Thisai Maariya Thendral...
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Thisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNee...Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsPasapinaippugal! Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKannum Kannum Kollai Adithal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Nee... Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Vellai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVeliyilla Velladugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thisai Maariya Thendral...
Related ebooks
Iniyavale Indhumathi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsPennendru Bhoomithanil... Rating: 0 out of 5 stars0 ratingsPesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsEnthiran Manthiran Thanthiran Rating: 5 out of 5 stars5/5Mullanathu Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsViralgalai Meettum Veenai Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Nila Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Nila Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Malar Rating: 0 out of 5 stars0 ratingsEn Devathai Engey? Rating: 4 out of 5 stars4/5Kaagitha Kappal Rating: 0 out of 5 stars0 ratingsKalaikka Mudiyatha Veshangal Rating: 0 out of 5 stars0 ratingsMadhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Poo Manasu Rating: 5 out of 5 stars5/5October Pournami Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsVithaigalilla Virutchangal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Puthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagavey Naan... Rating: 5 out of 5 stars5/5Aasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagin Muzhumathi Neeye...! - Part - 1 Rating: 5 out of 5 stars5/5Manal Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thisai Maariya Thendral...
0 ratings0 reviews
Book preview
Thisai Maariya Thendral... - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
திசை மாறிய தென்றல்...
Thisai Maariya Thendral…
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
கடலில் நீராடிவிட்டு எழுகிறான் கதிரவன். முகம் சிவந்துவிட்டிருக்கிறது. பூமிப் பந்திற்கு மற்றுமொரு புது விடியல்.
நாராயணசாமி எப்போதும் போல அந்த பெரிய பழங்கால நாற்காலியில் தான் உட்கார்ந்திருக்கிறார். ஆகிருதியான உருவம் தற்போது சுருங்கி விட்டிருக்கிறது. தோல் சுருங்கி தசைகள் தொங்கி நரைத்த தலையில் தற்போது வழுக்கைதான் குடியிருக்கிறது. விழியிமைகள் புற்களைப்போல நரைத்திருக்கின்றன. ஆனாலும் பார்வையிலும் சிந்தனையிலும் செவியிலும் கூர்மை மங்கியிருக்கவில்லை.
முன்பெல்லாம் வீட்டிலேயே முன்னும் பின்னும் நடைபயில்வார். தற்போது அதுவும் முடக்கப் பட்டுவிட்டது. மகன் சுப்ரமணி வீடு கட்டிக் கொண்டிருக்கிறான். அவர் இருக்கும் அறையும் அதன் மீது அமைந்து இருக்கும் மாடி அறையும் மட்டும்தான் இடிபடவில்லை. மாடி அறையில் மகனும் மருமகளும் பேரன் திலீபனும் இருக்கிறார்கள். இவர் அறையைத் தடுத்து கடைசி மகள் இருக்கிறாள். அவள் உண்டு, அவள் வேலைக்குப் போய் வருவதுண்டு என்றிருப்பாள். எப்போதாவது தந்தையை பார்த்துக்கொள்வது உண்டு.
வீடு கட்டுவதற்காக கூலி ஆட்களும் மேஸ்திரியும் திரண்டு சத்தமெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் கால் கிரவுண்டுதான். நகரத்தின் மிக முக்கியமான இடம் எனில் அதன் மதிப்பு பல லட்சங்களைத் தொட்டுவிடும்.
எல்லாம் அவருக்குச் சொந்தமாய் இருந்தது தான். இந்த வீட்டை அடுத்து எழும்பி நிற்கும் பெரிய கட்டிடம் அது கட்டப்பட்ட இடம் அவருக்குத்தான் சொந்தம். ஐந்து வருடங்களுக்கு முன்பு அதை விற்று விட்டார். தன் பெண்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்.
விற்று வந்த பணத்தில் கணிசமான தொகையை சுப்ரமணியின் கையில் கொடுக்கவில்லை என்று அவனுக்குக் கோபம். மருமகள் இரண்டு மாதங்கள் அவரைப் பார்த்தால் தோள்பட்டையில் முகம் இடித்தாள்.
அதே மருமகள் வெறும் சீதாவாக இருந்த போது இவரைக் கண்டால் எத்தனை பயப்படுவாள். இவர் தலை தெருமுனையில் தெரியும் போதே ஒளிந்து கொள்வாள். எல்லாம் காலம் செய்த கோலம்.
இதோ எழுந்து நீராடிவிட்டு அமர்ந்திருக்கிறார். ஒரு முழுங்கு காபி கூட வந்து சேரவில்லை.
