Malargal Poi Pesuma?
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean Naan Rating: 5 out of 5 stars5/5Tick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsKalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsThalaattu Maari Ponatho? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thee! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vizhigal Urangidumo…? Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsNenjam Yekkathil Thavikkuthu Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyirai Azhaikkirean... Rating: 0 out of 5 stars0 ratingsEnge Neeyo Naanum Ange Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsNee Indri Vazhvena? Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Irupathu Ennidamey! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Oviyam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Malargal Poi Pesuma?
Related ebooks
Yaathreegan Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Irupathu Ennidamey! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Yengi Thavikkum Idhayam Saatchi! Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Pudhumaipithan Short Stories - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nera Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Unathu Kaanikkai Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsMayanizhal Rating: 0 out of 5 stars0 ratingsThavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsMounathin Kural Rating: 0 out of 5 stars0 ratingsPorattam Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsSariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Unakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Mutham Yaarudaiyathu? Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Vaanam Vittu Vaa Nilave Rating: 0 out of 5 stars0 ratingsMaaney Mayiley Manjari Rating: 0 out of 5 stars0 ratingsUyirum Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Bhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Uraintha Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Malargal Poi Pesuma?
0 ratings0 reviews
Book preview
Malargal Poi Pesuma? - Maheshwaran
http://www.pustaka.co.in
மலர்கள் பொய் பேசுமா?
Malargal Poi Pesuma?
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
என்னைப் பற்றி
என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம்!
மீண்டும் உங்களை சந்திக்க வந்திருப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். 'மலர்கள் பொய் பேசுமா?' என்ற இந்நாவலில் வெள்ளை மனம் கொண்ட செந்தூரன் என்ற இளைஞனின் கள்ளமில்லாத காதலை சொல்லியிருக்கிறேன்.
கீழே விழுந்த விதைதான் முளைக்கும். விருட்சமாய் வளரும். விழுந்தவன் எழுவான். விசுவரூபமெடுப்பான். அடியும் அவமான வலியும்தான் ஒருவனை உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும்.
செந்தூரன் பூங்குயில் மீது உயிரையே வைத்திருந்தான். அவளை ஒரு மயிலிறகாய் நினைத்திருந்தான். அவளோ அவனைக் கத்தியைப் போல குத்தி கிழித்தெறிந்தாள். வார்த்தைகளாலேயே குற்றுயிராக்கினாள் காதலை தூள்தூளாய் நொறுக்கினாள்.
கீழே விழுந்தவன் எழுந்தானா? காதலை மறந்தானா?
பூங்குயில் போன்ற திமிரா அழகாக திரியும் இளம் பெண்களுக்கு இந்நாவல் ஒரு பாடம்.
அவசியம் விமர்சனம் எழுதுங்கள்.
மீண்டும் சந்திப்போம்,
மகேஷ்வரன்.
1
மலர்களோடு உன்னை ஒப்பிடவே முடியாது
ஏனெனில்
மலர்களுக்குப் பொய் பேச தெரியாது
நிலவோடும் உன்னை இணைத்து பேசக்கூடாது
ஏனெனில்
நிலவுக்கு
மென்மையையும் குளுமையையும் தவிர
வேறெதுவும் தெரியவே தெரியாது!
திடகாத்திரமான வெள்ளைக்குதிரை அது...
உடம்பு முழுவதும் வரி வரியாய் கறுப்பு வண்ணக் கோடுகள் நிறைந்திருந்தது. குதிரையின் முதுகில் மணிக்குஞ்சங்களுடன் கூடிய பளபளப்பான இளஞ்சிவப்பு வண்ண பட்டுத்துணி விரிக்கப்பட்டிருக்க அதன் மேலே கால்களைத் தொங்கவிட்டபடி கம்பீரமாய் அமர்ந்திருந்தான் அந்த ராஜகுமாரன்.
ஆறடி உயரத்தில், அகலமான மார்புகளுடனும், பருமனான சதைப் பிடிப்பான தோள்களுடனும் காட்சியளித்தான்.
