Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iniyellam Subame!
Iniyellam Subame!
Iniyellam Subame!
Ebook124 pages46 minutes

Iniyellam Subame!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இனியெல்லாம் சுபமே என்ற இந்த நாவல் காதல் கொண்ட உள்ளத்தின் மன நிலையை பிரதிபலிக்கிறது.

காதலில் வெற்றி பெற அவர்கள் சந்தித்த பிரச்சனைகளை அழகாக ரசனையுடன் வெளிப்படுதிதியிருக்கிறேன்

இக்கதையின் நாயகனும், நாயகியும் உங்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள்.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580137807194
Iniyellam Subame!

Read more from Parimala Rajendran

Related to Iniyellam Subame!

Related ebooks

Reviews for Iniyellam Subame!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iniyellam Subame! - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    இனியெல்லாம் சுபமே!

    Iniyellam Subame!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அந்த மலைப் பகுதி, மரங்கள் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. இலைகளின் ஊடே சிறுசிறு வெளிச்சப் புள்ளிகள் மட்டும், அந்த ஒற்றையபடி பாதையை அடையாளம் காட்ட, கல்லும் சரளையும் நிறைந்த அந்த பாதையில் மெள்ள அடியெடுத்து வைத்து நடந்தான் சூர்யா.

    ஏன் வந்தோம் என்று மனம் திக், திக் என்று அடித்துக் கொண்டது. பசுமை சூழ்ந்த அந்த பகுதி, கண்களுக்கு குளிர்ச்சியை தந்தாலும், அதையும் மீறி பய உணர்வு எட்டிப்பார்த்தது.

    வெகுதூரம் வந்துவிட்டோம். திரும்ப புறப்பட்ட இடத்திற்கு சரியாக போய் சேரமுடியுமா... பொழுதும் இருட்டிக் கொண்டு வருகிறது. அங்கங்கே பறவைகளும், விலங்குகளும் எழுப்பும் வித்தியாசமான சப்தங்கள்.

    போதும். திரும்பிவிடலாம். தனியாக இவ்வளவு தூரம் வந்ததே தப்பு. குளிர்காற்று உடலை சில்லென்று தாக்க ஓவர் கோட்டை இழுத்து உடம்பை நன்றாக மூடினான்.

    அப்போது தான் தூரத்தில் ஒரு பெண் நிற்பதை கவனித்தான். ஐயோ... இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் பெண்ணொருத்தி தனியாக நிற்கிறாளே.

    இவள்தான் வனதேவதையா... யாரிவள்... நாக்கு புரள மறுத்தது. பயத்தில் கால்கள் நடுங்குவதை அவனால் உணரமுடிந்தது.

    அவள் அந்த இடத்திலேயே அடித்து வைத்த சிலை போல நிற்கிறாள். ஆகாய மேக வண்ணக் கலரில் சேலை காற்றில் படபடக்கிறது. கூந்தலை முடியாமல் தொங்கவிட்டு இருக்கிறாள். அது இடுப்புவரை படர்ந்து காற்றில் ஆலோலம் பாடியது.

    ரோஜாவண்ண நிறம். திருத்தமான முகம். கைகளில் புடவை நிறத்தில் பிளாஸ்டிக் வளையல்கள், காதில் பெரிய வளையம். இவனைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது.

    மனதில் தைரியத்தை வரவழைத்து அவளருகில் வந்தான். நெருக்கத்தில் இன்னும் அழகாக தோன்றினாள்.

    யார் நீ? இந்த காட்டுபகுதியில் தனியாக என்ன செய்யறே?

    வழி தவறி வந்துட்டேன். திரும்ப வழி தெரியாமல்... உங்களோடு நானும் வரட்டுமா...?

    என்ன சொல்கிறாள் இவள்? இவள் பெண் தானா... இல்லை மாய மோகினியா? அழகிய இளம் பெண் இப்படி தனியாக வருவாளா... இதை எப்படி நம்புவது...?

    நீ யாரும்மா...? எந்த ஊரு...?

    எனக்கு காட்டு ரோடு வரைக்கும் துணை வந்தால் போதும். பக்கத்தில் தான் என் கிராமம். அப்புறம் நான் போயிடுவேன். ப்ளீஸ்... என்னை உங்களோடு அழைச்சுட்டு போங்க...

    திடீரென்று உறுமல் சப்தம் கேட்க... திரும்புகிறான்.

    காட்டுப்புலி, முன் பற்கள் இரண்டும் தெரியும்படி கோபத்துடன் அவர்களை முறைத்து பார்த்தபடி இருக்கிறது.

    ஐயோ... காட்டுப்புலி... நம்மை சும்மா விடாது. அடிச்சு சாப்பிட போகுது. நாம சாகப் போறோம்.

    பயத்தில் கத்தியவள், ஓடிவந்து அவனருகில் ஒளிந்து கொள்ள...

    முகம் வெளிற புலியை பார்க்கிறான்.

