Vadalimaram
()
About this ebook
பனைமரத்தின் ஓலைகளைக் கொண்டு பாய் பெட்டி முடையும் ஒரு தாழ்ந்த சமூகத்துப் பெண்ணை மேல் வர்க்கத்தைச் சார்ந்த ஒருவன் காதலித்தால் சமூகத்தில் என்ன விளைவுகள் நிகழும் என்பதையும் அந்த தடைகளைத் தாண்டி காதலில் ஜெயித்தார்களா…? காதலில் ஜெயித்தாலும் வாழ்க்கையில் ஜெயித்தார்களா…?
சாதிகளின் ஆதிக்கம் வேரோடியிருக்கும் இந்த சமூகத்தில் காதல் மலரை விரிய வைத்து அழகு பார்த்தார்களா அல்லது வேரோடு பிடுங்கி கசக்கி எறிந்தார்களா என்பது தான் இந்த நாவல் நமக்கு சொல்ல வருகிறது.
பனைமரம் சார்ந்து தொழில் செய்யும் ஒரு சமூகத்தினரின் வாழ்வியலையும் வலிகளையும் பதிவு செய்திருக்கும் நாவல் தான் வடலிமரம் நாவல்.
காதல் வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை இரண்டு மாணவர்கள் ஆய்வு செய்து டாக்டர் பட்டங்களும், இரண்டு மாணவர்கள் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார்கள். வாசிப்பை நேசியுங்கள் உயர்வான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் ஆகுங்கள்.
Read more from Irenipuram Paul Rasaiya
Kaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsKoothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsGnabagankal Thaalaattum Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Unnai Nesithean Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thedum Jevvanthi Poovithu Rating: 0 out of 5 stars0 ratingsNee Thana Andha Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsVaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsThottathil Oru Veedu Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Uthirvathillai Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye... Kadhal Enpathu Rating: 0 out of 5 stars0 ratingsVenthu Thaniyum Venjinangal Rating: 0 out of 5 stars0 ratingsThaali Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolaipaai Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vadalimaram
Related ebooks
Valar Sirai Maatram Rating: 0 out of 5 stars0 ratingsNandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Oru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsChennaiyil Oru Mazhainaal! Rating: 5 out of 5 stars5/5Thittivaasal Marmam Rating: 5 out of 5 stars5/5Uravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsVerillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsVeliyatra Veedu… Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsIrantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsThirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsRudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Lakshmi Ramananin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsMutham Yaarudaiyathu? Rating: 0 out of 5 stars0 ratingsThottuppaar Enrathu Kaala Kannadi Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsThigil Roja Rating: 4 out of 5 stars4/5Puthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsTamilvananin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsJothi Vanthu Piranthal Rating: 0 out of 5 stars0 ratingsMaaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kan! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vadalimaram
0 ratings0 reviews
Book preview
Vadalimaram - Irenipuram Paul Rasaiya
http://www.pustaka.co.in
வடலிமரம்
Vadalimaram
Author :
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Irenipuram Paul Rasaiya
For more books
https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 1
எப்பொழுதும் டயர்களின் உரசல் சத்தம் கேட்டுப் பழகிப்போன திருவனந்தபுரம் நெடுஞ்சாலை வாகனங்களின் வரத்தின்றி ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது.
சீறிப்பாயும் வாகனங்களின் வெளிச்சமில்லை. காதைக் கிழிக்கும் சப்தமில்லை, சாலைகளின் வளைவு நெளிவுகள் தெரிய சாத்யமில்லை.
இருள் மூடிய சாலையை யாரும் கடக்காத நேரத்தில் ஒரு கறுத்த உருவம் அந்த சாலையைக் கடப்பதா வேண்டாமா என்று யோசித்துவிட்டு சாலையைக் கடந்துவிடுவது என தீர்மானமெடுத்து தனது முதல் அடியைச் சாலையின் மீது வைத்தது.
சட்டென்று சாலையில் வெளிச்சம் விழ, திரும்பிப் பார்ப்பதற்குள் கால அவகாசமின்றி மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த ஜீப், அந்த உருவம் மீது மோதியது. மோதிய வேகத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து மூச்சடங்கி சாலையில் அனாதையாகக் கிடந்தது அந்தப் பிணம்.
யாரும் உறக்கம் கலைந்து வந்து பார்க்கவில்லை. தார்ச்சாலை சிகப்பு கம்பளமாக கிடப்பது பின்னால் வந்த வாகனத்தின் வெளிச்சத்தில் தெரிந்தது.
