Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theeratha Vilayattu Pillai
Theeratha Vilayattu Pillai
Theeratha Vilayattu Pillai
Ebook111 pages57 minutes

Theeratha Vilayattu Pillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204034
Theeratha Vilayattu Pillai

Read more from Hamsa Dhanagopal

Related to Theeratha Vilayattu Pillai

Related ebooks

Reviews for Theeratha Vilayattu Pillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theeratha Vilayattu Pillai - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    தீராத விளையாட்டுப்பிள்ளை

    Theeratha Vilayattu Pillai

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    வானில் வளர்பிறை செதுக்கப்பட்டது போல அழகுக்கோலம். அதன் மங்கிய ஒளியில் தோட்டம் ஓவியம் போலத் தென்பட்டது. காற்றில் சலனம் காணாமல் போக கைதேர்ந்த ஓவியக் கலைஞன் தூரிகைச் கொண்டு வரைந்தது போல தோட்டம் பொலிவைக் காட்டிற்று.

    அந்த தோட்டத்தைப் பராமரிக்கும் சுமதி பால்கனியில் நின்றிருந்த போதும் அவள் பார்வையில் எதுவும் படவில்லை. எண்ணங்கள் மாலை நடைப்பெற்ற நிகழ்வையே நினைத்து மருகிற்று. மற்ற நேரமாய் இருந்தால் இந்த இயற்கையின் சலனமின்மையைப் பெரிதும் ரசித்திருப்பாள்.

    சுமதிக்கு அடுத்த மாதம் திருமணம். இன்று மாலைதான் நிச்சயம் செய்திருக்கிறார்கள். மாப்பிள்ளை விக்ரமனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    அவன் தன்னைத்தான் மணந்துகொள்ளப் போகிறானா என்பதைத் தான் அவளால் நம்ப இயலவில்லை. எத்தனை கம்பீரமானவன், அழகானவன், நல்ல நிறம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இவளைவிட நிறமானவன், கோதுமை நிறம். அந்த மீசை அவனுக்குப் பாந்தம். அவன் விழிகளின் கவர்ச்சியில் அடிபடாத பெண்ணே இருக்க இயலாது. அவன் போய் அவளுக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறானா, எத்தனை முறைகள் கிள்ளிப் பார்த்தும் சொல்லிப் பார்த்தும் அவளால் அதை நம்பமுடியவில்லை, ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது எப்படி சாத்தியம்...

    நித்தம் பார்க்கும் கண்ணாடி அவள் உருவத்தைக் காட்டுகிறதே. அது பொய் சொல்லுமா. விக்ரம் வந்து பெண் பார்த்தபோதே தன் மனதைத் தாயிடம் திறந்தாள் சுமதி.

    அம்மா, விக்ரம் அழகில் தான் கால்தூசி பெறமாட்டேன். அவர் எனக்குக் கணவனா வரப்போறார்ன்னு சொன்னா என்னால் நம்பமுடியலை, மனசு ஏத்துக்கலைம்மா, வேண்டாம்மா, இந்த கல்யாணம் வேண்டாம். அப்பாக்கிட்ட சொல்லிரு.

    அழாதகுறை. திரும்ப திரும்ப சின்னப்பிள்ளைப் போல தாயிடம் கெஞ்சினாள் சுமதி.

    அசட்டுத்தனமா உளராதே சுமதி. விக்ரம் உன்னைவிட நிறம். அழகு. உண்மைதான். எப்பவும் பெண் பிள்ளைதான் அழகா இருக்கனும் என்கிறது வேதமா என்ன, ஏன் பெண்ணானவிட ஆண் அழகாய் இருக்கக்கூடாதா என்ன? ஏன் உங்கப்பா கூடதான் என்னை விட நிறம். என்னை கல்யாணம் செய்துக்கலையா... இருப்பத்தைந்து இருக்கும். வருடம் தாம்பத்யம் நடத்தலையா... எல்லாம் மனசுதான் காரணம். தங்கமான மனசு விக்ரமிற்கு...

