Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mullanathu Oru Roja
Mullanathu Oru Roja
Mullanathu Oru Roja
Ebook159 pages1 hour

Mullanathu Oru Roja

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115704218
Mullanathu Oru Roja

Read more from Lakshmi Rajarathnam

Related to Mullanathu Oru Roja

Related ebooks

Reviews for Mullanathu Oru Roja

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mullanathu Oru Roja - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    முள்ளானது ஒரு ரோஜா

    Mullanathu Oru Roja

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    கணினி பிராஜெக்டில் முழுமையாக ஈடுபட்டிருந்தான் கிரிதர். வேலையில் புகுந்தால் வேறு எதிலும் கவனம் செல்லாது. வேலையில் மன்னன், வேலையில் மட்டுமா? பெண்களின் விஷயங்களிலும் மன்னன் தான். அது வெளியே தெரியாத இரகசியம். ஆனால் வேலையில் ஈடுபடும் சமயம் பெண்கள் கூட இரண்டாம் பட்சம்தான். அதனால்தான் கம்பெனியின் முதுகெலும்பாக நல்ல ஊதிய உயர்வுடன் இருந்தான்.

    மேலதிகாரி கூட எதை கேட்க வேண்டுமானாலும் கூப்பிடு கிரியை என்பார்.

    அவனில்லாமல் மீட்டிங் இல்லை. செமினார் என்றால் அவன்தான் முதல். ஃபாரீனருடன் டீலிங்கா கிரிதர்தான். டெண்டர் கிரிதர் போட்டு எந்த கம்பெனியும் கைவிட்டுப் போனதில்லை.

    உனக்கு மட்டும் என்னடா ஸ்பெஷல் மூளை? என்பார் ஜி.எம். ராமனாத்.

    அவனுடைய கெட்டிக்காரத்தனத்தால் மேலதிகாரிகளுடனும், தனித்தும் அடிக்கடி வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் சக ஊழியர்களின் பொறாமைக்கும் ஆளாவதுண்டு.

    அவன் வேலையை முடித்து விட்டு நிமிர்ந்தால், மதிய உணவுவேளை வந்திருந்தது. கண்ணாடி கதவு வழியே பார்த்த பொழுது வெளியே ரதி டிபன் பாக்ஸுடன் உணவு உண்ணும் ஹாலுக்குப் போவது தெரிய, அவசரமாக தன் கேபினை விட்டு ஓடி வந்தான்.

    மிஸ் ரதி

    அழைத்தவனுக்கு வாய் இனித்தது. யார் தான் இப்படி பொருத்தமான பெயரை வைத்தார்களோ? சந்தனக் கலரில் சின்னச் சின்ன கருப்புப் பூக்கள் போட்ட சில்க் காட்டன் புடவை. அதை நேர்த்தியாய் அவள் உடுத்தி இருந்ததே தோற்றத்தை எடுப்பாகக் காட்டியது. சந்தன சிலைக்கே சந்தன வண்ணப் புடவையா? என்று கண நேரம் கிறங்கித்தான் போனான்.

    சட்டென்று சமாளித்தவனாக சாப்பிடவா? என்று கேட்டான்.

    இல்லை விளையாடா என்றாள் ரதி பட்டென்று.

    அவன் விடவில்லை. வனிதையர்களின் உள்ள வாசலில் நுழைய அவனுக்கு தெரியாதா? ஆய கலைகள் அறுபத்தி நாலில் வனிதைகளின் உள்ளக் கதவை திறக்கும் கலையாக அவன் கற்றிருக்கிறானே...

    தோளைக் குலுக்கியவனாக ப்ராஜெக்ட் பண்ணி டயர்டாய்ட்டேன். நானும் வரட்டுமா விளையாட? என்றவனை முறைத்தாள் ரதி.

    பதில் சொல்லாமல் இரண்டடி வைத்தான்.

    பேசாமல் போனால் எப்படி?

    சரி. நேரமாகுது. சாப்பிடத்தான் போறேன்... இப்ப என்ன வேணும்?

    நேத்து கொடுத்த ஒர்க்கை முடிச்சுட்டீங்களா?

    முடிச்சாச்சு. சாப்பிட்டு விட்டு வந்து எடுத்துத் தர்ரேன்

    என்ன டிபன்?

    மிளகாய் பொடி தடவிய இட்லி

    அவன் எச்சியை உறுஞ்சினான்.

    கொடுத்து வச்சவங்க. வீட்டுச் சாப்பாடு

    ஏன்? நீங்க வீட்லேர்ந்து டிபன் எதுவும் கொண்டு வரலையா?

    பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டான் கிரி.

    மிஸ் ரதி, பாமா விஜயம் சினிமாவுல ஸ்ரீகாந்த் சொல்லுவார் பாருங்க. 'நோ ஃபாதர், நோ மதர், நோ ஒய்ப்னு...’ என்று அவன் சொல்லும் பொழுதே அவள் இடைமறித்தாள்.

    உங்களுக்கு அம்மா, அப்பா, இல்லையா?

    இருக்காங்களே...

    பின்னே நோ ஃபாதர், நோ மதர்னா என்னங்க அர்த்தம்

    அவங்க எங்கேயோ ஒரு கிராமத்துல இருக்காங்க ரதி

    இருக்கிறவங்களைப் போய் இல்லேங்கற மாதிரி பேசுறீங்க?

    பூ மாதிரி இட்லி வார்த்து அதில் மிளகாய் பொடி தவித் தர இங்க இல்லையே

    அவள் அவனுடைய குறும்பத்தனத்தை ரசித்து சிரித்து விட்டாள்.

    இப்ப உங்களுக்கு மிளகாய் பொடி தடவின இட்லி வேணும். அவ்வளவு தானே?

    அதே, அதே... சபாபதே. அதே சமயம் என் டிபன் பூரி, குருமா உங்களுக்குத் தருவேன் என்றவன் ஓடிப் போய் தன் கேபினிலிருந்து டிபன் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு வந்து அவளுடன் லஞ்ச் ஹாலை அடைந்தான்.

    அவனுடைய அழகான கம்பீரத் தோற்றத்தை ரசிக்க நிறைய பெண் நண்பிகள் உண்டு. தானே கனியும் வரை காத்திருக்கும் பழக்கம் அவனுக்கு உண்டு. தடி கொண்டு கனிய வைக்கும் பழக்கம் இல்லை. அதனால் காத்திருப்பதின் சுகத்தை அனுபவித்தான்.

    ரதி அலுவலகப் பெண்கள் அனைவரிலும் பேரழகிதான். குத்து விளக்கு சுடர் விடுவதைப் போன்ற அழகு. வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியலை முடித்து ஈரத் தலைமுடியை தளரப் பின்னிக் கொண்டு மல்லிகை வாசத்துடன் வரும் அழகே... அழகு. அம்மன் கோயில் சிலையொன்று அடியெடுத்து வருகிறதோ எனும்படியான தோற்றம்.

    மனத்தினுள் அளவற்ற ஆசைகளை வளர்த்துக் கொண்டு கோயில் காளையாகக் கட்டவிழ்ந்து திரிந்தவனை ஓரக்கண்ணாய் கூட கவனித்தவள் இல்லை ரதி. தேவி ஸ்ரீதேவி திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா என்று காத்திருக்கும் பக்தரான கிரிதரைக் கண்டு கொண்டவள் இல்லை.

    இன்றும் தன்னுடைய டிபன் பாக்ஸை அவன் பக்கம் நகர்த்திவிட்டு எதுவும் பேசாமல் அவன் பக்கம் பார்வையை படரவிடாமல் ஹோட்டல் பூரியைத் தலைகுனிந்து சாப்பிட்டாள். அருகில் அமர்ந்து தயிர் சாதத்தை மாங்கா ஊறுகாயுடன் அடைத்துக் கொண்டிருந்த விலாசினிக்கு ரதியின் டிபனை கிரிதர் ரசித்து சாப்பிடுவதை பார்த்து ஆச்சர்யமே!

    ரதி இரண்டடி தள்ளி நிற்பவளாயிற்றே? ஏதாவது என்றால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசி விடுபவள் ஆயிற்றே? இன்று தன் டிபன் பாக்ஸை கிரியிடம் கொடுத்து விட்டு அவனுடைய டிபனை வாங்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்தப் பரிமாற்றம் எப்படி நிகழ்ந்தது?

    ரதி கொண்டு வரும் டிபன் பாக்ஸ் சற்று பெரியதுதான். அதில் தோழிகளுக்கும் சேர்த்து பத்து இட்லிகளைக் கொண்டு வருவாள். மகள் ரதி மற்ற பெண்களுடன் பகிர்ந்து உண்ணுவாள் என்பது தெரிந்தே நிறைய இட்லிகளை ரதியின் அம்மா வைத்து அனுப்புவாள். இன்று யாருக்கும் ஒரு இட்லி கூட மிச்சம் வைக்காமல் அத்தனை இட்லிகளையும் காலி செய்யும் பகாசுரனைப் பார்த்து வயிறு எரிந்தார்கள்.

