Nee Enathu Innuyir
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Iraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Nila Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsKiliye Un Peyar Kolaiya? Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Ennuyir Archana Rating: 0 out of 5 stars0 ratingsJathigal Illaiyadi Papa Rating: 0 out of 5 stars0 ratingsPali Malar Rating: 0 out of 5 stars0 ratingsKolai, Kolai Endru Sonnale! Rating: 0 out of 5 stars0 ratingsSonnathu Neethaney? Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Nee... Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nee Enathu Innuyir
Related ebooks
Thunai Thedum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Anusha Appadithan! Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Thisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Vidhi Seival Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Manam Rating: 0 out of 5 stars0 ratingsBadrinath Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kiliyai Maarava? Rating: 0 out of 5 stars0 ratingsKaarkala Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsVettai Rating: 5 out of 5 stars5/5Saranagadhi Rating: 5 out of 5 stars5/5Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsIravugal Kanavukkaga... Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsகோடையில் பனி மழை! Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsNagaraa Nodigal Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த கண்களே... Rating: 0 out of 5 stars0 ratingsVetrik Kudhirai Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsDevathaiyai Thedathey Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nee Enathu Innuyir
0 ratings0 reviews
Book preview
Nee Enathu Innuyir - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
நீ எனது இன்னுயிர்
Nee Enathu Innuyir
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
கணவன் ஆபீஸ் புறப்படும்வரை வேலை சரியாய் இருக்கும் வாணிக்கு அன்றும் அவன் ஸ்கூட்டர் தெருமுனை திரும்பும்வரை நின்று டாட்டா சொல்லிவிட்டு உள்ளே வந்தாள் எல்லாம் தாறுமாறாய் கலைத்து போட்டிருந்தான். ஒரு பேண்ட், ஷர்ட் எடுத்து அணிந்து கொள்வதற்கு நாலைந்து உடைகளைக் கலைத்திருந்தான்.
ராஜேந்திரனுக்கு எதிலும் அவசரம் அதிகம். இவள் எடுத்து வைத்த உடை பிடிக்காது. ஷர்ட்டுக்கும் பேண்ட்டுக்கும் மேட்ச் சரியில்லை என்பான். டை சரியில்லை, நிறம் ஆளை அடிக்கிறது என்பான்.
இவள் கூட விளையாட்டாய், என்னையும் மேட்கப் சரியில்லையின்னு எங்கே துரத்திருவீங்களோ
என்பாள்.
சீ கழுதை, உன்னைத் துரத்தினா நீ போயிருவியா? என்னைவிட்டு எங்கே போறே, உன் தங்கச்சி வந்து சமைத்து போடட்டும், ! நீ ஹாய்யின்னு அம்மா வீடு போன்னா எங்கே கேட்கிறே.
என்பான் குறும்பு மிளிரும் கண்களுடன்.
நீங்க நினைக்கிறாப்பல என்னோட தங்கை காதம்பரியோட பழக முடியாதுங்க. அவ நெருப்பு தெரியுமா? மச்சினின்னு ஜொள்ளு விட்டு திரியாதீங்க.
வேடிக்கைக்குச் சொன்னேன். என் கண்ணம்மாவைவிட்டு நான் எங்கேடா போயிருவேன். நெருப்பு கிருப்புன்னு பேசிட்டு
சரி... ஆபீஸ் இல்லையா இன்னிக்கு ஐயாக்கு. பேசிட்டு நிக்கிறாப்பல.
ஐயோ நேரமாச்சு வாணி. இன்னிக்கு ஆடிட் வேற நடக்கப்போகுது. நான் அவசரமா போகணும்.
ஒரு நிமிஷம். சாப்பாடு கட்டிடறேன் இருங்க
அதுக்கெல்லாம் நேரமில்லை கேன்டின்ல சாப்பிட்டுக்கறேன்
சமைச்சது எல்லாம் வீணாப் போயிடுங்க. கட்டிடறேனே.
நேரமாச்சுமா.
அவன் புறப்படுகையில் அவள் கேட்டாள். ஏங்க நாம சினிமாக்குப் போய் ரொம்ப நாளாகுது.
ரெடியாயிரு. ஈவினிங் போலாம் ஏதாவது ஒரு பிக்சருக்கு. பொங்கலுக்குத்தான் நிறைய படம் வந்திருக்கே.
குயிக்கா வந்திருங்க மறந்திராதீங்க.
அவன் டாட்டா சொல்லிப் போய் விட்டான். அவனுடன் பேசினது திரும்ப அவள் நினைவிற்கு வந்து வேலையில் வேகம் கொடுக்கிறது.
அன்று ஏதாவது சினிமாவிற்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான். சொன்னதைச் செய்வான்.
கோவை மாநகரில் பொழுதுபோக்கு என்றால் அது சினிமாதான். அதுவும் திருமணமாகி இன்னமும் தனி மரங்களாய் இருக்கும் அவர்களுக்குச் சினிமா ஒன்றுதான் ஆறுதல். வாணிக்கும் ராஜேந்திரனுக்கும் திருமணமாகி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இன்னும் அவர்கள் கையில் எடுத்துக் கொஞ்ச ஒரு மழலை உருவாகவில்லை.
மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவர்கள் அம்மா கூட டாக்டரைப் பாரேன் என திருச்சியிலிருந்து எழுதுகிறாள்.