நேரம் போகப்போக, சாலையில் வாகன வரவு கூடியிருந்தது. நிறைய வாகனங்கள் வேகமாய் வந்து பிரேக் போடவும் கால அவகாசமின்றி அந்த பிணத்தின் மீதேறியேப் போனது.
பிணத்தின் சதைத்துண்டுகளில் பாதி வாகனங்களின் டயர்களில் சிக்கிப் போனதில் பிணம் பாதியானது.
முட நாற்றம் கவிழ்ந்து கிடந்த சாலையில் மனித நடமாட்டம் ஆங்காங்கே தெரிந்தது. சிலர் மூக்கைப் பிடித்தபடி சாலையைக் கடந்து போவதை தெருநாய் ஒன்று வேடிக்கைப் பார்த்தது.
பொழுது விடிந்து வெயில் வந்து வறுக்கத் தொடங்கியதில் சதையும் எலும்புகளும் மற்றதொரு தோலாகிக் கிடந்தது அந்தபிணம். வாகனங்கள் பிணத்தின் மீது பலமுறை ஏறி இறங்கியதில் இரப்பர் மரத்திலிருந்து வெட்டி எடுத்த பாலை உறைய வைத்து எடுப்பது போல பிணம் கிடந்தது.
கொழுத்தும் வெயிலுக்குப் பிறகு அந்திப்பொழுதில் பெய்த அடைமழையின் பெருவெள்ளத்தில் பிணத்தின் தோல்கள் நசிந்து அடித்துச் செல்லப்பட்டன. விபத்து நடந்த சுவடே இல்லாமல் கிடந்தது திருவனந்தபுரம் நெடுஞ்சாலை.
தெரு நாய்கள் சாலைகளைக் கடக்கையில் விபத்தில் அடிபட்டு உருத்தெரியாமல் போவது சகஜம் தான், இனியொருமுறை எந்த தெரு நாயும் வாகனங்கள் ஓடும் சாலையின் குறுக்கே ஓடக்கூடாது என்ற பிரார்த்தனை கூட இல்லாமல் மனிதர்கள் சாலையைக் கடந்து கொண்டிருந்தார்கள் வழக்கம்போலவே...
இரவு மீண்டும் வந்து விடிந்தது... பனிமூட்டம் விலகாத அந்த விடியற்காலையில். .நேற்றைய இரவின் மிச்ச இருள் விலக மறுத்து அடர்ந்திருந்தது. திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த என்.ஜே.கே பேருந்தில் அமர்ந்திருந்த சொர்ணா ஜன்னல் கண்ணாடிகள் வழியாக வெளியேபாரத்தாள்.
ஷட்டர் கதவுகள் மூடப்பட்ட நிலையில் நிறைய கடைகள் ஓடிக்கொண்டிருப்பதைப் போல தெரிந்தது சொர்ணாவுக்கு. கடைகளில் வைத்திருந்த பெயர் பலகைகளில் எந்த ஊர் எழுதப்பட்டிருக்கிறது என்று உன்னிப்பாகக் கவனித்தாள்.
செல்வன் பர்னிச்சர் லேண்ட் சுவாமியார்மடம் என்பதை படித்தபோது மார்த்தாண்டம் செல்ல அதிக தூரமில்லை என்பதை உணர்ந்தாள்.
விலகியிருந்த முந்தானையைச் சரி செய்து விட்டு தலை முடியிலிருந்த சடை மாட்டியை உருவி சீப்பால் தலை வாரி மறுபடியும் தலை முடியில் மாட்டி வைத்தாள்.
பேருந்து மார்த்தாண்டம் அப்பாவு நாடார் கடையின் அருகில் வந்து நின்றது. சொர்ணா சூட்கேசை எடுத்துக் கொண்டு வண்டியை விட்டு இறங்கினாள்.
படிக்கட்டுகளை மறைத்தபடி ஆட்டோ டிரைவர்கள் நின்றிருந்தார்கள்.
ஆட்டோ வேணுமா?
ஒரே நேரத்தில் நாலைந்து குரல்கள் வந்து விழுந்தன.
சொர்ணா எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள். சாலையில் நேற்றிரவு பெய்த மழையின் ஈரம் உலராமல் கிடந்தது.
சந்தைக்குப் போகும் சாலையில் ஆட்கள் போவதும் வருவதுமாகப் பரபரப்பாக இருந்தார்கள். சொர்ணா ஆள் நடமாட்டங்களுக்கிடையே வேகமாக நடந்து பேருந்து நிலையம் அடைந்தாள்.