ஆண்மை பொங்கும் வசீகரமான வட்டமுகம்.... முரட்டு மீசை.... சுருள் சுருளாய் தலை கேசம்... காதுகளில் தங்க குண்டலங்கள் ஆடின.
இறுக்கமான கவச உடை தரித்து இடையில் கூர்மையான வாளை சொருகியிருந்தான்.
அவன் பெயர் என்னவோ, எந்த தேசத்து ராஜகுமாரனோ அதெல்லாம் தெரியவில்லை. கையிலிருந்த சாட்டையை ஒரு சுழற்று சுழற்றினான். குதிரை கனைத்தபடி ஓடியது.
டக்..... டக்... டக்...
சாட்டையை மறுபடியும் ஒரு சுழற்று சுழற்றினான்.
டக் டக்...டக்…
குதிரையின் குளம்பொலி அதிர்ந்தது.
ஆற்றங்கரையோரமாய் குதிரை ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்று நீரில் குளித்துக் கொண்டிருந்த பூங்குயில் ஈரம் சொட்ட சொட்ட கரை ஏறினாள். சந்தனத்தில் கடைந்தது போன்ற உடம்போடு ஈர உடை ஒட்டிக் கொண்டது. கரை மீது சுருட்டிக் கிடந்த சேலையை எடுத்து அவசரமாய் உடம்பில் சுற்றிக் கொண்டாள். ஆற்று நீரை நிரப்பி வைத்திருந்த வெண்கல குடத்தை எடுத்து இடையில் வைத்தாள்.
அசைந்து அசைந்து நடந்தாள்.
ராஜகுமாரனை சுமந்திருந்த வெள்ளைக் குதிரை அவளுக்கு நேர் எதிரேதான் வந்து கொண்டிருந்தது. மானின் மருட்சியோடு ஓடிப்போய் ஒரு பூமரத்திற்கு பின்னால் மறைய முயன்றாள். அதற்குள் வெள்ளைக் குதிரை அவளை நெருங்கியிருந்தது. அந்த ராஜகுமாரன் குதிரையின் மீது அமர்ந்தபடியே நீண்ட தனது கையை நீட்டி மலரிலும் மெல்லிய அவளது பூங்கரத்தைப்பற்றி கண்ணிமைக்கும் வினாடியில் மேலே தூக்கி தன்னுடைய மடியில் அமர வைத்தான். பூங்குயில் அலறினாள். வீறிட்டு அலறினாள். குனிந்தான். அவளுடைய கன்னங்களில் தனது உதடுகளால் முத்தமிட்டான். அவளுடைய இடையில் கையை சுற்றி வளைத்து இறுக்கமாய் கட்டிக் கொண்டான். பூங்குயில் கிறங்கிப்போனாள். கண்கள் மூடி மயங்கி போனாள். இருவரையும் சுமந்தபடி அந்த வெள்ளைக்குதிரை இன்னும் வேகமாய் ஓடியது. ஒரு புகை பிரதேசத்திற்குள் மறைந்தது.
டக்... டக்... டக்…
சட்டென்று விழித்துக் கொண்டாள் பூங்குயில்.
சலக்.... சலக்... சலக்.....
வாசலில் அவளுடைய அம்மா சந்திரோதயம் சாணம் தெளித்துக் கொண்டிருக்கிற ஓசை கேட்டது.
கண்களைக் கசக்கியபடியே இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று தேய்த்தபடி உள்ளங்கைகளை உற்றுப் பார்த்தாள்.
'ச்சே.... நான் கண்டதெல்லாம் கனவு தானா? என்னவொரு சுகமான கனவு'
தனது உதடுகளையும், கன்னங்களையும் ஆசையாய் தொட்டுப் பார்த்தாள்.
‘அந்த ராஜகுமாரன் இங்கெல்லாம் தானே என்னை முத்தமிட்டான்!'
நினைக்க நினைக்க இனித்தது. கன்னங்கள் குங்குமமாய் சிவந்தன.