    தயவு செய்து என்னை காப்பாத்துங்க... உங்களை விட்டால் எனக்கு உதவ யாருமில்லை...

    காதருகில் கிசுகிசுக்க...

    முட்டாள் மாதிரி பேசாதே... நான் என்ன... அந்த புலியோடு சண்டை போட்டு உன்னைக் காப்பாத்த போறேனா...?

    நீங்க சொன்ன மாதிரி இரண்டு பேரும் புலி அடிச்சு சாகப் போறோமா...? கண்ணை இறுக மூடிக்கிட்டு, சாமியை வேண்டிக்குங்க. அதுதான் நாம் செய்ய வேண்டியது.

    காக்க... காக்க... கனகவேல் காக்க...

    கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்க...

    தம்பி, தம்பி என்னாச்சு...? முருகா, முருகான்னு தூக்கத்தில் இவ்வளவு சப்தமாக கூப்பிடறீங்க... ஏதாவது கனவு கண்டிங்களா...?

    தோட்டக்கார வேலன் - அருகில் தரையில் படுத்திருந்தவன் எழுந்து சூர்யாவை தட்டி எழுப்புகிறான்.

    சடாரென்று எழுந்து உட்காருகிறான்.

    நான் கண்டது கனவா...? புலி அடித்து சாகவில்லையா... நல்லவேளை நானும் அந்த பெண்ணும் தப்பித்து விட்டோமா...

    தம்பி, கனவு கண்டிங்களா...? இந்த தண்ணியை குடிச்சுட்டு படுங்க. விடிய இன்னும் நேரமிருக்கு...

    செம்பு தண்ணீரை அவனிடம் தர...

    வாங்கி கடகடவென்று குடிக்கிறான்.

    ‘கனவு போலவே இல்லையே. நிஜத்தில் நடப்பது போல. கனவில் வந்த அந்த பெண்ணின் முகம்கூட நன்றாக நினைவில் இருக்கிறதே!’

    ஏதாவது கெட்ட கனவா தம்பி?

    மலை பகுதியில் தனியாக போய் மாட்டிக்கிட்ட மாதிரி கனவு ரொம்பவே பயந்து போயிட்டேன்.

    சிரிக்கிறான் வேலன்.

    நீங்க இந்த எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்து பத்து நாள் தான் ஆகுது. இந்த மலை பகுதியை பார்த்து பிரமிச்சுபோய் இருக்கீங்க நேற்று கூட ‘ஒரு நாள் ஒற்றையடி பாதையில் கொஞ்சதூரம் போய்ட்டு வரணும் வேலன்’னு சொன்னீங்க... ‘பகலில் போவோம்’னு சொன்னேன். அதையே நினைச்சுட்டு படுத்திருப்பீங்க. அதுதான் இப்படியொரு கனவு. பயப்படாமல் படுங்க. இந்த மலை பகுதி எல்லாம் எனக்கு அத்துப்படி. ஒரு நாள் நானே உங்களை அழைச்சுட்டு போறேன்.

    குன்னூரில் டீ எஸ்டேட்டில் சூப்பர்வைஸராக வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.

    மலை பங்களா இடத்தில் - மாளிகை மாதிரி - எஸ்டேட் ஓனரின் பங்களா. பின்னால் உள்ள அவுட்ஹவுஸில் தான் அவன் தங்கியிருக்கிறான். துணைக்கு தனி ஆளாக இருக்கும் தோட்டக்கார வேலனும் அவனுடன் இருக்கிறான்.

    பங்களாவில் யாருமில்லை. சென்னையில் இருக்கும் எஸ்டேட் ஓனர் மாதம் ஒருமுறை வந்து போவதுடன் சரி.

    தனிமை சூழ்ந்த இடம். காலையில் எஸ்டேட்டிற்கு போனால் சாயந்தரம் தான் திரும்புவான்.

    ஜனசந்தடி நிறைந்த சென்னையில் இருந்துவிட்டு, இங்கு வந்தது - அவனுள் ஒரு பய உணர்வை தோற்றுவித்தது உண்மை.

    வேலன் மட்டும் இல்லாவிட்டால், இந்த வேலையே வேண்டாம் என்று போயிருப்பான்.

    "தம்பி, முதலில் அப்படிதான் இருக்கும். இந்த மலை பகுதியும், பசுமை படர்ந்த இந்த இடமும், அப்புறம் உங்களுக்குகே ரொம்ப பிடிச்சுடும். பத்து கி.மீ தொலைவில், நிறைய மலை கிராமங்கள் இருக்கு. அங்கே நிறைய மனிதர்கள் இருப்பாங்க. ஆனா இந்த பங்களாவை பொறுத்தமட்டில், வாட்ச்மேனும், நீங்களும், நானும்தான்... ஐயா வரும் போது மட்டும் சமையல் ஆள் ஒருத்தன் வருவான். அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1