Vithaigalilla Virutchangal
()
About this ebook
பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.
இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.
இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.
Read more from Hamsa Dhanagopal
Thisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNee...Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsPasapinaippugal! Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKannum Kannum Kollai Adithal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Nee... Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Vellai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVeliyilla Velladugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vithaigalilla Virutchangal
Related ebooks
Theeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsThalaattu Maari Ponatho? Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Kokila Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVeliyilla Velladugal Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratingsParapatharke Siragugal... Rating: 0 out of 5 stars0 ratingsPoomanamey Thazh Thiravai Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Karpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thottam Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Vaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Ivala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsVeduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Seer Kondu Vaa Venmagame Rating: 4 out of 5 stars4/5
Reviews for Vithaigalilla Virutchangal
0 ratings0 reviews
Book preview
Vithaigalilla Virutchangal - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
விதைகளில்லா விருட்சங்கள்
Vithaigalilla Virutchangal
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. விதைகளில்லா விருட்சங்கள்
2. படச் சுருள்
3. சத்தியம்
4. அண்ணனாவது தம்பியாவது.
5. ஆராரோ ஆரிரரோ
6. அக்னி
7. உயிர்க்கருணை
8. பெண்
9. வேலியொன்று வேண்டும்
10. மீண்டும் ஒரு…
11. ஒரு பிடி மண்
12. இனிமேல் வாழ்க்கை
1
விதைகளில்லா விருட்சங்கள்
வயர் கூடையில் தன் பழைய சேலைகளை மடித்து வைக்கையில் பாலிதின் பையின் பச்சை வண்ணத்தில் புதிய சோபையில் மின்னும் கைத்தறிச் சேலையை எடுத்துக் கொள்வோமா அன்றி இங்கேயே விட்டுப் போய் விடுவோமா என யோசிக்கிறாள் ஜானகி. அந்தப் புதிய சேலை அவளுடைய மகன் விஜய் நேற்றுத் தான் வாங்கிவந்து கொடுத்திருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் இந்த வீட்டின் பந்தங்கள் அறுந்து விடப் போகின்றன. உயிருடன் இருக்கும்போதே உறவுகள் கழன்றுவிட போகின்றன.
அந்தச் சேலையைக் கையில் எடுக்காமல் பார்த்தபடி ஜானகி குழம்பிப் போய் நிற்கையில் தொட்டியில் அவள் ஆறு மாதப் பேரன் தரையை ஈரப்படுத்தி விட்டு நெளிந்து நெளிந்து அழுகையைத் துவக்கி விடுகிறாள். மருமகள் சுமதி வந்து குழந்தையை எடுக்கட்டும் எனச் சில நிமிடங்கள் தாமதிக்கிறாள் ஜானகி. குழந்தையின் பசிக்குரல் இவளைச் சங்கடப்படுத்தியது குழந்தை எப்போது தூங்கியவன்…
சுமதியை உள் வாங்கியிருக்கும குளியலறை தன் மணிக்கதவைத் திறப்பதாய் இல்லை. பற்றுப் பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரியும் வரவில்லை. பொறுக்க இயலாதவளாய்ப புதிய சேலையைப் போட்டுவிட்டுப் பேரனை வாரிக் கொள்கிறாள். ஜானகி. அவள் அணைப்பில் விரல் சூப்பியபடி பசியை மறக்கப் பார்க்கிறது பூம்பிஞ்சு.
பேரன் கண்ணீரைத் துடைக்கையில் அவள் சுருக்கம் விழுந்த கண்களில் ஈரம்.
அவள் பெற்ற மகன் தனியார் கம்பெனியில் பெரிய ஆபீஸ்ராய்க் கை நிறையச் சம்பாதிக்கும்போதே ஜானகி முதியோர் இல்லத்தில் மாதம் ஒரு தொகையைக் கொடுத்து விட்டு நேரா நேரத்தில் தட்டேந்தி மற்ற முதியோருடன் பேசிப் பழகவும் இயலாமல், பேசாமல் இருக்கவும் இயலாமல், சதா சர்வ காலமும் தொண்டையில் துயரம் கனத்த பந்தாய் அடைத்துக் கொள்ள, என்றோ அவளை அனாதை ஆக்கிச் சென்ற கணவனின் உருவை விழிகளில் கொணர முயன்று தோற்று, என்னையும் உங்ககிட்ட சுருக்க அழைச்சுக்கங்களேன் என விண்ணப்பங்களுக்கு மேல் விண்ணப்பங்களும் காணாமல் போக நித்தம் இவள் வாடி நிற்க மீண்டும் விடுதிக்குப் போகப் போகிறாள் ஜானகி. இன்னும் சிறிது நேரத்தில் அவளை அழைத்துப் போக ஆட்டோ வந்து விடும்.
