Ennuyir Archana
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Iraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsNisakanthi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Anumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsAvar Enakku Mattumalla Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Solli Kutramilai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsVaasalil Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Nee... Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathiloru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNaga Keeralgal Rating: 0 out of 5 stars0 ratingsYaarai Kolai Seyyanum? Rating: 0 out of 5 stars0 ratingsNee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsAabathe, Arugil Vaa Rating: 4 out of 5 stars4/5
Related to Ennuyir Archana
Related ebooks
Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Piragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaniley Ore Vennila Rating: 0 out of 5 stars0 ratingsYandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Naan Enbathey Neeyallavo Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Iyandhira Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsGomathiyin Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Paravaigal Rating: 5 out of 5 stars5/5Maalai Nera Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAthu Vanthu Nirkirathu..! Rating: 0 out of 5 stars0 ratingsAnna Rating: 5 out of 5 stars5/5Dhanam Rating: 0 out of 5 stars0 ratingsBharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5தென்றலாக நீ வருவாயா Rating: 0 out of 5 stars0 ratingsThenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Palaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Punnagaikkiral Rating: 5 out of 5 stars5/5Kanmani Un Arugil Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Malarnthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsMalara Marantha Pookkal… Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Oru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsTyagathin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ennuyir Archana
0 ratings0 reviews
Book preview
Ennuyir Archana - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
என்னுயிர் அர்ச்சனா
Ennuyir Archana
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
என்னுயிர் அர்ச்சனா
1
அடையாறு சாலையில் அந்த வெள்ளை மாருதி அர்ச்சனாவின் கரங்களில் ஒய்யாரமாய் ஓடுகிறது.
மாருதியின் பின் சீட்டில் இது நேரம் வரை உட்கார்ந்திருந்த பிரபாகர், தூரத்திலிருந்து நெருங்கி நெருங்கி வரும் மோட்டார் பைக்கின் ஒலியில், அர்ச்சனா, அவன் வரான். நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கா, பயப்படாதே, ஸ்லோவா காரை ஒட்டு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்,
எனச் சொல்லியவன், குறுகிய கார் சீட்டுக்கடியில் குனிந்து மறைந்தபடி உட்கார்ந்தான்.
எனக்குப் பயமா இருக்கு பிரபா. வேண்டாம் போகட்டும். விட்டுருவோம்.
அழகிய அர்ச்சனாவின் நிலவு முகத்தில் மழைத்துளிகளாய், வியர்வை. அவள் மாநிறம். நிலா முகம். நடுத்தர உயரம். வெளிறிய விழிகள். ஆளை அப்படியே எடுத்து விழுங்கத்துடிப்பவை போன்று ஒர் ஆழம். கவர்ச்சி கொஞ்சம் தூக்கல். இதுதான் அர்ச்சனா.
இதற்குள் மோட்டார் பைக் பெரும் ஒளியில் காரை நெருங்கி விட்டது:
மண்டு நான் இருக்கேனில்லே. பயம் எதுக்காம். சொன்னபடி செய.
ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த கரங்கள் நடுங்குகின்றன. அர்ச்சனாவிற்குக் குபீரென வியர்க்கிறது. ‘எதற்காக இந்த பிரபாகரிடம் சொல்லித் தொலைத்தோம்.’
காலை ஏழுமணிக்குச் சாலை முழுதுமாய் இன்னும் விழித்தெழவில்லை. சோம்பல் முறித்துக் கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சைக்கிள்கள். பாதசாரிகள். விரையும் ஓர் ஜீப். கடற்காற்று மழைக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது.
மோட்டார் பைக் வாலிபன் மாருதியின் உள் கூர்ந்து கவனித்திருந்தால் அதனுள் மறைந்திருக்கும் பிரபாகரை எளிதாய்க் கண்டிருக்கலாம்.
