Naan Thedum Jevvanthi Poovithu
()
About this ebook
அழிந்து வரும் கலைகளில் ஒன்று கணியான் கூத்து நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மட்டுமே வாழும் இந்த கலைஞர்களின் வாழ்வியலை புத்தகம் எழுத செல்லும் கதையின் நாயகன் ஒரு கலைஞனின் வீட்டு பெண்ணோடு மையல் கொள்கிறான். அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறது, இடையில் காதலை பிரித்து அவளை விருந்தாக்க நினைக்கும் வில்லன் அவன் எண்ணம் ஈடேறியதா அவன் எப்படியெல்லாம் தொல்லை கொடுத்து காதலை பிரிக்க நினைக்கிறான் என்பதை கணியான் கூத்து கலைஞர்களின் வாழ்வியலோடு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது. அடையாளம் இழக்கும் இந்த சமூகத்தினரின் சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆட்ட நிகழ்வுகள் ஆட்டம் நிகழ்த்தும் கூறுகள் நிறைந்த அற்புதமான நாவல் தான் நான் தேடும் செவ்வந்தி பூவிது.
Read more from Irenipuram Paul Rasaiya
Koothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsNee Thana Andha Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsThaali Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsVaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Unnai Nesithean Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Uthirvathillai Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolaipaai Rating: 0 out of 5 stars0 ratingsVenthu Thaniyum Venjinangal Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsThottathil Oru Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsVadalimaram Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye... Kadhal Enpathu Rating: 0 out of 5 stars0 ratingsGnabagankal Thaalaattum Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naan Thedum Jevvanthi Poovithu
Related ebooks
Ini Illai Idaivelai Rating: 5 out of 5 stars5/5Uchimeethu Vaanidinthu... Rating: 5 out of 5 stars5/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsKathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Gopuram Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Sei Thozhi Rating: 5 out of 5 stars5/5Kanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsசிறுகதைகள் - I Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal-I Rating: 4 out of 5 stars4/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Priyangaludan Naane Rating: 5 out of 5 stars5/5Kalachakram Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Kiligalai Parakka Vidungal Rating: 0 out of 5 stars0 ratingsஒளி பிறந்தது! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Rating: 5 out of 5 stars5/5Kaalam Kadantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsUn Per Solla Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Regai Rating: 5 out of 5 stars5/5Un Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsSudum Nilavu Sudaatha Sooriyan Rating: 5 out of 5 stars5/5Andha Moondru Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5
Reviews for Naan Thedum Jevvanthi Poovithu
0 ratings0 reviews
Book preview
Naan Thedum Jevvanthi Poovithu - Irenipuram Paul Rasaiya
https://www.pustaka.co.in
நான் தேடும் ஜவ்வந்திப் பூவிது
Naan Thedum Jevvanthi Poovithu
Author:
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Irenipuram Paul Rasaiya
For more books
https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 1
காற்று திசை தெரியாமல் அலைந்ததில் குளிர் இறுக கவ்வி இருந்தது. மரங்கள் போர்த்திக் கொள்ள வழியின்றி குளிரில் விறைத்து நின்றன.
சாலைகளில் பனி படர்ந்திருந்தன. அதை வாகனங்கள் ஓடி வழித்தெடுத்துக் கொண்டு போனதில் மீதமிருந்த ஈரம் சாலையில் படர்ந்திருந்தது.
கவிந்திருந்த இருளில் ரப்பர் மரங்கள் கூட்டமாய் நிற்பது கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. மணி நான்கு என்பதை அங்கிருந்த தேவாலயத்தின் மணிச்சத்தம் நான்கு முறை அடித்து ஓய்ந்தது.
ரப்பர் மரங்களிலிருந்து பால் எடுப்பவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் மரங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
பொழுது விடிந்து கொண்டிருந்தது. போர்வைக்குள் உடல் நுழைத்து சுருண்டு கிடப்பது சுகமாக இருந்தது இளமதியனுக்கு.
உடலை கவ்வியிருந்த குளிர் விலகிச் செல்ல மனமின்றி போர்வைக்குள்ளே சுருண்டிருந்தது. இளமதியன் நீண்ட உறக்கத்தில் இருந்தான்.