    மேஜையின் மீது காலி டிபன் பாக்ஸ் இருக்க, கோடியில் உட்கார்ந்து தன்னுடைய தயிர் சாதத்தை சாப்பிட்ட மிருணா சன்னக் குரலில், மன்மதா, ஓடிவா என்று பாடியவளை ரதி எரிச்சலுடன் பார்த்தாள்.

    வாயை மூடு மிரு

    வாயை மூடினா சாப்பிட முடியாது ரதி

    தெரியுதில்ல. பேசாம சாப்பிடு என்ற ரதி தான் சாப்பிட்ட காகித சுருளை குப்பைக் கூடையில் போட்டு விட்டு கை கழுவிக் கொண்டு வந்தாள். அங்கு வேலை செய்யும் பல பெண்கள் நடுத்தரக் குடும்பத்தினர், குடும்பச் சுமையைச் சுமப்பவர்கள். கை நிறைய சம்பளம் வந்தாலும் பெரிய குடும்பச் சுமையினால் பற்றாக்குறையில் வாடுபவர்கள்.

    அதனால் தினமும் தயிர்சாதம் தான் கொண்டு வருவார்கள். ரதி கொண்டு வரும் விதவிதமான டிபனை பங்கு போட்டுக் கொள்வார்கள்.

    இன்று மதியம் சாப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளாததுடன் இந்த கிரிதர் எப்படி ரதியின் சாப்பாட்டைப் பங்கு போட்டுக் கொள்ளும் அளவுக்கு நெருங்கினான் என்பதே மண்டையைக் குடையும் கேள்வி. மணியாகி விட்டதால் அவரவர் சீட்டுக்குப் போய் விட்டனர். இருந்தாலும் அவன் சாப்பாட்டை ரதியும், அவள் சாப்பாட்டை கிரியும் ஏன்? எப்படி பகிர்ந்து கொண்டனர்?

    மூன்றரை மணிக்கு அனைவருக்கும் டீ நேரம், அவரவர் இருக்கைக்கு டீயும் பிஸ்கெட்டும் வரும். இன்றும் வந்தது. பிஸ்கட்டையும், டீயையும் எடுத்துக் கொண்டு ரதியின் கேபினுக்கு வந்து விட்டாள் மிரு. டீயை உறிஞ்சியபடியே கணிணியில் கண் பதித்தவளை டீ இவளே என்றாள் மிரு.

    குடிச்சிட்டு இருக்கேனே... கண் தெரியல்ல?

    கலகலவென சிரித்த மிரூ, உன்னைத் தான் டீ போட்டு கூப்பிட்டேன் என்றாள்.

    வம்புக்கு வந்திருக்கிறாள் மிரூ என்பதை புரிந்து கொண்ட ரதி இங்கே வந்து எதுக்கு டீ போட்டே? அதான் அலுவலகத்திலேயே ரெண்டு வேளையும் கொடுத்துடறாங்களே...

    உன்னை அறைஞ்சுடுவேன்டி

    எல்லாரையும் அடிக்கத்தான் ஆபீஸ்க்கு வரயா? தெரியாம போச்சே? நாளையிலேர்ந்து ஏதாவது கவசம் போட்டுண்டு வரவா?

    சனியன்... சனியன்

    சனிக்கிழமையன்னிக்கு போய் நவக்கிரகத்தை சுத்து புண்ணியம். ஆபீஸ்லே வந்து சனீஸ்வர பகவானை ஸஹஸ்ர நாம அர்ச்சனை பண்ணக் கூடாது. சுலோகம் வேணும்னா கேளு. எனக்குத் தெரியும். எழுதித் தரேன்

    அசடு... அசடு

    இப்படி எல்லாம் யாருக்கும் பட்டம் தந்ததா எனக்குத் தெரியல்லையே? இதுக்கெல்லாம் விருது தரமாட்டாங்க என்றாள் ரதி சிறிதும் சிரிக்காமலே.

    எனக்கு எரிச்சல் பத்திண்டு வரது. கிரிக்கு எதுக்கு இட்லியைத் தூக்கித் தந்தே

    உனக்கு நாளைக்கு தனி டிபன் பாக்ஸில் போட்டுக் கொண்டு வரேன். இன்னிக்கு அவருக்குக் கொடுத்துட்டேன்னு காயாதே

    பட்டென்று

    Enjoying the preview?
    Page 1 of 1