Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Kann Theduthey
Unnai Kann Theduthey
Unnai Kann Theduthey
Ebook123 pages46 minutes

Unnai Kann Theduthey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் மனைவி மரணத்திற்கு காரணமானவனைப் பழிவாங்கப் புறப்படும் கணவனுக்கு நேர்ந்தது என்ன...? வில்லனைத் துரத்தும் கொலைகாரன் வில்லன் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கொலைகாரனைக் கொலை செய்ய முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புவது ஏன்...?

கொலைகாரனைக் கண்டுபிடிக்க திட்டமிடும் இன்ஸ்பெக்டர் சிசிடிவி கேமராவில் பதிவான முகத்தைப் பார்த்து அதிர்ந்து அவனைக் கைது செய்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே வில்லனைத் துரத்தும் கொலைகாரன் மறுபடியும் வர, யார் இந்த கொலைகாரன்...? என்று ஆச்சரியப்படும் இன்ஸ்பெக்டர் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடித்து வில்லனைக் காப்பாற்றினாரா...?

வில்லன் கொலை செய்யப்பட்டாரா... ? யார் கொலை செய்தது..? போன்ற திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த நாவல் தான் உன்னைக் கண் தேடுதே... வாசியுங்கள் நாவலை நேசிப்பீர்கள்.

Languageதமிழ்
Release dateMar 6, 2023
ISBN6580153309591
Unnai Kann Theduthey

Read more from Irenipuram Paul Rasaiya

Related to Unnai Kann Theduthey

Related ebooks

Related categories

Reviews for Unnai Kann Theduthey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Kann Theduthey - Irenipuram Paul Rasaiya

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    உன்னைக் கண் தேடுதே

    Unnai Kann Theduthey

    Author:

    ஐரேனிபுரம் பால்ராசய்யா

    Irenipuram Paul Rasaiya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/irenipuram-paul-rasaiya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 1

    கன்யாகுமரியின் கடலலைகள் ஆரவாரங்களுடன் கரைக்கு வருவதும் போவதுமாக அலைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த காற்று ஈரத்தையும் சேர்த்து வீசியதில் மழைத்துளிபோல சிறு துளிகள் காற்றில் பறந்து வந்து விழுந்தன.

    சூரியனை மொத்தமாய் விழுங்கியிருந்த கடல் சுண்டுவிரல் அளவுக்குகூட சூரியனை வெளியேற்றாமல் வெளிச்சத்தைப் பதுக்கியிருந்தது.

    கடல் முழுக்க இருள் கவிந்திருந்தது. அலைகளும் இருளுக்கு அகப்பட்டதில் அது கரைக்கு வருகிறதா, போகிறதா என்றுகூட தெரியவில்லை.

    கடல்வெளியிலிருந்த விவேகானந்தர் பாறையும், அய்யன் திருவள்ளுவர் சிலையும் இருளில் இருந்த இடம் தெரியவில்லை. விடியற்காலை மணி நான்கரை ஆகியிருந்தது.

    திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரியிலிருந்து ஒரு நாள் பிக்னிக்காக கன்யாகுமரியில் சூரியன் எழுந்து வரும் அழகை தரிசிக்க கவிந்திருந்த இருளையும் பொருட்படுத்தாமல் ஒரு தனியார் பேருந்தில் புறப்பட்டு வந்தார்கள் கல்லூரியில் படிக்கும் தேவதைகள்.

    பஸ் கடற்கரையில் வந்து நின்றதும் ஓகோ ஓகோ என்ற குரல் எழுந்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் குரலுக்குரிய மாணவிகள் வரிசையாக இறங்க ஆரம்பித்தார்கள். மொத்தம் நாற்பது மாணவிகள் என்று கணக்கெடுத்தார்கள் நிர்மலா டீச்சர்.

    எல்லாரும் சூரிய உதயத்த பார்த்துட்டு எட்டு மணிக்கு டிபன் சாப்பிட பஸ்ஸுக்கு வந்திடணும், யாராவது லேட்டா வந்தா பைன் போட்டுடுவேன் புரிஞ்சுதா? தனது மூக்குக் கண்ணாடியை விரலால் அழுத்தி ஏற்றிவிட்டு சொன்னார்கள்.

    மணி ஐந்தைத் தொட ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது, விஜிலாவும் அவள் தோழி ரம்யாவும் கடற்கரையின் இதமான மணலில் சூரியனைப் பார்த்துக்கொண்டே நடந்தார்கள்.

    சூரியனை மறைத்திருந்த இருள் லேசாய் சரியத் தொடங்கியது. அணைக்கட்டுகளிலிருந்து திமிறி வெளியேறும் தண்ணீரைப்போல சூரிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தில் லேசாய் கசிய ஆரம்பித்தது.

    ஏய், அங்க பாருடி கடலுக்கு மஞ்சள் தேச்ச மாதிரி சூரியன் சுண்டுவிரல் அளவுக்குத் தெரியறான், என்னா அழகு பாத்தியா! விஜிலா சூரியனின் அழகை ரசித்தபடி சொன்னாள்.

    இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன ஒருத்தன் சுடப்போறான் ரம்யா சிரித்தபடியே சொன்னாள்.

    யாருடி?

    சூரியன்தான்!

    கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்காமல் தொடர்ந்துகொண்டிருந்தது. வெகுதூரம் வந்துவிட்டதை உணராமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன. ஆள் அரவமற்ற பகுதியில் வந்த பிறகு இருவரின் முகத்திலும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

    ஏய் வாடி திரும்ப போயிடலாம்! விஜிலா எச்சரித்தாள்.

