Ther Yeri Vandha Nila
()
About this ebook
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Read more from Vimala Ramani
Un Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsJatayu Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsDeluxe Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsNee Varuvaiyana Ninaithirunthean Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsYaazhisai Rating: 0 out of 5 stars0 ratingsMutru Peratha Athiyayam Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMegapaaraigal Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Mandapam Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsMella Veesum Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ther Yeri Vandha Nila
Related ebooks
Sorgathiley Idhu Mudivaanathu Rating: 5 out of 5 stars5/5Andhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Kaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Punnagai Varaali Rating: 0 out of 5 stars0 ratingsParuva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Amuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Ninnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Priyamanaval Rating: 0 out of 5 stars0 ratingsSeer Kondu Vaa Venmagame Rating: 4 out of 5 stars4/5Vittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagaiyil Oru Naal! Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Kanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Irandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Oonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsThottil Sugam Rating: 5 out of 5 stars5/5Mithrahasini Rating: 0 out of 5 stars0 ratingsNeelakuyile Kannamma Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Kaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Thaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ther Yeri Vandha Nila
0 ratings0 reviews
Book preview
Ther Yeri Vandha Nila - Vimala Ramani
http://www.pustaka.co.in
தேர் ஏறி வந்த நிலா
Ther Yeri Vandha Nila
Author:
விமலா ரமணி
Vimala Ramani
For more books
http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
பெருமாள் ஜக ஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பத்து நாளைய உற்சவம். இன்று கடைசி நாள். கொடியை இறக்கும் நாள், தேர் ஏறி ஊர் முழுவதும் பவனி வரும் நாள்.
முக்கிய வீதிகளில் ஜனக் கூட்டத்தில் நெரிசல். நாலு மணிக்குத் தேர் புறப்பாடு. ஜன சமுத்திரம்.
எப்படியும் தேர் நிலையை அடைய இரவு வெகு நேரமாகிவிடும். ஒவ்வொரு திருப்பத்திலும் கச்சேரிகள். வாண வேடிக்கைகள், கற்பூர ஆரத்தி உபசாரங்கள், கட்டளைக்காரர் வீடுகளில் விசேஷப் பந்தல்கள்.
முக்கியமான பிரபலஸ்தர்கள் ‘சர் சர்’ரென்று கார்களில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை உள்ளே அனுப்ப ஜனக் கூட்டத்தில் போலீஸ் பந்தோபஸ்துடன் ஒரு வழியை ஏற்படுத்தினார்கள்.
ஆறு திடீரென்று பிரிந்தது போல் கூட்டம் பிரிந்து வழிவிட, அரசியல் பிரமுகர்களும் உள்ளூர் பிரபலஸ்தர்களும் தர்ம கர்த்தாக்களும் பெரிய பெரிய ஆதின அதிபதிகளும் பஞ்சாயத்து, மற்றும் மாவட்ட உயர்மட்ட அதிகாரிகளும்... அம்மாடி! கூட்டம் நெரிந்தது. எங்கும் போலீஸ் தலைகள், நிறைய பந்தோபஸ்து.
இல்லையா பின்னே? இந்தப் பெருமாள் கோவிலுக்கு எத்தனை வரும்படி! இன்றைய விசேஷத்திற்காக உள்ளே பெட்டகத்தில் பூட்டி வைக்கப்பட்ட பழைமையான எத்தனை நகைகள் இன்று வெளியே வந்திருக்கின்றன!
மிகப் பழைமையான காலத்தில் ராஜாக்கள் தந்த அன்பளிப்புக்கள், பக்தர்கள் தந்த காணிக்கைகள், உண்டியல் பணங்கள் இவற்றில் வாங்கிய ஆபரணங்கள்... அம்மாடியோ!
பல லட்சம் பெறுமான மகர கண்டி மாலை நூறு பவுன் காசு மாலை ஒவ்வொரு காகம் ஒவ்வொரு பவுன். வைர அங்கி, வைரப்பதக்கம் வைத்த தங்கச்சரங்கள், முத்தும் பவளமும் கெம்பும் வைரமும் பதித்த கிரீடம், வைர முகப்பு வைத்த பெரிய ஒட்டியாணம், விலையுயர்ந்த கற்கள் பதித்த சங்கு, சக்கரம், தோமாலை, தங்கக் கவசம், தங்கப் பாதம். தங்க பத்மம், வைர முகப்பு பதித்த வைரத் தாலி.
பெருமாளும் தாயாரும் அப்படியே ஜொலிக்கிறார்கள். தேர் ஏறி பவனி புறப்படத் தயாராகக் காத்திருக்கிறார்கள்.
அந்தக் குறும்பூர் கிராமத்தின் கோவில் அது. அந்தக் கோவில் சொத்துக்களுக்கும் சுவாமி நகைகளுக்கும் கணக்கே கிடையாது. பரம்பரை தர்மகர்த்தாவின் சுவாதீனத்தில் அந்தக் கோவில் இருந்தது. பரம்பரை குருக்கள் அங்கு அர்ச்சகர்களாக இருந்தார்கள்.
