Oruthalaipaksham
()
About this ebook
Read more from Ananthasairam Rangarajan
English Pazhagalam Vanga! Rating: 3 out of 5 stars3/5Chinna Vizhi Parvaiyiley Rating: 0 out of 5 stars0 ratingsSharegalil Panam Pannalam Rating: 0 out of 5 stars0 ratingsNuni Naakku Aangilam Pesa Rating: 0 out of 5 stars0 ratingsVazhntha Kaalangal Konjamo... Rating: 0 out of 5 stars0 ratingsBhagavadh Geethai Arulum Gnana Ragasyam Rating: 0 out of 5 stars0 ratingsWork From Home Rating: 0 out of 5 stars0 ratingsIthuthan Kaadhal Enbathaa! Rating: 0 out of 5 stars0 ratingsOru Valaagam Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsSariyaga Seivathu Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsKilladi Siruvargal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaniley Ore Vennila Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaivugal Thodarattume! Rating: 0 out of 5 stars0 ratingsCorona Kalathu Kurunovelgal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNeengal Enna Ok va? Rating: 0 out of 5 stars0 ratingsCorona Kalathu Kurunovelgal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Eppothum Santhosam! Rating: 0 out of 5 stars0 ratings2045 l Oru Kathai Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ezhuthalaraga Aasaiya... Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyana Katralai Nokki Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oruthalaipaksham
Related ebooks
Manasu Rating: 0 out of 5 stars0 ratingsSuper Rating: 0 out of 5 stars0 ratingsAindhaam Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Uravadu... Rating: 5 out of 5 stars5/5Uravugal Menmaiyanavai Rating: 0 out of 5 stars0 ratingsMeena Kathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsLights On Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthathin Eeram! Rating: 0 out of 5 stars0 ratingsKodu Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhalala Rating: 0 out of 5 stars0 ratingsPennendral... Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsAdithya Ondram Vaguppu Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5Ver Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsOliyin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsDharmangal Sirikindrana Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsPannaiyar Magal Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaathiru! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhoram Oru Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Azhagey! Unnai Aarathikirean! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Neethana!? Rating: 0 out of 5 stars0 ratingsKanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsMaranthu Poguma Kaadhal Mugam? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oruthalaipaksham
0 ratings0 reviews
Book preview
Oruthalaipaksham - Ananthasairam Rangarajan
http://www.pustaka.co.in
ஒருதலைப்பட்சம்
சிறுகதைகள், குறுநாவல்
Oruthalaipaksham
Short Stories, Kurunovel
Author:
அனந்தசாய்ராம் ரங்கராஜன்
Ananthasairam Rangarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. நிழலாகிப் போன உறவுகள்
2. எலெக்ட்ரிக் டிரெயின் ஹீரோ
3. அவரும் அவளும்
4. விதை நெல்
5. காவல்
6. அரைஞாண் கயிறு
7. ஒருதலைப்பட்சம்
8. தாத்தாவின் பெட்டி (குறுநாவல்)
முன்னுரை
இந்தத் தொகுப்பில் பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய சிறுகதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்றிருக்கின்றன. நான் தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதிப் பிரசுரித்தேன். என் வசம் சில அச்சுப்பிரதிகள் இருந்தன.. சில காணாமல் போயின. இன்று போல் கணினியில் பதிவு செய்யும் முறை அப்போது இல்லை. பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று கேட்டபோது அவர்களிடம் பழைய பிரதிகள் இல்லை. அதனால் நான் பிரசுரித்த கதைகளை செராக்ஸ் செய்யக்கூட முடியவில்லை. பரணில் தேடியதும் சில கதைப் பிரதிகள் கிடைத்தன... எனவே கிடைத்த கதைகளை ஒரு நூலாகப் பதிப்பித்திருக்கிறேன். சிறுகதைகளுடன் ஒரு குறுநாவலைக் கடைசியில் இணைத்திருக்கிறேன்.
