Unakkenave Kaathiruppen
2/5
()
About this ebook
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Read more from Vimala Ramani
Vaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 2 out of 5 stars2/5Jatayu Rating: 0 out of 5 stars0 ratingsUzhaipal Uyarntha Uthamar Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsNee Varuvaiyana Ninaithirunthean Rating: 0 out of 5 stars0 ratingsThookkanan Kuruvi Koodu... Rating: 0 out of 5 stars0 ratingsThotti Chedigal Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Asthamanam Rating: 0 out of 5 stars0 ratingsMaathru Roobena Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsNee Oru Kadhal Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsUn Parvai Oru Varam Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Raagangal! Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kolaiya Mandhira Akka! Rating: 0 out of 5 stars0 ratingspudhayala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Mandapam Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5
Related to Unakkenave Kaathiruppen
Related ebooks
Nesam Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsசூரியன் சுடவில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Sudavillai Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Athisayam! Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5தலை இல்லாத சிலை! Rating: 0 out of 5 stars0 ratingsThalai Illaatha Silai Rating: 5 out of 5 stars5/5Kattrai Kaithu Sei Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsLove You Rashmi! Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Rajiyam Enathu! Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Deepam Ondru... Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Thappu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsSorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Poo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Malarodu Thaniyaga... Rating: 0 out of 5 stars0 ratings100% Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kandu Naanaada... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Unakkenave Kaathiruppen
1 rating0 reviews
Book preview
Unakkenave Kaathiruppen - Vimala Ramani
http://www.pustaka.co.in
உனக்கெனவே காத்திருப்பேன்
Unakkenave Kaathiruppen
Author:
விமலா ரமணி
Vimala Ramani
For more books
http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இந்த நாள் இனிய நாள்
2. பெண் ஒன்று
3. ஜாதி மதங்களைப் பாரோம்!
4. தினைத் துணை நன்றி!
5. காட்டு மல்லிகை
6. வேஷங்கள்!
7. விளாம்பழ ஓடுகள்...!
8. சகடயோகம்
9. மணப்பந்தல் காண் வாராயோ?
10. யூனிஃபார்ம்
11. சாமரங்கள்
12. இச்சா மிருத்யு
13. வாதாபி கணபதிம்
14. தேனீ
15. ஆயுள், ஆரோக்கியம், ஐசுவர்யம்!
16. அஹம் பிரம்மாஸ்மி
17. பாவை நோன்பு
18. கர்ம வினை
19. அம்புப் படுக்கை
20. அட்சதை
21. ரத்த பந்தம்
22. முச்சு
23. உனக்கெனவே காத்திருப்பேன்!
1. இந்த நாள் இனிய நாள்
இப்பவே சொல்லிட்டேன். நாளைலே இருந்து நான் காலேஜ் போக மாட்டேன். அப்பா கிட்டே சொல்லிடு
பரத் எரிச்சலுடன் பேசினான்.
அவன் தாய் பத்மா பேசாமல் இருந்தாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்? கடந்த ஆறு மாதக் காலமாகப் பரத் கேட்டுக் கொண்டிருந்ததுதான்.
எனக்கு காலேஜ் போக ஒரு டூ வீலர் அப்பாவை வாங்கிக் கொடுக்கச் சொல்லு. வீட்டிலே இருந்து லொங்கு லொங்குன்னு பஸ் ஸ்டாண்டு வரை நடந்து போகணும். அங்கே கூட்டத்தில் முண்டியடித்து பஸ் ஏறி, ரெண்டு பஸ் தவறவிட்டு காலேஜ் போறதுக்குள்ளே லேட்டாயிடுது... பஸ்ஸிலே இருந்து இறங்கி காலேஜுக்குள்ளே அரை மையில் நடந்து உள்ளே போகணும்... ஒரே போர்...
டூ வீலர் இல்லேன்னா காலேஜ் போகமாட்டாராமா துரை?
பெத்த பிள்ளைக்கு ஒரு வண்டிகூட வாங்கித் தராத இவரெல்லாம் ஒரு அப்பா... எங்க காலேஜ்லே ஒவ்வொருத்தனும் எப்படிப்பட்ட கார்லே வந்து இறங்குறானுங்க தெரியுமா? நான் ஒரு டூ வீலர் தானே கேட்கிறேன்.
இப்படி அப்பாவும் பிள்ளையும் மாறி மாறி அவளிடம் பேசுவதை அவளால் வேறெங்கும் சொல்ல முடியாத ஒரு குடும்பத் தலைவியின் தர்ம சங்கடம்.
பரத் கேட்பதிலும் அர்த்தமிருக்கிறது. காலேஜ் போய் வருவதற்குள் தளர்ந்து போய்விட்டால் அப்பறம் எப்படி படிப்பது?
