Oru Vazhi Paathai
()
About this ebook
கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் நல்ல தாம்பத்யமாக இருக்கமுடியும். ஆனால் இங்கே எல்லாம் ஒரு வழிப் பாதையாக மட்டுமே இருக்கவேண்டும் என்கிறான் ராதிகாவின் கணவன் பாலாஜி. அன்பு, பாசம், கடமை எல்லாம் ராதிகாவின் விஷயத்தில் ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் இனியும் அவள் தாம்பத்தியம் நல்லபடியாக தொடருமா? என்பதை வாசித்து அறிந்துகொள்வோம் ஒரு வழிப் பாதையில்...
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsThennangkaatru Rating: 5 out of 5 stars5/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 5 out of 5 stars5/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Sippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Thodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Agayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Vazhi Paathai
Related ebooks
Asaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Theerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kondravan Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanum Nerangal Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Nee Enakku... Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Nee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaaniley Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Kaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsKanneerum Aanandham Rating: 0 out of 5 stars0 ratingsUllam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsSippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Kaathirunthu Kaathirunthu Rating: 0 out of 5 stars0 ratingsThalaa Oru Thota Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5எங்கெங்கும் உன் வண்ணம் Rating: 0 out of 5 stars0 ratingsEnkengum Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsMayiliragu Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Kaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oru Vazhi Paathai
0 ratings0 reviews
Book preview
Oru Vazhi Paathai - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
ஒரு வழிப் பாதை
Oru Vazhi Paathai
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
லன்ச்சுக்கு சப்பாத்தியும், வெங்காயச்சட்னியும் வெச்சிருக்கேன்.
அம்மா சொல்ல, பாலாஜி வியந்தான். ஷூ போட்டுக்கொண்டிருந்தவன் அதே வியப்போடு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். பின்னால் க்ளுக்கென்ற சிரிப்பு சத்தம் கேட்டது. தங்கை சாரு முன்னால் வந்து அண்ணனைப் பார்த்தாள்.
டெல்லியில் நாலு வேளையும் சப்பாத்திதானே சாப்ட்டாகணும்! அதான் இப்பவே டிரெயினிங் குடுக்கறா அம்மா
என்றாள்.
பாலாஜி சிரிப்போடு அவளையும் அம்மாவையும் பார்த்தான்.
ஏம்மா டெல்லியில நா என்ன ஓட்டல்லயா சாப்டப்போறேன்? அல்லது எம்பொண்டாட்டி என்ன வடக்கத்திக்காரியா? தஞ்சாவூர்ப் பக்கம்தானே? இட்லி தோசை பண்ணத் தெரியாதவளா என்ன?
அவ ஏதோ கிண்டல் பண்ணினா நீயும் சீரியஸா எடுத்துக்கறயே
அம்மாவும் பதிலுக்கு சிரித்தாள். நா என்னமோ இதுவரை சப்பாத்தியே பண்ணிக்கொடுக்காத மாதிரி நீ ஏன் ஆச்சரியப்படற, சப்பாத்தின்னதும் உனக்கே உன் டெல்லி உட்பி ஞாபகம் வந்துடுத்து பார்த்தியா?
அதெல்லாம் இல்ல
என்று சொன்னாலும், பாலாஜியின் வெட்கம் ஆமாம் என்றது.
என்னாச்சும்மா! அண்ணா முகம் இப்டி சிவந்துகிடக்கு?
சின்னவன் அசோக் கல்லூரிக்குப் புறப்பட்டபடி கேட்டான்.
அண்ணாக்கு அண்ணி ஞாபகம் வந்துடுச்சாம்
சாரு சத்தமாய்ச் சொல்லி சிரித்தாள்.
பாவம் அண்ணி. இந்நேரம் எத்தனை முறை பொறைக்கேறிச்சோ?
ஓஹோ இங்க நினைச்சா அங்கே பொறைக்கேறுமா?
ஆமா.
அப்டின்னா அண்ணி அண்ணனை நினைக்கவேல்ல போல்ருக்கு! ஒருமுறை கூட இவிடத்துக்கு பொறையும் பன்னும் ஏறினாப்போலவே தெரியலையே!
அம்மா... உன் பசங்களைக் கொஞ்சம் கண்டிச்சு வை சொல்லிட்டேன்!
பாலாஜி சிரிப்பை மறைத்துக்கொண்டு கண்ணை உருட்டிவிட்டு வேகமாய் வெளியேற, தங்கையும் தம்பியும் ஹோவென்று சிரித்தார்கள்.