டெல்லியில் பெரிய மகனிடம் இருக்கும் மாமியார் கூட தன் மகனுக்கு முதலில் டாக்டரிடம் போய் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என எழுதுகிறாள்.
வாணிக்குக்கூட தங்களுக்குக் குழந்தையில்லையே என்கிற ஏக்கம் உள்ளுக்குள் நிறைய உண்டு. திருமணமாகி எண்ணி பத்தாவது மாதமே குழந்தையுடன் தோன்றும் கணவன், மனைவியைப் பார்த்தால் அவளுக்குப் பொறாமை உண்டு.
டாக்டரைப் பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் அவள் பலநேரம் அவனைக் கேட்டதுண்டு.
‘'எதுக்கு டாக்டர். அக்கடான்னு கொஞ்ச காலம் இருப்போமே. உனக்கு நான் குழந்தை. எனக்கு நீ குழந்தை. நமக்குக் குழந்தையில்லையின்னு யார் சொன்னது. எல்லாம் பிறக்கும்."
அதுதான் எப்போன்னு கேட்கிறேன்.
எங்கம்மாக்கு எங்கண்ணாவே பத்து வருஷம் கழிச்சுதான் பிறந்தானாம்.
பின்னே உங்கம்மா ஒவ்வொரு கடிதத்திலும் டாக்டரைக் கன்சல்ட் செய்யச் சொல்லி எழுதறாங்களே.
எழுதிட்டுப் போறாங்க. அதுக்கு நீ ஏன் மூடு அவுட் ஆகிறே.
இவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள அவன் சமாதானம் படுத்துவான்.
அதில்லைங்க ராஜேந்திரன், உங்களுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய பொண் பார்த்தா உங்கம்மா.
ப்ச்… அம்மாக்கு எங்கண்ணா வீட்ல குழந்தைகளைப் பார்த்துக்கவும் வீட்டைப் பார்த்துக்கவும் சரியாய் இருக்கும். எங்கே பெண் பார்க்க? அப்படி பார்த்தால் நான் புது மாப்பிள்ளை இல்லையா.
கண்ணடித்து சிரிப்பான். இவள், அவன் தலையில் செல்லமாய் குட்டுவாள்.
நான் இருக்கிறவரைக்கும் உங்களை ஒருத்தி நெருங்க விட மாட்டேன். அப்படி நெருங்கினா...
நெருங்கினா கொலையே செய்திருவேன்.
கண்கள் மின்ன இவள் பதில் சொல்வாள்."
அம்மா தாயே உணர்ச்சிவசப்படாதே. நீ செய்யக் கூடிய ஆள்தான் ஊம்... எனக்கு எவன் பெண் கொடுக்கிறேன்னு முன்வரான்.
வேண்டும் என்றே அவளைச் சீண்டுவான் ராஜேந்திரன்.
அவையெல்லாம் நினைவில் தோன்ற… எல்லா துணிகளையும் மடித்து அதனதன் இடத்தில் வைக்கிறாள்.
அவனுக்குக் கட்டியிருக்க வேண்டிய சாப்பாட்டை எடுத்து வேலைக்காரிக்கு வைக்கிறாள். மாலையில் சினிமாக்குப் போனால் அவர்கள் வெளியே சாப்பிட்டுக் கொள்வார்கள். அது அவர்கள் வழக்கம்.
அன்று வேலைக்காரி வரவில்லை. இவளே வீட்டைச் சுத்தப் படுத்த வேண்டியிருந்தது. ஆர்.எஸ்.புரத்தின் ஒரு வீட்டின் அவுட் ஹவுஸில் குடியிருந்தார்கள். மாதம் இரண்டாயிரம் வாடகை.
வாடகை கொடுத்துவிட்டு குடும்பம் நடத்துவதே கடினமாக இருப்பதில் இதில் வேறு குழந்தை பிறந்தால் கூடுதல் செலவுகள் ஆகும் என இரு வருக்குமே தெரிந்தது. ஆனால் அதற்காக குழந்தையின் வரவை யாரேனும் வேண்டாம் என்பார்களோ.
துணிகள் துவைத்து பிழிந்து உலர்த்தும்போது போஸ்ட்
என்கிற குரலும். அதைத் தொடர்ந்து ஒரு கவர் உள்ளே வருவதும் தெரிந்தது.
அவள் பிழிந்த துணிகளை உலர்த்தாமல் கைகளைத் துடைத்துக்கொண்டு போய் அந்த தபாலைக் கையில் எடுத்தாள்.
அம்மாவின் கையெழுத்து, அம்மா தான் எழுதியிருந்தாள். அம்மாவையே நேரில் பார்ப்பது போன்று அவள் உடல் சிலிர்த்தது.
அம்மா கடிதம் எழுதி கூட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஏதேனும் விசேஷமாக இருந்தால்தான் அம்மா எழுதுவாள். அது அவள் வழக்கம் வெறும் நலத்திற்காக கடிதம் எழுத மாட்டாள்.
கடிதத்தைப் பிரித்தாள். கிறுக்கலான எழுத்தில் அம்மா தெரிந்தாள்.
அன்புள்ள மகள் வாணிக்கும் மாப்பிள்ளைக்கும்,
இங்கே நானும் காதம்பரியும் நலம். நீயும் மாப்பிள்ளையும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கறேன்.
காதம்பரி பி.ஏ. பாஸ்