Venthu Thaniyum Venjinangal
()
About this ebook
சிறுகதைகள் மூலம் சமூக பிரச்சனைகள் அடிக்கோடிடப்பட்டு அதன் மூலமாக சமூக மாற்றத்திற்கு விதை போடுகிறது இந்த வெந்து தணியும் வெஞ்சினங்கள் சிறுகதைகள்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், மேல் வர்க்கத்தின் அதிகார துஷ்புரயோகங்களும், அடக்குமுறைகளும், ஆளுமைகளும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை, கனவுகளை கதையாக இந்நூலில் விதைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சமூகம் பிற சமூகத்தினர் மீது காட்டும் அலட்சியம், வளரத் துடிக்கும் சமூகத்தை அடக்குவது என்று இந்நூலில் பதிவாகியிருக்கும் அத்தனை சிறுகதைகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைக் குரலாக பதிவாகியிருக்கிறது. வாசித்தால் வலிகள் புரியும்.
Read more from Irenipuram Paul Rasaiya
Kavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsKoothadiyum Naaru Pettiyum Rating: 0 out of 5 stars0 ratingsVaa.. Vaa.. Vasanthamey Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Unnai Nesithean Rating: 0 out of 5 stars0 ratingsNee Thana Andha Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thedum Jevvanthi Poovithu Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Uthirvathillai Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsVadalimaram Rating: 0 out of 5 stars0 ratingsThottathil Oru Veedu Rating: 0 out of 5 stars0 ratingsGnabagankal Thaalaattum Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 0 out of 5 stars0 ratingsThaali Kayiru Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kann Theduthey Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye... Kadhal Enpathu Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolaipaai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Venthu Thaniyum Venjinangal
Related ebooks
Kashmir Kathi Rating: 0 out of 5 stars0 ratingsSagaram Rating: 0 out of 5 stars0 ratingsKanna Mango Thinna Asaiya Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Alaikadalin Naduve... Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsAairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Kadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsNinaivil Sumanthapadi... Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Thaimaiyil Kaniyum Iraimai Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 5 out of 5 stars5/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsKutty Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella... Rating: 3 out of 5 stars3/5Meendum Oru Seethai Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsVimochanam Rating: 4 out of 5 stars4/5Sollattuma Konjam? Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vittu Vaa Nilave Rating: 0 out of 5 stars0 ratingsTamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsEllai Kodu Rating: 3 out of 5 stars3/5Meendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5‘Gopu’win Sirapana Kathaigal Collection 1 Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Venthu Thaniyum Venjinangal
0 ratings0 reviews
Book preview
Venthu Thaniyum Venjinangal - Irenipuram Paul Rasaiya
https://www.pustaka.co.in
வெந்து தணியும் வெஞ்சினங்கள்
Venthu Thaniyum Venjinangal
Author:
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Irenipuram Paul Rasaiya
For more books
https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நார்த்தங்கா திருடன்
2. குளத்தின் கரையிலொரு குடிசை
3. சடங்குமாவு
4. இடைவெளிகள்
5. வெந்து தணியும் வெஞ்சினங்கள்
6. தெரிந்த வழி
7. ஆயுதம்
8. மதகில் வடிந்த உயிர்கள்
9. சுவர்
10. மீனு யாவாரம்
11. பெஞ்சில் ஒரு மோகம்
1. நார்த்தங்கா திருடன்
பரிசுவைக்கல் பிஎப்எம் பள்ளிக்கூட பிரேயர் ஹாலிலிருந்து சீருடை அணிந்த மாணவ மாணவியர்கள் அரக்கப் பரக்க வகுப்பறைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
பிரின்சிபல் தாசன் ரவுண்ஸ் முடித்துவிட்டு தனது அறைக்கு வந்த போது அறையின் வெளியே ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மகேஷ்சும் டீச்சர் மதிவதனியும் நின்றிருந்தார்கள்.