பஸ் ஸ்டாண்டில் அலுவலகம் செல்லும் கூட்டம் நிரம்பியிருந்தது. பாதி பஸ்கள் நிற்காமலேயே பிதுங்கி வழிந்து சென்றது. ஒன்றிரண்டு பஸ்கள் நின்றாலும் கால் கட்டைவிரல்கூட வைக்க இயலாத அளவுக்கு கூட்டம், தொங்கிக்கொண்டிருந்தது. தினம் இந்த பஸ் பிரயானம் பிரச்சனைதான். ஃபுட்போர்டில் தொங்கிச் செல்வது பாலாஜிக்கு பிடிக்காது. எவ்வளவு அவசரம் என்றாலும் படிக்கட்டில் தொற்றிக்கொண்டு செல்லமாட்டேனென்று அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். காரணம் ஃபுட்போர்டில் தொங்கிக்கொண்டு சென்ற ஒரு சந்தர்ப்பத்தில்தான் பிடி தவறி கீழே விழுந்து பின்னால் வந்த மற்றொரு பஸ்ஸின் சக்கரம் ஏறி அப்பா துடிக்க துடிக்க நடுரோட்டில் செத்துப்போனார்.
முதலாமாண்டு எம்.காம். படித்துக்கொண்டிருந்த பாலாஜிக்கு படிப்பு முடியும் சமயத்தில் கருணை அடிப்படையில் அப்பாவின் ஆபிஸிலேயே வேலை கிடைத்தது. விட்ட படிப்பை பிறகு தபால் மூலம் தொடர்ந்தான். பத்து வருட சர்வீஸ் முடிந்துவிட்டது. அப்பா செத்துப்போகும்போது தங்கைக்கு நாலு வயது, தம்பிக்கு எட்டு வயது, குடும்ப பாரம் பத்தொன்பது வயது பாலாஜியின் தோளுக்கு ஏறியது. அவன் வயதொத்தவர்கள் சினிமா, பீச், பெண்கள், நவநாகரிக உடைகள் என்று அலைந்துகொண்டிருந்தபோது பாலாஜி தன் சம்பளத்தை வைத்துக்கொண்டு பட்ஜெட் போட்டுக்கொண்டிருந்தான். ஒவ்வொரு காசும் கணக்குப் பார்த்து செலவழிக்கவேண்டிய நிலையில் தன் சராசரி ஆசைகளைக் கிள்ளி எறியப் பழகிக்கொண்டான். நாலைந்து பாண்ட் ஷர்ட்களையே துவைத்து, பெட்டி போட்டு, மாற்றி மாற்றி உடுத்திக்கொண்டான். காப்பி, டீ என்று எந்த உபரிச் செலவும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. கஞ்சப்பிரபு என்ற ரகசியப் பேர்கூட அவனுக்கு அலுவலகத்தில் இருந்தது. அதைப்பற்றி பாலாஜி கவலைப்பட்டதில்லை. சிக்கனத்திற்கு மறுபெயர் கஞ்சத்தனம் என்றால் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டான். கஞ்சன் என்று வீட்டில் அவனைச் சொல்வதில்லை. அவர்களது தேவைகளை அவன் கூடியவரை நிறைவேற்றிவிடுகிறான். அம்மா அவனைவிட சிக்கனம். பிள்ளை எத்தனை பாடுபட்டு பணம் கொண்டுவருகிறான் என்று அவளுக்குத் தெரியும். தன் குடும்பத்தை மிக கௌரவமாய் நடத்திச்செல்ல வேண்டியது முக்கியம் என்று அவளுக்குத் தெரியும். அதிக ஆடம்பரமும் கூடாது. அரைவயிற்றுக்கு சாப்பிடுவதும் இயலாது. நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை கத்திமேல் நடக்கும் வித்தையைப் போன்றது. அவன் சம்பளத்தில் அந்தக் குடும்பம் கத்திமீது, ரத்தம் வராமல் நடக்கப் பழகியது. இந்தப் பத்து வருடத்தில் ஓரளவுக்கு முன்னேறிவிட்டது. வீட்டில் சில சௌகர்யங்கள் கூடியிருந்தன. ஆட்டுக்கல்லில் அரைத்துக்கொண்டிருந்த அம்மா கிரைண்டரில் மாவரைக்கிறாள். டிவி, டூ இன் ஒன், சிறிய சைஸ் குளிர்பெட்டி என்று ஒவ்வொரு பொருளாக வாங்கியிருக்கிறது. கல்லூரிக்குப் போகும் தம்பியும், பத்தாவது படிக்கும் தங்கையும் நல்ல உடைகள் உடுத்துகிறார்கள். அம்மாவும் அவனும் மட்டும் தங்கள் தேவைகளை சுருக்கிக்கொண்டார்கள்.
