Adharam Madhuram
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Jothi Vanthu Piranthal Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsSabthapathi Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Parisu Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsOru Devathaiyin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsThattaamaalai Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsMohanasthiram Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Pugai Rating: 0 out of 5 stars0 ratingsManthira Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsYaagam Rating: 0 out of 5 stars0 ratingsTharaiyil Piditha Meen Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratingsKalaintha Suruthi Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Mithantha Padagu Rating: 0 out of 5 stars0 ratingsVeera Sudhandhiram! Rating: 0 out of 5 stars0 ratingsPadi Paranthaval Rating: 0 out of 5 stars0 ratingsJwalai Rating: 0 out of 5 stars0 ratingsGarudanai Kaditha Paambu Rating: 0 out of 5 stars0 ratingsSnehamai Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Kozhi Rating: 0 out of 5 stars0 ratingsIlaiuthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Adharam Madhuram
Related ebooks
Sarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Mandhira Viral Rating: 0 out of 5 stars0 ratingsThik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsYaaga Pasukkal Rating: 0 out of 5 stars0 ratingsVeli Thaandiya Velladugal Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Eeram Illai Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Valai Rating: 5 out of 5 stars5/5Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsEn Anbu Kuzhanthaigale.... Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsViralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratingsNandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Shshsh… Rating: 0 out of 5 stars0 ratingsKutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Nooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsTheerkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsVaanathu Manitharkal Rating: 4 out of 5 stars4/5Avalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsVilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Aairam Jannal Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsAppaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsThedu Kidaikathu..! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Vidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Vizhundha Macham Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsAngey Sila Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Nadu Nisi Neram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Adharam Madhuram
0 ratings0 reviews
Book preview
Adharam Madhuram - Maharishi
http://www.pustaka.co.in
அதரம் மதுரம்
Adharam Madharam
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
தோட்டத்தில் உள்ள அடர்த்தியான செடிகளுக்கு ஹோஸ்
பைப் வழியாகத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் சாருலதா.
சுடிதாரில் ஒரு முப்பது வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் அழகான வளர்ச்சி. தலைக்கேசம் இரண்டாக மடிக்கப்பட்டுத் தொங்கியது. சற்றே நீளமான முகம். எடுப்பான நாசி. சிவப்பும் வெண்மையும் கலந்த நிறத்தில் உடம்பு நீளமான சிவந்த கைகள் ஹோஸ் பைப்பில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்போதும், செடிகளுக்கு மாற்றும்போதும் மேலேபடும் தண்ணீரால் முன் உடம்பு கிட்டதட்ட முக்கால்வாசி நனைந்த உடை உடம்புடன் ஒட்டிக் கொண்டிருந்தது. கவர்ச்சிகரமான உடம்பின் கனபரிமாணங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்களை நிச்சயமாகப் பலவந்தமாக நிற்கவைத்துவிடும். ஆனால், தோட்டப்பகுதியிலிருந்து சாலை ரொம்ப தூரத்தில் இருந்தது ஒரு சவுகரியம். ஆனால், பக்கத்துப் பங்களாவின் வயதான மனிதர் ஒருவர் மேல்ஜன்னல் கதவைக் கொஞ்சமாக திறந்துகொண்டு கவர்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தது சாருவுக்குத் தெரியாது.
ஏற்காடு மலைப்பகுதி. ஊரைவிட்டு லண்டன் பயணமாகிவிட்ட ஓர் ஆங்கிலேயரிடம் அவள் தந்தை முன்பு வாங்கிப் போட்ட பிரும்மாண்டமான சலவைக் கல் பங்களா அது. சுவர் பகுதியைவிடக் கண்ணாடி ஜன்னல்களே அதிகம். தேவதாரு மற்றும் மலைத் தேக்கினாலான ஜன்னல்கள். உயர உயரமான நிலை வாயிற்படிகள். லஸ்தாவிளக்குகள் மாதிரியே கொத்துக் கொத்தாகத் தொங்கும் மின்விளக்குகள். தோட்டப்பகுதியில் கூட உயரக்குறைவான இரும்புக் கம்பங்களில் மின்விளக்குகள் குண்டுகுண்டாக உட்கார்ந்திருந்தன.
கமலா, ஆரஞ்சு மரத்திற்கு நீர்விட்டுக் கொண்டிருந்தவள் தூரத்தில் உள்ள பெரிய இரும்பு கேட் திறக்கப்படும் ஓசைக்கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
சுப்புடுமாமா ஓர் உயரமான வாலிபனுடன் உள்ளே வந்து கொண்டிருந்தார்.