காலேஜ் பஸ் வரும் நேரமும் சரியில்லை... ஒவ்வொரு நாள் ஏழு மணிக்கும் எட்டு மணிக்கும் வருகிறது... தெருக்கோடியில் போய் காத்திருக்கவேண்டும். அந்தப் பஸ்ஸை தவறவிட்டால் அடுத்த ஸ்டாப்புக்கு ஆட்டோ பிடித்துப் போகவேண்டும். அதற்கு வேறு செலவு.
சரி அப்பா கிட்டே சொல்றேன். நீ கொஞ்சம் பொறுத்துக்கோ!
பரத் எரிச்சலுடன் கிளம்பினான்.
பொறுத்தது போதும் பொங்கி எழு
என்று மனத்துள் மனோகரா வசனங்கள் எதிரொலித்தன...
அன்று......
பரத் கல்லூரி போகவில்லை. உடம்பு லேசாகச் சுட்டது. இந்தக் காய்ச்சலில் பஸ் ஏறிப் போய்... விரக்தி பாதி, கோபம் பாதி... கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு வீட்டில் இருந்துவிட்டான்.
அப்பா அலுவலகம் போய்விட்டார்.
அம்மா கடைக்குக் கிளம்பினாள்.
பரத்... நான் வாசல் கதவைப் பூட்டிட்டுப் போறேன். யார் வந்து பெல் அடிச்சாலும் நீ எழுந்து வரவேண்டாம். என்ன? எதுவா இருந்தாலும் வந்து பாத்துக்கிறேன்.
அவளால் செய்ய முடிந்த அதிகபட்ச உதவி...
போர்வைக்குள் முடங்கியபடி ம்... ம்...
என்றான்.
கதவு சார்த்தி அம்மா கிளம்பும் ஓசை கேட்டது.
சற்று நேரத்தில்...?
யாரோ அழைப்பு மணி அடித்தார்கள்.
இவன் எழவில்லை.
ஸார்... ஸார்...
யாரோ கூப்பிட்டார்கள்.
இவன் எழவில்லை.
ஸார்... ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு... நான் போஸ்ட்மேன்...
இவன் எழுந்தான். ஏதாவது முக்கியமான தபாலாக இருந்துவிட்டால்...?
கதவு திறந்து ஸாரி.. உடம்பு சரியில்லை... அதான் தூங்கிட்டேன்
என்றான்.
சீருடை அணிந்த அந்தத் தபால்காரருக்குச் சிறுவயதுதான்.
பரவாயில்லை தம்பி... இப்பத்தான் என்னை இந்த ஏரியாவுக்குப் போட்டிருக்காங்க... அட்ரஸ் தேடுறதுதான் கொஞ்சம் பிரச்சினை
என்றவர், ஒரு படிவத்தைத் தந்தார்.
நெற்றி வியர்வையைத் துடைத்தபடி, இதுலே கையெழுத்துப் போடுங்க
என்றார்.
அவன் கையெழுத்துப் போட்டுவிட்டுக் காகிதத்தைத் திருப்பித் தந்தான்.
அவர் கிளம்பினார்.
ஆனால்......?
ஊனமுற்ற காலால் விந்தி விந்தி நடந்தபடி வாசலில் நிறுத்தி இருந்த தன் சைக்கிளின் அருகே அவர் சென்று... போலியோ காலை ஒரு கையால் தாங்கிப் பிடித்துத் தூக்கி சீட்டில் வைத்தவர்... மெல்ல பேலன்ஸ் செய்தபடி சற்றுத் தடுமாறி பின் சைக்கிள் பெடல் மிதித்தார்...
பரத் பிரமித்தான்!
இவர் ஊனமுற்றவரா?அந்தச் சிரிப்பும் மென்மையான குரலின் பேச்சும்...
இவர் உடம்பால் பாதிக்கப்பட்டவர்தான்.
ஆனால் உள்ளத்தால் ஊனமற்றவர்.
அந்தக் கால்களை வைத்துக்கொண்டு வீடு வீடாகப் போய் தபால் பட்டுவாடா செய்து... தன் கடமைகளைச் செய்யும் அவர் எங்கே?
சில செளகர்யங்களின் இழப்புக்காகக் குடியே முழுகிவிட்டமாதிரி கூப்பாடு போடும் இவன் எங்கே?
‘கடமைகளைச் செய்’ என்று கீதையில் சொன்னது கண்ணன் மட்டும்தானா?
இதோ இவர்கூட ஓர் அவதாரம்தான்!
ஒரு புதிய அவதாரம்...!
தூரத்தில் கேட்கும் அவரது சைக்கிள் மணிஓசை இவனுக்குப் புதிய பாடத்தைக் கற்றுத் தந்தது!
