டும். அவர்களால் மட்டுமே சமுதாய அவலங்களை ஒழிக்க முடியும்...... அருமை தெரியாமல் புழுதியில் கிடக்கிற பொன் வீணைகளை சுருதி பிசகாமல் மீட்டமுடியும்.

    தன் சுயநலத்திற்காக பொய் மேல் பொய்யாக சொல்லி ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய சரண் போன்ற ஆண்களும், உண்மை எது பொய் எது என அறியாமல் அவசரத்தில் பிறர் மனதை காயப்படுத்துகிற அன்பரசி போன்ற பெண்களும் இந்நாவலை படித்த பிறகாவது திருந்த வேண்டும். கதையின் முடிவில் உதயா எடுத்த முடிவு சரிதானா? என வாசித்து விட்டு சொல்லுங்கள். நன்றி.

    மீண்டும் சந்திப்போம்

    மகேஷ்வரன்.

    1

    பூக்களாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை. அசைந்து அசைந்து நடக்கும்... அழகிய மயிலைப் போல... புதுப்பட்டுச் சேலை சர சரக்க... கையில் பால் செம்புடன்... அடிமேல் அடி வைத்து... கட்டிலை நெருங்கினாள் உதயா. தலை நிறைய பூச்சூடி, கழுத்து தாங்காத அளவுக்கு நகைகள் அணிந்து.... தாலி கட்டுகிற நேரத்தில் இருந்ததை விட இன்னும் இன்னும் பேரழகியாய்த் தெரிந்தாள்.

    ‘மாப்ளை... என்ன சொன்னாலும்... கேட்டுக்கணும்... சரி... சரின்னு தலையாட்டிக்கணும்... எதிர்த்துப் பேசவே கூடாது.... நான் அப்படித்தான் உங்கப்பாகிட்டே நடந்துகிட்டேன். அதனால தான்... இன்னைக்கு வரைக்கும்... ஒழுங்கா குடும்பம் நடத்திகிட்டிருக்கேன்....’

    இந்த அறைக்குள் நுழைவதற்கு முன்பு.... கையில் பால் சொம்பைக் கொடுத்தபடியே.... அம்மா கோகிலவாணி சொன்னது உதயாவின் காதினுள் ஒலித்தது.

    'என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமா... சரி.... சரின்னு தலையை ஆட்டணுமா... எதிர்த்துப் பேசவே... கூடாதா......? என்ன சமுதாயம் இது....? ஏன் பெண்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் நிபந்தனைகளைப் போடுகிறார்கள்?’

    அலை அலையாய் எழுகிற எண்ணங்களை அப்புறப்படுத்தி விட்டு ஆசையும் காதலுமாய்.... கண்களில் வெட்கம் சூழ... புது மாப்பிள்ளை கோலம் கலையாத அடிக்கண்ணால் பார்த்தாள் உதயா.

    அறைக்கு நடுவில் கிடந்த வழவழப்பான... விலையுயர்ந்த தேக்கு மரக்கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில்... ஒருக்களித்துப் படுத்திருந்தான் சரண். பட்டு வேஷ்டியிலும், சட்டையிலும் வாட்டசாட்டமாய் காணப்பட்டான். நல்ல கருப்பு நிற தேகம் தான் என்றாலும்.... முகம் வசீகரமாக இருந்தது.

    உதயாவின் கைகளில் அணிந்திருந்த வளையல்களும், காலில் அணிந்திருத்த.... வெள்ளிக் கொலுசும்... சிணுங்கியது. அந்த சிணுங்கல் ஓசையில் ஈர்க்கப்பட்ட சரண்.... மூடியிருந்த தனது கண்களைத் திறந்தான். கண்களை அகலமாக்கி உதயாவை ஏற இறங்கப் பார்த்தவன்.... விகக்கென எழுந்தமர்ந்தான்.

    சரணின் முகத்தில் ஒருவித இறுக்கம் படர்ந்திருந்தது. புது மாப்பிள்ளைக்குரிய சந்தோஷமோ, ஆர்வமோ,துளிகூட இல்லை. எதையோ பறி கொடுத்து விட்ட வேதனையும், துக்கமும் தான் அவனை ஆக்கிரமித்திருந்தது.

    உதயாவோ அவனுக்கு நேர்மாறாய் இருந்தாள்.

    உடம்பினுள் பரவியிருந்த குறுகுறுப்புடன்... கையிலிருந்த பால் சொம்பை அவனிடம் ஆசையோடு நீட்டினாள்.

    அழகான பெரிய வெள்ளி செம்பு. அது நிறைய... முந்திரி பருப்புத் தூளும், பேரீச்சைப் பழச்சாறும் கலக்கப்பட்ட... மிதமான சூட்டில், பால் இருந்தது.

    சரண் அந்த பால் சொம்பை... வாங்கினான். பக்கத்திலிருந்த டீபாய் மீது வைத்தான். பால் சொம்பை வாங்குகிற போதே அவனுடைய கை விரல்கள் நடுங்கின. குப்பென்று வியர்த்தது. இதயம் வேகமாய்த் துடித்தது.