சுப்புடுவுக்கு வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். குள்ளமான உருவம். தலையில் அதிக கேசமில்லை. கணுக்கால் தெரிகிற மாதிரி வேஷ்டி. தடிமனான அரைக்கை ஜிப்பா. அதன்மேல் வர்ணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு துண்டு. எப்பொழுதும் குனிந்த தலையுடன் நடை. சாருலதாவின் அப்பா காலத்திலிருந்தே பழக்கம். ஒரு இடத்தில் நிரந்தரமாக நின்று வேலை செய்யமாட்டார். தலைக்குமேல் வேலை இருப்பதுபோல ஊராரின் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு அலைகிற சுபாவம். பெரியபெரிய குடும்பங்களில் பழக்க மேற்படுத்திக்கொண்டு அவர்களுக்குத் தேவையானதைச் சலிப்பின்றிச் செய்வார். பொதுவில் மிக நல்ல மனிதர்; பரோபகாரி.
அவர் கூட வரும் வாலிபனைத் தூரத்திலிருந்தே சாருலதா பார்த்தாள். சாட்டின் துணியில் தொடையை இறுக்கின மாதிரி அரைநிக்கர், நீல வண்ணத்தில் அரைக்கை பனியன்.
இந்த ஏற்காடு குளிரில் இப்படி வருகிறானே அவனுக்குக் குளிரவேயில்லையா என்று எண்ணிக்கொண்டாள்.
வாங்க… வாங்க… எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்… கார்க்கில் சண்டைக்குப்பின் சர்வீஸ் செய்ய அங்கேதான் போயிட்டீங்களோன்னு நெனச்சேன்
என்றாள் புன்னகையுடன்.
போயிருக்கலாம். சென்னையிலிருந்துகூட ஒரிசா வெள்ள நிவாரணப்பணிக்குப் பலபேர் போனாளாம். அங்கே இருந்திருந்தா அந்தப் பாக்கியமாவது கிடைச்சிருக்கும்
மிக அருகில் வந்தபின்தான் அந்த வாலிபனின் முகத்தைப் பார்த்தாள். வாலிப்பான உடல்வாகு. நன்றாக வளர்ந்திருந்தான். ஆனால், முகத்தில் ஒரு குழந்தைத்தனம் அப்படியேயிருந்தது. பெரிய பங்களா, அதன் தோட்டப்பகுதிகளை நிமிர்ந்து பார்த்து வியப்புடன் வந்தான்.
யார் இவன்? இந்த வயதில் சுப்புடுவுக்கு இப்படியொரு மகனா. அவருக்கு மகன்கள் உண்டு. அவர்கள் சேலத்தில் வெவ்வேறு வேலைகளில் இருக்கிறார்கள் என்று அவரே முன்பொருமுறை கூறியிருக்கிறார். அப்படியானால் இவன்?
சுப்புடுவுடன் கூட வந்த வாலிபன் அவள் கையில் இருந்த ஹோஸ் பைப்பை அவள் கையிலிருந்து பிடுங்காத குறையாகத் தன்னிடம் இழுத்துக்கொண்டான். அங்குள்ள செடிகளுக்கு அவனே தண்ணீர் விட ஆரம்பித்துவிட்டான். அப்பொழுது அவன் முகத்தில் திடீரென ஓர் உற்சாகம். பள்ளிச்சிறுவன் போலச் சுறுசுறுப்பு. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வெளியே போகும் நீரை அதன் அருகில் போய் மண் அணைத்துத் தடுத்தான். கையைச் சாட்டின் அரை நிக்கரில் துடைத்துக் கொண்டான். வேகமாக வரும் தண்ணீரைத் தன் மேலும் விட்டுக்கொண்டான். குழந்தைத்தனமான அவன் செய்கைகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அவள்.
மாமா இவன்... இவர்...?
பரம சாது. அணில் மாதிரி சுறுசுறுப்பா இருப்பான். படிச்சிருக்கான். ஏழைக்குடும்பம். என்னமோ தெரியல கொஞ்சம் மனவளர்ச்சி குன்றியவன் போல இருப்பான். ஆனால் இவனால் யாருக்கும் எந்தவிதத் தொந்தரவும் வராது. உன்னை ஒரு தடவைப் பார்த்தாப் போதும். அப்படியே படம் போட்டுடுவான்.
அவர்கள் பேசிக்கொண்டே அங்கிருந்த தேவதாரு மரத்தின் நிழலில் வந்து நின்றனர். அங்கு ஏற்கனவே இரண்டு பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் உட்கார்ந்தனர்.
வயசுதான் இப்படி ஆகிறதே தவிர, ஒரு பதினான்கு வயது சிறுவனுடைய பழக்க வழக்கம்தான் இவனிடம் இப்போ இருக்கு.
பிறவியே இப்படியா?
இல்லே, இருபது வயதுவரை நன்றாகத் தானிருந்திருக்கிறான். ஒரு மோசமான நிகழ்ச்சிக்கப்புறம் உடம்பு வளர்ந்த அளவு மூளை வளர்ச்சியடையலே. அதனால அசடு மாதிரியோ, பயித்தியம் மாதிரியோ இருக்கமாட்டான். துணியைக் கிழித்துக்கொண்டு ஓட மாட்டான். நீ என்ன வேலையைச் சொல்றியோ அதைப் புரிந்து கொண்டு சரியாச் செய்வான். வினோத் என்று அவனாகப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறான்.