ஊர், முன்பு பார்த்தது போல் இல்லை. எல்லா கடைகளிலும் தகர போர்டுகளுக்குப் பதிலாகப் பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தார்கள். தகரப் போர்டுகள் எழுதும் விளம்பர ஆர்டிஸ்டுகள் கம்பியூட்டரில் கிராபிக்ஸ் கற்றிருப்பார்களா? அல்லது தேர்தல் சமயங்களில் மட்டும் சுவர் எழுதி, பிழைப்பு நடத்துகிறார்களா? என்ற கேள்வி சொர்ணாவின் மனதில் எழுந்து அடங்கியது.
பேருந்து நிலையம் பள்ளத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தாள். ஒரு காலத்தில் காளைகள் வியாபாரம் நடந்த இடமாகவும், மாலை நேரங்களில் பல்வேறு கட்சிகளின் பொதுக் கூட்டமும், கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டமும் நடக்கும் இடமாகவும் இருந்தது தற்போதைய மார்த்தாண்டம் பேருந்துநிலையம்.
முன்பு தொடுவெட்டி சந்தையென்றால் பலருக்கும் தெரியும். செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை சந்தை நாட்களில் சுமார் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொருட்களை வாங்கியும் விற்றும் பேரம் பேசிக்கொண்டும் இருப்பார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தை ஒரே நேரத்தில் பார்ப்பது நாலைந்து திருவிழாக்களில் வரும் கூட்டத்திற்குச் சமமாக இருக்கும். இன்று அந்தச்சந்தை பேருந்து நிலையமாக மாறியிருந்தது வியப்பாக இருந்தது.
மிடாலம் செல்லும் 88 சி பேருந்துக்காகக் காத்து நின்றாள் சொர்ணா. தேங்காப்பட்டணம், குலசேகரம், பனச்சமூடு பேருந்துகளே அதிகம் வந்து போயின. ஒரு வழியாக 88 சி பேருந்து வந்து சேர சொர்ணா அந்த பேருந்தில் ஏறிக் கொண்டாள்.
பஸ்சில் அவளோடு பத்தாவது வரை படித்த தோழி அனுராணி அவளை அடையாளம் கண்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டு பேச்சுகொடுத்தாள்.
சொர்ணா... எப்பிடி இருக்கே? நீ கோயம்புத்தூர் போனதுக்கப்புறம் ஆளே மாறீட்ட, எப்பிடி உன் பாடெல்லாம்?
ஆர்வமாய் கேட்டாள் அனுராணி.
பெருசா சொல்லும் படியா இல்ல, ஒரு மில்லுல வேல பார்க்கிறேன், எனக்கு ஒரே பொண்ணு, ஒரு நல்லவர் புண்ணியத்துல ஹாஸ்டல்ல நின்னு படிக்கிறா, ஆமா உனக்கு எத்தன குழந்தைங்க?
எனக்கு ஒருபையன், ஒருபொண்ணு, பையன் இப்பத்தான் மூணாவது படிக்கிறான். பொண்ணுக்கு ரெண்டரை வயசு தான் ஆகுது. அடுத்த வருஷம் எல்.கே.ஜியுல சேர்க்கணும்!
உன் வீட்டுக்காரர் என்ன பண்றார்
மரம் அறுக்கிற மில்லுல வேல பார்க்கிறாரு, உன் விஷயம் எல்லாம் கேள்விப்பட்டேன். இன்னாருக்கு இன்னாருன்னு ஆண்டவன் அண்ணைக்கே தலையுல எழுதியிட்டான் அது படி தானே நடக்கும். நாம பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்ச சமயத்துல நீ அழகான அரிப்பெட்டி முடைஞ்சு கொண்டு வந்து தருவ, அத இப்ப நினைச்சாலும் சந்தோஷமா இருக்கும். இப்பத்தான் ஊருல யாரும் பனை மரமே ஏறுறது இல்லையே, எல்லா பசங்களும் படிக்க போனதில பனை மரமேற ஆள் இல்லாமப் போச்சு. இந்த பனை மரம் மட்டும் பத்தடி வரைக்கும் வளர்ந்து நின்னா இப்ப கூட பனை மரத்துலயிருந்து ஓலை வெட்டி பாய் பெட்டி முடைஞ்சு வித்திருப்பாங்க இல்ல!
அவள் பேச்சுக்கு ஆமா
என்று தலையாட்டியபடியே இருந்தாள் சொர்ணா.
பேருந்து முளங்குழி வழியாகச் சானல்முக்கு வந்ததே தெரியவில்லை. அங்கிருந்து மூன்றாவது நிறுத்தத்தில் இறங்க