*****
1. நிழலாகிப் போன உறவுகள்
சுந்தரம் மனைவியின் அறையில் எட்டிப் பார்த்தான். இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். அதிகாலை இரண்டு மணி வரை ஷூட்டிங். யாரோ கற்றுக்குட்டி டைரக்டராம். போதாக்குறைக்குத் தயாரிப்பாளர் வேறு பெருங்காயம் வைத்திருந்த பாண்டமாம். அதனால் கமலாதேவியின் பணமும் அந்தப் படத்தின் தயாரிப்பில் பெருமளவு கரைந்திருந்தது. ஒப்புக்கொண்ட படம் திடீரென்று நடுவில், தான் முதல் போட்ட படமாக மாறிவிட்ட போது இரவு பகலாக உழைத்தாள் அவள்.
சுந்தரம் அவளையே உற்றுப் பார்த்தான். ‘நைட்டி’யில் சோம்பல் முறித்தவாறு நெளிந்தாள். முன்பெல்லாம் கமெலியாக இருந்தாள் அவள். இப்போது கமலையாகப் பூரித்துப் போனதில், திரையில்தான் பாதி இடம் அடைத்துக் கொண்டாளென்றால் அவன் கட்டிலிலும் பாதியை ஆக்கரமித்துக் கொண்டாள்.
வேலைக்காரி காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவைத் திறந்த சுந்தரம் அவள் கையில் ஒரு பத்திரிகை இருப்பதைக் கண்டான்.
முதல் பக்கத்தைத் திருப்பியதுமே அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.. கமலாதேவியைப் பற்றி கிசு கிசு எழுதாவிட்டால் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்குத் தூக்கமே வராது போலும்.
ஆனால் இந்தவாரம் வெளியான செய்தி அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது.... நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நடிகை கமலாதேவி ‘அபார்ஷன்’ செய்து கொண்டாராம்!
‘கணவனுக்குக் கூட தெரியாததை இந்த நிருபர்கள் எப்படித்தான் கண்டுபிடித்து எழுதுகிறார்களோ’ என்று நினைத்த சுந்தரம் ஒரு கணம் பேச்சிழந்து நின்றான். அதை விட இந்தப் பத்திரிகையைத் தன் வீட்டு வாசலில் வீசியவர் யாராக இருக்கக்கூடும்.... என்று சிந்தித்தான்.
மனைவி நடிகையாக மாறினதில் சாதாரண வேலையிலிருந்த அவன் அதை ராஜினாமா செய்துவிட்டிருந்தான். நடிகையின் அம்மாக்காரி என்றால் ஷூட்டிங் சமயத்தில் லூட்டி அடிக்கலாம். கணவனாக இருப்பதில் சில சங்கடங்கள் இருந்தன. கமலி நடிகையாக முன்னேறிய புதிதில், மனைவிக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று அவன் முனைந்த போது, அவனை ‘ஐயோ பாவம்’ என்று பார்த்தார்கள். ‘கூஜா’ என்ற வார்த்தையை எந்த மடையன் கண்டுபிடித்தானோ? அவன் காதுபடவே பல திருவாய்கள் அதனை உச்சரித்த போது, ஸ்டூடியோ பக்கம் போவதையே அவன் நிறுத்திக் கொண்டான்.
வீட்டில் ‘போர்’ அடித்தது. கமலாதேவி வளர்ந்தபோது அவளுடன் ‘தான்’ என்ற மமதையும் வளர்ந்தது அவன் ஒதுங்கிக் கொள்ளவும் வேண்டியதாயிற்று. சில சமயம் அவனை ‘கன்ஸல்ட்’ செய்வாள் அவன் ஏதாவது சொன்னால், மாமியார்க்காரி நல்ல மருமகளைப் பார்த்து முணுமுணுப்பதைப் போல் பல்லைக் கடிப்பாள் அவள்.
வீட்டில் தினமும் சச்சரவுகள்! அவனுக்கும் அவளுக்கும் இருந்து வந்த பூசல்கள், முணுமுணுப்புகளில் தொடங்கி, வார்த்தையாடல்களில் வலிந்து, சமயங்களில் கைகலப்பில் முடிந்து, இப்போது கிசு கிசு வாக பத்திரிகைகளில் பவனி வரவும் தொடங்கிவிட்டது.
