Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Oru Vidhi Seival
Ini Oru Vidhi Seival
Ini Oru Vidhi Seival
Ebook110 pages42 minutes

Ini Oru Vidhi Seival

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202750
Ini Oru Vidhi Seival

Read more from Hamsa Dhanagopal

Related to Ini Oru Vidhi Seival

Related ebooks

Reviews for Ini Oru Vidhi Seival

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Oru Vidhi Seival - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    இனி ஒரு விதி செய்வாள்

    Ini Oru Vidhi Seival

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அலுவலகம் விட்டு வருகிறாள் மங்கை ஸ்கூட்டியில் புறப்படும்போதே அன்று பேன்ஸி ஸ்டோர் ஒன்றுக்குப் போகத் திட்டமிட்டிருந்தாள். அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டுகள், ஹேர் கிளிப்கள் வாங்க வேண்டியிருந்தது. அவளிடம் எல்லாம் தீர்ந்து விட்டிருந்தது. உடைக்கு ஏற்றவாறு அவள் ஹேர் கிளிப்புகளின் நிறத்தையும் மாற்றிக் கொள்வாள். அது கண்ணுக்கு உறுத்தலாய் இராமல் அழகு சேர்ப்பதாய் இருக்கும்.

    தி.நகர் பாண்டி பஜாரில் ஒரு பேன்ஸி ஸ்டோர் முன்பு தன் ஸ்கூட்டியை நிறுத்துகிறாள். பேன்ஸி ஸ்டோரில் கூட்டம் இல்லை. அங்கே இருந்த இரண்டு சேல்ஸ் கர்ள்ஸ் முதலாளி இவளை வரவேற்று உபசரிக்கின்றனர். கூட்டத்தினர் மொத்தமும் பாதையோர கடைகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். நடக்க, வண்டி நிறுத்த முடியாதபடி நடைபாதை கடைகள் பெருகி விட்டிருந்தன. உயர்நீதிமன்றம் சில இடங்களில் நடைபாதை கடை போடக்கூடாது என உத்தரவு இட்டிருந்தும் அது நடைமுறைக்கு வராதபடி மக்கள் கூட்டம் பெருகி அலை மோதிற்று.

    சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் கூட்டமே இல்லை. ஒரு சில கடைகளைத் தவிர மற்ற கடைகளில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்களா என ஏங்கியபடி வெளியே பார்த்திருக்கின்றனர்.

    அதனால்தான் மங்கைக்கு உபசரிப்பு பலமாய் இருக்கிறது. என்ன மேடம் வேணும். நிதானமாய் கடை முழுதும் ஒருமுறை பார்வை ஓட்டுகிறாள் மங்கை ஸ்டிக்கர் பொட்டுகள் ஒரு பெரிய தோரணமாய் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் முத்துக்கள் பதித்து மேலும் ஜிகினா வேலைப்பாடுகள் செய்து பல வண்ணங்களில் அழகாய் தொங்க. அவள் தங்கை நங்கைக்கு இப்படி அலங்காரப் பொட்டுக்கள் என்றால் உயிர். அவள் தமக்கை கங்கை இதில் எல்லாம் ஈடுபாடு காட்ட மாட்டாள். ஏதோ ஒன்றை நெற்றியில் இட்டுக் கொண்டால் அதோடு சரி.

    தங்கை நங்கைக்காக ஒட்டுப் பொட்டுகளைத் தேர்ந்தெடுக்கும்போதே நெஞ்சுக்குள் கரிப்பு. அவளுக்கு வாங்கித்தான் போக வேண்டுமா. இத்தனை நாட்கள் இவள் எதை வாங்கினாலும் மூன்று பேர்களுக்கும் சேர்த்துத்தான் வாங்கிப் போவாள். அவர்களும் அப்படித்தான் காய்கறியிலிருந்து பழம் வரை வாங்கிக் கொடுப்பார்கள்.

    கங்கைக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். தங்கை நங்கைக்கு ஒரு வயதில் ஒரு பையன் இருக்கிறான். குழந்தையின் சாயல் எப்போதும் இவளை நெருடும் விஷயம். இவளுக்குத்தான் இன்னும் குழந்தைப் பிறக்கவில்லை. திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. இவள் இன்னும் பிரசவ கால விடுப்பு போடும் தகுதியைப் பெறவே இல்லை. அந்த கலக்கம் வேறு இவளுள்.

