Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Work From Home
Work From Home
Work From Home
Ebook71 pages26 minutes

Work From Home

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நரேஷை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட மஹதி தன் அண்ணன் நிர்மலுக்குப் பயந்து ஓடுகிறாள். அவளும் நரேஷும் சென்னையில் வந்து தங்குகிறார்கள். கோபு என்பவன் யார்? அவனுக்கும் சென்னை நிர்மல் டேக்ஸி மேனேஜர் முத்தரசனுக்கும் என்ன விரோதம்? முத்தரசன் கொலையாகிறான். இன்ஸ்பெக்டர் மோகன் எல்லாரையும் சந்தேகப்படுகிறார். படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580115207610
Work From Home

Read more from Ananthasairam Rangarajan

Related to Work From Home

Related ebooks

Related categories

Reviews for Work From Home

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Work From Home - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    வொர்க் ஃப்ரம் ஹோம்

    Work From Home

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    நரேஷை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட மஹதி தன் அண்ணன் நிர்மலுக்குப் பயந்து ஓடுகிறாள். அவளும் நரேஷும் சென்னையில் வந்து தங்குகிறார்கள். கோபு என்பவன் யார்? அவனுக்கும் சென்னை நிர்மல் டேக்ஸி மேனேஜர் முத்தரசனுக்கும் என்ன விரோதம்? முத்தரசன் கொலையாகிறான். இன்ஸ்பெக்டர் மோகன் எல்லாரையும் சந்தேகப்படுகிறார். படித்துப் பாருங்கள்

    அத்தியாயம் 1

    காலிங் பெல் சத்தம் இரண்டு முறை ஒலித்தது. அமுதா தன் கம்பெனி மீட்டிங்கில் இருந்தாள். அவளுடைய பூசிய உடம்பு நைட்டியில் பாங்காக அமைந்திருந்தது. கொரானா தயவால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்று ஒன்றரை வருடமாய் வேலை செய்ததில் ஒரு சுற்று பெருத்திருந்தாள். கிளையண்ட் ஒருத்தி வளவள என்று அமெரிக்காவிலிருந்து பேசினாள்.

    கோயிலுக்கு அம்மா போயிருக்கிறாள். ’வாசற் கதவு சாவியை எடுத்துப்போறேன், உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்’ என்றுதானே சொல்லிவிட்டுப் போனாள்? ஒருவேளை தன் கணவன் தினேஷ் சீக்கிரமாய் வங்கியிலிருந்து வந்துவிட்டாரா என்று எண்ணிக்கொண்டே கதவைத் திறந்தாள்.

    ஒரு நீல நிற புர்கா அணிந்த பெண் ஒரு டிராலி பெட்டி சகிதம் வாசலில் நின்றாள். ஹாய் அம்மு! என்று முகத்திரையை விலக்கினாள் அந்தப் பெண்.

    ஓ! மஹி! வா வா என்றாள் அமுதா ஆச்சரியத்துடன். இது என்ன வேஷம்?

    அவர்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள்.

    அம்மு. இட்ஸ் அ சர்ப்ரைஸ் விஸிட். லேப்டாப்பில் யாரது பேசறது? பிலோமினாவா? ஒரே அறுவை ஆச்சே அவள்! என்றாள் மஹதி, முதுகுப் பையை கீழே இறக்கியவளாய். ஒல்லியாய் நல்ல சிவப்பில் இருந்தாள். கண்கள் சிவந்திருந்தன. வீதியில் ஊபர் டாக்ஸி நின்றிருந்தது.

    எப்படி வந்தே?

    ஃப்ளைட்ல. பரவாயில்ல.. புணேலிருந்து சென்னை ஒண்ணேகால் மணிதான். உன் வீட்டை கண்டுபிடிக்கிறதும் சுலபமா இருந்துச்சி என்று மஹதி சொல்லிக்கொண்டிருந்தபோதே ஊபர் கேபிலிருந்து தன் டிராலி பெட்டியை இழுத்துக்கொண்டு நரேஷ் இறங்கினான். முப்பதை நெருங்கினான். அப்பா அம்மா இல்லை. சென்னை ஆவடியில் மாமா வீட்டில் அவருடைய அதே வயதுப் பையன் கோபுவுடன் வளர்ந்தான்... ஆனால் நன்றாய் படித்தான். புனேயில் ஸாஃப்ட்வேர் வேலை கிடைத்து நல்ல ஊதியம். கோபுவுக்கு அரசியல் தொடர்பு ஏற்பட்டது. அங்கேயே வார்டு கவுன்சிலர் ஆனான். சைக்கிளில் போனவன் இன்று இன்னோவா வைத்திருக்கிறான். நிறைய அடிதடி கேஸ்களில் ஜாமீன் வாங்கியிருக்கிறான்.

    நரேஷ் மார்புக்குக் குறுக்கே ஒரு நீல நிற ஷோல்டர் பேக் மாட்டியிருந்தான். அதில் கிரெடிட் கார்டுகளும், சில பேப்பர்களும் இருந்தன..

    முகத்தில் மாஸ்க் போட்டிருந்தாலும், அவனை அடையாளம் கண்டதும் அமுதா அதிர்ந்தாள். இவன் கூடவா வந்தே? என்றாள் அமுதா மெல்லிய குரலில்.

    அம்மு, இப்ப இவன் இல்ல. அவர் எனக்கு எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள் மஹதி.

    கடசில நீதான் மாட்டினியா?

    Enjoying the preview?
    Page 1 of 1