அப்படியா?
அம்மா, அப்பா அவனுக்கு வச்ச பெயர் சுப்புசாமி. அந்தப் பெயர் பிடிக்கலேன்னு சொல்லிட்டு அவனா வினோத் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து வச்சிண்டு இருக்கான். அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாத்தான் பதில் கொடுப்பான். சுப்புசாமி என்று கூப்பிட்டால் ஒரு முறை முறைத்துவிட்டு அப்பால் போய்விடுவான்.
வேடிக்கைதான்.
வேடிக்கையா? அவன் பழக்க வழக்கங்களே வேடிக்கையானது. பிராணிகள், பட்ஷிகள் பாஷை தெரியும் என்கிறான். இவன் ஒரு குரல் கொடுத்துக் கூப்பிட்டால் அணில், புறா, பட்ஷிகள் இவனிடம் வருகின்றன. இந்தப் பாஷைகளை எங்கேடா கற்றுக் கொண்டாய் என்று கேட்டால் அது தேவரகசியம், அதைச் சொன்னால் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று ரொம்ப சீரியஸா சொல்றான்
.
ஹோஸ் பைப்பில் உற்சாகமாகச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த வினோத் திடீரென்று அங்கிருந்த மரமொன்றில் ஏறுவதைப் பார்த்துப் பதட்டமடைந்தாள்… ஏய்… வினோத்… அந்த மரத்தில் ஏறாதே. அதிலே ஒரு பொந்து இருக்கு. அதில் நாகப்பாம்பு இருக்கறதைப் பலபேர் என்னிடம் சொல்லியிருக்காங்க. நானும் பார்த்திருக்கேன். வேண்டாம். இறங்கிவா...
உட்கார்ந்திருந்த சாருலதா மரத்தடிக்கு ஓடிவந்தாள். பின்னாலேயே சுப்புவும் நிதானமாக வந்தார். சாருலதா கத்துவதைக் காதில் வாங்கிக்கொண்டே அவன் மரத்தின் மேலே ஏறினான். அவள் அந்த மரத்தில் எந்தப் பொந்தில் பாம்பு இருக்கிறதென்று சொன்னாளோ அதில் எவ்விதப் பயமுமின்றிக் கையை விட்டான்.
சுப்புடு, அவனைக் கீழே இறங்கச் சொல்லுங்க...
அவள் பயத்தில் கத்தினாள்.
சுப்புடு அவள் அளவு பயப்படவில்லை.
ஏதேனும் விபரீதம் நடந்து விடக்கூடாதே என்கிற அச்சத்தில் சாருலதா தொடர்ந்து கத்தினாள்,
வினோத் வேண்டாம். அந்தப் பொந்தில் கை விடாதே. கீழே இறங்கி வா… மாமா நீங்களாவது சொல்லுங்களேன்.
இவ்வளவு, கூச்சலுக்குப்பிறகு வினோத் நிதானமாக மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.
அவன் தோளில்…
சாருலதா பயத்தில் கண்களை மூடிக்கொண்டு கத்தியே விட்டாள்.
வினோத்தின் தோளில் ஈரத்துண்டு மாலையாகத் தொங்குவது போல ஆறடி நீளத்திற்கு அந்தப் பாம்பு நெளிந்து தொங்கிக் கொண்டிருக்க, அதன் வாய்ப்பகுதியை மட்டும் அவன் பிடித்தபடி அவள் அருகில் வந்து நின்றான்.
பயப்படாதே, இவனுக்கு இதை அடக்கி ஆள்கிற ரகசியம் தெரியும். எப்படிப்பட்ட விஷப்பாம்பையும் பிடித்து விடுவான். நான் சொல்லவில்லை, இவன் பழக்க வழக்கங்களே வேடிக்கையாக இருக்கும். இவன் நம் அருகில் இருக்கும்போது எதற்கும் பயப்படவே வேண்டாம்.
அவள் சுப்புடுவுக்குப் பின்னால் போய் பயத்துடன் நின்றாள்.
பாம்பு அவன் கையில் இருக்கும்போதே படமெடுத்தது. அதை அவன் அன்புடன் வருடினான். இது அவனிடம் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்ட மாதிரி நடந்து கொண்டது. படத்தைச் சுருக்கிக் கொண்டு அவன் மேல் ஆலிங்கனித்து ஊர்ந்தது. அவன் முகத்திற்கு அருகில் தன் வாயைக் கொண்டுவந்தது.
உனக்குப் பயமே இல்லையா?
"பயமா… பிராணிகள்தான் மனுஷன கண்டு பயப்படறது; தன்னை ஹிம்சை செய்வதற்கென்றே இவர்கள் பிறந்தவர்கள் என்று நம்மைக் கண்டு அது பயப்படறது. நாம் அவைகளிடம் ஒருபோதும் அன்பாகவே