அந்தப் பழைய டப்பா புல்லட் பெரும் புகையைக் கக்கியபடி மாருதியை நெருங்கி அதனுடன் பயணிக்கிறது. அதில் ஒற்றைக் கையால் அனாவசியமாய் புல்லட்டைப் பிடித்திருந்த இளைஞன், என்னம்மா கண்ணு, இன்னிக்குக் காரா. என் புல்லட்டில் வாயேன். இதுல வர சுகம் எதுலேயும் வராது. தெரியுமா?
என சிரிப்புடன் அவள் காதுகளில் விழ உரக்கப் பேசுகிறான்.
இந்தச் சொற்களால் தாக்கப்பட்ட அர்ச்சனா, மேலும் வியர்த்தவளாய், ஸ்டியரிங்கை இறுகப் பிடித்துக் கொள்கிறாள்.
அதே நேரம் காரின் பின்புறக் கதவு திறந்து கொள்ள, அதிலிருந்து வெளிப்பட்ட காலின் உதையில் மோட்டார் பைக் வாலிபனும் அவன் வண்டியும் சாலையில் மறுபுறம் போய் விழுகிறார்கள்.
காரை நிறுத்தினாள் அர்ச்சனா.
நைனா, இந்த சுகம் எதுலையும் கிடைக்காது உனக்கு. தெரியுமா?
நையாண்டியுடன் பேசியபடி பிரபாகர் காரிலிருந்து இறங்கி அந்த வாலிபனை நோக்கித் தன் நீண்ட கால்களைப் பதித்து நடக்கிறான்.
இதற்குள் அந்த இளைஞன், தன்னைச் சமாளித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்து நிறுத்திவிட்டு எதிர் வருகிறான். அவன் முகத்தில் ஆக்ரோஷம் ஆதிக்கம் செலுத்துகிறது.
செல்லச் சோம்பலில் துயின்ற சாலை இப்போது நன்றாக விழித்துக் கொள்கிறது. எங்கிருந்துதான் அத்தனை பேர்கள் வந்தார்களோ சரியான கூட்டம் வட்டமாய் நிற்க நடுவில் அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாய் தாக்கிக் கொள்கிறார்கள்.
கீழே விழுந்ததில் அந்த இளைஞனுக்குக் கைகளில் சிராய்ப்பு. இரத்தம் செம்புள்ளிகளை அவன் ரோமக் கரங்களில் குத்தியிருக்கிறது.
அர்ச்சனா, பதறிப்போய்க் கைகளைப் பிசைந்தபடி நிற்கிறாள். கூட்டம் வேடிக்கை பார்ப்பது ஒருபுறம் அவமானமாய் இருக்க, ‘எதற்காக பிரபாவிடம் சொல்லித் தொலைத்தோம்' என தடுமாறுகிறாள்.
விலக்கவேண்டும் என்கிற மனிதாபிமானம் மறந்து கூட்டம் சண்டையை ரசித்துக்கொண்டு நிற்கிறது.
டேய், சும்மா போறவனைக் கை நீட்டி அடிச்சுட்ட இல்ல, அந்தப் பலனை அனுபவிக்கப் போற பார்றா.
அந்த புல்லட் இளைஞன் கோப வெறியில் உரக்கக் கத்தியபடி பிரபாகரை நோக்கி உதைக்கிறான்.
சுமமா போனா, யார்டா கேக்கப் போறா போற பொண்ணுகிட்ட டெய்லி வாலாட்டினா இப்படித்தான் வாங்கி வசமா கட்டணும்.
அதக் கேக்க நீ யார்டா?
இருவரும் கராத்தே பாணியில் பாய்ந்ததும் வளைந்தும் தாக்கிக் கொள்ள, அவர்கள் வாய்களும் வார்த்தைகளை வீச, அர்ச்சனாதான் ஆடிப் போய் நிற்கிறாள்.
அந்தப் புதிய இளைஞன் நிறையவே அடி வாங்கி மூச்சிரைக்கிறான். பிரபாகரின் கரங்களில் மாட்டிக்கொண்டு விழிக்கிறான்.