சார்… இவன் பக்கத்தில இருக்கிற ஸ்டுடன்ஸ் பேனாவ பல தடவ திருடியிருக்கிறான், இவன் பேரன்ஸ கூட்டிகிட்டு வரச்சொன்னேன், யாரையும் கூட்டிகிட்டு வராம வந்து நிக்கிறான்.
மதிவதனி டீச்சர் சொன்னபோது தாசன் சிறுவனை ஏற இறங்கப் பார்த்தார்.
உன் அப்பா என்ன பண்றார்
அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டில இருக்காங்க, வீட்டில தாத்தா இருக்கிறாரு, அவர கூப்பிட்டேன், வரமாட்டேன்னு சொல்லீட்டார்
தாத்தா பேரென்ன
சிறுவன் தாத்தா பெயரைச் சொன்னதும் தாசன் உடல் சிலிர்த்தது.
சின்ன வயசில இதெல்லாம் இருக்கிறது சகஜம் தான் டீச்சர், இதப்போய் பெரிசா எடுத்துகிட்டு… இவன் தாத்தாவ எனக்குத் தெரியும் நான் அவர்கிட்ட பேசி இவன கண்டிக்கச் சொல்றேன். டேய்… இனிமே யார் பொருளையும் திருடக்கூடாது… சரி கிளாசுக்குப்போ
மதிவதனி டீச்சர் பல்லைக் கடித்துவிட்டு வகுப்பறை நோக்கி நடக்க அவர்கள் பின்னால் நடந்தான் மகேஷ். தாசன் நாற்காலியில் சாய்ந்தபோது அவரது பால்யகாலம் நினைவுகளில் ஊஞ்சலாடியது.
மார்கழி மாத பனித்துளிகள் மரவள்ளி இலைகளில் தங்கி மரணப்பட தயாராகிக் கொண்டிருந்தன. பாதையின் இரு புறமும் மரவள்ளி கம்புகளிலிருந்து தளிர்த்த இலைகள் பனித்துளிகளை சுமந்து கொண்டு அந்த ஒற்றையடிப்பாதையை வழி மறித்து நின்றன.
காற்று இறங்கி வீசியதில் இலைகள் அசைந்து பனித்துளிகள் தரையில் விழுந்து உடைந்து சிதறியது. இருள் திட்டு திட்டாய் விலக ஆரபித்தது.
சருக்கை சந்தையிலிருக்கும் கட்டை ஏமான் சாயாகடைக்கு கையில் சொம்போடு சென்று கொண்டிருந்தான் பிறாட்டி.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஏழாம் வருடம் மே மாதம் இருபத்தி ஒன்றாம் நாள் அவனுக்கு அது பத்தாவது பிறந்த நாள் என்பது கூட தெரியாமல் முட்டுக்கு மேல் ஓட்டை விழுந்த காக்கி நிக்கர் அணிந்து வேகமாக நடந்து கொண்டிருந்தான்.
மேலாடை அணியாமல் அந்த பாதையில் நடந்தால் பனித்துளிகள் மார்பை ஈரப்படுத்திவிடும் என்று கருதி மரவள்ளிக் கம்புகளை உலுக்கி பனித்துளிகளை உதிர்த்துவிட்டு நடந்தான். உடம்பெங்கும் பனித்துளியின் வாசம் ஒட்டியிருந்தது.
ஒற்றயடிப் பாதையைக் கடந்து சானல் தண்ணீர் ஓடும் கரைக்கு வந்தான். நான்கடி ஆழத்தில் தண்ணீர் கடும் பாய்ச்சலாக இரைச்சலோடு ஓடிக்கொண்டிருந்தது. பஞ்சலை மீன்களும் தேளி மீன்களூம் சட்டர் கதவுகளில் முட்டி தவித்துக்கொண்டிருந்தது.
பிறாட்டி கையிலிருந்த சொம்பை கரையில் வைத்துவிட்டு சானலில் இறங்கினான். அவனது கால்களின் சலம்பல் சத்தம் கேட்டு மீன்கள் சிதறி ஓடின. அவன் ஒரு மீனை மட்டும் துரத்தியபடியே ஓடினான்.