    தங்கைக்கும் தமக்கைக்கும் ஒட்டுப் பொட்டுக்கள் நிறத்திற்கேற்ற கிளிப்புகள் என எல்லாம் வாங்குகிறாள். தங்கை நங்கை பிசினஸ் பண்ண பிளாஸ்டிக். வயர் வேறு வாங்குகிறாள். எல்லாம் இருநூறு ரூபாய்க்குப் பில் ஆகிறது.

    பணத்தைக் கொடுக்கிறாள். எல்லாப் பொருட்களையும் தன் தோள் பையில் அடக்கிக் கொள்கிறாள். தமக்கைக்கு வாங்கும்போது இருந்த உற்சாகம் தங்கைக்கு வாங்கும்போது இல்லை.

    அது இந்த ஆறுமாதங்களாய்தான் அவளுள் விதையாய் விழுந்து லேசாக வேர் விட்டுக் கொண்டிருக்கிறது.

    மேடம் இன்னும் ஏதாவது வேணுமா கடைக்காரர் இவளது அதிகப்படியான வியாபாரத்தில் மகிழ்ந்து கேட்கிறார்.

    போதும் ஸார்.

    இவள் சல்வாரைச் சரிப்படுத்திக்கொண்டு ஸ்கூட்டியின் பெட்டியில் தன் தோள்ப்பையை வைக்கிறாள். அது மாலையாதலால் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சாலை திணறுகிறது.

    இவள் ஸ்கூட்டியும் அதில் கலக்கிறது.

    அவள் வீடு நுங்கம்பாக்கத்தில் பிரதான சாலையில் இருந்தது. அவள் வீடு என்று மட்டும் அதைச் சொல்லக் கூடாது.

    அவள் தமக்கை கங்கை, தங்கை நங்கை வீடுகள்கூட அங்கேத்தான் இருக்கின்றன.

    அவர்கள் அப்பா தணிகாசலம் தன் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்ததோடு நிற்கவில்லை.

    அவர்கள் வசதியாக வாழ வேண்டும் என்று ஒரு கிரவுண்டுக்கு மேல் வாங்கினார். அதுவே நாற்பது லட்சத்தை முழுங்கிற்று. அதில் ஆயிரத்து ஐநூறு சதுரப் பரப்பளவில் மூன்று மாடிகளாய் கட்டினார். ஒவ்வொரு மாடியிலும் இரண்டு போர்ஷன்கள்.

    ஒன்று மகளுக்கு இன்னொன்று வாடகைக்கு விட்டு அந்த வாடகையை அந்த மகள் எடுத்துக் கொள்ள வேண்டியது. வாடகை மட்டும் இருபத்தி ஐந்தாயிரம் ஒவ்வொரு மகளுக்கும் வருகிறது. இருக்க இடம், மாதா மாதம் வாடகைப் பணம் என பிரித்து விட்டிருந்தார்.

    அவர் உயில் எழுதி வைத்திருந்தால்கூட இந்த செளகரியம் கிடைத்திருக் காது. மூவருக்கும் பொதுவாய் ஒரு டாட்டா சுமோ வாங்கிக் கொடுத்திருந்தார்.

    மூன்று பெண்களில் மங்கை மட்டும்தான் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். மற்ற இருவரும் வீட்டில்தான் இருக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல அவர்களுக்குக் குழந்தைகள் வேறு.

    கங்கையின் கணவன் தினேஷ் என்ஜினியர் தனியார் நிறுவனத்தில் வேலை. தங்கை நங்கையின் கணவன் விஜய் தனியார் தொலைக்காட்சியில் ஒரு இயக்குநராய் பணி செய்கிறான். இவள் கணவன் அருண்தான் வீட்டில் இருக்கிறான்.

    சில பிரபல பத்திரிக்கைக்கு விளம்பர ஏஜன்ஸி வேலைப் பார்க்கிறான். அந்தப் பகுதி விளம்பரங்கள் அவன் மூலமாய் அந்த பத்திரிக்கைக்குக் கிடைக்கும். இன்னும் சில வார இதழ்களுக்கும் விளம்பரங்கள் பிடிக்கிறான்.

    அதனால் அருண் வீட்டில்தான் எப்போதும் இருப்பான். அவர்கள் போர்ஷனில் ஒரு அறை ஒதுக்கி அவன் அலுவலக அறையாய் செய்திருந்தார்கள். அதில் கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக் டைப்ரைட்டர் என இயங்கின. ஒரு கம்ப்யூட்டர் பெண்

    Enjoying the preview?
    Page 1 of 1