Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathirunthu Kaathirunthu
Kaathirunthu Kaathirunthu
Kaathirunthu Kaathirunthu
Ebook119 pages44 minutes

Kaathirunthu Kaathirunthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயிருக்குயிரான காதலன் வெளிநாட்டில் இறந்துவிட்டான் என்ற செய்தி இடியாய் இறங்கிய பின்பு அவன் நினைவுகளில் வாழும் காதலி எப்படி வாழ்கிறாள். அவள் அவன் நினைவுகளை மறந்து விட்டு புது வாழ்க்கையை துவங்கி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள மாட்டாளா என ஏங்கும் பெற்றோர்கள். சிறுவயதில் முதல் அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முறைமாமன் கீரிப்பாறை ஜோஸ் காத்திருக்கிறான். ஆனால் அவளோ வேறொருவனை விரும்பிய காரணத்திற்காக தன் மனதில் இருந்த எண்ணங்களை விலக்கி காதலர்கள் வாழ்க என்று வாழ்த்துக் கூறிய பின் அவள் காதலன் இறந்த செய்தி கேட்டு பரிதாபப்படுகிறான். பெற்றோரும் தாய்மாமனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது சம்மதம் தெரிவித்த அந்தப் பெண் திருமண நாளன்று வெளிநாட்டில் வேலை பார்த்த காதலன் உயிரோடு திரும்பி வந்து நின்றால் எப்படி இருக்கும். அவள் காதலனை கரம் பிடித்தாளா? தாய்மாமனை மணமுடித்தாளா? என்பதை சொல்லும் காதல் காவியம்தான் காத்திருந்து காத்திருந்து வாசியுங்கள் வசமாகி விடுவீர்கள்.

Languageதமிழ்
Release dateMar 7, 2022
ISBN6580153308186
Kaathirunthu Kaathirunthu

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Kaathirunthu Kaathirunthu

Related ebooks

Reviews for Kaathirunthu Kaathirunthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathirunthu Kaathirunthu - Irenipuram Paul Rasaiya

    http://www.pustaka.co.in

    காத்திருந்து காத்திருந்து

    Kaathirunthu Kaathirunthu

    Author :

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 1

    அதிகாலை இருட்டை குளிர் கவ்வி இருந்தது. மரங்கள் போர்த்திக் கொள்ள வழியின்றி குளிரில் விறைத்து நின்றன.

    சாலைகளில் பனி படர்ந்திருந்தன. அதை வாகனங்கள் ஓடி வழித்தெடுத்துக் கொண்டு போனதில் மீதமிருந்த ஈரம் சாலையில் படர்ந்திருந்தது.

    கவிந்திருந்த இருளில் ரப்பர் மரங்கள் கூட்டமாய் நிற்பது கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. மணி நான்கு என்பதை அங்கிருந்த தேவாலயத்தின் மணிச்சத்தம் நான்கு முறை அடித்து ஓய்ந்தது.

    ரப்பர் மரங்களிலிருந்து பால் எடுப்பவர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் மரங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

    பொழுது விடிந்து கொண்டிருந்தது. போர்வைக்குள் உடல் நுழைத்து சுருண்டு கிடப்பது சுகமாக இருந்தது சக்திவேலுவுக்கு.

    உடலை கவ்வியிருந்த குளிர் விலகிச் செல்ல மனமின்றி போர்வைக்குள்ளே சுருண்டிருந்தது. சக்திவேல் நீண்ட உறக்கத்தில் இருந்தார்.

    சாலையில் ஓடிய வாகனத்தின் இரைச்சல் கேட்டு கண் விழித்தார். அவரது பார்வை சுவரில் தொங்கிய கடிகாரத்தில் போய் விழுந்தது.

    மணி நான்கைத் தாண்டி சில நொடிகளே ஆகி இருந்தன. இனிமேலும் படுத்துக் கிடப்பது சரியல்ல என்று போர்வையை வீசிவிட்டு எழுந்து கட்டிலில் அமர்ந்தார்…

    அவரது மனைவி மரகதம் காலையில் சீக்கிரமாகவே எழுந்து மகள் கன்யாவை எழுப்பி டீ போட்டுத் தந்து, குளிக்க வைத்து ஆறரை மணி பஸ்சில் மார்த்தாண்டம் அனுப்பி வைக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.

    ரப்பர் மரங்களிலிருந்து பால் எடுக்கச் செல்பவர்கள் பீடி, சிகரெட் வாங்கிச் செல்ல அந்த நேரத்தில் கடையைத் திறந்து வைப்பது சக்திவேலுவுக்கு பழக்கமாகிப்போன ஒன்று.

    சக்திவேல் குரல் உயர்த்தி. சமையலறையில் நிற்கும் தனது மனைவி மரகதம் கேட்கும்படியாக டீ கேட்டார்.

    இதா கொண்டு வர்றேங்க… அவள் குரல் கொடுத்துக் கொண்டே ஏற்கனவே போட்டு வைத்திருந்த ஆறிப்போன டீயை மறுபடியும் சூடாக்கி எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

    சக்திவேல் டீயை எடுத்துக்கொண்டு சாலையின் முன்புறமிருந்த வீட்டின் பக்கவாட்டில் வீட்டோடு சேர்த்துக் கட்டியிருந்த பெட்டிக்கடையின் உள்கதவைத் திறந்தார்.

    கடைக்குள் வந்து வெளிக்கதவைத் திறந்து பலகையில் சொருகி வைத்திருந்த தினசரி நாளிதழை எடுத்து டீயை உறிஞ்சியபடியே தினசரியை மேய ஆரம்பித்தார்.