இது போல திருவிழா நாட்களில்தான் சுவாமியின் அத்தனை நகைகளையும் வைத்துப் பூட்டியிருப்பார்கள்.
இதுபோல திருவிழா நாட்களில் தான் நகைகளை வெளியே எடுப்பார்கள்.
கர்ப்பக்கிரகத்துக்குப் பக்கத்திலே இருக்கும் சுவாமியின் பள்ளி அறைக்குப் பக்கத்தில் ஒரு சுரங்க அறை உண்டு. அதில் ஒரு பெரிய மரப்பெட்டியில்தான் சுவாமியின் அத்தனை நகைகளையும் வைத்துப் பூட்டியிருப்பார்கள்.
தர்மகர்த்தா உண்டு, கோவில் நிர்வாகம் உண்டு. அந்தச் கிராமத்தின் கட்டுக்கோப்புக் காரணமாக நிர்வாகத்தில் எந்தக் குழப்பமும் இன்றி இதுநாள் வரை நடந்துவிட்டது.
அந்தச் சுரங்க பாதையின் வெளியே ஒரு பெரிய பூட்டு. அந்த மரப்பெட்டிக்கும் ஒரு பிரம்மாண்டமான பூட்டு. பித்தளைச் சாவி ஒவ்வொன்றும் ஓர் அடி நீளம் இருக்கும் அத்தனை பெரிது. மூலவருக்குச் செல்ல எல்லாமே வெளியே அமைக்கப்பட்ட பெரிய கோட்டைக் கதவுக்கு ஒரு பூட்டு. எல்லாமே டபுள் லாக் பூட்டுக்கள்.
இந்தச் சாவிகள் அனைத்தும் தர்மகர்த்தாவிடம் ஒன்றும் ஊர் மணியக்காரரிடம் ஒன்றும் இருக்கும். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் தர்மகர்த்தாவும் ஊர் மணியக்காரரும் ‘சீல்' வைத்துப் பூட்டை பூட்டிக்கொண்டு போய்விட்டால், மறுநாள் காலை சுப்ரபாதம் போது ‘சீல்' சரியாக இருக்கிறதா என்று பார்த்து லெட்ஜரில் கையெழுத்திட்ட பின் திறத்து விடுவார்கள்.
சுப்ரபாதம் ஒலிக்கும், விஸ்வரூப தரிசனத்திலிருந்து அர்த்தஜாமம் வரை எல்லா நியமங்களும் நடக்கும். நகைகளை எடுக்குமுன் சரிபார்த்து, லெட்ஜரில் கையெழுத்துப் போட்டு, நகைகளை எடுத்து, உற்சவம் முடிந்ததும் சரிபார்த்து, திரும்ப லெட்ஜரில் டிக்மார்க் போடப்பட்டு... எல்லாமே இத்தனை வருடங்கள் வரை மிக நன்றாக, மிக ஒழுங்காக நடந்துவிட்டன.
தினப்படி பூஜைக்குத் தேவையான வெள்ளி மணி, சடாரி போன்றவற்றை ஒரு பெட்டியில் போட்டு, கர்ப்பக்கிரகத்திலேயே பூட்டி வைத்திருப்பார்கள். அந்தச் சாவி பரம்பரை குருக்களிடம் இருக்கும்.
இத்தனை நாள் ஒரு குளறுபடியும் இல்லாமல் எல்லாம் நடந்து முடித்துவிட்டன. இன்று கடைசி நாள்.
இந்தத் தேர்த் திருவிழா முடிந்ததும் மீண்டும் நகைகளைச் சரிபார்த்து சுரங்கப்பாதையில் தீவட்டி பிடித்துக்கொண்டு போய்ப் பெட்டியைத் திறந்துகொண்டு வைத்துச் சுரங்கப்பாதை பூட்டைப் பூட்டிப் பள்ளியறை உள் வாசலைப் பூட்டி விட்டால் இனி அடுத்த வருடம்தான்.
தினப்படி சாத்தச் சில முக்கியமான நகைகளை மட்டும் ஆபீஸ் அறையின் காட்ரெஜில் வைத்துப் பூட்டியிருப்பார்கள்.
இந்த வருடமும் வழக்கம் போல் நகைகளைச் சாத்தி அலங்காரம் பண்ணும்போது செல்லப்பா குருக்களுக்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. சுவாமியை ஆவாகனம் பண்ணியிருந்த கலசத்தைத் தூக்கியபோது ‘சுவாமி’ வந்தது. செல்லப்பா அழுதார்.
உடம்பெல்லாம் கிடுகிடுவென்று நடுங்கியது.