வசதிகள் மட்டும் வாழ்வல்ல.
கடமைகளும் வாழ்வு
2. பெண் ஒன்று
பூமி... பூமி...
அம்மா கூப்பிடும் சப்தம்.
ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த பூமிகா என்கிற பூமி, தான் படித்த இடத்தை அடையாளமிட்டு வைத்துவிட்டு, என்னம்மா...?
என்றாள்.
நாளைக்கு உன்னைப் பெண் பாக்க வாராங்க...
என்றாள் அம்மா.
பூமிகா அதிர்ச்சி அடைந்தாள்.
ஏம்மா நான்தான் சொன்னேன்ல எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ணு.
இதோ பார் பூமி, இதுவரை எல்லாமே நீ விரும்பற மாதிரிதான் நடந்துட்டு வருது. ஆனா கல்யாண விஷயத்திலே மட்டும் நாங்க நினைக்கிற மாதிரிதான் நடக்கணும். மாப்பிள்ளையைப் பார்த்து செலக்ட் மட்டும்தான் நீ செய்யணும். ஆனா கல்யாணம் எங்க விருப்பப்படிதான் நடக்கணும்... வயசாகுது?
எனக்கென்னமா வயசாச்சு? நான் மேலே படிக்கப் போறேன்.
வயசு உனக்கில்லை எங்களுக்கு ஆச்சு?
உனக்கு வயசாச்சா? யார் சொன்னா? இப்பவும் உன்னைச் சிங்காரிச்சு மணையிலே அமர்த்தினா, கல்யாணப் பெண்ணைவிட நீதான் அழகா இருப்பே...
பத்மாவின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை.
சீ... போ நீயும் உன் ஜோக்கும். நாங்க ஜாதகம் எல்லாம் பாத்துப் பேசி முடிவு பண்ணிட்டோம். நாளைக்குப் பிள்ளை வீட்டுக்காரங்க வரப் போறாங்க. சாயங்காலம் ஆறு மணி... எங்கேயாவது வெளியே போயிடாதே...!
பூமிகா ரொம்ப நாள்களாக எதிர்பார்த்ததுதான். ஆனால் அப்பாவும் அம்மாவும் பிடித்த பிடிவாதத்தில் தன்பிடியைச் சற்றே தளர்த்தி இருந்தாள்.
பெண் பார்க்கும் படலம் தானே? பார்த்துக்கொள்ளலாம்!
இதோ பார் பூமி. உன் சிநேகிதிகள் எல்லாருக்கும் அனேகமாய்க் கல்யாணம் ஆயாச்சு. எத்தனை கல்யாணங்களுக்கு நாம் போயிருக்கோம்? எனக்கும் உன்னை திருமணக் கோலத்திலே பார்க்க ஆசையிருக்காதா?
இந்த ஒப்பிடும் தன்மை இவர்களுக்கு மாறாது...
இவர்களுக்கு ஒரு ‘லேபிள்’ தேவை... ஒரு கம்பெனி ப்ராடக்ட்டுக்கு
பிராண்ட், அம்பாசிடர் மாதிரித்தான் இதுவும்...
தான் உபயோகப்படுத்தாத சோப்புக்கும் ஷாம்புக்கும் விளம்பரத்தில்தான் அதை உபயோகப்படுத்துவதாகச் சத்தியம் செய்யும் நடிகைகள்... அவற்றைப் பயன்படுத்தித்தான் தனது சரும அழகை மெருகூட்டிக் கொண்டதாக மேக்-அப்புடன் உடல் அழகைக் காட்டி மயக்கும் மாடல் அழகிகள்... இந்த லேபிளை நம்பும் பரிதாப வாடிக்கையாளர்கள்...
இது அந்த லேபிளுக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம்... சம்பந்தப்பட்டவர்களுக்கு அல்ல...
அம்மாவும் இதுபோன்ற ஒன்றைத்தான் விரும்புகிறாள்...
இது திருமணத்திற்கு வெற்றி, ஆனால் இவளுக்குக் கிடைத்த வெற்றியா?
என்றைக்கு நாம் நம்மை நாமாகக் கணிக்கக் கற்றுக்கொள்ளப் போகிறோம்? நாம் மனிதர்களை அவர்களின் பண்புகளின் அடிப்படையில் என்றைக்கு அடையாளம் காணப் போகிறோம்?
நீ யார் மாதிரி... அவர் மாதிரியா? இவர் மாதிரியா? என்ற கேள்விகளை விடுத்து, என்றைக்கு நாம் நாமாக இருக்கப் போகிறோம்?