'விடியற்காலம் கண்ட கனவு பலிக்கும் என்பார்களே. அப்படியானால் அந்த ராஜகுமாரன் வருவானா? வெள்ளைக் குதிரையில் என்னைத் தூக்கிப் போவானா? தன் மடி மீது அமர வைத்து இறுக்கமாய் கட்டித் தழுவி கன்னங்களில் முத்தமழை பொழிவானா?'
கண்களில் ஏக்கம் படரப்படர திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.
வாசலில் சாணம் தெளித்து கூட்டிப் பெருக்கி மாக்கோலம் போட்டு விட்டு கோல மாவு டப்பாவோடு உள்ளே வந்தாள் சந்திரோதயம்.
என்னடி எழுந்த எடத்துலயே உட்கார்ந்திருக்கே. போய் பல் தேய்ச்சு மொகம் அலம்பிட்டு வா. காபி தர்றேன். அப்படியே உன் தம்பி பூபாலனையும் எழுப்பி விட்டுட்டு போ
கூடத்தில் இருந்த அலமாரியின் மேல் தட்டில் கோலமாவு டப்பாவை வைத்து விட்டு அடுக்களையை நோக்கி நடந்தாள்.
பூங்குயில் தான் படுத்திருந்த பாயை சுருட்டி தலையணையோடு சேர்த்து பாய் தூக்கில் போட்டாள். பாயை விட்டு விலகி வெறுந்தரையில் சுவரோடு ஒட்டிக்கிடந்த பூபாலனின் முதுகில் தட்டினாள்.
டேய் பூபாலா எழுந்திரிடா
பூபாலன் முனகினான். புரண்டு படுத்தான்.
போக்கா...
சிணுங்கினான்.
அம்மா திட்டும்டா. தூங்கினது போதும்டா எழுந்திரிடா
இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. பள்ளிக்கூடம் லீவு தானே நான் லேட்டா தான் எழுந்திரிப்பேன்
பூபாலன் அசைய மறுத்தான். அப்படியே குப்புறப்படுத்துவிட்டான்.
நீயாச்சு அம்மாவாச்சு. எனக்கென்ன வந்தது. நீ பத்து மணி வரைக்கும் வேணாலும் தூங்கு
கொல்லைப்புறம் நடந்தாள்.
பூபாலனுக்கும், பூங்குயிலுக்கும் ஐந்து வயது வித்தியாசம்.
பூபாலன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். பூங்குயில் பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டாள். வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். சந்திரோதயத்திற்கு உதவியாய் சமைப்பதற்கு கீரையைக்கூட உருவிக் கொடுக்க மாட்டாள். கொதிக்கிற குழம்பைக்கூட அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கத் தெரியாது. வெந்நீர் போடுவதற்கு கூட அடுக்களைக்குள் நுழைந்தது கிடையாது.
நேரத்திற்கு நன்றாக ருசித்து சாப்பிடுவாள்.
பொழுது போகவில்லை என்றால் பூபாலனோடு சண்டையிடுவாள்.
தோழிகளோடு சேர்ந்து ஆற்றுக்கு குளிக்கப் போனால் திரும்பி வருவதற்கு ஒன்றரை மணி நேரமாகும். ஒரே கேலி தான் கிண்டல் தான். சிரிப்பு தான்.
பூங்குயில் நல்ல நிறம். வாளிப்பான தேகம். அகலமான வட்ட முகத்தில் கருவண்டுகளாய் சுழலும் விழிகள், சற்றே சதைப்பிடிப்பான மூக்கு, பூவின் இதழை ஒட்ட வைத்தது போல மென்மையான உதடுகள், திறமை வாய்ந்த சிற்பி பார்த்து பார்த்து செதுக்கியது போன்ற உடற் கட்டு.
விதவிதமாய் பாவாடை தாவணியைக் கட்டிக் கொண்டு இரட்டை ஜடையையும் குஞ்சம் வைத்துப் பின்னி முன்புறமாய் போட்டபடி கால்கள் முளைத்த பட்டாம்பூச்சியாய் திரிவாள்.
பூங்குயிலுக்கு