இந்த இடத்தை எழுதிக் கொடுக்கும் படி சுப்ரமணி நச்சரித்தபோது சீதா எத்தனை உபசரிப்பு காட்டினாள். இவர் முகம் திரும்பினால் கூட 'என்னங்க மாமா' என்று ஓடிவருவாள்.
இடம் சுப்ரமணியின் பெயருக்குப் போனதும் இவர் குப்பையாக, வேண்டாத பொருளாக மூலையில் கிடக்கிறார்.
பசியில் வயிறு சத்தமிடுகிறது. எட்டி சன்னலில் பார்க்கிறார். காலை ஒளியில் பளீரென தந்தச் சிலைபோன்று நிற்கும் சீதா, யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறாள். எதிர் நிற்பவனும் இளம் வயது. ஏன் சீதாவைவிட வயதில் இளமையானவாய் இருக்கலாம். இன்னும் பெண்மையின் பரிச்சயம் கிடைக்காதவனாய் இருக்க வேண்டும். உலகமே சீதாதான் என்று எல்லாம் மறந்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறான். தெருமுனையில் இவரின் பேரன் சீதாவின் தவப் புதல்வன் திலீபன் நின்று அந்த இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறான். பாவாடைச் சட்டை அணிந்த பெண் அவனுடன் சரிக்குச் சரி சிரித்து பேசிக் கொண்டிருக்கிறது. விவாகரத்து செய்துவிட்ட டீச்சரின் ஒரே மகள்.
பத்தாவது இரண்டு முறை எழுதி தோல்வி அடைந்திருந்தான் திலீபன். இன்னும் வயது பதினெட்டு கூட நிரம்பவில்லை. அதற்குள் எல்லா 'நல்ல' பழக்கங்களும் அத்துப்படி. பையன் அருகில் வரும்போதே ஒன்று பான்பராகின் வாசம் அல்லது சிகரெட்டின் நாற்றம்.
இவர் கேட்டது கிடையாது. மகன் சுப்ரமணியின் குணங்களையும் பழக்கங்களையும் இவர் என்றும் கேட்டவர் அல்ல. இவனைப் போய் எதற்கு கேட்கப் போகிறார்.
வயிறு பசியின் கொடுமையைச் சொல்கிறது. வயது எண்பத்தெட்டு முடிந்துவிட்டது. அடுத்து சித்திரை வந்தால் எண்பத்தொன்பது. பார்த்தால் இன்றும் எழுபத்துஐந்து மதிக்கமாட்டார்கள். அந்தக்காலத்தில் அவர் காக்கி உடுப்புடன் தெருவில் நடந்தால் அழும் குழந்தை கூட அழுகை மறக்கும். உள்ளே ஓடிவிடும்.
அவர் போவதைச் சுட்டிக்காட்டி அழும் குழந்தையின் வாயில் அன்னத்தைத் திணித்த தாய்மார்களும் உண்டு.
அத்தனை பந்தா, மிடுக்கு. அவர் கடமையில் என்றும் தவறியவர் அல்ல. அவர் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் போலீஸ்காரராய் இருந்ததில்லை. வீட்டிலும் அதே மிடுக்கு, அதே தர்பார்தான்.
அவரைப் பார்த்ததும் எலி பூனைகள் கூடஓடி ஒளியும்.
வயிற்றின் பசி...பார்வை கூட மங்குகிறது. இந்த வயதில் இப்படி பசி எடுக்குமா. எழுந்து போய் கடையில் ஏதேனும் வாங்கிச் சாப்பிட அவரால் இயலாது. நாலைந்து தெருக்கள் தள்ளி போக அவர் வயோதிகம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இயலாமை வந்து ஒட்டிக்கொண்டுள்ளது. மேலும் கடையில் வாங்கிச் சாப்பிட்டால் வயிற்றில் தங்குவதில்லை. எல்லாம் வெளியேறிவிடும்.
அவரின் மாத ஓய்வூதியத்தைக் கூட சுப்ரமணிதான் வாங்கி வைத்துக் கொள்கிறான். வேலைக்குப் போவதாய் சொல்லிவிட்டு போவான். வருவான் என்ன வேலை செய்கிறான் என்ன சம்பளம் எதுவும் தெரியாது.
அந்த ஓய்வூதியம் வரும் நாட்களில் அவரை ஆட்டோவில் வைத்து அழைத்துப்போவான். பரிவு காட்டுவான் அவர் மனம் கோணாவண்ணம் பழங்கள் வாங்கி கொடுப்பான்.