இந்த ‘அபார்ஷன்’ நியூஸ் அதில் ஒரு ரகம். இது உண்மையாக இருக்கக் கூடாதே என்று அவன் கலங்கினான். நீண்ட நாள் கழித்து கமலாதேவி உண்டகியிருந்தாள். தான் தனிமைப் பட்டுப் போய்விட்டதை உணர்ந்த சுந்தரம் வரப் போகும் வாரீசுக்கு ஆவலாய்க் காத்திருந்தான். தனிமை இனி ஒழிந்துவிடும். ஆனால் இதென்ன, அவன் கனவுகளையே சிதைக்கும் படியான செய்தி.......
சுந்தர்!
என்று கூப்பிட்டாள் கமலாதேவி.. சுந்தர் சட்டென நிமிர்ந்தான். அறை வாசலில் நின்ற மனைவியின் வயிறு மீது பார்வை ஓடியது. அவளும் அவன் கையிலிருந்த பத்திரிகையைப் பார்த்துவிட்டாள்.
இந்தப் பத்திரிகையை ஏன் வாங்கினீங்க? என்னைப் பத்தி ரொம்ப மட்டமா எழுதறான் இவன்....
என்று அவள் வெறுப்புடன் அதைப் பிடுங்கினாள்.
நான் வாங்கலை...யாரோ நம்ம வீட்டு வாசல்ல போட்டிருக்காங்க.
பிடிக்காத பத்திரிகையானாலும் அதைப் புரட்டின அவள், ஹோ காட்!
என்று கத்தினாள். எல்லாம் எதிர் வீட்டு வில்லி பண்ற வேலை. அப்பப்பா... என் ‘கேரீரை’ என்னமாய்க் கெடுக்கப் பார்க்கிறா.
சுந்தரம் ஒன்றும் புரியாமல் உட்காந்திருந்தான். எதிர் வீட்டில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்து ஓரளவு பெயர் வாங்கியிருந்த காமினி குடியிருந்தாள். கமலாதேவிக்குப் போட்டியாகக் கிளம்பியிருந்தாள். இன்று வாசலில் திடீரென்று பத்திரிகை விழுந்ததிலிருந்து இந்தச் செய்தியை அவள்தான் அவிழ்த்துவிட்டிருப்பாள் என்று தோன்றியது.
இப்போதெல்லாம் கமலாதேவி தன்னிடம் நிறைய விஷயங்களை மறைக்கிறாள் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுத்து வருவதை உணர்ந்தான் சுந்தரம்.
அவளை இந்த விஷயத்தில் குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை அவன். மனைவி நட்சத்திரமாக மாறின வேளையில் அவள் நட்சத்திரங்களைப் போலவே தொலை தூரத்திற்குப் போய்விட்டாள்.
சுந்தர்! இந்த நியூஸை நம்பறீங்களா?
என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சுகிற பாணியில் கேட்டாள் கமலாதேவி.
சமையற்காரி மங்களம் சூடாக இரண்டு கப் காபி எடுத்து வந்து கொடுத்தாள்.
என்ன... பதிலே சொல்லல்லே?
உண்மை எது, பொய் எதுன்னு உனக்குத்தான் தெரியும். நீயே சொல்லிட வேண்டியதுதானே?
நீங்க ‘லாஸ்ட் மந்த்’ கிராமத்துக்கு அறுவடைன்னு போயிருந்தீங்க. ராம்குமார் ஒரு நாள் வந்தார். நான் ‘பிரக்னென்ட்டா’ இருந்தா அவரோட சொந்தப் படம்நின்று போயிடும். அதனாலே ‘அபார்ஷன்’ பண்ணிக்கோன்னு சொன்னார். இல்லேன்னா எதிர் வீட்டுக் காமினியை எனக்குப் பதிலா போட்டுடுவேன்னு சொன்னார்!
கமலாதேவியின் குரல் தழுதழுத்தது.
சுந்தரம் மிடறு விழுங்கினாண். நீ ஏன் என் கிட்ட சொல்லல்லே?
என்னை விட உங்களுக்குத்தான் குழந்தைன்னா ஆசை... நீங்க கூச்சல் போட்டு என்னைத் தடுத்திருப்பீங்க....
என்ன குழந்தை இருந்திச்சு?
ஆண் குழந்தை
.
சுந்தரம் பெருமூச்சு விட்டான். அவள் திரை வானில் ஜொலிக்க முயன்று