இந்தப் பத்து வருடத்தில் சாதாரண எல்.டிசியாக சேர்ந்தவன் செக்ஷன் ஆபீஸராக உயர்ந்தும்கூட அவன் உடைகள் மட்டும் மிடுக்கு கூடாமலேயே இருந்தன. சக நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும்கூட அவன் அவற்றில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி இருந்தே பழகிவிட்டதால் அந்த அலட்சியமா என்று தெரியவில்லை. ராதிகாவைப் பெண் பார்க்கப் போனபோதுகூட மிகச் சாதாரணமாகத்தான் போனான்.
2
ஏண்ணா இதென்ன டிரெஸ்? கொஞ்சம்கூட நல்லால்ல, முதல்ல மாத்துண்ணா.
ஏன்டா...? இதுக்கென்ன?
இதுக்கென்னவா? நீ இப்பொ ஆபீஸ்க்கு போகல. பெண் பார்க்கப் போற! கொஞ்சம் ட்ரிம்மா வரவேண்டாமா?
என்னால வேஷம் போட முடியாதுடா! என் நிஜம் இதுதான்னு அவளும் தெரிஞ்சுக்கணும். இந்த கோலத்துல என்னைப் பார்த்து இஷ்டம் இருந்தா கட்டிக்கட்டும். இல்லாட்டி வேண்டாம்னு சொல்லட்டும். அதான் நல்லது. ஒரே ஒரு நாள் சினிமா ஹீரோ மாதிரி வந்து அந்தப் பெண்ணை ஏமாத்திக் கட்டிக்க இஷ்டமில்லை.
இப்படிச் சொன்ன அண்ணனை முறைத்துப் பார்த்தான் பாலாஜி.
இப்போ நீ போடற பார் இதான் வேஷம். நல்லா டிரஸ் பண்ணிக்கறது தப்புன்னு யார் சொன்னது? நமக்கிப்போ என்ன கஷ்டம்னு நீ இப்டி பஞ்ச வேஷம் போடற? உன் வயசுக்கும் உத்யோகத்துக்கும் நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டாதானே நாலுபேர் உன்னை மதிப்பாங்க...?
அசோக் என்ன சொல்லியும் பாலாஜி மசியவில்லை. நிறம் மங்கிய ஒரு பேண்டும், கைக்கடியில் மஞ்சளோடியிருந்த ஒரு ஷர்ட்டும் அணிந்துதான் பெண் பார்க்கப் புறப்பட்டான். அதற்குமேல் அவனை வற்புறுத்த யாராலும் முடியவில்லை.
விட்ருடா அசோக். அவன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே பெரிய விஷயம்னு நினைக்கிறேன் நான். அவங்கிட்ட சம்மதம் வாங்கறதுக்குள்ளே நா பட்டபாடு எனக்குதான் தெரியும். இன்னும் தம்பி படிச்சு முடிக்கல. தங்கை சின்னப்பெண். அவங்கள்ளாம் லைஃப்ல செட்டில் ஆகறதுக்குள்ளே எனக்கென்ன கல்யாணத்துக்கு அவசரம்னான். நல்லாருக்குடா, சமுத்திரத்துல அலை ஓய்ஞ்சி ஸ்நானம் பண்ணணும்னு நினைக்கறவனை மாதிரி முட்டாள் யாரும் கிடையாதுன்னு சொல்லி அவனை தலையாட்ட வெச்சேன், நீ இப்பொ டிரஸ் விஷயத்துல அவனை வற்புறுத்தினா முதலுக்கே மோசம் வந்தாலும், வந்துரும். விட்ரு!
அம்மா சொல்ல அதற்குப் பின் அசோக் விட்டுவிட்டான்.
நாகரிக விஷயத்தில் ராதிகா அவனுக்கு நேர்மாறாக இருந்தாள். பெண் பார்க்கப்போன அன்று, பட்டுப் புடவையும் கூந்தலில் மல்லிகைப் பூவுமாக பெண்ணை எதிர்பார்த்தவனுக்கு பெங்கால் காட்டன் புடவையும், தூக்கிப்போட்ட சின்னக் கொண்டையும், அதிக நகைகள் அற்றும் வந்து நின்ற ராதிகாவைப் பார்த்ததும் விழிகள்