Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meena Kathirukiral
Meena Kathirukiral
Meena Kathirukiral
Ebook87 pages32 minutes

Meena Kathirukiral

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரேம் குமார் ஒரு நடிகன். அவன் மனைவி மீனா. இந்த நடிகனின் வாழ்வில் ஒரு ரசிகையாக வந்து அவன் வாழ்வில் இணைந்தவள் ரம்யா. மதுமதி ஒரு கதாசிரியை . பிரேம் குமார் என்கிற நடிகனின் வாழ்வை எழுது ஆரம்பிக்கிறாள். பிரேம் குமாரை கிருஷ்ணகுமாராக மாற்றி அவள் எழுதும் நாவலில் இவள் எழுதியதெல்லாம் நிஜமாக மாறி அப்படியே நடக்கிறது.
இவனுக்கு மார்கெட் சரிய ரம்யா விட்டு விலக.... படங்களிலிருந்து இவன் விலக்கப் பட... தன் எதிர்காலத்தைப் பற்றி அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பி அவளைச் சந்திக்கிறான்.
அவள் சொன்ன க்ளைமாக்ஸ் அதிர்ச்சி தர நடிகன் திகைக்கிறான். மதுமதி சொன்னது என்ன?
நடிகன் ஜெயித்தானா ? காதலன் ஜெயித்தானா ?
மீனாவின் கதி என்ன ? மதுமதியின் நாவல் க்ளமேக்ஸ் என்ன ?
நிகழ் காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம்.
முடிவு என்ன ? நாவல் படித்தால் புரியும்........
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100805673
Meena Kathirukiral

Read more from Vimala Ramani

Related to Meena Kathirukiral

Related ebooks

Reviews for Meena Kathirukiral

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meena Kathirukiral - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    மீனா காத்திருக்கிறாள்

    Meena Kathirukiral

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    ரம்யா கிருஷ்ணகுமார் நெஞ்சில் தன் முகத்தை வைத்து உரசிக் கொண்டிருந்தாள்.

    ஏய்... என்ன பண்றே?

    கிருஷ்ணகுமார் படுக்கையில் நெளிந்தான்.

    ஏய்... கிச்சுகிச்சு மூட்டாதே!

    ரம்யா கவர்ச்சியாகச் சிரித்தாள். அடர்த்தியாக ரோமம் வளர்ந்துள்ள அவன் நெஞ்சில் தான் கிச்சு கிச்சு உணர்ச்சி இருக்கிறதா?

    மறுபடியும் அவள் தன் முகத்தை வைத்துத் தேய்க்க... அவன் நெளிய... விளையாட்டு தொடர்ந்தது...

    அரை மணி நேர இடைவெளிக்குப் பின் கிருஷ்ணகுமார் களைப்புடன் படுக்கையில் சாய்ந்தான். அவன் கைகளிலிருந்து புகைந்து கொண்டிருந்த சிகரெட் 'இன்பம் இன்பம்!' - என்று புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

    ரம்யா படுத்த நிலையிலேயே கிருஷ்ணகுமாரைத் தன் மேல் சாய்த்துக் கொண்டாள்.

    ஸ்... கொஞ்ச நேரம் ஓய்வு எடு... - கிருஷ்ணகுமார் செல்லமாக அவள் முதுகைத் தட்டினான். வெறும் உடம்பில் அவன் கை பட்டதும் அவள் சிலிர்த்தாள்.

    விடிஞ்சா இதை எல்லாம் மறந்து போயிடுவீங்க இல்லை? ரம்யா கெஞ்சினாள்.

    விடிஞ்சா மறந்து போயிடுவேன். ஆமாம்... மறுபடியும் இரவு வந்தா நினைவு வந்துடுமே!

    நிஜமா என்னை நீங்க விரும்புகிறீர்களா?

    இல்லாமலா? கட்டின பெண்டாட்டியை வீட்டிலே விட்டுட்டு உன்னைத் தேடிட்டு வந்திருக்கேன்?