    பொழுது விடிஞ்சுகிட்டே இருக்கு, இதுல பயப்பட என்ன இருக்கு! ரம்யா சொன்னபோது விஜிலாவுக்கு அது சமாதானமாகத் தெரிந்தது.

    கடற்கரையின் ஓரத்திலிருந்த கல் சுவரில் ஏறி அமர்ந்து அந்த குளிரிலும் சூரியனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுவருக்கடியில் மறைந்திருந்த லிங்கம் தனது வலது கையை விஜிலாவின் பின் கழுத்துப் பகுதியை வளைத்திருந்த தங்கச் செயின் நோக்கி மெல்ல நகர்த்தினான்.

    ஏதோ ஒரு உணர்வு அவளைத் தட்டியெழுப்ப விஜிலா சட்டென்று திரும்பினாள். அய்யோ என்று அலறினாள். இருவரும் கல் சுவரிலிருந்து மணலில் குதித்து ஓட ஆரம்பித்தார்கள். லிங்கமும் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓட ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள்.

    விஜிலா ஓட்டப்பந்தையத்தில் ஓடிவரும் முதல் மாணவியைப்போல, கண்மண் தெரியாமல் ஓடினாள்.

    கடற்கரைக்கு வெகுதூரம் தள்ளி நிறுத்தியிருந்த பேருந்து நோக்கி ஓடினாள் விஜிலா. பேருந்து அங்கில்லை. அது சற்று தூரம் தள்ளி பேருந்து நிறுத்தும் இடத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது.

    பேருந்தைக் காணாத ஏமாற்றத்தில் இனி என்ன செய்வது என்று நிலைகுலைந்தாள். அவள் ஓடியபடியே திரும்பிப் பார்த்தாள். லிங்கம் இருபதடி தூரத்தில் ஓடி வந்துகொண்டிருந்தான்.

    பேருந்து நின்ற இடத்தின் எதிரே தென்னைமர கீற்றுகளால் மறைக்கப்பட்ட கதவுகளற்ற கடைகள் வரிசையாய் இருந்தது. ஓடிக்கொண்டிருந்த விஜிலா சட்டென்று ஒரு கடையின் உள்ளே நுழைந்தாள் லிங்கமும் அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தான்.

    சிறிது நேரத்தில் அந்த கடையின் உள்ளேயிருந்து எட்டடி தூரத்தில் மணலில் தொப்பென்று விழுந்தான் லிங்கம்.

    கடைக்கு உள்ளே படுத்திருந்த பழனி, லிங்கத்துக்கு விட்ட உதையின் வீரியம்தான் அவன் வெளியே வந்து விழுந்தான் என்ற விபரம் பின்னர்தான் தெரிய வந்தது.

    ஒரு திரைப்படத்தின் ஹீரோவைப்போல ஜம்ப் செய்து வெளியே மணலில் குதித்து நின்றான் பழனி.

    விஜிலா திகைத்தபடி வெளியே வந்து நின்றாள். லிங்கம் ஓட்டமெடுத்தான். பயத்தில் நடுங்கியபடி நின்றிருந்த விஜிலாவின் அருகில் வந்தான் பழனி.

    அவன் ஒரு திருடன், கழுத்தில கிடக்கிற செயின அத்துகிட்டு ஓடுறவன். நீ எப்பிடி தனிமையில அவன்கிட்ட மாட்டுன...?

    பிரண்ட்டோட ஒண்ணாத்தான் இருந்தேன், திடீர்ன்னு என் கழுத்துல கிடந்த செயின அத்துக்க கை நீட்டினான், நாங்க ஓட ஆரம்பிச்சோம், நான் பஸ் நிக்கிற இடமா பாத்து ஓடினேன், அவன் என்ன மட்டும் துரத்திகிட்டு வந்தான்.

    எப்பவுமே தப்பிச்சி ஓடுறதா இருந்தா ஆட்கள் கூடுற இடமாப் பாத்து ஓடணும், அப்பத்தான் அவனுக்கு பயம் வரும், நீ ஆளே இல்லாத இடமாப் பாத்து ஓடியிருக்கே, அதான் அவன் உன்ன துரத்திகிட்டு வந்தான்.

    அவளது தோழி ரம்யா, நிர்மலா டீச்சரைக் கண்டுபிடித்து விபரத்தைச் சொல்ல அவள் ஓடிய திசை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருந்தார்கள் நிர்மலா டீச்சரும் வேறு சில மாணவிகளும்.

    விஜிலாவைப் பார்த்த பிறகுதான் அவர்கள் முகத்தில் படர்ந்த படபடப்பு விலகியது. நடந்த விபரங்களை நிர்மலா டீச்சரிடம் விஜிலா சொன்னபோது நன்றியோடு பழனியைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

    பழனி தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டிருந்த அவனது கடைக்கு நடந்தான்.

    ஓடி வந்ததில எனக்கு டயர்டா இருக்கு, நான் சூரிய உதயத்த பார்க்க விரும்பல, நான் பஸ்சிலேயே இருந்திடுறேன் டீச்சர்... தளர்வாய் சொன்ன விஜிலாவை பரிவோடு பார்த்தார்கள் நிர்மலா டீச்சர்.

    "நீங்க சூர்ய உதயத்த பார்த்துட்டு சரியா எட்டு மணிக்கு பஸ்சுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1