Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nijamai oru kanavu
Nijamai oru kanavu
Nijamai oru kanavu
Ebook92 pages46 minutes

Nijamai oru kanavu

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateAug 19, 2020
ISBN6580109203636
Nijamai oru kanavu

Read more from Infaa Alocious

Related authors

Related to Nijamai oru kanavu

Related ebooks

Reviews for Nijamai oru kanavu

Rating: 3.642857142857143 out of 5 stars
3.5/5

14 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nijamai oru kanavu - Infaa Alocious

    http://www.pustaka.co.in

    கடைசியாய் ஒரு முதலிரவு

    Kadaisiyai Oru Muthaliravu

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    தாலி கட்டற வரைக்கும் இந்தக் கல்யாணத்தைக் கொண்டு வந்திருக்கவே கூடாது!

    பர்வதவர்த்தினி, சத்திரத்தின் நடு முற்றத்தில் சற்று முன் மணமகள் மிதிப்பதற்காகப் போட்டிருந்த அம்மிக் கல்லின்மீது உட்கார்ந்து ஆர்ப்பாட்டமாய் கத்துகிறாள்.

    அவளுக்கு விசிறியபடியே அவள் கணவர் ராமையா தழைந்த குரலில் சொல்கிறார்.

    பர்வதம், தாலி கழுத்துல ஏறியாச்சு. இனிமே அவ நம்ம வீட்டுப் பொண்ணு, மேல ஆகவேண்டியதை கவனிப்பியா - அதை விட்டுட்டு...

    நீங்க சும்மாயிருங்க. எங்கே அந்தத் தரகன்? முதல்ல அவனைப் பிடிக்கணும். என்ன சொன்னான் அவன். இருபத்தஞ்சு பவுன் போடுவான்னு சொன்னானில்லே. கூப்பிடுங்க அவனை.

    எங்கே... முகூர்த்தம் ஆனவுடனே, முதல் பந்தியிலே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு கிளம்பிட்டான். இதுமாதிரி எல்லாம் ஆயிரம் பிரச்னை வரும்னு அவனுக்குத் தெரியாதா?

    "அப்ப பொண்ணைப் பெத்தவரைக் கூப்பிடுங்க.'

    பெண்ணைப் பெற்றவரைக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

    அவரே, விறைத்த மூங்கில் மாதிரி வந்து நிற்கிறார்.

    மனிதர், இதற்கெல்லாம் அஞ்சுகிற ரகமில்லை என்பது முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது.

    ஒன்றா இரண்டா - இதுவரையில் ஐந்து பெண்களை ஒப்பேற்றி இருக்கிறார்.

    வேதா - ஆறாவது.

    பெண்களைப் பொறுத்தவரையில் ஒரு குறையில்லை. ஒவ்வொன்றும் வெள்ளிக் குத்துவிளக்குதான்.

    ஆனால் -

    இந்த குத்துவிளக்கை வாங்கவும், விலை கேட்கிறார்களே…

    இது மாதிரியான - விழித்துக்கொண்டிருக்கும்போதே விழியைப் பிடுங்கிக்கொண்டு போகிற ஜனங்கள் இருப்பதினாலேயோ என்னவோ, வேதாவின் அப்பா சுப்புரத்தினம் ஜகஜ்ஜாலப் புரட்டுக்காரராகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.

    மூத்தவள் கல்யாணத்தின்போது, போடுவதாகச் சொன்ன நகைகளே இன்னும் பாக்கியிருக்கி1றது.

    அவள் பெண், வயசுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேலாகிறது.

    மூத்த மாப்பிள்ளை, இதற்காக மாமனாரிடம் பழி சண்டை போட்டான். அப்புறம், 'இனிமேல் உன் வீட்டு வாசற்படி மிதிப்பதில்லை' என்று ஐந்தாறு வருஷம் சங்கல்பம் செய்துகொண்டான். இரண்டாவது பெண் கல்யாணத்தின்போது பெண்டாட்டியை மட்டும் அனுப்பி வைத்தான். மூன்றாவது, நாலாவது பெண்களின் கல்யாணத்தின்போது, மனைவியுடன் குழந்தைகளையும் அனுப்பி வைத்தான். ஐந்தாவதின்போது தானும் வந்ததாகப் பேர்பண்ணி, இரண்டு அட்சதையைத் தூவிவிட்டுப் போனான்.