    ‘அவரோட கால்ல எல்லாம்.... விழுந்து கும்பிடமாட்டேன்......’

    ‘சரி...... கால்ல விழ வேண்டாம். பால் சொம்பை அவரோட கையில கொடுத்துட்டு.... அப்படியே... அவருக்குப் பக்கத்துல உட்காந்துரு....'

    தன் அம்மா... கோகிலவாணி சொல்லிக் கொடுத்த வார்த்தைகளை நினைத்துப் பார்த்தாள். அவனுடைய அனுமதியை எதிர்ப்பார்க்காமலே.... பக்கத்தில் சட்டென்று அமர்ந்தாள்.

    உதயாவின் மேனி... தன்னோடு உரசுவதை உணர்ந்த சரண்... தீ சுட்டதைப் போல.... பதறி...... விலகினான். நகர்ந்து அமர்ந்தான்.

    'முதலில் பேசுவது யார்?’

    'நானா… அவரா?’

    'ஏன்.... இன்னும் எதுவுமே பேசவில்லை.... மௌனமாகவே இருக்கிறாரே.... என்ன காரணம்?’

    உதயாவின் இதயம் தந்தியடித்தது.

    அவளைப் பெண் பார்ப்பதற்கு கூட சரண் நேரில் வரவில்லை. அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தே சம்மதம் சொல்லி விட்டான். நிச்சயதார்த்தத்தின் போதும்... சரண் வரவில்லை. அவனது குடும்பத்தினரும்... உறவினர் கூட்டமும் தான்.... வந்தது. உதயாவின் சம்மதத்தை யாருமே கேட்கவில்லை. உதயாவுக்கென்று ஒரு இதயம் இருப்பதையோ, அதில் ஏகப்பட்ட கனவுகளும், எதிர்பார்ப்புகளும் பூட்டி வைக்கப்பட்டிருப்பதையோ, யாருமே லட்சியம் பண்ணவில்லை.

    ‘பொண்ணு லட்சணமா இருக்கணும். ப்ளஸ் டூ வரைக்குமாச்சும் படிச்சிருக்கணும்... பெரியவங்களை மதிக்கத் தெரியணும்... கணவனுக்கு அடங்கின மனைவியா.... காலம்பூரா அவன் காலடியிலேயே கெடக்கணும். அவனோட மனசு நோகாம...... அன்பா.... பார்த்துக்கணும்.... அது போதும். மத்தபடி சீர்வரிசையெல்லாம்....... செய்யறதை செஞ்சா போதும்.... இவ்வளவு வேணும்.... அவ்வளவு வேணும்னு கட்டாயமெல்லாம் இல்லைன்’னு.... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னதுமே...... எனக்கு உங்கப் பொண்ணு உதயாதான் ஞாபகத்துல வந்துச்சு. அதான் ஓடி வந்தேன். மாப்பிள்ளையோட பேரு சரண். அஞ்சு வருஷம் வெளிநாட்டுல போய் சம்பாதிச்சுட்டு.... இப்பத்தான் திரும்பியிருக்காரு. அப்பா.... அம்மா.... சத்தியன்னு ஒரு தம்பி...... இது தான் அவங்களோட குடும்பம். அழகான குடும்பம்...... ரொம்ப அளவான குடும்பம். என்ன சொல்றீங்க. உதயாவுக்கு இதை முடிச்சிடலாமா?

    வாய் நிறைய வெற்றிலைப் பாக்கைப் போட்டு மென்று குதப்பியபடியே.... தரகர்தான் வீடு தேடி வந்து இந்த வரனை சொன்னார்.

    அதைக் கேட்டதுமே கல்யாணராமனுக்குப் பிடித்து போய் விட்டது.

    அவங்களை வரச் சொல்லி.... பேசிப் பார்ப்போம். பிடிச்சிருந்தா.... உதயாவைக் கொடுத்துடலாம்ங்க.... என்றாள் கோகிலவாணி.

    தான் பெற்ற பெண்ணை மாலையுங் கழுத்துமாய் மணப்பெண் கோலத்தில் பார்க்க வேண்டுமே என்ற பதைபதைப்பு அவளுக்கு. இந்த இடமாவது நல்லபடியாக, அதிக சீர்வரிசைகள் கேட்காமல் முடிய வேண்டும் என்ற கவலையில் பரபரத்தாள்.

    கல்யாணராமனுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் தலைமை எழுத்தர் வேலை. ஆறுமாதங்களுக்கு முன்பு தான் அந்த பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இத்தனை வருட சம்பாத்தியமும் நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குவதற்குத்தான் போதுமானதாக இருந்தது. உதயா அவருக்கு மூன்றாவது குழந்தை.

    உதயாவுக்கு மூத்தது இரண்டும் ஆண்கள். இருவருமே... கல்யாணராமனால் நன்றாக படிக்க வைக்கப்பட்டு... கை நிறைய சம்பாதிக்கிற நிலைக்கு உயர்ந்து விட்டவர்கள். இருவருக்குமே கல்யாணமாகி மனைவி, குழந்தைகளோடு தனித்தனியே... குடும்பம் நடத்திக்

    Enjoying the preview?
    Page 1 of 1