    எத்தனையோ பேரோட பழகறீங்க... பேசறீங்க... நான் மட்டும் என்ன உசத்தி?

    நான் கற்புள்ள ஆண்ணு சொல்லிக்கலை. ஆனா நீ கற்புள்ள பெண்ணா இருக்கணும். அதனால தான் உன்னை ஏங்க வைக்காம நானே வந்துட்டு இருக்கேன்! அதான் உசத்தி!

    ஐயே!

    ரம்யா உடைகளை அணிந்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள்.

    பிரிஜ்ஜைத் திறந்து விஸ்கி பாட்டிலை எடுத்த போது கிருஷ்ணகுமார் அவளைத் தடுத்தான்.

    வேண்டாம் ரம்யா... நான் போதை இல்லாமலே உன்னை ரசிக்கிறேன். நான் பேசற நிஜமான வார்த்தைகள் என் நெஞ்சிலே இருந்து வரட்டும். மதுவிலே இருந்து வர வேண்டாம்!

    என்ன நிஜம் பேசப் போறீங்க?

    ரம்யாவை தன் மடியில் கிடத்திக் கொண்டு அவளை உற்றுப் பார்த்தான் கிருஷ்ணகுமார்.

    ஏய்! சும்மா கிண்டலும் குறும்பும் பண்ணினே... இந்த சிகரெட்டாலே சுட்டுடுவேன்!

    சுடுங்க... பரவாயில்லை... அந்தத் தழும்பு என்னிக்கும் உங்களை எனக்கு நினைவுபடுத்திட்டு இருக்கும்!

    அவளைக் கட்டிக் கொண்டு படுக்கையில் உருண்டான் கிருஷ்ணகுமார்.

    இந்த அன்பு நிலைக்கணும்னு நான் ஆசைப்படறேன். எந்த ஒரு நிலையிலேயும் என்னோட அன்பு ஒரு சுமையா உங்களுக்கு ஆகிவிடக் கூடாது! ரம்யா தேம்பினாள். மனதுள் என்ன என்னவோ எரிமலை தகிப்புகள்! திருமணத்திற்கு முன் இவன் தன்னுடன் கொஞ்சியதும், தன்னைப் பிரிய மாட்டேன் என்று சொன்னதும், அப்பறம்... அப்பறம்? இதையும் நினைத்து மீண்டும் அழுதாள்.

    அசடே! அன்பு எங்கேயாவது சுமையாகுமா? நீதான் என்னிக்காவது என்னை சுமைன்னு ஒதுக்காம இருக்கணும்...

    என்ன, நீங்க சுமையா ஆறதா?

    கிண்டலா...? பார்த்துட்டே இரேன்... இப்படி நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் சுமை சுமைன்னு சொல்லி, பொதி சுமக்கற கழுதை மாதிரி ஆயிடப் போறோம்!

    சிரிப்பின் அலைகள்!

    மீண்டும் விளக்கு அணைக்கப்படுகிறது. இரவுகள் விடியாத இரவுகளாக... இன்பங்கள் முடியாத இன்பங்களாக... அனுபவங்கள் சொல்ல முடியாத அனுபவங்களாக விரிந்து... மலர்ந்து... பரந்து...

    ***

    என்னம்மா மதுமதி? இன்னுமா கதை எழுதிட்டு இருக்கே? தூங்கல்லை? ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடிச்சே அம்மா!

    மதுமதியின் தந்தை அவள் அறைக்கு வந்து கூறியபோது தான் மதுமதி நேரத்தைப் பார்த்தாள்...

    இரவு இரண்டு மணி!

    இதோ ஆச்சுப்பா... வந்துட்டேன்... நான் நேரத்தைக் கவனிக்கவே இல்லை.

    நல்ல பொண்ணு! கதை எழுத ஆரம்பிச்சா நேரம் காலம் தெரியறதே இல்லை!

    தந்தை அலுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்ற போது, தான் எழுதி நிறுத்திய இடத்தைப்

    Enjoying the preview?
    Page 1 of 1