Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Kondravan Nee...!
Ennai Kondravan Nee...!
Ennai Kondravan Nee...!
Ebook86 pages30 minutes

Ennai Kondravan Nee...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமதி லட்சுமி ராஜரத்னம் திருச்சி நகரில் 27.3.1942ல் பிறந்தார் பத்தாவது வயதில் திருப்பாவை, திருவெம்பாவை போட்டியில் தங்க நாணயம் பரிசு பெற்றார்.

இதுவரை 1500 சிறுகதைகள், நிறைய நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைகாட்சி நாடகங்கள், 3 மெகா தொலைகாட்சித் தொடர்கள், 3500 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள் இவரின் எழுத்துலகச் சாதனைகளாகும். 40 சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பெண் எழுத்தாளரும் இவரே.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991ல் எழுத்துக்காகவும், 1993ல் ஆன்மீகச் சொற்பொழிவிற்காகவும் கௌர விக்கப்பட்டுள்ளார். இதுவரை 2500 சொற்பொழிகள் செய்துள்ளார். திருவையாறு தியாகராஜ ஆராதனையில் சின்ன கச்சேரி செய்த அனுபவம் உண்டு. இதைத் தவிர கோயம்புத்தூர், தஞ்சையில் கச்சேரிகள் செய்த அனுபவமும் உண்டு. மகள் ராஜஸ்யாமளாவின் நாட்டியற்குப் பாடிய அனுபவமும் உண்டு.

இவருடைய இதயக்கோயில் நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு பெற்ற நாவல். இன்று வரை பலரால் பாராட்டைப் பெற்ற நாவல்.

1999ல் 'செந்தமிழ்ச் செல்வி' என்று ஸ்ரீகுக ஸ்ரீ வாரியார் விருதைப் பெற்றார். ஜனவரி 2002ல் கொழும்புவில் உள்ள இந்து மகா சபை இவருக்கு சொற்சுவை நாயகி என்ற விருதைக் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. சங்கப்பலகை என்னும் புகழ் பெற்ற கலைமகள் பத்திரிக்கை ஜனவரி 2019-ல் சிறந்த எழுத்தாளருக்கான விருதை கொடுத்து கௌரவித்தது. ஒரே மகள் ராஜஸ்யாமளாவும் எழுத்தாளர் பரத நாட்டியக் கலைஞர்.

2011-ல் கணவனை இழந்த இவர் அதன்பின் உடல் நலம் குன்றி நான்கு அறுவை சிகிச்சைகள், இன்னும் பல உடல் தொந்திரவுகள் என்று சிரமப்பட்டாலும் 76 வயதிலும் மனம் தளர்வுளராமல் எழுதி வருகிறார். உங்கள் பாராட்டு என்ற பெரிய விருதை விட பெரிய உண்டா? என்கிறார்.

Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580115705176
Ennai Kondravan Nee...!

Read more from Lakshmi Rajarathnam

Related to Ennai Kondravan Nee...!

Related ebooks

Reviews for Ennai Kondravan Nee...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Kondravan Nee...! - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    என்னைக் கொன்றவன் நீ...!

    Ennai Kondravan Nee…!

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    கல்லூரி முடிந்து ஓடி வந்த திவ்யா வீட்டின் கோலாகலம் கண்டு அதிசயித்து நிற்கிறாள். அம்மா சம்பூர்ணம் வாசலில் பெரிசாகக் கோலம் போட்டு செம்மண் வரம்பு கட்டிக் கொண்டிருக்கிறாள். உள்ளே இருந்து எண்ணெய்ப் புகை, போண்டாவா, பஜ்ஜியா என்று கண்டுபிடி என்பது போல் கமறியது.

    அப்பா துணியை வைத்துக் கொண்டு கதவின் மேல் பதிந்திருந்த தன் பெயர் போர்டை வெளுப்பாக்க முயன்று கொண்டிருந்தார்.

    அம்மா, என்ன விசேஷம் இன்னிக்கு

    குனிந்தபடியே நிமிர்ந்த அம்மாவின் கொண்டைப் பூச்சரம் தோளில் சரிகிறது. இவள்தான் எடுத்து சரியாகச் சொருகி வைக்கிறாள். செம்மண்ணின் குழைவில் தோய்ந்த விரல்கள் கோலத்தில் சிவப்பு நீரைச் சிந்துகிறது.