    வேண்டாம்மா... நான் சொல்றதைக் கேளு... நாளைக்கு வாழப்போகிறது நான். அவர் என்னைவிட்டு வேற ஒருத்தியை தாடிப்போயிடுவாரோ என்கிற பயம் என்னை உலுக்கிட்டே இருக்கும். வேண்டாம்மா இந்த கல்யாணம்...

    பேசாம வாயை மூடிட்டு நல்ல பெண்ணா இரு. எத்தனையோ பேர் உன்னைப் பெண் பார்த்துட்டு போயிட்டாங்க. பெண் கருப்பு... குண்டு… குட்டை அது இதுன்னு வேற சொல்லி மனசை தோகடிச்சாங்க, அவளும் ஒரு பெண், நம்மைப்போல அவளுக்கும் வாழணும் என்கிற எண்ணம் இருக்கும் என்பது யாருக்கும் வரலை, உன்னைப் பார்த்த போதே அவங்க முகத்தில் திருப்தி. உங்கப்பா துர்வாசருக்கு அண்ணன். அவர் காதில் விழுந்தால் நாம் தொலைஞ்சோம்.

    உண்மைதான். அப்பா எதிலும் அதிகக் கோபப்படுவார். எந்த காரியமும் அவர் நினைப்புப்படித்தான் நடக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கையில் கிடைத்ததை தாக்கி அடிப்பார்.

    அவருக்கு இரத்தக் கொதிப்பு வேறு. கோபப்பட்டால் அது வேறு வந்து தொலைக்கும், எதைச் சொல்லவேண்டும் என்றாலும் தாயிடம் மட்டுமே சொல்வாள் சுமதி...

    பக்குவமாய் தாய்தான் தந்தையிடம் சொல்வாள்.

    இங்கே பாரம்மா... அவங்கதான் பெண் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. அவங்க கேட்டதை நாம செய்யத் தயாராய் இருக்கோம். உங்கப்பாவுக்கு ரொம்ப திருப்தி. மாசம் பத்தாயிரத்திற்கு மேல் சம்பளமாம், சொன்னது போல நிச்சயம் செய்ய வராங்களான்னு பார்க்கலாம். பெருமூச்சுவிட்டாள் தாய்.

    ஒரே பெண் சுமதி. பிரபல தொடர் போட்டோ கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்தாள் சுமதி. மாதம் இரண்டாயிரத்திற்கு மேல் சம்பளம். பட்டதாரியான அவள் இந்த வேலைக்குப் போவதற்கு தந்தையின் சம்மதம் பெறவே படுகடினமாய் இருந்தது.

    சாமான்யத்தில் அவர் மசிந்து கொடுக்கவில்லை, அம்மாதான், என்னங்க சுமதி சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு. வீட்ல சும்மாதானே இருக்கா. காலேஜ் போய் வந்த பொண்ணு, வீட்ல இருக்கிறது சிரமம் இல்லையா. வெளியே போனா அவள் மனசு நல்லாயிருக்கும். கல்யாணம் ஆகிறவரை போகட்டுங்க. அப்புறம் வர்றவங்க விருப்பம்.

    இரண்டு நாட்கள் மவுனமாய் இருந்த தந்தை பிறகுதான் சம்மதித்தார். வெளியே வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு எந்த வம்பையும் விலைக்கு வாங்கிட போகிறாள். அவள் காலேஜ் போனதே எனக்குப் பிடிக்காலை, நீதான் ஒத்தக்கால்ல நின்னு அவளைப் படிக்க வைச்ச, இப்பவும் நீதான்...

    அப்பா அங்கிருந்து போனதும்: வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறை சுமதிக்கு. அவள் அழகிற்கு அவளை யார் காதலிக்கப் போகிறார்கள், பாவம் உலகம் தெரியாது அப்பா.

    அவள் மோனிகா போட்டோ கம்பெனிக்கு வேலைக்குப் போய்கூட முன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவளைக் கரம்பிடிக்க எந்த ராஜகுமாரனும் வரவில்லை. வந்தவர்கள் எல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1