அந்த இளைஞன் மார்பில் ஏறி உட்கார்ந்து, அவன் கை கால்களை அசைக்க முடியாமல் இடுக்கிப் பிடியாய் அமுக்கிய பிரபாகரைப் பார்த்து அனலாயக் கொட்டுகிறான் அந்த வாலிபன்.
அதைக் கேக்க நீ யார்டா...
நானா… நானா யாருன்னு கேக்கறே...?
அந்த இளைஞனின் கன்னங்களில் மாறி மாறி அறைகிறான் பிரபாகர்.
பிரபா, போறும் பிரபா நிறுத்து விடு, விட்டுரு...
அர்ச்சனா பதறுகிறாள்.
‘'நீ சும்மா இரு அர்ச்சனா. இப்படி பாடம் கத்துக் குடுத்தாத்தான் தனியா போற பொண்ணுங்க கிட்ட வாலாட்டமாட்டாங்க."
அண்ணா, பிரபாண்ணா. இப்படி அடிக்கறதை . நிறுத்தப் போறியா இல்லையா?
"நான் யாருன்னு கேட்டியேடா பன்னிப் பயலே. இப்பக் கேட்டியா நான் யாருன்னு.
அண்ணா என்னது இது. மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறே. நிறுத்து,
பிரபாகரை இழுத்துப் போகிறாள் அர்ச்சனா.
இதற்குள் கூட்டத்தில் யாரோ மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து கொடுக்க, அந்த இளைஞன் தன்னைச் சமாளித்து அதில் அமர்கிறான். நெற்றியிலும் உதட்டிலும் ரத்தம் பிரவகிக்க, பேசற விதத்தில பேசிக்கறண்டா,
எனக் கறுவிக்கொண்டு புயலாய் மறைகிறான்.
ஓசியில் பார்த்த காட்சிகள் இவ்வளவுதான் என்று கூட்டம் கலைய, காரை வேகமாய் ஒட்டும் பிரபாகரின் தோளில் அர்ச்சனாவின் கரங்கள் நடுங்குகின்றன.
பிரபா, எனக்குப் பயமா இருக்கு.
கோழை தினம் தினம் செத்துப் பிழைக்கிறான். வீரன் வாழ்க்கையிலும் ஒரு முறைதான் சாகிறான்.
உன்கிட்ட சொன்னதே தப்பாப் போச்சு
நீ காரை ஒட்டிட்டுப் போ. நான் இப்படியே ஆட்டோ பிடிச்சு பங்களாக்கு போயிடறேன். உங்க காலேஜுக்கு வந்தார் அந்தக் கிறுக்கு என்னைப் பார்த்தா சும்மா விடாது.
எனக்குப் பயமா இருக்கு. நீயே டிரைவ் செய்துட்டு.
நகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அதிகாலை செயல்படும் அந்த மகளிர் கல்லூரி வாசலில் வெள்ளை மாருதி அன்னமாய் போய் நிற்கிறது.
ஹாய் பிரபா, ஹலோ அர்ச்சனா,
பறந்தோடி வருகிறது. அந்தப் பச்சைக் கிளி கிளிப்பச்சை சூரிதாரில். அதன் தந்த நிறம் காலை வெய்யிலில் பளபளக்கிறது.
வந்தாச்சு கிறுக்கு,
பிரபாகர் மெல்ல முணு முணுக்கிறான்.
2
நடந்ததெல்லாம் இதுதான். கடந்த மூன்று நான்கு மாதங்களாக இது நடந்து வந்தது.
பிரபாகர் சொன்னபடிதான் காலைக் காட்சிகள் நடந்து முடிந்தன.
இது தங்கள் வாழ்க்கையைத் திசைகளைத் திருப்பி அமைக்கப் போகிறது என்பதை அர்ச்சனாவோ பிரபாவோ அப்போது நினைத்தும் பார்க்கவில்லை.
வருங்காலத்தை உணரும் சக்தி மட்டும் இருந்திருந்தால் பிரபாகர் இதற்கு வேறு விதத்தில் பரிகாரம் தேடி