    அட திவ்யாக்குட்டி வந்தாச்சா! என்று விசாரித்த அப்பா உள்ளே வாம்மா, விசேஷம் இருக்கு. வாசல்லேயே நின்னு கேட்கணுமா! என்று குருஞ்சிரிப்புடன் கேட்டபடி போர்டை அழுத்தித் துடைக்கிறார்.

    அவள் உள்ளே வர அம்மாவும் உள்ளே வந்தாள் தொடர்ந்து.

    திவ்யா, காப்பி டிபன் சாப்பிட்டுட்டு சீக்கிரம் டிரஸ் பண்ணிக்கம்மா

    புஸ்தகத்தை மேஜை மீது போடுகிறாள். திவ்யா, உள்ளே கிடந்த போட்டோ சறுக்கிக் கொண்டு மேஜை பரப்பில் விழுகிறது.

    அதைப் பார்த்ததும் அவள் மூஞ்சி அப்படியே சிறுத்துப் போகிறது

    கல்லூரியில் தோழிகளுடன் உல்லாசப் பயணம் சென்ற சமயம் எடுத்த புகைப்படம். மற்றவர்கள் வாளிப்பாக ஜம்மென்று நிமிர்ந்து இவள் மட்டும் துக்கிணியூண்டு நாலடி உயரம் கூட இல்லாமல்...

    இந்தப் பாப்பாயாரு? சும்மா கூடக் கூட்டிட்டு வந்தீங்களா? இதப் பாரும்மா... இப்படி முன்னாடி வந்து உட்கார்ந்துக்க...இல்லேனா வர்றவங்க உயரத்துக்கு ஒரு கல் மேல நீ நிக்கணும்

    போட்டோ எடுப்பவர் கூற மற்றவர்கள் கொல்லென்று சிரித்து விட்டார்கள். இவள் கண்களில் நீர் முட்டுகிறது. அப்படியே ஓடிப்போய் எங்கேயாவது மறைந்துவிடமாட்டோமா என்று அவளுடைய இளநெஞ்சு துடிக்கிறது... தலையைக் குனிந்து கொள்கிறாள். என்ன உடம்பு இது? மரப்பாச்சி மாதிரி.

    நடுப்பகல் லஞ்ச் அவரில் மரத்தடி மகாநாடு நடக்கும். சிநேகா தன் அத்தை மகன் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்த விலையுயர்ந்த சாக்லேட் வகைகளை விநியோகிப்பாள்.

    எதுடி இவளே! நாக்கை இழுத்து உறிஞ்சினாள் மீனா.

    என் அத்தை மகன் கொண்டு வந்தாரு

    அத்தான்னு அழகா சொல்லேண்டி... அத்தை மகனாம் சொத்தை மகன்... அத்தான்... என்னத்தான் அவர் என்னைத்தான்... என்று கண் சிமிட்டி கையடைத்து... ப்ளைங்கிஸ் கொடுத்து அபிநயிப்பாள் வனிதா

    இந்த சுரிதார் கூட என் பாய் ஃப்ரண்ட் மதன் வாங்கிக் கொடுத்ததுதான் என்று பெருமை கண்களில் வெடிக்கச் கூறுவாள் நித்யா.

    உன் பாய் ஃப்ரண்ட்க்கும் என் அத்தானுக்கும் வித்யாசம் உண்டுடி நித்யா. என் அத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறார். உன் பாய் ஃப்ரண்ட் எப்படி! லைப் பார்ட்னரா இல்லை வெறும் ரிகர்ஸலா? என்று சிநேகா கண் சிமிட்டிக் கள்ளச் சிரிப்பு சிரிப்பாள்.

    வெறும் ரிகர்ஸல்தான் என்று கூச்சமின்றி பதில் கண்ணடிப்பாள் நித்யா.

    ஏய்... திவ்யா, உனக்கு ஒண்ணும் பாய் ஃப்ரண்ட் கிடையாதா?

    என்று கிண்டலாகக் கேட்பது போல இடது கையால் இவள் டிபன் பாத்திரத்திலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1