Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaimai Marappathillai!
Thaimai Marappathillai!
Thaimai Marappathillai!
Ebook82 pages34 minutes

Thaimai Marappathillai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, பாசம், கருணை, விட்டுக்கொடுத்து போவது, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பிறர் நலனில் அக்கறை கொள்வது இப்படி பல்வேறுபட்ட குணநலங்களைப் பற்றி ஒவ்வொரு கதையிலும் மிகவும் நேர்தியாக ஆசிரியர் கூறியுள்ளார். இக்கதைகளை வாசித்து நாமும் நம்வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வோம்.

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580137809105
Thaimai Marappathillai!

Read more from Parimala Rajendran

Related to Thaimai Marappathillai!

Related ebooks

Reviews for Thaimai Marappathillai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaimai Marappathillai! - Parimala Rajendran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தாய்மை மறப்பதில்லை!

    Thaimai Marappathillai!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பிரிவும் பரிவும்!

    குழந்தை வரம்

    உதவி!

    பொய்களும் அழகு!

    ஒரு வரம்!

    இல்லறத்தில் இணைவோம்!

    தாய்மை மறப்பதில்லை!

    படிப்பு!

    மகள் என்ற உறவு!

    வாடகைதாரர்!

    யாரோடு யாரோ?

    பிரிவும் பரிவும்!

    கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள்.

    வா அக்கா... வர்றேன்னு போன் கூட பண்ணலை... திடீர்ன்னு வந்து நிக்கறே!

    குலதெய்வம் கோவிலுக்கு போகணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அதான், உன்னை பார்த்துட்டு, இரண்டு நாள் உன்னோடு இருந்துட்டு, அப்படியே கிராமத்துக்கு போகலாம்ன்னு புறப்பட்டு வந்தேன்.

    கல்லுாரிக்கு கிளம்பி கொண்டிருந்த, லட்சுமியின் மகள்கள் இருவரும், பெரியம்மாவுடன், சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர். காபியுடன் வந்த லட்சுமி, அக்காவின் அருகில் உட்கார்ந்தாள்.

    என்ன லட்சுமி எப்படியிருக்கே... குடும்பம் எப்படி போயிட்டிருக்கு... பெரிய மகள், கட்டிக் கொடுத்தவ எப்படி இருக்கா... முகுந்தன் மஸ்கட்டிலிருந்து அடிக்கடி பேசறானா? என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள்.

    உன் எல்லா கேள்விக்கும் பதில்... நல்லா இருக்கோம். குடும்பம் சந்தோஷமா, நிம்மதியா போயிட்டிருக்கு. மூணு பெண்களை பெத்துவச்சிருக்கேன். எப்படி கரையேத்தப் போறோம்ன்னு கவலைப்பட்டேன். முகுந்தன் அந்தக் கவலையை தீர்த்து வச்சுட்டான். பெரியவளுக்கு கல்யாணம் முடிச்சாச்சு. இந்த இரண்டு பேருக்கும் படிப்பு முடிஞ்சதும், நல்ல வரனாகப் பார்த்து, கல்யாணம் பண்ணிட்டா, என் பொறுப்பு முடிஞ்சிடும்.

    உன் மூத்த பிள்ளை முகுந்தன், தங்கச்சிங்க கல்யாண பொறுப்பை ஏத்துக்கிட்டு, வேலை பார்த்து சம்பாதிச்சு கொடுக்கிறான். இப்படியொரு பிள்ளை பிறக்க, நீ கொடுத்து வச்சிருக்கே. ஆமாம், எங்கே உன் மருமகளை காணோம். அம்மா வீட்டுக்கு போயிருக்காளா?

    இல்லக்கா. இங்கே தான் இருக்கா... மாடி ரூமில் குளிக்கிறா போலிருக்கு. இன்னும் அரை மணியில் கீழே வந்துடுவா.

    குளித்து முடித்த சுமதி, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள்.

    சுமதி, பெரிய அத்தை ஊரிலிருந்து வந்திருக்கா பாரு, அவளைப் பார்த்து புன்னகைத்து வரவேற்றாள்.

    சரி சுமதி, நீ போய் சாப்பிடு, உனக்கு பசி தாங்காது. டேபிளில் ஹாட் பேக்கில், இட்லி சூடா இருக்கு. நானும், அக்காவும் அப்புறம் சாப்பிடறோம்.

    சுமதி எழுந்து உள்ளே செல்ல, அவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் லட்சுமியின் அக்கா.

    சாயந்திரம், காலேஜ் விட்டு வந்த நாத்தனார்களுடன் அரட்டையடித்தபடி, சுமதி ஹாலில் உட்கார்ந்திருக்க, லட்சுமி, சமையலறையில் இரவு உணவு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.

    லட்சுமி, என்ன, நீ மட்டும் சமையலறையில் ஒண்டியா வேலை பார்க்கிறே... உன் மருமகளை துணைக்கு கூட்டிக்க கூடாதா?

    எதுக்குக்கா, பெரிசா ஒண்ணும் வேலை இல்லை. டிபன் தானே. இதோ, சட்னி அரைச்சா வேலை முடிஞ்சிடும். நீயும் போய் ஹாலில் உட்காரு. இப்போ வந்திடறேன்.

    இருக்கட்டும் லட்சுமி. அந்த வெங்காயத்தை எடு, நறுக்கித் தர்றேன்.

    அங்கு வந்த சுமதி, அத்தை, ராத்திரிக்கு தோசை தானே. கார சட்னி கொஞ்சம் செஞ்சுடுங்க, தோசைக்கு பொருத்தமா இருக்கும், என்றாள்.

    சரி, உனக்கு பிடிச்ச கார சட்னியும் ரெடி பண்ணிடறேன். மணி ஏழாச்சு. நீ பார்க்கிற சீரியல் போட்டிருப்பான்.

    நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க... இதோ போறேன்.

    ஹாலை நோக்கி வேகமாகச் சென்றாள். எந்தவித பொறுப்பும் இல்லாமல், வீட்டில் சந்தோஷமாக வளையவரும் மருமகளையும், எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்யும் மாமியாரையும் பார்க்க, பார்க்க லட்சுமியின் அக்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    அன்று மாலை லட்சுமியின் மகள்களும், சுமதியும் சினிமாவுக்கு சென்றிருக்க, தங்கையுடன் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

    "லட்சுமி, நீ குடும்பம் நடத்தற விதமே சரியில்லைன்னு தோணுது. உன் மகள்கள் படிக்கிற வயது; கல்லுாரிக்கு போறாங்க. குடும்பப் பொறுப்பு இல்லை. படிக்க, ‘டிவி’ பார்க்கன்னு சந்தோஷமா இருக்காங்க. ஆனா, உன் மருமக சுமதி,

    Enjoying the preview?
    Page 1 of 1