Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yaaga Pasukkal
Yaaga Pasukkal
Yaaga Pasukkal
Ebook85 pages28 minutes

Yaaga Pasukkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு கிராமமே தனது வயிற்றுப் பசியை போக்குவதற்காக, தன் உடல்நோக உயிர் போக செய்யும் வேளைக்கு சரியான கூலி கிடைக்கவில்லை. தங்களின் அனைவருக்காகவும் உதவிக்கரம் நீட்டும் சண்முகம். அவனுக்கு ஏற்பட்ட கோரம் என்ன? அதன் பின்னணி சூழ்ச்சி என்ன? சண்முகத்தின் அவல நிலைக்காக, உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி உயிர் நீத்துவிட்ட "யாகப் பசு" யார்? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580100709120
Yaaga Pasukkal

Read more from Indira Soundarajan

Related to Yaaga Pasukkal

Related ebooks

Reviews for Yaaga Pasukkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yaaga Pasukkal - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    யாகப் பசுக்கள்

    Yaaga Pasukkal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    குண்டும் குழியுமான வீதி அது.

    மிக நீண்டு, அங்கங்கே ஒடுங்கி வளைந்து, தனது இரு புறத்திலும் பணக்காரத்தனம் இல்லாத ஓட்டு வில்லை வீடுகளை மாத்திரமே கொண்டு கிடந்தது, காந்தி தெரு. அதன் மேல் படு வேகமாய் ஓடிக்கொண்டிருந்தன உம்மாச்சியின் கால்கள்.

    அவன் விழி தெறித்து விழுந்து விடும் கோபத்திலும், குரல் உடைந்து சப்திக்க முடியாத நிலையிலும் இருக்க - அவன் கால்கள் சண்முகத்தின் வீட்டைக் குறிவைத்திருந்தன.

    இந்த லூசுப்பய ஏன் இப்படி ஓடுறான்? வீட்டுத் திண்ணைமேல் திருவட்டத்தில் நூல் சேர்க்கும் சகுந்தலா இலேசாய் மாய்கிறாள்.

    டேய் பார்த்துப்போடா... ஓட்டப் பந்தயமா நடக்குது, மடப்பயலே வீதியின் வலது ஓரத்தில் குதிரை மரம் நட்டு நீண்ட வெண்பட்டுப்பாவை இழுத்துக்கட்டி, இழைகளைப் பிரித்து, காற்றாட உலர்த்தும் கொஞ்சம் படித்த கோபாலனின் குரல் இது.

    உம்மாச்சிக்குத்தானே தெரியும் அவன் பதற்றம்?

    ஒரு வழியாகச் சண்முகத்தின் வீட்டை எட்டிவிட்டான்.

    சரசு... சரசு வாசற்படியில் நின்றுகொண்டு அழைக்க, அழைப்பொலி, பக்கத்து எட்டுத்திக்கு பொட்டி வீடுகளிலும் நுழைய, உள்ளே சருவம் கழுவிக்கொண்டிருந்த சரசு புடைவைத் தலைப்பில் கைகளைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

    எல்லோராலும் ‘உம்மாச்சி’ என்று கேலியாய், செல்லமாய் விளிக்கப்படும் உ.மா.சிதம்பரம் தனது கலங்கிய விழிகளால் சரசு என்னும் சரஸ்வதியைப் பார்த்த பார்வை அவளின் நெற்றிப்பொட்டையே வெறித்தது.

    சரசு... சரசு நாகத்துடன் போராடிகளைத்த ராஜாளியின் மூச்சுக் குழலில் காற்றுப்படும் அவஸ்தை அவன் நாசித் துவாரங்களிலும் நிகழ்ந்தது.

    என்ன உம்மா? சரசு பாந்தமாய்க் கேட்டாள்.

    சரசு, நம்ம, நம்ம... வார்த்தை அவனிடம் கடன்பட்ட வட்டியாய் வரமறுத்துப் பின் வந்தது.

    நம்ம சண்முகத்தை நந்தவனத்து ரெயில் ரோட்டு மேல் சிலர் வெட்டிப் போட்டுட்டாங்க அவன் சொல்லி நிறுத்து முன் வீதி முக்கில் ‘ஜே.ஜே’ என்று ஒரு கூட்டம். ஏட்டும், போலீஸ்காரரும் சைக்கிளில் வீதிக்குள் நுழைய, பின்னால் ‘பொலபொல’ வென்று சிதறி, ‘சடபுட’ வென்று எதை எதையோ பேசியபடி பரபரப்பும், சிலிர்ப்புமாய் ஒரு கூட்டம்.

    வீதியின் வீட்டு வாசல்களில் தேங்கி, புடவை மரங்களாய் நின்றுவிட்ட பெண்களின் இதயத்துடிப்பில் ஒரு வேகம் பச்சென்று கூட, ஏட்டும் போலீஸ்கராரும் வெறித்துவிட்ட சரசுவை நெருங்கினர்.

    இவங்கதான் சார் சண்முகம் சம்சாரம். நீங்க வருமுன்ன நான் வந்து விஷயத்தைச் சொல்லிப்புட்டேன். உம்மாச்சி ஏட்டையாவிடம் சரசுவைக் காண்பித்துப் பேசும்போது அவள் மயக்கத்துக்குள் வழுக்க ஆரம்பித்திருந்தாள்.

    2

    சண்முகம் இருக்காங்களா?

    நீங்க யாரு?

    என் பேர் காளி. அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.

    அவர் இன்னும் சொசைட்டியில் இருந்து வரலீங்களே. வந்தா சொல்றேன்.

    சரிங்க, ஒரு விஷயம்.

    என்ன?

    நீங்க அவர் சம்சாரம் சரசு தானுங்களே?

    ஆமாம்.

    இந்த ஐயாயிரத்தை அவர் வந்தாக் கொடுத்துடுங்க. மத்ததை நான் பேசிக்கறேன்.

    பேசிக்கொண்டே காளி என்னும் அவன் ஒரு ஐயாயிரம் ரூபாய்க்

    Enjoying the preview?
    Page 1 of 1