வந்த வேலை இந்த ஏழு மாதத்தில் முடிந்து விட்டது. மீண்டும் சுமதிக்குக் குழந்தை பிறக்கையில் இந்தத் தாயின் நினைவு விஜய்க்கு வரலாம். அல்லது சுமதிக்கு வரலாம்.
சுமதியைப் பெண் பார்க்கப் போனபோது அவள் அடக்கமும் குழைவும் விஜயைவிட இவளைப் பெரிதும் கவர்ந்தன. தாய் அற்ற பெண் என்று உள்மனம் பொங்கிற்று. தன் மகனுக்கு மணம் முடித்தாள்.
சுமதியின் மீது அன்பும் பரிவும் பாசமும் இவள் மழையாய்ப் பொழிந்தாள். அது இவளுக்கே பதில் அன்பார் இல்லாமல் அம்புகளாகி வதைத்தன.
மாமியார், மருமகளைப் படுத்தி வைப்பது போய், மருமகள் இங்கே மாமியாரைப் படுத்தி வைக்கலானாள்.
ஜானகிக்கு எப்போதும் மற்றவர்களைச் சுருக்கென்று பேசிப் பழக்கமில்லை.
தனக்கொரு பெண் குழந்தை இல்லை என்கிற ஆதங்கம் ஜானகிக்கு எப்போதுமே உண்டு.
இவையெல்லாம் சேர்ந்து சுமதி என்ன பேசினாலும் செய்தாலும் இவள் எதிர்த்து போர்க் குரல் எழுப்ப இயலாமல் போய் விட்டது.
"அபிஷேக், எழுந்துட்டானா. எதுக்கு இதுக்குள்ள பாலைக் கரைச்சுக் குடுத்துங்க. இன்னும் தூங்க விட்டிருக்கணுமே. சுமதியின் குரலில் தன் எண்ணங்கள் கலைந்து போக, திகைக்கிறாள் ஜானகி.
தொட்டிலை ஆட்டிப் பார்த்தேன். குழந்தை ரொம்ப அழுதான். வயிறு ஒட்டிப்போச்சு. நீயும் வரலை. அதான் பாலைக் கரைச்சேன்.
சுமதி, தலைக்கு நீராடி முகம் சிவந்தவளாய், குழந்தையை மாமியார் அணைப்பிலிருந்து வெடுக்கென பிடுங்கி தன் அறைக்கு எடுத்துப் போகிறாள். பாட்டியின் அணைப்பில் தூக்க சொர்க்கத்திற்கு விண்ணப்பம் எழுதிக் கொண்டிருந்த குழந்தை வீரிட்டு அழலானான்.
ஜானகியின் முகம் சுண்டி விடுகிறது. வெளியே ஜன்னலில் எட்டிப் பார்க்கிறாள். விஜய் இன்னும் ஆட்டோ அழைத்து வரவில்லை.
அவள் மீண்டும் முதியோர் இல்லம் விட்டு இங்கு வந்திருக்கக் கூடாதோ. சுமதியுடன் வாழ்க்கை போராட்டப் புயலாக உருவெடுத்த போது விஜய், அவளுக்குப் பரிந்து பேசவோ குறைந்த பட்சம் இவளின் துயரங்களைக் கேட்டுக் கொள்ளவோ கூடத் தயாராய் இருக்க மாட்டான்.
அம்மா, டெய்லி உங்க சண்டையே பெரிசாப் போச்சு. உனக்காக அவளைத்துரத்திடமுடியுமா. வயசான, காலத்தில் ஏதோ சாப்பிட்டுட்டு ராமா கிருஷ்னான்னு இரும்மா. எதுக்காக வீண் சண்டை
விஜய், நான் சொல்றக் கேளு. நானதான் சமைச்சு, பத்து கழுவி, துணி அலசி...
