Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalam Kadantha Uravugal
Kaalam Kadantha Uravugal
Kaalam Kadantha Uravugal
Ebook101 pages30 minutes

Kaalam Kadantha Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணேஷ்ராஜ், வயது 45. சுமார் 5ஆண்டுகள் தினமலரிலும், தற்போது 11 ஆண்டுகளாக தினகரனில் மாவட்ட தலைமை நிருபராகவும் பணிபுரிந்து வருகிறேன். கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் உண்டு. அவ்வப்போது பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111601514
Kaalam Kadantha Uravugal

Read more from N. Ganeshraj

Related authors

Related to Kaalam Kadantha Uravugal

Related ebooks

Reviews for Kaalam Kadantha Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalam Kadantha Uravugal - N. Ganeshraj

    http://www.pustaka.co.in

    காலம் கடந்த உறவுகள்

    Kaalam Kadantha Uravugal

    Author:

    என். கணேஷ்ராஜ்

    N. Ganeshraj

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ganeshraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    குடும்பநாவல்

    காலம் கடந்த உறவுகள்

    1

    அந்த லேடீஸ் ஹாஸ்டல் அதிகாலையிலே சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. டியூப்லைட் வெளிச்சமும்,  வாளிக்குள் விழும் நீரின் ஓசையும் தூங்குபவர்களுக்குள் இலேசான எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்குள் விடிந்துவிட்டதா..?

    7 மணிக்கு எல்லோரும் எழுந்திருப்பது போல சிஸ்டம் இருந்தால் எப்படி இருக்கும். ஆனால் இங்கு சாத்தியமில்லை. தூரம், வேலையின் தன்மை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.

    தொழிற்சாலை, ஐடி.கம்பெனி, ஏற்றுமதிநிறுவனம், திரைப்படத்துறை, அரசுஅலுவலகம் என்று தயாராகி ஒவ்வொரு திசையில் ஓட வேண்டும்.

    இரவிலாவது நிம்மதியாக தூங்கலாம் என்றால், அதிலும் துவக்கநிலை இடையூறுகள் உண்டு. ஒருவர் 7 மணிக்கு வந்தால், இன்னொருவர் 10 மணிக்கு வருவார்.

    இதனால் இரவுத்தூக்கமும் வெவ்வேறானதாகவேஇருக்கும். கட்டுப்பாடு கொண்ட விடுதி என்றாலும் சிலரின் வேலையின் தன்மையைப் பொறுத்து வந்து செல்லும்நேரங்களில் விதிவிலக்கு அளிப்பதுண்டு.

    கவிதா புரண்டு படுத்த போது இலேசாக விழிப்பு ஏற்பட்டது. நடுநசி வரையிலான முழிப்பு கண்களில் மிளகாய் பொடியைத் தூவிக்கொண்டிருந்தது.

    கவிதாவிற்கு விருத்தாச்சலம் சொந்தஊர். வயது 32. இன்னமும் திருமணமாகவில்லை. வேலைக்காக சென்னைக்கு வந்திருக்கிறாள். மூன்றுநாட்களுக்கு முன்பே  விடுதிக்கு வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாடகை செலுத்தி, அறையை உறுதி செய்து வைத்திருந்தாள். இன்று வேலைக்கு கிளம்பவேண்டும். பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள ‘ஸ்கை கை எக்ஸ்போர்ட்டில் பணி. ஏற்றுமதிப்பொருட்களின்தரத்தை இறுதிநிலை சோதனையை உறுதிப்படுத்தி அதற்கான ஆவணங்களை ஷிப்பிங்நிறுவனத்திற்கு தயார் செய்து அளிக்க வேண்டும்.

    இனி தூங்கின மாதிரிதான்...இலேசாய் போர்வையை விலக்கிப்பார்க்க... வினோதினி நைட்டியை தலைவழியே கழற்றிக் கொண்டிருந்தாள். கவிதாவைப்பார்த்ததும். ஏய்...’’ என்று சின்ன வெட்கத்துடன் மீண்டும் மாட்ட முயன்றாள்.... சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டு போர்வைக்குள் முகம் புதைத்துக் கொண்ட கவிதா ஸாரிப்பா... எதேச்சையாத்தான் முழிச்சேன்.. கேரிஆன்...’’ என்றாள்.

    கவிதா போர்வைக்குள் பேசிக்கொண்டே இருக்க... மெல்லிய சிரிப்புடன் வினோதினி அருகில் இருந்த பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்... அதேவேளையில் பக்கத்து அறை கீதா பேஸ்ட்டை அங்கும் இங்கும் துழாவிவிட்டு வேறு வழியின்றி ஓசி வாங்க இந்த அறைக்குள் நுழைந்தாள். டூத்பிரஷை வாயில் கவ்வியபடி கேஷீவலாக அலமாரியை துழாவினாள்..

    போர்வைக்குள் பேச்சுச்சப்தம் கேட்கவே ஒரு நிமிடம் திகைத்து பின்பு மீண்டும் காதை உன்னிப்பாக்கினாள்..

    "நான்புதுசுப்பா... சாப்பாடு, பஸ்ரூட் எல்லாம் நீதான் சொல்லணும்....’’ கவிதா பேசிக்கொண்டே இருந்தாள்.

    கீதாவிற்குள் குறும்பு கொப்பளித்தது. ..‘இருடி வினோதினி வர்றேன். இதுக்குத்தான் புதுசா கல்யாணம் பண்ண தம்பதிகளை பிரிக்கக்கூடாதுன்னு சொல்றது. இப்போ பாரு.. காலையிலே மொபைல்ல ரொமான்சா.....’ சப்தம் கேட்காமல் மெல்ல எட்டு வைத்து நடந்து வந்தாள்.

    அருகில் வந்ததும் விருட்டென்று போர்வையை தூக்கி வீச... உள்ளுக்குள் இருந்த கவிதா பயத்தில் திடீரென அலறினாள். வினோதினிக்குப்பதில் வேறு ஒருத்தியைப்பார்த்ததும் அதிர்ந்த கீதா.... ஸாரிங்க.... ஸாரி...ஸாரி..’’. விரலைக்கடித்துவிட்டு கையை  உதறினாள். நான் வினோதினின்னு நினைச்சிட்டேன்ங்க...’’

    வினோதினிக்குப்பதில் வேறு ஒரு பெண் நிற்பதைப்பார்த்த கவிதா புரியாமல் மலங்கமலங்க விழிக்கத்துவங்கினாள்.

    அதற்குள் வினோதினி பாத்மூமில் இருந்து வெளிப்பட... "அட ரெண்டு பேரும்

    Enjoying the preview?
    Page 1 of 1