En Iniya Iniyaa
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Ingu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Mannil Uthitha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Manithargal...! Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mattum Kol Rating: 0 out of 5 stars0 ratingsKolai Nila Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsYaarai Kolai Seyyanum? Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarendru Enni... Rating: 0 out of 5 stars0 ratingsKollimalai Kiss Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Eppothu Oyum? Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Iniya Iniyaa
Related ebooks
Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsNeelakkal Moothiram Rating: 0 out of 5 stars0 ratingsAmuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Ennai Kondravan Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Agalya Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsAbhaya Malli Rating: 0 out of 5 stars0 ratingsNee Engey? En Anbe! Rating: 0 out of 5 stars0 ratingsThelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5Santhana Mullai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai Rating: 5 out of 5 stars5/5Anbe! Unthan Nenjorame... Rating: 0 out of 5 stars0 ratingsஉனக்காக வாழ நினைக்கிறேன்... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Unakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsNagulanin Maathangi Rating: 0 out of 5 stars0 ratingsநகுலனின் மாதங்கி..! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Iniya Iniyaa
0 ratings0 reviews
Book preview
En Iniya Iniyaa - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
என் இனிய இனியா...
En Iniya Iniyaa…
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
அது, நடுத்தர வர்க்கத்திற்கு உரித்தான கல்யாண மண்டபம்.
விடியல் கழிந்து சூரியக் கதிர்கள் பூமியை முழுதாய்த் தழுவிக்கொண்டிருந்தன. சுற்றமும், நட்பும் சுற்றி நிற்க, எங்கும் மங்கலம்... பூக்களின் மணம்.
மேளம் முழங்கிக்கொண்டிருக்கிறது. தட்டில், தேங்காயின் மீது வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறும் அதில் கோர்க்கப்பட்ட தாலியும் அனைவரின் ஆசி பெறப் போய் வருகிறது.
மரகதம் விழிகள் குளங்களாய் நிரம்ப மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளைப் பார்த்தாள்.
பொற்சிலையொன்று உயிர்கொண்டு மணவறையில் அமர்ந்திருப்பது போலத் தோற்றம். இனியா, தாயை நிமிர்ந்து பார்த்து லேசாய் முறுவலித்தாள்.
அவள் பக்கத்தில், இன்னும் சிறிது நேரத்தில் வாழ்க்கைப் பந்தத்தில் அவளோடு கரம் பற்றப்போகும் மணமகன்,வானரசு.
மரகதம் செய்து போட்ட தங்கச்சங்கிலி, மோதிரம், தங்கப் பிரேசுலெட்டு எல்லாம் மின்னுகின்றன. பட்டுச்சட்டையும், வேட்டியும் அவன் அழகையும் கம்பீரத்தையும் மிகைப்படுத்திக் காட்டுகின்றன.
தாயின் அருகில் நிற்கும் இனியாவின் தங்கை இலக்கியா, தமக்கையைப் பார்த்துச் சிரித்தாள். தாமரை ஒன்று பூத்தது போன்ற சிரிப்பு.
இனியா தன் கண்களாலேயே அதை அங்கீகரித்தாள். தாலி, சொந்தங்களின் ஆசியைப் பெற்றுக்கொண்டு அய்யரின் கைகளுக்கு வருகிறது. அவர் மந்திரம் ஓதி, அதை மணமகனின் கையில் கொடுக்கிறார்.
வானரசு,இனியாவின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போடப் போகும் நேரம். வானரசுவின் தந்தை உரக்கக் கேட்டார். அம்மா மரகதம், எத்தனை சவரன் நகை போட்டு இருக்கீங்க... சபை முன்னாடி சொல்லுங்க... வானரசு, அதுவரை தாலி கடடாதே...
என கர்ஜித்தார்.
வானரசுவின் பெற்றோரைப் பார்த்தால் சண்டைக் கோழிகள் போல சிலிர்த்து நின்றார்கள். ஏதோ திட்டம் போட்டவர்கள் போலத் தெரிகிறது. வானரசுவுக்கு வங்கியில் வேலை. நேற்று வரவேற்பின்போது பெரிய கூட்டம் வந்து பரிசுகள் அளித்து, வாழ்த்தி, சாப்பிட்டுப் போயிற்று.
வானரசுவின் பக்கத்தில் நின்ற இனியாவைப் பார்த்து அவர்கள் இப்படி குரல் எழுப்பவில்லை. இப்போது, தாலி கட்டுகிறபோது பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
சர்வாங்கமும் நடுங்க பயத்துடன் சம்பந்தி வீட்டாரைப் பார்த்தாள், மரகதம். அவள் குரல், கிணற்றின் ஆழத்திலிருந்து வருவது போலக் கேட்கிறது.