அது மின்னல் வேகத்தில் பாய்ந்து ஓடி ஒளிந்துகொண்டது. பிறாட்டி ஏமாற்றத்தோடு கரை ஏறி சொம்பை தூக்கிக்கொண்டு சருக்கை சந்தைக்கு நடந்தான்.
ஏமானே… ரெண்டு கல்தோசை ஒரு சாயா, அம்மா சாயங்காலம் கடைக்கு வரும்போ காசு தருவாங்க…!
பிறாட்டி மெல்லமாய் சொன்னான்.
நேரம் வெளுத்து தீரல, முதபோணி இப்பத்தான் ஆச்சு, அதுக்குள்ள கடன் கேக்க வந்திட்டான், லேய்..கொஞ்சம் பொறு..!
கட்டை ஏமான் தனது கட்டையான குரலில் சொன்னான்.
சாயா கடையில் இரண்டு பெஞ்சுகளும் இரண்டு டெஸ்குகளும் போடுவதற்கான இடமே இருந்தது, முன் பக்கத்தில் இருந்த கண்ணாடி அலமாரியில் நாளிதழ் விரித்து நேற்று சுட்ட நெய்யப்பங்களும் உண்ணியப்பங்களும் வைக்கப்பட்டிருந்தன. எல்லா எண்ணெய்களையும் நாளிதழ் உறிஞ்சியிருந்தது..
ஏமானே… நான் நிக்கவா…? போகவா, எனக்கு ஸ்கூலுக்குப் போணும்..!
பிறாட்டி சத்தமாய் கேட்டான்.
படிச்சு கிளிக்கத்தான் போற… சத்தம் போடாம நில்லுல, தர்றேன்…!
கட்டை ஏமான் கடையில் இருந்தவர்களுக்கு தோசை பரிமாறிய பிறகு அவன் கேட்டதை பொட்டலமாக கட்டி தந்தான். சொம்பில் ஊத்திய சாயா சூடு ஆறிப்போகாமலிருக்க வாழை இலையை கிழித்து சொம்பின் மீது வைத்து மூடி தனது வலது கையின் ஐந்து விரல்களை அகல விரித்து இறுக பிடித்தான். இடது கையில் பொட்டலமிருந்தது.
அவன் வீடு வந்து சேர்ந்தான். அம்மா தந்த தோசையை சாப்பிட்டு விட்டு கோழிக்கூட்டின் மேல் வைத்திருந்த பனம்கூந்தை வண்டியை உருட்டிக்கொண்டிருந்தான். கிணற்றங்கரை வந்த போது கிணறு அவனை வசீகரித்தது. கிணறை எட்டிப்பார்க்கும் ஆசை எழுந்தது நான்கடி உயரமிருந்த அவனால் கிணற்றின் உள்ளே கிடந்த தண்ணீரை பார்க்க முடியவில்லை.
உருட்டிக்கொண்டிருந்த வண்டியை விட்டுவிட்டு ஒரு கல் தூக்கி வந்து கிணற்று சுவரில் அடியில் போட்டு அதன் மீது ஏறி நின்று எட்டிப்பார்த்தான். உள்ளே தண்ணீர் கிடப்பது அவன் கண்களுக்கு தெரிய சந்தோசத்தில் ஆடிப்போனான்.
அவனது பெரியப்பா மாணிக்கம் ஓடி வந்து அவனது காது மடலை இறுக்கமாக அழுத்த வலியோடு கற்களிலிருந்து காலை எடுத்தான். அவரது பார்வையில் நடுங்கிப்போனான் பிறாட்டி
இனிமே எத்திப்பாப்பியா…? கிணற்றில விழுந்தா உன் அப்பாவுக்கு யார் ஆறுதல் சொல்றது…
அவர் திருகிய திருகில் காது