Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendralin Suvadu
Thendralin Suvadu
Thendralin Suvadu
Ebook99 pages1 hour

Thendralin Suvadu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202207
Thendralin Suvadu

Read more from Hamsa Dhanagopal

Related to Thendralin Suvadu

Related ebooks

Reviews for Thendralin Suvadu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendralin Suvadu - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    தென்றலின் சுவடு

    Thendralin Suvadu

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    தென்றலின் சுவடு

    1

    பெங்களூர்லேயே காஞ்சனா தண்ணீரில்தான் குளிப்பாள். சென்னையில் தண்ணீரில் குளிக்க இதமாக இருந்தது. அவள் கணவன் பிரசன்னாவிற்கு வெந்நீர் தான் எப்போதும். இப்போது கூட கேஸ் அடுப்பில் வெந்நீர் சூடாகிக் கொண்டிருக்கிறது.

    காஞ்சனா, சீக்கிரமா புறப்படு. இன்னிக்கு நாம பிர்லா பிளானடோரியம் போறோம். வெளியே டிபன் சாப்பிட்டுக்கலாம்.

    அவனுக்கும் அவளுக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. திருமணத்திற்கு அவன் யாரையும் அழைக்கவில்லை. நெருக்கமான சொந்தங்கள் யாரும் கிடையாது. அவனை வளர்த்த மாமா போன வருடமே போய்ச் சேர்ந்துவிட்டார். மாமிக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. இல்லா விட்டால் தங்கள் பெண்ணை அவனுக்குக் கல்யாணம் செய்து மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டிருப்பாளே. பெற்றோர் இல்லாத பிரசன்னாவை மாமா தன் தங்கைப் பையன் என்று கரிசனம் காட்டி வளர்த்தார். அது மாமிக்குச் சுத்தமாய் பிடிக்கவில்லை. எப்பவும் நொடிப்புதான் வீடு பெருக்குவதிலிருந்து தெருக்கூட்டுவது பாத்திரம் கழுவுவது என்று எல்லா வேலைகளையும் அவன் மீது ஏவி விடுவாள் மாமி, அவளின் இரண்டு புத்திரிகளும் அதைவிட மோசம் அவர்கள் சோளிக்கும் சூரிதார் செட்டுக்கும் பொத்தான் தைப்பது, அவர்கள் உடுப்புக்களைத் தையற்காரர்களிடமிருந்து வாங்கி வருவது, பெட்டி போடுவது எல்லாம் அவனேதான். ஒரு அடிமை வாழ்வை சத்தமில்லாமல் தன் விதியில் உழன்றான் அவன்.

    இதைப் பார்த்து மனம் பொருமின அவன் மாமா அவனை விடுதியில் சேர்த்துவிட்டார். வீட்டுப் பக்கமே வராமல் பார்த்துக் கொண்டார். அவர் மட்டுமே வந்து பார்த்துப் போவார். வேண்டிய பணம் கொடுப்பார்.

    மாமா போன பின்பு அவன் அவர் மறைவுக்குப் போனதோடு சரி. அதன்பின் அந்தப் பக்கம் போகவேயில்லை.

    அவனாக காஞ்சனாவை ஒரு புத்தகக் கடையில் பார்த்தான். அவன் வாங்கின அருந்ததி ராய் புத்தகம் அவளும் வாங்க நட்பு மலர்ந்தது. பெங்களூரில் விதான் செளதா, லால் பாக் ஏரி என்று சுற்றினார்கள். திரைப்படங்களில் இருளில் தங்கள் நட்பை வலிமைப்படுத்தினார்கள்.

    காஞ்சனா ஒவ்வொரு முறையும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்ததில்லை. பிரசன், என்னோட பழகறது உங்களுக்குச் சங்கடம் கொடுக்கலையா.