    ஆறாவதான வேதாவின் கல்யாணம் நிச்சயிக்கப் படுவதற்கு முன்பே, மூத்த மாப்பிள்ளையின் சீமந்த புத்திரி கல்யாணத்துக்குத் தயாராக நிற்பதால் ஒரு நப்பாசை நெஞ்சு ஓரத்தில்.

    'வேதாவுக்கு இருபத்தஞ்சு பவுன் போடப் போறாராமே, இன்னும் ரெண்டு வருஷத்தில், என் பொண்ணு கல்யாண சமயத்துலயாவது இவர் தர வேண்டிய மீதி நகைகளைத் தரமாட்டாரா...'

    இந்த சபலத்தில் ஜானவாஸத்தின்போதும், முகூர்த்தம் முடிந்து இலை போட்டபோதும் ஓடி ஓடி பரிமாறினான்.

    போகிற போக்கில் இரண்டாவது, மூன்றாவது மாப்பிள்ளைகளிடமும் விஷயத்தைக் காதில் போட்டு வைத்தான்.

    மாமா, வேதாவுக்கு இருபத்தைஞ்சு பவுன் போடறாராமே.

    உங்க பெண்டாட்டிக்கும், எங்க பெண்டாட்டிகளுக்கும் போடலையா, அது மாதிரிதான் இருக்கும். எனக்கு இன்னும் ஆறு பவுனும், ஸ்கூட்டரும் வரலை சார்.

    நான் கேக்கறதையே விட்டுட்டேன். சனியன், கேட்கக் கேட்க நாமதான் மட்டமான ஸ்திதிக்குப் போறோம்.

    நம்பர் ஃபோர் அண்ட் ஃபைவ் என்ன சொல்றாங்க?

    நம்பர் ஃபோருக்கு நாலு தங்கை. அதுலே ரெண்டு தங்கைகளை கன்னிகா தானம் செஞ்சுக் கொடுக்க, நம்ப மாமனாரோட அகடவிகட சாமர்த்தியம்தான் ஹெல்ப் பண்ணினது. அதாவது, வாய்ப் பந்தலாலேயே கல்யாணப் பந்தலை எப்படி சமாளிக்கிறதுங்கற வித்தைய இவர் தான் சொல்லிக் கொடுத்தார். ஃபோருக்கு சந்தோஷம் தாளலை. குருதட்சணையா ஏதாவது தரணும் இல்லையா. ஒரு வாக்கு தந்துட்டாரு.

    என்ன...

    நீங்க தரவேண்டிய பாக்கி சீர் செனத்திய நான் ஆயுசுக்குக் கேட்கமாட்டேன் மாமான்னுதான்.

    அஞ்சாவது?

    "அது ரொம்பப் பாவப்பட்ட கேஸ். மாமா பாட்டுக்கு புளுகுகிட்டே போவாரில்லே. அதுலே ஒண்ணு தன்னோட தான் வீட்டு வசதி வாரியத் தலைவர் படிச்சார்னு சொன்ன புளுகும்! போறாக்குறைக்கு சமீபத்துல வாரியத் தலைவர் நம்ம ஊருக்கு வந்தப்ப, 'தந்தி' பத்திரிகைக் காரங்க ஒரு போட்டோ எடுத்தாங்க இல்லே - அதுலே தலைவர் பக்கத்துல முண்டியடிச்சிட்டு முகத்தை வேற காமிச்சிட்டாரு. அதை வச்சுட்டு வேற உடான்ஸ்... அஞ்சாவதுக்கு கிரமப்படி பார்க்கப்போனா இன்னும் பத்து வருஷத்துல வீடு கிடைக்கணுமாம். ஏதோ கொஞ்சம் பார்த்து,

    Enjoying the preview?
    Page 1 of 1