சாலையில் ஓடிய வாகனத்தின் இரைச்சல் கேட்டு கண் விழித்தான். அவரது பார்வை சுவரில் தொங்கிய கடிகாரத்தில் போய் விழுந்தது.
மணி நான்கைத் தாண்டி சில நொடிகளே ஆகி இருந்தன. இனிமேலும் படுத்துக் கிடப்பது சரியல்ல என்று போர்வையை வீசிவிட்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தான்..
அவன் சிந்தனைகள் சிறகு விரித்தன. அதிகாலை நேரம் எழுதுவதற்கு தோதுவான நேரம். மூளை ஷார்ப்பாக இருந்து கொண்டு நேற்று சந்தித்த இட்டகவேலி மனிதர்களை வரிசைப் படுத்தியது.
அவனது பேனா விரல்களை இறுகப் பிடிக்க ஒரு தேர்ந்த எழுத்தாளனைப்போல் எழுத ஆரம்பித்தான்.
அவன் கட்டுரையை எழுதி முடித்து அடையாளம் இழக்கும் கணியான் என்று தலைப்பிட்டபோது பொழுது நன்றாக விடிந்திருந்தது.
உடல் சேர்ந்து லேசான கொட்டாவி வந்து தூக்கம் அவனை சூழ்ந்து கொள்ள எழுந்து கட்டிலில் சரிந்தான்.
பகல் எட்டு மணி வரையிலான தூக்கம் அவனை ஆரத் தழுவியிருந்தது. எழுந்து தயாராகி தக்கலையிலிருக்கும் முதற்சங்கு அலுவலகம் வந்து சேர்ந்த போது கடிகாரத்தின் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் உறவு கொண்டிருந்தன.
பனிரெண்டு மணிக்கு தான் எழுதிய கட்டுரையை முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ்சிடம் கொடுத்து விட்டு அவரோடு சேர்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தான் இளமதியன்.
பதினைந்து நாட்கள் கழிந்திருந்தன. முதற்சங்கு மாத இதழ் வெளியான போது இளமதியனில் புகைப்படத்துடன் கட்டுரை வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது.
இளமதியனை அலைபேசியில் அழைத்து அலுவலகம் வரும்படி அழைத்திருந்தார் முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ்.
இளமதியன் புறப்பட்டான். தக்கலை முதற்சங்கு பத்திரிகை அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.
டைப்பிஸ்ட் அம்பிகா அடுத்த இதழுக்கு வந்த கதைகளை அச்சிலேற்ற கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டு இருந்தாள்.
முதற்சங்கு இதழ் ஆசிரியர் சிவனி சதீஷ், எழுத்தாளர் குமார செல்வாவின் கிணறு சிறுகதையை கம்ப்யூட்டர் பிரிண்ட் எடுத்து புரூப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இளமதியன் வந்து சேர்ந்தான். அச்சகத்தில் இருந்தவர்களின் முகம் பிரகாசமானது.
வாங்க சார்... முதற்சங்கு இதழ்ல நீங்க எழுதின அடையாளம் இழக்கும் கணியான் கட்டுரை பிரமாதம்.
டைப்பிஸ்ட் அம்பிகா புன்னகைத்தபடியே சொன்னாள்.
தேங்க்ஸ்...
சொல்லிவிட்டு ஆசிரியர் சிவனி சதீஷிடம் வந்தான்.
வாங்க இளமதியன்…உட்காருங்க
இளமதியன் அவர் எதிரே அமர்ந்தான்.
உங்க கட்டுரை ரொம்ப பிரமாதம்... நிறைய வாசகர்கள் படிச்சிட்டு ஃபோன் பண்ணி பேசினாங்க…, கணியான் இன மக்கள் இதுவரைக்கும் கணியான் ஆட்டம் நிகழ்த்தக்கூடிய கலைஞர்களாகத்தான் தெரியும், ஆனா நாயன்மார்களும் பிற சாதிக்காரர்களும் வழிபடுகிற இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் பூசாரியா இருக்கிறதே கணியன் இனத்தை சேர்ந்தவங்கதான் என்ற தகவல் நீங்க எழுதின கட்டுரை மூலமாத்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது
இளமதியனை மனதார பாராட்டினார் ஆசிரியர் சிவனிசதீஷ்.
