Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalai Oru Poo Malarum
Naalai Oru Poo Malarum
Naalai Oru Poo Malarum
Ebook99 pages22 minutes

Naalai Oru Poo Malarum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயந்தி பட்டதாரி பெண். அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்ந்து வந்தாள். மாமன் மகளே தனக்கு அண்ணியாய் வந்ததை எண்ணி மகிழ்கிறாள். அவள் மகிழ்ச்சி நீடித்ததா? பணத்தாசை மனிதரை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கும்? ஜெயந்தியின் அலுவலகத்திற்கு வரும் புதுநபரால் ஜெயந்தியின் வாழ்வில் பூ மலருமா...

Languageதமிழ்
Release dateMar 5, 2022
ISBN6580105707319
Naalai Oru Poo Malarum

Read more from Vidya Subramaniam

Related to Naalai Oru Poo Malarum

Related ebooks

Reviews for Naalai Oru Poo Malarum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalai Oru Poo Malarum - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    நாளை ஒரு பூ மலரும்

    Naalai Oru Poo Malarum

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    வியர்க்க விறுவிறுக்க ஜெயந்தி அலுவலகத்தில் நுழைந்தபோது வருகைப் பதிவேடு மானேஜரின் அறைக்குள் போயிருந்தது. இந்த மாதம் இது நான்காவது லேட், நிச்சயம் ஒரு நாள் சி.எல். கட்தான். தண்டனை அதோடு போய்விட்டால் பரவாயில்லை. நிற்க வைத்து அந்த மானேஜர் திட்டுவதை சகித்துக்கொள்ள மிகுந்த மனோதிடம் வேண்டும்.

    அனேகமாய் கண்ணீரும் கம்பலையுமாகத்தான் லேட்டாய் வருகிறவர்கள் அவர் அறையிலிருந்து வெளிவருவார்கள். ஏற்கனவே மூன்று லேட். மூன்று லேட்டிலும் மானேஜர் அவளையும் வாய்க்கு வந்தபடி திட்டினார். ஜெயந்தி மரக்கட்டையாய் மனசை மாற்றிக்கொண்டதால் கண்கள் பனிக்கவில்லை. அதேநேரம் வீடு திரும்பியதும் பாத்ரூமில் பிழியப் பிழிய அழுதிருக்கிறாள் காலையில் வாங்கிய போனஸை நினைத்து.

    எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். ஒன்று ஆபீஸில் அல்லது வீட்டில். ஜெயந்திக்கு இரண்டு இடமுமே நரகமாய்த் தெரிந்தது. அப்பா செத்துப்போன பிறகு அவளும் அம்மாவும் அடிமைகளாகி விட்டார்கள்.

    அம்மா பிள்ளைக்கும் மருமகளுக்கும் அடிமையாய் திருச்சியிலும், ஜெயந்தி மாமா மாமியின் அடிமையாய் சென்னையிலும் இருக்கிறார்கள். மாமாவின் பெண்ணைத்தான் அண்ணா மோகனுக்கு கட்டி வைத்திருக்கிறது. மாமா பெண்ணாயிருந்த வரையில் பிரேமா நன்றாகத்தான் பழகினாள். மோகனுக்கும் அவளுக்கும் காதல் கல்யாணம்தான் நடந்தது. மாமிக்கு இந்தக் கல்யாணத்தில் அரை சம்மதம்தான். பெண்ணின் பிடிவாதத்திற்கு கட்டுப்பட்டுத்தான் சம்மதித்தாள். அண்ணாவுக்கு பெல்லில் நல்ல வேலை. கை நிறைய சம்பளம். சொந்த வீடு. ஸ்கூட்டர் எல்லாம் உண்டு.

    பிரேமாவுக்கும் திருச்சிக்கு வந்த சிறிது நாளில் அரசாங்க வேலை கிடைத்தது. கணவனும் மனைவியும் வெளியில் வேலைக்குபோக அம்மாவுக்கு வீட்டில் சம்பளமில்லாத முழு நேர வேலை. புருஷனின் சப்போர்ட் மற்றும் உத்யோகத் திமிரில் பிரேமாவின் சுபாவம் விரைவிலேயே மாறியது. வீட்டு வேலை எதற்குச் செய்யவேண்டும் என்று நினைத்தாள் போலும்.