கவிக்கோ சொல்வதுபோல்... பெண்ணே நீ இந்த உலகில் ஒரு வெற்றுத் தாளாக வருகிறாய். நீ உன்னை எழுதிக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் உன்மீது கிறுக்கிவிட்டுப் போய்விடுவார்கள்... நீ யார் மாதிரியும் இல்லாமல் நீ உன் மாதிரி இரு அதுதான் உன் அடையாளம்...
அம்மாவிற்கு இதெல்லாம் சொன்னால் புரியாது... மற்றவர்கள் மாதிரி இவளும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம் இதுமட்டும்தான்... இந்த அடையாளம் மட்டும்தான்.
அம்மா தினம் தினம் காலையில் சொல்லும் ஸ்லோகம் ஒன்று நினைவுக்கு வந்தது.....
அகல்யா திரெளபதி சீதா தாரா மண்டோதரி என்கிற இந்த ஐந்து கன்னிகைகளைத் தினம் தினம் வேண்டிக்கொண்டால் வாழ்வு வளமாகும்
என்பாள் அம்மா.
இவள் யோசித்துப் பார்த்தாள்...
இந்த ஐவரின் அடையாளம் என்ன?
ஆணாதிக்கச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இவர்கள்.
கணவர் ராமனால் அக்னிப் பிரவேசம் செய்யப்பட்ட சீதா. கணவர் கெளதம் முனிவரால் தெரியாமல் செய்த தவறுக்காகக் கல்லாகச் சபிக்கப்பட்ட அகல்யா.
ராவணனின் காமாந்தக்காரக் கொள்கைகளைச் சகித்துக்கொண்ட மனைவி மண்டோதரி. பாண்டவர்களால் சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்ட திரெளபதி. கணவன் வாலியின் தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கடத்தியபோது, மௌனம் காத்துப் பதிவிரதை தர்மத்தைக் கடைப்பிடித்த மனைவி தாரா...
இந்த ஐவரைத் தியானித்தால் மனத்துள் அடிமை மனப்பான்மை ஆட்கொள்ளாதா? இதனால் பெண் தர்மம் என்கிற மறைமுகப் போதனை தலைதூக்காதா?
பெண்கள் மனத்துள் முடங்கிப் போக மாட்டார்களா?
சராசரிப் பெண்கள், ‘இதுதான் பத்தினித் தனம்’ என்று பாடம் படிக்க மாட்டார்களா? இதை அம்மாவிடம் சொன்னால் அடிக்க வருவாள்...
பட்டிமன்றம் ஒன்றில் கேட்டது நினைவுக்கு வந்தது...
சிறந்த ஆட்சி ராமர் ஆட்சியா? ராவணன் ஆட்சியா? என்பது தலைப்பு.
ஒருவர் பேசினார்...
"ராமர் ஆட்சியில் மனைவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை...
ராவணன் ஆட்சியில் மாற்றான் மனைவிக்குப் பாதுகாப்பில்லை...
ஆக எதிலுமே மொத்தத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை...
நிஜம்தான்.... பெண்களுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய நல்லாட்சி இப்போதுதான் நடந்துகொண்டிருக்கிறது" என்று சொல்லிக் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார்...
கண்ணகி காலத்திலிருந்து கணவன் கேட்டால் நகைகளைக் கழட்டித் தருவதுதான் மனைவியின் கடமையாக இருந்திருக்கிறது.
அன்று கோவலன் நகைகளைக் கேட்டபோது முதலிலேயே கண்ணகி மறுத்திருந்தால் சிலப்பதிகாரமே வந்திருக்காது... கோவலன்... ஒழுங்காக தன் வியாபாரத்தையாவது கவனித்திருப்பான்...
இன்று பல கருத்துக்கள் மாறிவிட்டது, நிஜம்! ஆனால் இன்னமும் பல பத்தாம் பசலித்தனமான கருத்துக்கள் அழிக்கப்படவில்லை...
பூமிகா ஏதேதோ யோசித்தபடி தன் அறைக்குள் இருந்தாள்...
மறுநாளும் வந்தது!
தன் அம்மாவின் விருப்பப்படி... அதிசயமாகப் பட்டுப்புடவை அணிந்து, நகைகள் அணிந்துகொண்டு பாதி மணமகளாக அமர்ந்திருந்தாள்.
வாசலில் கார் வந்து நின்றது.அதிலிருந்து எதிர்கால மணமகன் திவாகர், அவன் பெற்றோர், அண்ணி சியாமளா அனைவரும் இறங்கினார்கள்.
திவாகர் அழகாகவே இருந்தான்.
சம்பிரதாய உபசரிப்புக்களுக்குப் பிறகு, திவாகரின் தாய் உமா பேசினாள். "எங்களுக்குப் பூமிகாவைப் பிடிச்சுப் போச்சு... என்