Nee...Nee Vendum
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Thisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsPasapinaippugal! Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsKannum Kannum Kollai Adithal Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Nee... Rating: 0 out of 5 stars0 ratingsNaan Vellai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsVeliyilla Velladugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nee...Nee Vendum
Related ebooks
Poo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Rangarattinam Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsவசந்தம் வருமா..? Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Manakadhavai Thiranthu Vidu Rating: 5 out of 5 stars5/5Anbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnam Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Manasu Rating: 5 out of 5 stars5/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsRajamadhangi Rating: 5 out of 5 stars5/5Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratings'Jolly' Kathaigal..! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kandean Drohi Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhali… Ennai Kaadhali… Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Agalya Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsUyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsMadhil Mel Manasu Rating: 5 out of 5 stars5/5Sorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Nee Varum Paathaiyil... Rating: 5 out of 5 stars5/5Ninnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Vazhkkai Thodarum... Rating: 0 out of 5 stars0 ratingsEn Murai Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee...Nee Vendum
0 ratings0 reviews
Book preview
Nee...Nee Vendum - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
நீ...நீ வேண்டும்
Nee…Nee Vendum
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முதல் பாகம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8a
இரண்டாம் பாகம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
முதல் பாகம்
1
'சீதா கல்யாண வைபோகமே கௌரி கல்யாண வைபோகமே...'
வயதான மூதாட்டி, நடுங்கும் குரலில் சின்னக் குயில் சித்ரா என்கிற நினைப்பில் பாடிக் கொண்டிருந்தார்.
பெண்கள் கூட்டம், பட்டுச் சேலை, நகைப் பெட்டிகளாய் தங்கள் அக்கம்பக்கம் சொந்தங்களின் அந்தரங்கங்களை - நாட்டுக்குத் தேவையான பல நல்ல விஷயங்களை - வெறும் வாய்க்குப் பதில் மென்று கொண்டிருந்தனர்.
பூச் சரங்கள் சுற்றின ஊஞ்சலில் பட்டு வேஷ்டி அங்க வஸ்திரம், கண்ணுக்கு மை, நெற்றியில் சந்தனக் கீற்று என மாப்பிள்ளைக் கோலத்தில் சிவசுப்ரமணியம். நல்ல நிறம் கறுப்பில். அம்மை வடுக்கள் பள்ளம் பறித்த முகம். சிரிக்கும்போது பற்கள் பளீரிட்டன. முப்பது வயது. அடிக்கடி தன்னருகே பதுமையாய் அமர்ந்திருக்கும் மணமகள் மைதிலியைப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.
மைதிலி ஐந்தடி இரண்டங்குலம். சதைப்பிடிப்பான தேகம். அவள் கடை வீதியில் நுழைந்தால் எலுமிச்சம் பழங்கள் வெட்கப்படும். அவ்வளவு நிறம். மை, பூ அலங்காரம், இரவல் நகைகள் என வீதி உலாப் போகும் அம்மன் கணக்கில் இருந்தாள்.
ஊஞ்சல், நலுங்கு எனப் பெண்கள் ஏக அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்கள். அவள் பெற்றோர் ஓடி ஓடிச் சொந்த பந்தங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மூன்றாவது பெண்ணை - அதுவும் மைதிலியை - மணவறைக்கு அனுப்பியாகிவிட்டது என்கிற பூரண திருப்தி அவர்கள் முகங்களில்.
மணமகளாய் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த மைதிலியின் மைவிழிகள் அடிக்கடி யாரும் அறியாமல் இருட்டறைக்குப் பயணப்பட்டன.
நடுத்தர வர்க்க - அதுவும் கிராமத்துத் திருமண மண்டபத்தில் பட்டப்பகலில் அந்த அறை இருட்டாகத்தான் இருந்தது. அதில் வாழைப் பழங்கள், வாழை இலைகள், பூக்கள் எனக் குவிந்திருந்தன. சரத் சந்த் கதவுக்கு உள்ளே நிலைப்படி அருகில் நின்றிருந்தான். அவன் நிற்பதை மைதிலியைத் தவிர யாரும் கவனிக்கவில்லை. வயது இருபத்தெட்டு. தோற்றம் இருபத்தி நான்கு. ஹிந்தி ஹீரோ கணக்காய் பிடரி வருடும் ஃபங்க் கிராப். அளவாய் நறுக்கின மீசை. அடர்ந்த புருவங்களுக்கிடையே பளீரெனத் தெரியும் கொஞ்சம் பெரிய கண்கள்.