அப்புறம் சொல்றேனே... இப்ப கல்யாணம் நடக்கட்டுமே... நல்ல நேரம் கடந்துட்டு இருக்கு...
நல்ல நேரம் எப்பவும் வரும்... போகும். நீங்க எவ்வளவு நகை போட்டு இருக்கீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல...
வானரசுவின் தந்தை சொல்ல, அதைத் தொடர்ந்து மணமகனின் தாய் உரக்கப் பேசினாள்.
எவ்வளவு நகை போட்டிருக்கேன்னு சொன்னாதான் கல்யாணம் நடக்கும். பொண்ணோட அப்பா ஓடிப் போனதைக்கூட பொறுத்துக்கிட்டோம். இதை விட முடியாது...
வானரசு கையில் இருந்த தாலியை, அய்யர் கையில் பிடித்திருந்த தேங்காயின் மீது கிடத்திவிட்டு விழித்தான்.
ஒருமையில் வந்துவிழுந்த சொற்களில்துடித்துப்போனாள், மரகதம்.
அவள் வாய் குழறியது. எங்க பொண்ணுக்கு இருபது சவரன் நகை போட்டிருக்கேன். நீங்க இருபத்தைந்து சவரன் கேட்டீங்க... மாப்பிள்ளைக்கு ஐந்து சவரன் நகை செஞ்சு போட்டிருக்கேன். அதனாலே இனியாவுக்கு இருபத்தைந்து சவரன் போட முடியலை...
இதைச் சொல்லி முடிப்பதற்குள் வியர்த்துப் போனாள், மரகதம்.
மணவறையில் அமர்ந்திருந்த இனியா, திடுக்கிட்டு வானரசுவைப் பார்த்தாள். அவன் பேசி சமாதானப் படுத்தமாட்டானா? என எதிர்பார்த்தாள். அவனோ தன் பெற்றோரைப் பார்த்தபடி பதுமையாய் அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கோபமும் வெறுப்பும் எழுந்தன.
மணப்பெண்ணாய் அமர்ந்திருப்பதால், ‘பட்’டென எழுந்து தாயின் அருகில் நின்று பேச முடியவில்லை. தன் தாயையும் தங்கையையும் மாறி மாறிப் பார்த்தாள். அவர்கள் சொந்தக்காரர்கள் யாராவது தங்களுக்காகப் பரிந்து பேச மாட்டார்களா? எனப் பார்த்தாள். இதை வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் இவர்களுக்காகப் பேச வரவில்லை.
என்ன... என்ன இருபதா... அது முடியாது. பொண்ணுக்கு இருபத்தைந்து சவரன் போடணும். இப்பவே மீதி ஐந்து சவரனையும் போட்டாதான் இந்தக் கல்யாணம் நடக்கும்.
அப்பா, தீர்க்கமாய்ச் சொன்னார்.
டேய்... வானரசு எழுந்து வா... அவங்க போட்ட பிறகு தாலி கட்டலாம்...
அம்மா கட்டளையிட்டாள்.
அவ்வளவுதான்... வானரசு, நல்ல பிள்ளையாய் இனியாவின் பக்கத்திலிருந்து எழுந்தான். அவன் எழுந்ததும் இனியாவும் எழுந்தாள். சர்வாலங்காரத்துடன் போய் தாயின் கரத்தைப் பிடித்துக்கொண்டாள்.
வானரசு கைப்பிடித்து அக்னியை வலம் வந்திருக்க வேண்டிய நேரம்.
மாப்பிள்ளைக்கு எங்கம்மா ஐந்து சவரன் போட்டிருக்காங்களே... அதோட கணக்குச் சேர்த்தா இருபத்தைந்து சவரனாச்சு...
இனியா, பேசப் பேச அவளை அடக்கப் பார்த்தாள், மரகதம்.
நீ சும்மாயிரும்மா...
அம்மாவை அமைதிப்படுத்தினாள்.
"எங்க பையன் எம்.காம். படிச்சிருக்கான். வேலை பார்க்கிறான். கைநிறைய சம்பாதிக்கிறான். அவனுக்குப் பொண்ணு தர நீ நான்னு நிக்கிறாங்க... நகை செஞ்சு போடுறது உங்க கடமை... சொன்னாலும் சொல்லாவிட்டாலும் செய்ய வேண்டியதைச் செய்யணும். ஆனா அதுக்காக உங்க பொண்ணுக்குச் சவரனைக் குறைச்சது