    சக்திவேலுவுக்கு படிப்பு ஏறவில்லை என்பதால் வெறும் பத்தாம் வகுப்போடு படிப்பு முடிந்திருந்தது.

    வீட்டோடு சேர்த்து கட்டிய பெட்டிக் கடையில் வியாபாரம் பார்த்ததில் அவருக்கு பிழைப்பு ஓடியது.

    மணிக்கு ஒரு தடவை வந்து செல்லும் பேருந்துக்கு மட்டும் ஐந்தாறு பேர் வந்து காத்திருப்பதும், பஸ் வரும்போது இறங்குபவர்களும் ஆக ஏழெட்டு பேர் நடமாடும் ஊராகவே இருந்தது.

    சிறுவர்களுக்கான மிட்டாய்களும், பழக்குலைகளும் சர்பத், எலுமிச்சம்பழத்தண்னீர் மோர் தான் அவரது கடையில் அதிக வியாபாரம் ஆகிக்கொண்டிருந்தன.

    இந்த காலத்தில இந்த கடைய கட்டீண்டு அழுறதுக்குப்பதிலா கூலிவேலைக்குப்போனா சுழையா ஐநூறு ரூவா சம்பாதிக்கலாம்… அவரது மனைவி மரகதம் அடிக்கடி சொல்லும் வார்த்தை தான் இது. அது அவரது காதுக்குள் நுழைந்ததது போலவே எந்த பலனுமின்றி வெளியேறி விடும்.

    தினசரி விற்பனையில் கிடைக்கும் நூறோ இருநூறோ போதுமானதென்று தான் இப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

    அவரது மகள் கன்யா படிக்கிறேன் என்றபோது முடியாது என்று மறுக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் அவள் ஃபீஸ் கேட்டு அழும்போது மட்டுமே அவருக்கு அது பெரும் கஷ்டமாக தெரியும்.

    கன்யாபி. எஸ். சி படித்து முடித்து விட்டு மார்த்தாண்டம் மதி கம்பியூட்டர்ஸ்சில் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை கம்பியூட்டர் கிளாஸ் படித்து விட்டு ஒன்பதே முக்கால் பஸ்சில் திரும்பி விடுவாள்.

    அவளை யாருக்காவது கட்டி வெச்சுடணும். அதை நினைக்கும்போது தான் அவருக்கு தூக்கம் வராமல் போகும்.

    அவரது வீட்டில் வசதி இல்லை என்றாலும் அவரது மகள் கன்யாவுக்கு அழகு இருந்தது. சக்திவேலுவுக்கு இணையான உயரம் அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.

    அழகு சாதனங்களும் நல்ல ஆடையும் இருந்திருந்தால் அவள் தான் அந்த ஊருக்கே அழகியாகி இருந்திருப்பாள். கரிய விழிகளில் மை எழுதி இருக்கமாட்டாள் ஆனால் எழுதியதுபோல் உணர்வு தோன்றும்.

    மரகதம் வேலையை முடித்து விட்டு உள்பக்க வழியாக கடைக்குள் வந்த போது பொழுது லேசாய் விடிந்திருந்தது...

    என்னங்க…உங்க தங்கச்சி மகன் கீரிப்பாற ஜோஸ்சுக்கு நம்ம பொண்ண கட்டிக்குடுத்தா என்ன..? அவனும் காரு, பங்களான்னு நல்ல வசதியாத்தான் இருக்கான்,..! அவரது மனைவி மரகதம் கேட்டாள்.

    வாய்ல நல்லா வருது, போயும் போயும் யாரோட இணைச்சுப்பேசற...? கீரிப்பாற ஜோஸ் பணக்காரன்தான் இல்லையின்னு சொல்லல, அவன் எப்பிடி பணக்காரன் ஆனான்னு தெரியுமாடீ…

    எப்பிடியோ பணக்காரன் ஆயிட்டானே, அத எதுக்கு நீங்க பார்க்கிறீங்க

    அவன் நல்ல வழியில சம்பாதிச்சவனா, கெட்ட வழியில சம்பாதிச்சவனான்னு பார்க்கணும்!

    அரசாங்கத்துக்கு சொந்தமான மரத்த வெட்டி கடத்துறவன், அதானே சொல்ல வர்றீங்க, அவனுக்கு அரசியல்ல ஆள் பலம் இருக்கு, அதனால தான் கீரிப்பாறையில் தல நிமிர்ந்து நடக்கிறான்

    அவனுக்கு என் பொண்ண கட்டி வெச்சா நாளைக்கு என் பொண்ணு நடுத்தெருவிலதான் வந்து நிக்கணும்

    அவன் உங்க தங்கச்சி மகன் தானே, அவனுக்கு நம்ம பொண்ண கட்டி வெக்கிறதா நீங்க வாக்கு குடுத்திட்டு இப்போ மாத்தி பேசறீங்களா?

    அவன் நல்ல வழியில சம்பாதிச்சிருந்தா குடுத்த வாக்க காப்பாத்தி இருப்பேன்

    நீங்க ஆபத்த விலை குடுத்து வாங்கப் போறீங்கன்னு நினைக்கிறேன்

    இனிமே அவன் பேச்ச எடுத்த எனக்கு கெட்ட கோபம் வந்துடும் ஆமா சொல்லீட்டேன்... சக்திவேல் வாசித்துக்கொண்டிருந்த தினசரி

    Enjoying the preview?
    Page 1 of 1