தெய்வமே... இன்னும் எத்தனை நாளைக்கு என்னைச் சோதிக்கப் போகிறாய்? என் பெண் நீலாயதாட்சிக்கு எப்போது சுய புத்தியைத் தரப்போகிறாய்? அந்தக் கல்யாணமாகாத கன்னிப் பெண்ணை ஊரார் ஏச, பைத்தியமாய் இன்னும் எத்தனை நாளைக்கு வாழ வைக்கப் போகிறாய்? ஒன்று. அவள் மற்றும் பெண்கள் மாதிரி நல்ல நிலைமைக்கு வர வேண்டும். இல்லை, அவளை உன் பாதாரவிந்தத்தில் நீ சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னால் இந்தக் கொடுமையைத் தாங்க முடியவில்லை! ஆண்டவனே! எத்தனை வைத்தியம் பார்த்தாகிவிட்டது. எத்தனை செலவு!
இப்போது கூட இந்தத் திருவிழா முடிந்தவுடன் திருவிடைமருதூர் போக நினைத்திருக்கிறார். பாவம் செல்லப்பா! செல்லப்பா உடம்பெல்லாம் ஆட, மனமெல்லாம் சோர கண்களை மூடி பெருமாளுக்கு முன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். மூடிய கண்களில் அவர் மகள் நீலாயதாட்சி சிரித்தாள்.
*****
2
அம்பா நீலாயதாட்சி கருணா கடாட்சி
- செல்லப்பாவின் மனைவி சரசு பாடிக்கொண்டிருந்தாள்.
சரசு நீ பாடறச்சே என் தேகமெல்லாம் நடுங்கறது. சாட்சாத் அந்த நீலாயதாட்சியே நேர்ல வந்த மாதிரி ஒரு பிரமை
உச்சிக் குடுமியும், சிவப்புக் கடுக்கணுமாக செல்லப்பா, இளமையோடு இருந்த செல்லப்பா, அப்போதுதான் திருமணமாகி மனைவியுடன் இல்லறம் நடத்தும் செல்லப்பா பேசுகிறான்.
போங்கன்னா...
சரசு சிரிக்கிறாள் வெட்கத்துடன்.
நாகப்பட்டினத்தில் ஏதோ இருக்கிற உபாத்தியாயத்தைக் கவனித்துக் கொண்டிருந்த செல்லப்பாவிற்கு மாமா தன் சரசுவைத் திருமணம் செய்து வைத்தார். நாகப்பட்டினத்தில் இருந்து காரணத்தால் செல்லப்பாவிற்கு அங்கு கோவிலில் குடி கொண்டிருக்கும் நீலாயதாட்சியின் மீது கொள்ளை பக்தி.
நமக்குப் பொண் பொறந்தா நீலாயதாட்சின்னே பேர் வைச்சுடறேன்.
செல்லப்பா சொன்னான்.
அவள் மெல்லச் சொன்னாள்: புள்ளை பொறக்கணும்னு வேண்டிக்கோங்கோ...
அப்போ?
சரசு இன்னும் சிவந்தாள். அந்தச் சமயத்தில் தான் நாகப்பட்டினத்தில் வரும்படி சரியாக வராததால் செல்லப்பாவின் மாமா இவர்களையும் தான் பரம்பரையாக அர்ச்சகத் தொழில் செய்யும் தன் சொந்த ஊராரான குறும்பூர் கோவிலுக்கு வரும்படிக் கடிதம் போட்டிருந்தார். தஞ்சைக்கு அருகிலேயே குறும்பூர் கிராமம் இருந்தது.
பட்டணத்துலே மனுஷாளுக்கு நிக்க நேரமில்லை. கர்மாக்கள் பண்ணப் பொறுமை இல்லை, இன்னமும் இங்கே மனுஷா மனுஷாளா இருக்கார்கள். நமக்குத் தர்ப்பணத்துக்காவது காசு கிடைக்கும். நகரத்திலே எல்லாத்தையும் கேஸடுட்லே கேட்டுக் கொண்டு பூஜை வாத்தியாரைத் துரத்திடறார்கள். ஆனால் கிராமத்துலே அப்படி இல்லை. கிராமத்துலே வரும்படியும் கிடைக்கும். தவிர எனக்கும் வயசாகிறது. எனக்கு வாரிசு இல்லை. இந்தக் குறும்பர் பெருமாள் கோவிலுக்கு இத்தனை நாள் நான் சிரத்தையாக பூஜை பண்ணிட்டேன். இனிமே எனக்கு அடுத்து வாரிசா உன்னைத்தான் ஏற்படுத்தப் போறேன். அதனால கிராமத்துக்கே வந்துடு. நான்தான் உனக்கு அட்சராப்யாஸம் பண்ணி வைச்சேன். கல்யாணமும் பண்ணி வைச்சேன். இப்போ உனக்கு ஒரு ஸ்திரமான இடத்தையும் நான் கண் மூடறத்துக்குள்ளே காட்டிட்டுப் போயிடறேன்.
மாமாவின் கடிதத்தைப் படித்த செல்லப்பா அன்றே சரசுவுடன் கிராமம் பெயர்ந்தான்.
அப்போது தான் சரசு