சட்டெனப் பார்க்கும் யாரும் அவன் தோற்றத்தில் கிறங்கிப்போவர். குழந்தைகள் அவனுடன் ஒட்டிக்கொள்ளும். திடசித்தம் இல்லாத பெண்கள் ஒருமுறைக்கு இருமுறைகள் திரும்பிப் பார்த்து, பிறர் காணாமல் பெருமூச்சு விடுவர். தனியாக இருக்கும் குழந்தைகளை அவன் திரும்பியும் பார்க்க மாட்டான். பெண்களின் இடுப்பில் உலாப் போகும் குழந்தைகளை முத்தமிடுவான். கிள்ளிக் கொஞ்சுவான்.
ஊஞ்சல் முடிந்து மணமகனும் மணமகளும் பால் பழம் சாப்பிடத் தனியறை போனார்கள். கிழச் சுமங்கலிகள் கேலி பேசி, பால் பழம் கொடுத்தனர்.
சிரிப்புடன் தொடர்ந்து வரும் சரத்சந்தை, எப்போதாவது ஒருமுறை தீண்டிப் போயின மைதிலியின் மை விழிகள். மின்னல் மின்னி மறைந்தாற் போல... இதயத்தில் குபீரென இரத்தம் புதுப் புனலாய்ப் பாய்ந்தது.
பெண்கள் சற்று விலகி, தத்தம் கதை பேசி மற்றவர் கதையில் ஆர்வம் காட்ட-
வந்த கூட்டம் சாப்பாட்டிற்கு முந்தி ஓட-
அறையின் மணமகன் சிவசுப்ரமணியன், மைதிலி, சரத்சந்த் மட்டுமே மிஞ்ச-
சிறு அட்டைப் பெட்டியை சிவசுவிடம் நீட்டினான் சரத்.
நமக்குள் பரிசு, வாழ்த்து இதெல்லாம் எதுக்குப்பா சரத்? நீ என் உயிர் நண்பன். நீ வேற, நான் வேறன்னு என்னிக்கும் நான் நினைக்கில்லப்பா.
சிவசு, அட்டைப் பெட்டியைத் திறந்தான். அதற்குள் அழகிய ஊதா நிற பிளாஸ்டிக் பெட்டி.
மைதிலியிடம் ஆர்வம்.
பெட்டி திறந்தபோது, ஊதா வெல்வெட்டில் ஒற்றைக் கல் வைர மூக்குத்தி விழிகளுடன் இரகசியம் பேசிற்று. அதன் வர்ணஜாலங்கள் லேசான வெளிச்சத்தில்கூட மிகைப்பட்டுத் தெரிந்தன.
டேய் பாவி, வைரம் போலிருக்கேப்பா. ஏகமா விலை ஆகியிருக்குமே. எதுக்குப்பா இத்தனை செலவு செய்தே? எத்தனை ஆச்சு?
மைதிலியின் கரங்களில் கொடுத்தபடி பேசினான் சிவசு.
வைரப் பொட்டிற்காக மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள் அழித்தெழுதிக் கொண்டிருந்த மைதிலியின் கண்கள் இரு வைரங்களாயின. மூக்கிலிருந்த சாதாரண, தங்கப் பொட்டைக் கழற்றிவிட்டு சரத் கொடுத்திருந்ததை அங்கேயே அணிந்தாள் மைதிலி. அவள் விழிகள் புன்னகையுடன் பூவாய் சரத்தைத் தொட்டு மீண்டன.
"ப்ச்சு... அதெல்லாம் உனக்கெதுக்கு சிவசு? நமக்குள்ள எப்ப கணக்கு பார்த்திருக்கோம்? எனக்குச் செலவு செய்யறப்ப நீ பார்த்திருக்கியா? உனக்குச் செய்யறப்ப நான் பார்க்க முடியுமா?