போறும்மா. அவளும்தான் செய்யறா. அவங்க வீட்டில் சொகுசா வாழ்ந்தவ. இங்கே வந்து அதையும் இதையும் செய்ய முடியுமா. நீ எப்பவும் வேலை செய்து பழக்கம். நீயாப் பார்த்து கல்யாணம் செய்த பொண்ணு தானே. நானும் பேசி நீயும் பேசினா கொடுமைன்னு ஆகாதோ.
ஊஹீம்… செவிடர்களுக்குக் கூட வஷயங்களை விளங்க வைத்து விடலாம். ஆனால் கேளாச் செவியர்களிடம் சொல்ல முடியுமோ?
இந்த பனிப் போரின் உச்ச கட்டமும் ஒரு நாள் வரத்தான் செய்தது.
ஜானகி, அலங்கார மேஜை துடைக்கையில் அதிலிருந்து சுமதியின் வெளிநாட்டு சென்ட் பாட்டிலைப் போட்டு உடைத்து விட்டாள். சுமதியின் பேச்சுக்கு அளவுகோலே இல்லாமல் போயிற்று.
இவள் அன்று முழுவதும் தன்னறையை விட்டு வெளி வரவில்லை. ஒரே மகனை விளக்குள் வைரமாய் வளர்த்து ஆளாக்கியும் தனக்கு ஆதரவு இல்லாமல் போனதே என்று விழி நீருடன் பட்டினி கிடந்தாள்.
விஜய் வந்ததும் பிரச்சனைக்குத் தீர்வும் வந்தது.
"அம்மா, உனக்கும் சுமதிக்கும். சுத்தமா ஒத்துப் போகலை, முதியோர் இல்லத்துக்கு அப்ளிகேஷன் வாங்கி வந்திருக்கேன். நாளைக்கே உன்னை அழைச்சுட்டு, போறேன்மா. மாசா மாசம் நான் பணம் கட்டிடறேன். அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு விசேஷம் பண்டிகைன்னா நீயும் வரலாம்.
இதயத்தில் பெரிய பள்ளம் பறிக்க, தன் ரத்தத்தின் ரத்தம் தன் சதையின் சதை, ஒரு காலத்தில் தன்னையே உலகமாய் கொண்டு உருவானவன், இவனை வளர்க்க படிக்க வைக்க இவள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பாள் - அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க, பிடுங்கி எறியப்பட்ட பச்சைக் கொடியாய்த் துடித்துப் போனாள்.
உள்ளே தூக்கம் கலைந்த குழந்தை பலமாக அழுகிறது. அதை அதட்டும் சுமதியின் குரல் ஜானகிக்குக் கேட்கிறது.
அவளுக்கு வயிற்றைப் புரட்டுகிறது. வெளியே எட்டிப் பார்க்கிறாள். காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.
ஆட்டோவுடன் விஜய் இன்னும் வரவில்லை. ஆட்டோ வரும்வரைதான் இந்த வீட்டுடன் அவளுக்கு ஒட்டுதல். அப்புறம்…
முதியோர் இல்லத்தில் சேர்ந்த ஆரம்பத்தில் மாதம் ஒரு முறை பழம் இனிப்பு என வாங்கி வந்து விஜய் பார்த்தான். அடுத்து மூன்று மாதம் ஆறு மாதம் என்று காலக் கெடுவை நீட்டினான். அவன் வரவிற்காக வாசலோரம் நிற்கும் ஜானகிக்குக் கால்கள் வீங்குவது வாடிக்கையாயிற்று.
ஜானகி, பண்டிகை, ஒரு நாள் கிழமை என்றாலும் மகனைப் பார்க்கப் போனவள் அல்ல. பெற்ற பாசம் அடித்துக் கொள்ளும். மனக் குதிரைக்குக் கடிவாளமிட்டு அடக்குவாள். விஜய் வரும்போதெல்லாம் 'சுமதி உண்டாய் இருக்கிறாளா’ என கேட்க மட்டும் தவறினவள் அல்ல ஜானகி.
சுமதி மறந்தும் மாமியாரை வந்து பார்த்தவள் அல்ல.
போனமுறை விஜய் வந்த போது அவன் சொன்ன செய்தியில்