Enge Neeyo Naanum Ange Unnodu
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Koduthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsVirkapadatha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratings
Related to Enge Neeyo Naanum Ange Unnodu
Related ebooks
Ennennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsMounamenum Siraiyil...! Rating: 0 out of 5 stars0 ratingsThalaivan Sooda… Nee Malarnthai Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsKumudamum Vikatanum - Sirukathai Thoguppu 1 Rating: 5 out of 5 stars5/5Poovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsPookkalilum Theepidikkum Rating: 0 out of 5 stars0 ratingsMudiyatha Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே உன்னை அழைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsபுரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsVellaikodi Rating: 5 out of 5 stars5/5Vaanaville Vaanamalla Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsGopuram Rating: 0 out of 5 stars0 ratingsதீயைச் சுடும் தென்றல்! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Manasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsYaarai Kolai Seyyanum? Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Kadantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsVizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsMalarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Yengi Thavikkum Idhayam Saatchi! Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5
Reviews for Enge Neeyo Naanum Ange Unnodu
0 ratings0 reviews
Book preview
Enge Neeyo Naanum Ange Unnodu - Maheshwaran
http://www.pustaka.co.in
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
Enge Neeyo Naanum Ange Unnodu
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
சுடச்சுட ஆவி பறக்கும் காபி குவளையைக் கையிலேந்தியபடி மாடிப்படிகளில் மெதுவாய் ஏறி அஜய்யின் அறைக்கு முன்பாய் வந்து நின்றாள் சுமித்ரா. மூடிக்கிடந்த அறையின் கதவைத் தட்டுவதற்காக ஒரு கையை கதவின் அருகே கொண்டு போனாள். கைப்பட்டதுமே ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த கதவு விரியத் திறந்துக்கொண்டது.
உள்ளே அடியெடுத்து வைத்தாள்.
படுக்கையில் அஜய்யைக் காணவில்லை.
இரவில் பயன்படுத்திய தலையணையும் போர்வையும் படுக்கையை ஒட்டி கிடந்த டீபாய்மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஷவரிலிருந்து தண்ணீர் கொட்டுகிற இரைச்சல் பாத்ரூம் இருந்த திசையிலிருந்து துல்லியமாய் கேட்டது.
'அஜய் எழுந்து குளிக்க போய்விட்டான்'
சுமித்ரா அறைக்குள் கிடந்த ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் போய் அமர்ந்தாள். வழக்கமாய் தினமும் காலையில் அஜய் படுக்கையை விட்டு எழுவதற்கு எட்டுமணி ஆகிவிடும். பல் தேய்க்காமல் 'பெட் காபி' குடிக்கிற பழக்கம் ஐந்து வயதில் ஆரம்பித்தது... இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 'பெட்காபி'யை வாங்கி குடித்த கையோடு மறுபடியும் போர்வையை கழுத்துவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுகமாய் உறங்கத் தொடங்கிவிடுவான். பிரம்புக் குச்சியினால் அடித்து நொறுக்கினால் கூட படுக்கையைவிட்டு எழவே மாட்டான். சுவர்க்கடிகாரம் எட்டுமணி அடிக்கும் போதுதான் படுக்கையிலிருந்து எழுந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடியே வேண்டாவெறுப்பாய் குளியலறையை நோக்கிச் செல்வான். இதெல்லாம் பத்து நாட்களுக்கு முன்பு.
இப்போது அஜய் அப்படியில்லை.
மாறிவிட்டான்.
ரொம்பவே மாறிவிட்டான்.
விடியற்காலமே எழுந்து விடுகிறான். மொட்டை மாடிக்குச் சென்று வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்கிறான். பல் தேய்க்காமல் பச்சைத்தண்ணீர் கூட குடிப்பதில்லை. சுமித்ரா அவனுக்காக ஆசையாய் 'பெட்காபி' கலந்து எடுத்து வருவதற்குள் குளிக்கப் போய் விடுகிறான்.
அவனிடம் தெரிந்த திடீர் மாற்றம் சுமித்ராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
இந்த விஷயத்தில் மட்டும்தான் அஜய் மாறாமல் இருந்தான்.
மற்றபடி அஜய்யை எந்த குறையும் சொல்ல முடியாது.
படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரன். அவன் எம்.பி.ஏ. முடித்ததுமே தன் தந்தையைப்போல சொந்த தொழிலில் இறங்கிவிட்டான்.
எக்ஸ்போர்ட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறான்.
குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட பாத்ரூமைவிட்டு வெளியே வந்தான்.
"அஜய்... இந்தாப்பா காபி...''
காபி குவளைக்கு மேலே இன்னமும் ஆவி பறந்துக் கொண்டிருந்தது.
உடம்பு முடியாத நீங்க எதுக்காம்மா... சிரமப்பட்டு மாடிப்படியெல்லாம் ஏறி வர்றீங்க...? இனி எனக்கு பெட்காபியெல்லாம் வேணாம்! தினமும் காலையில் குளிச்சிட்டு டிபன் சாப்பிடறப்போ காபியையும் சேர்த்து குடிச்சுக்கறேன்மா...
ஈரம் சொட்டிய தலை கேசத்தை துவட்டிக்கொண்டு சுமித்ரா நீட்டிய காபி குவளையை வாங்கி உறிஞ்ச ஆரம்பித்தான்.
நீ இப்பல்லாம் ரொம்பவே மாறிட்டே அஜய்...
வயசுக்கு ஏத்தாப்ல நடந்துக்கறதுதானே... நல்லது...? நான் என்ன சின்னக் கொழந்தையாம்மா...?
சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எனக்கு இன்னமும் கொழந்தைதான்...
புன்முறுவலோடு சொன்னவள், அஜய் காபியைக் குடிக்கும் வரை அங்கேயே நின்று காலியான குவளையைக் கையில் வாங்கிக்கொண்டான்.
"அஜய்.. சீக்கிரமா.. டிரெஸ் பண்ணிகிட்டு கீழே வாப்பா.. உன் டாடி உனக்காக காத்திருக்கார். ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்...'' என்றாள்.
"டாடிக்கு வேற வேலையே இல்லை... என் கல்யாணத்தைப்பத்தி பேசறதுக்குத்தான் கூப்பிடுவாரு...''
அஜய் தோள்களைக் குலுக்கினான்.
சாதாரணமாகப் பேசுகிறபோதே கன்னத்தில் குழி விழுந்தது.
அதில என்னடா தப்பிருக்கு...? இப்பத்தானே சொன்னே...! வயசுக்கு ஏத்தாப்ல நடந்துக்கறதுதான் நல்லதுன்னு! எங்களுக்கு இருக்கறது நீ ஒரே பிள்ளை. காலத்துல கல்யாணம் பண்ணி... உன்னை மாலையுங்கழுத்துமாப் பார்க்கணும்... உனக்குப் பொறக்கப்போற கொழந்தைகளை எங்க மார்பிலயும் தோள்லயும் போட்டு வளர்க்கணும்னு... ஆசை இருக்காதா...?
"நியாயமான ஆசைதான்... ஆனா எனக்கு இப்பத்தான் இருபத்தியெட்டு வயசு நடக்குது. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கறேனே...'' என்றான் அஜய்.
இந்த வார்த்தையை உன் டாடிகிட்டே வந்து சொல்லு...! நீயாச்சு... அவராச்சு... நான் இதுல தலையிடப் போறதில்லை...
சுமித்திரா அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தாள்.
ஈரம் காய்ந்துப்போயிருந்த தேகமெங்கும் பாடி ஸ்பிரேவை பீய்ச்சிக்கொண்டு, இளநீல நிற பேண்ட்டையும் இறுக்கமான டீசர்ட்டையும் அணிந்தான். நெற்றியில் சுருள் சுருளாய் வந்து விழுந்த கேசத்தை அழகாய் வாரிக்கொண்டு, மறக்காமல் கார் சாவியைத் தேடி எடுத்தான்.
'வழக்கம்போல டாடி கல்யாணத்தைப் பத்திதான் பேசப் போகிறார்.'
'என்ன சொல்லி சமாளிப்பது...?'
'இந்தியாவிலேயே நம்பர்ஒன் பிசினஸ்மேனா... வரணும்... உலகம்பூரா நம்ம எக்ஸ்போர்ட் நிறுவனத்தோட கிளைகள் தோன்றி வளர்ச்சியடையணும்... நெனைச்சதை சாதிக்கணும்... உலகமே வியப்பா ஆச்சர்யமா பார்க்கணும்... பிறகுதான் எனக்கு கல்யாணம்னு டாடிகிட்டே அழுத்தமாக சொல்லிட வேண்டியதுதான்...'
'சொன்னால் டாடி ஏற்றுக்கொள்வாரா?'
கார் சாவியை விரலில் மாட்டி சுழற்றியபடியே கீழே இறங்கி வந்தான்.
டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தார் கோபிநாத்.
"குட்மார்னிங் டாடி...''
அவருக்கு அருகில் கிடந்த இருக்கையில் போய் அமர்ந்தான்.
அஜய்யைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்தார். இருவருக்கும் நெய்ப்பொங்கலையும், தேங்காய் வடையையும் பிளேட்டில் பரிமாறி சாம்பாரை ஊற்றினாள் சுமித்ரா.
இட்லி பண்ணலையாம்மா...?
"பண்ணியிருக்கேனே... மொதல்ல பொங்கலையும் தேங்காய் வடையையும் சாப்பிடு அஜய்...'' சாம்பாரில் ஊறப்போட்டிருந்த இன்னும் இரண்டு தேங்காய் வடைகளை அஜய்யின் பிளேட்டில் வைத்தாள் சுமித்ரா.
"போதும்மா...''
வயசுப் பிள்ளை... அரை வயித்துக்கும், கால் வயித்துக்கும் சாப்பிட்டா ஓடியாடி வேலை செய்ய முடியாது...
என்றாள் சுமித்ரா.
"சுமித்ரா.. எனக்கொரு வடை வெய்...''
ம்ஹூம்.. தேங்காய் சேர்த்திருக்கேன்... ஏற்கனவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு...
வடைகள் இருந்த பாத்திரத்தை கோபிநாத்தின் கைக்கு எட்டாதவிதமாய் தள்ளி வைத்தாள் சுமித்ரா.
பாத்தியா அஜய்... உங்கம்மாவோட கஞ்சத்தனத்தை...
அதெல்லாம் உங்களோட நல்லதுக்குத்தானே டாடி...
உங்கம்மாவை விட்டே கொடுக்கமாட்டியே...
"நீங்க இருபத்தியெட்டு வருஷமா என்னை எங்களோட நெஞ்சுலதான் சுமந்துகிட்டிருக்கீங்க... ஆனா அவங்க அதுக்கு முந்தியே என்னை அவங்களோட வயித்துல பத்து மாதம் சுமந்தவங்களாச்சே... பாசமா இருந்தாலும் சரி மற்ற விஷயங்களா இருந்தாலும் சரி... என்னோட பர்ஸ்ட் சாய்ஸ் எங்கம்மாதான்...''
அஜய் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சுமித்ராவின் முகத்தில் பூரிப்பு படர்ந்தது. கண்களில் நீர்த்துளிர்த்தது. அந்தப் பக்கமாய் திரும்பி முந்தானையினால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
சாப்பிட்டதும் பிளேட்டிலே கையை கழுவினான் அஜய்.
அஜய்..
சொல்லுங்க டாடி...
"இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் முன்கூட்டியே வீட்டுக்கு வந்திடு...''
ஏன் டாடி...?
"உனக்குப் பொண்ணுப் பார்க்க போறோம்...''
ஸாரி டாடி... என்னால முடியாது. நம்ம கம்பெனி ஸ்டாப்ஸ் புதுசா ஒரு டிசைன் ஆடையை வடிவமைச்சிருக்காங்க... அந்த ஆடையை லேடிஸ் காலேஜ் ஒண்ணுல நடக்கற பங்ஷன்ல அறிமுகப்படுத்தறதா இருக்கோம். நான் வீட்டுக்கு வர எப்படியும் ராத்திரி பத்தரை மணியாயிடும்...
அப்போ... பொண்ணுப் பார்க்க நாளைக்கு போகலாமா...?
நாளைக்கு நான் விடியற்காலமே எழுந்திருச்சு... எக்ஸ்போர்ட் விஷயமா ஒரு முக்கியமான நபரை சந்திச்சுப் பேசறதுக்காக தூத்துக்குடிக்குப் போறதா முடிவு பண்ணியிருக்கேன். திரும்பிவர ரெண்டு நாட்களாகும் டாடி...
சொல்லிவிட்டு விறுவிறுவென போர்ட்டிகோவை நோக்கி நடந்தான்.
நில்லு அஜய்... உம் மனசுல என்னதான் நெனைச்சு கிட்டிருக்கே?.. எப்ப கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி... தட்டிக் கழிச்சுடுறியே...!
"டாடி.. எம்மனசுல உங்களையும் அம்மாவையும் தவிர... வேற யாருமில்லை... நீங்களா எதையாவது நெனைச்சு கற்பனை பண்ணிக்காதீங்க... நம்ம எக்ஸ்போர்ட் கம்பெனியை இந்தியாவிலேயே