ரொம்ப நன்றி சார்... கணியான் ஆட்டம் நிகழ்த்தக்கூடிய ஆட்டக்காரர்களை ஒரு தடவ நேரில சந்தித்து அவங்க வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுதணும்ங்கிறது என்னோட ஆசை. அதற்கான முயற்சி எடுத்துகிட்டு இருக்கேன்...
இது நல்ல யோசனை தான்... நீங்க உடனே திருநெல்வேலி, தூத்துக்குடி இடங்களுக்கு புறப்படுங்க... அவர்களை நேரில் சந்தித்து எழுதினா கட்டுரை இன்னும் கூடுதல் சிறப்பாய் இருக்கும்... நீங்க எங்க இதழுக்கு தொடர் கட்டுரை எழுதுங்க... அப்புறமா அதை புத்தகமாக வெளியிட நான் ஏற்பாடு பண்றேன். என்ன சொல்றீங்க...?
எதிர்பார்ப்போடு கேட்டார் ஆசிரியர் சிவனி சதீஷ்.
பண்ணியிடலாம் அதுக்கு கொஞ்ச நாள் அங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து தான் எழுத முடியும். இங்கிருந்து தூத்துக்குடிக்கு நூற்றி அறுபது கிலோமீட்டர் தூரம். தினமும் போய் வர்றது ரொம்ப கஷ்டம். எல்லாத்துக்கும் கொஞ்சம் பணம் செலவாகும்.
இழுத்தபடியே சொன்னான் இளமதியன்.
உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி கோடு குடுத்துட்டு போங்க... என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றேன், ஒரு கட்டுரைக்கு இரண்டாயிரம் ரூபா தான் கொடுக்க முடியும் சமாளிக்க முடியுமா...?
கேட்டார் ஆசிரியர் சிவனி சதீஷ்.
"பரவாயில்ல... அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.
ரெண்டு மாசம் அங்க தங்க வேண்டியதிருக்கும் அதுக்குள்ள முடிச்சிடுவேன்
எனக்கு கட்டுரை தொடர்ந்து ஒரு வருஷம் போடுற அளவுக்கு பனிரொண்டு கட்டுரைகளா வேணும்
சம்மதித்தான் இளமதியன்.
அவன் அலுவலகம் வீட்டு புறப்பட்டபோது புது உற்சாகம் அவன் மனதில் குடி இருந்தது.
மறுநாள் காலையில் மார்த்தாண்டம் வந்து அங்கிருந்து நாகர்கோவில் டூ திருநெல்வேலி பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் ஏறி திருநெல்வேலி இறங்கி அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்த போது மணி இரண்டை கடந்திருந்தது.
பஸ் ஸ்டாண்டை ஒட்டி யிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வாடகைக்கு வீடு தேடி அலைந்தான். எங்காவது டூலெட் போர்டு இருக்கிறதா என்று கவனித்தபடியே நடந்தான். எதுவும் சிக்கவில்லை.
சாலையோரம் இருந்த எல்லா கடைகளிலும் விசாரித்தான். பலரும் கைவிரித்தார்கள்.
அந்த லாண்ட்ரிகாரர்கிட்ட கேளுங்க தம்பி... அவர் பலருக்கும் வீடு பிடிச்சு குடுக்கிறவருதான்
ஒரு கடை முதலாளி சொன்னதைக் கேட்டு புன்னகைத்தபடியே லாண்ட்ரிகாரர் கடை நோக்கி நடந்தான்.
அவரிடம் விபரம் சொன்னான் இளமதியன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வாய் திறந்தார்.
ஒரு வீடு இருக்கு, ஒரு ரூம், ஒரு கிச்சன், மாசம் இரண்டாயிரத்தி ஐநூறு வாடகை. இருபத்தஞ்சாயிரம் அட்வான்ஸ் வீட்ட பாக்குறீங்களா...?
ம்... பார்க்கலாம்ங்க
இளமதியன் சொன்னதும் இஸ்திரிப் பெட்டியில் இருந்த சூட்டை அணைக்காமல் அப்படியே வைத்துவிட்டார்.
தேய்த்துக்கொண்டிருந்த துணியை மடித்து வைத்துவிட்டு டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டியில் ஏறி அமர்ந்து சாவி நுழைத்தான். வண்டி