    காலைக் காப்பியிலிருந்து இரவு பால் வரை அம்மா அவள் கையில் கொண்டு கொடுக்க வேண்டியதாயிற்று. அப்படி கொடுப்பதற்கு அம்மா தயாராய்த் தான் இருந்தாள். ஆனால் அதிலும் பிரேமா குற்றம் குறை கண்டுபிடித்து முணுமுணுத்தபோது ஜெயந்தியால் பொறுக்க முடியவில்லை. ஒருநாள் காலையில் நுரை பொங்கும் காப்பியை சுடச்சுட அம்மா அவள் அறைக்கு எடுத்துச் சென்றபோது பிரேமா பாத்ரூமில் இருந்தாள். ‘காப்பி வெக்கவா!’ என்று அம்மா கேட்க ‘ம்ம்’ என்ற ஒலி மட்டும் பாத்ரூம்லிருந்து வெளிவர சரி உடனே வந்து குடித்துவிடுவாள் என்ற எண்ணத்தோடு அம்மா டபராவுக்குள் டம்ளரை வைத்து டீபாயின் மீது வைத்துவிட்டு வந்துவிட்டாள். பிரேமா நிதானமாய் நீராடிவிட்டு வருவதற்குள் காப்பி ஆறிப்போய் அதில் ஒரு ஈயும் விழுந்திருந்தது.

    அறிவிருக்கா உங்களுக்கு? பிரேமா மாமியாரைப் பார்த்து கத்தியபடி ஈ விழுந்த காப்பியைக் காட்டினாள்.

    நீ பல் தேய்க்கறன்னு நினைச்சேன் பிரேமா. குளிக்கறேன்னு சொல்லியிருந்தா நா அங்க வெச்சுட்டு வந்திருக்க மாட்டேனே. உள்ள வந்து பிளாஸ்க்குலவிட்டு வெச்சிருப்பேனே. அம்மா சொல்ல,

    ஏன் நா சொல்லித்தான் குளிக்கறேன்னு தெரிஞ்சுக்கணுமோ தானா புரியாதாக்கும்.

    அப்போதான் ஜெயந்தி குறுக்கிட்டாள்.

    ஏம்மா நானும் எவ்ளோ நாளா சொல்லிட்ருக்கேன். நம்ம தெருக்கோடியில் மை போட்டுப் பார்க்கற ஜோசியன்கிட்ட அந்த மை போடற வித்தையக் கத்துக்கிட்டு வா உபபோகப்படும்னு... கேக்கறயா நீ?

    பிரேமா புருவம் நெறித்து ஜெயந்தியைப் பார்த்தாள்.

    அது ஒண்ணுல்ல பிரேமா. நீ எப்போ எப்போ என்ன செய்யறன்னு மை போட்டு தெரிஞ்சுக்கிட்டோம்னா அது பிரகாரம் அம்மா உனக்கு உபசாரம் செய்யலாம் பார் அதான்.

    பிரேமாவின் முகம் சிவந்தது. காப்பி டம்ளரை காப்பியோடு சிங்க்கில் விட்டெறிந்தாள். தானே வேறு காப்பி தயாரித்துக்கொண்டாள். அன்று இரவு அண்ணனிடம் என்ன சொன்னாளோ அண்ணன் அம்மாவிடமும் ஜெயந்தியிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை.

    என்னடா ஆச்சு உனக்கு? அம்மா தவிப்போடு விசாரித்தாள் மூன்றாவது நாள்.

    எனக்கொண்ணும் ஆகல. உன் பொண்ணுக்குதான் வாய் அதிகமாய்டுச்சு.

    சின்னப் பொண்ணுடா; அவ பேசினதை எதுக்கு பெரிசு பண்றீங்க? மாமா பொண்ணாச்சேன்ற உரிமைலதானே கிண்டல் பண்றா.

    அது அப்போ. இப்பொ அவ இவளுக்கு அண்ணி ஸ்தானம் என்னோட மனைவி. என் மனைவியை மதிக்கத் தெரியலன்னா இங்க யாரும் இருக்கத் தேவையில்லை.

    "ஓ ஹோ... அப்டின்னா என்னை

    Enjoying the preview?
    Page 1 of 1