Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Vaniley Ore Vennila
En Vaniley Ore Vennila
En Vaniley Ore Vennila
Ebook50 pages19 minutes

En Vaniley Ore Vennila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதிகாலம் தொட்டு உலகத்தில் காதலுக்கும், பணத்துக்குமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஈமகேஷ் நல்லவனா கெட்டவனா? எதற்காக அவன் நண்பர்களான சரண்யாவும், தீபக்கும் அவனைக் கைவிட்டார்கள்? சவீதா என்ன முடிவு எடுத்தாள்? இப்படி கதை தன் போக்கில் செல்கிறது. நாமும் அப்படி போகலாம்.

Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580115207897
En Vaniley Ore Vennila

Read more from Ananthasairam Rangarajan

Related to En Vaniley Ore Vennila

Related ebooks

Reviews for En Vaniley Ore Vennila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Vaniley Ore Vennila - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    என் வானிலே ஒரே வெண்ணிலா

    En Vaniley Ore Vennila

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 1

    இரவில் மின்னலும் இடியுமாக மழை பெய்ததில் சரண்யா பால்கனி கதவைத் திறந்ததும் விஸ்ஸென்று சில்லிட்ட காற்று வீசியது. தன் கட்டிலில் உட்கார்ந்து அந்தக் குளிரை அனுபவித்துக்கொண்டே அந்தக் காலை எட்டு மணியில் கையை சூடாகத் தேய்த்துக்கொண்டாள். பணி விடுமுறை எடுத்துக்கொண்டு அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

    டிவில சொல்றான் இந்த மழை பலமா இருக்கும்னு. காய்கறி லாரி வந்திருக்குனு கம்யூனிட்டி வாட்ஸப்ல தீபக் போட்டிருக்கான். நீ போய் வாங்கினு வா என்றாள் அறைக்குள் எட்டிப் பார்த்த பர்வதம்.

    சரி அத்தை என்று நைட்டியிலிருந்து சுடிதாருக்கு மாறினாள் சரண்யா.

    ஹாலில் லேப்டாப்பை ஆஃப் செய்த தீபக், அம்மா, அபார்ட்மெண்ட் செகரட்டரிங்கற முறையில நான் கீழே போய் ஆர்கனைஸ் பண்ணனும். சரண்யாவை. நீ எதுக்கு வீணா அனுப்பறே? என்றான்.

    எனக்கு போர் அடிக்குது. நானும் வர்றேன் என்று இரண்டு பேரும் பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். லிஃப்ட் மக்கர் செய்தது. அதனால் படிகளில் இறங்கினார்கள்.

    என்னப்பா செகரட்டரி நீ… உன் ராஜ்ஜியத்துல லிஃப்ட் வேலை செய்யமாட்டேங்குது என்று அவனைக் கலாய்த்தாள் சரண்யா.

    அந்த எட்டு மாடி அபார்ட்மெண்டில் நாலு பிளாக்குகளில் 500 ஃப்ளாட்டுகள் இருந்தன. கொரானா லாக்டவுன் பீரியடில் வாசலுக்கே வந்து காய்கறி லாரியில் விற்றார்கள். மெயின் கேட் அருகே ஒரு திறந்தவெளியில் லாரி நின்றிருந்தது. தீபக் அவனுக்குத் தெரிந்த ஒரு வியாபாரியை ஏற்பாடு செய்திருந்தான்.

    லாரிகாரன் தீபக்கைப் பார்த்து சல்யூட் அடித்தான். காய்கறி வாங்க ஃப்ளாட்வாசிகள் க்யூவில் நின்றார்கள். எல்லாரும் முக கவசம் அணிந்திருந்தார்கள்.

    லாரியில் வந்த இளைஞன் ஒருவன், சரண்யாவைப் பார்த்து, "நடையா, இது நடையா, ஒரு நாடகம் அன்றோ நடக்குது. இடையா இது

    Enjoying the preview?
    Page 1 of 1