    ‘நோ, பிளசன்டா இருக்கு. உன்னோட இருந்துடமாட்டோமான்னு இருக்கு. உன்னைப் பிரிஞ்சு போனதும் எதையோ இழந்துட்ட துக்கம் என்னைத் துன்புறுத்துது’. அவளுக்கும் அந்த உணர்வு அதிகம் இருந்தது.

    அவளுக்குப் போய் அது போன்ற உணர்வு இருப்பதாய் சொன்னால்… யாரேனும் கேட்டால் எள்ளி நகையாடமாட்டார்களா. தனக்குள் அடக்கிக் கொண்டாள்.

    கனவுகளிலிருந்து விழித்து மீண்டும் குரல் கொடுத்தான் பிரசன்னா.

    காஞ்சனா கருநீல சுரிதாருக்கு மெல்லிய லைட் கலர் ஊதா நிற சல்வார் அணிந்து வெளி வந்தாள்.

    என்ன பார்க்கறீங்க பிரசன். சிரித்தாள். அவள் சிரிப்புக்கு இந்த உலகையே விலை பேசி கொடுத்துவிடலாம் போல இருந்தது அவனுக்கு.

    இல்ல நீ தேவதை போலயிருக்கே உன்னோட எப்படி நான் வரதுன்னு பார்க்கறேன். கூட திருஷ்டிப் பூசனிப் போலயிருப்பேன் நான்.

    ஐயோ, கன்னாபின்னான்னு பேசாதீங்க பிரசன். அழகுல ஒண்ணுமேயில்லை. அழகு இன்னிக்கு இருக்கும் நாளைக்கு அழிஞ்சிரும். வயசானா மாறிப்போகிற அழகைப் பார்த்து நேசிக்கிறதும் பழகறதும் சரியல்ல. போங்க போய் குளிச்சிட்டு வாங்க.

    அவள் வெந்நீர் எடுத்து வர பிளாஸ்டிக் வாளி கொணர்ந்து வைத்தாள்… நானே போய் ஊத்திட்டு வரேன். நீ கால் மேலே ஊத்திப்பே… வேண்டாம் காஞ்சி. அவன் சிரித்தான்.

    அவளோடு அவனையும் நிற்க வைத்தால் ஜோடிப் பொருத்தம் கொஞ்சமும் சரியில்லை. அவள் பொன்னிநிறத்திற்கும் அவன் கரு நிறத்திற்கும் தான் பொருத்தமில்லை என்றால் அவள் அழகிற்கும் அவன் முகப் பொலிவிற்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லை. அழகு என்பதே அவனிடம் கிடையாது.

    இயற்கை அவனைப் பொறுத்தவரை ஓரவஞ்சனை செய்திருந்தது. அதைச் சரிக்கட்டதான் அவள் கைபிடித்ததைப் போலயிருந்தது அவர்கள் பதிவுத் திருமணம். பெங்களூரில் அவர்கள் பதிவுத் திருமணம் நடந்தது. அவனைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். அவள் தோழி என்று ஒரே ஒரு பெண் ஷீலா மட்டுமே மும்பையிலிருந்து வந்திருந்தாள். மாலை மாற்றி மோதிரம் போட்டதோடு திருமணம் முடிந்துவிட்டது.

    அவன் அவளுக்கு வெறும் தங்க மோதிரம் போட, அவளோ அவனுக்கு வைர மோதிரம் போட்டாள். அது நிறங்களை வாரியிறைப்பதைப் பார்த்தால் அவள் நினைவுதான் அவனுக்கு வரும்.

    அவன் குளிப்பதில் கவனம் இல்லாமல் போனான். அவர்கள் திருமணம் ஏதோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது போல நடந்து முடிந்துவிட்டது.

    மாமா உயிருடன் இருந்தால் ஏதேனும் சொல்லியிருப்பார். அவர் வர வேண்டும். வந்து நடத்திக் கொடுக்க வேண்டும் என அவனும் நினைத்திருப்பான். ஆனால்

    Enjoying the preview?
    Page 1 of 1