Thendral Vanthu Ennai Thodum
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Kaalamellam Unnodu Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Nee Rating: 5 out of 5 stars5/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5Avalukkendru Oru Manam Rating: 4 out of 5 stars4/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Kangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5Thaalaattum Poongattru Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikku Vantha Malare Rating: 4 out of 5 stars4/5Manathodu Paadum Raagam Rating: 3 out of 5 stars3/5
Related to Thendral Vanthu Ennai Thodum
Related ebooks
தென்றல் வந்து என்னை தொடும் Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Kangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Kaadhalendral Rating: 4 out of 5 stars4/5Aahaya Gangai Rating: 5 out of 5 stars5/5Oru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5நிலவுக்கும் நிறமுண்டு..! Rating: 0 out of 5 stars0 ratingsNilavukkum Niramundu Rating: 0 out of 5 stars0 ratingsகனவுகள் தந்தாய் எனக்கு Rating: 0 out of 5 stars0 ratingsKanavukal Thandhaai Enakku Rating: 0 out of 5 stars0 ratingsManam Veesum Malargal Rating: 4 out of 5 stars4/5மணம் வீசும் மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5புரியாத ஆனந்தம்... புதிதாக ஆனந்தம்... Rating: 0 out of 5 stars0 ratingsVizhiyora Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsஆற்றோட்டத்துப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsManasaiththadi Manikkuyile Rating: 4 out of 5 stars4/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Kaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Un Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Pon Rating: 5 out of 5 stars5/5மனதோடு பாடும் ராகம்! Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Paadum Raagam Rating: 3 out of 5 stars3/5
Reviews for Thendral Vanthu Ennai Thodum
1 rating0 reviews
Book preview
Thendral Vanthu Ennai Thodum - Parimala Rajendran
26
1
பின்புறம் மாமரம். பெரிய கிளைகளை கடை பரப்பி அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்தது. ஓரத்தில் ஒரு கொய்யா மரம். கிணற்று மேடையைச் சுற்றி சிமெண்ட் பூசப்பட்டு, துணி துவைக்கும் கல்லை ஒட்டி மாமரத்தடியில் நான்கு பேர் உட்காரும் அளவு பெரிதாக சிமெண்ட் பெஞ்சு கட்டப்பட்டிருந்தது. அந்த இடமே நிழலாக, குளுமையாக இருந்தது. மாலை நேரத்தில் இந்த பெஞ் சில் வந்து உட்கார்ந்துகொண்டால் தென்றல் காற்றும், இதமான சூழ்நிலையும் நிச்சயம் அனுபவிக்கத் தக்கதாக இருக்கும் என்று வித்யாவுக்கு தோன்றியது.
மாமரத்தை திரும்பிப்பார்த்தாள். பிஞ்சும், காயுமாக பூத்துக்குலுங்கியது.
‘‘என்ன வித்யா, வந்தவ வீட்டைக்கூட அவ்வளவா சுத்திப் பார்க்கலை. தோட்டத்துக்கு வந்துட்டே.’’
கேட்டபடி சௌந்தர்யா தன் கனத்த சரீரத்தை அசைத்து மெல்ல நடந்து வந்தாள்.
‘‘அம்மா, இந்த இடமே ரம்மியமா ரொம்ப அழகா இருக்கு. வீடு கட்டின புதுசிலேயே மரத்தை வச்சுட்டாங்க போலிருக்கு. எவ்வளவு பெரிய மாமரம். பூவும், காயுமாக இலை தெரிய காய்ச்சு குலுங்குது.’’
"‘பார்க்க மட்டும்தான் முடியும். வீட்டுக்காரம்மா மாடியில்தான் இருக்காங்க. வீடு வாடகைக்கு வரும்போதே, காய்கள் எதையும் பறிக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டுதான் வாடகைக்கு விட்டாங்க.’’
‘‘சரி பறிக்க வேண்டாம். கீழே விழற காயை எடுத்துப்போம்" சொல்லி சிரித்தவள், இந்த வீடு எனக்கு பிடிச்சிருக்கு.
வாம்மா உள்ளே போகலாம்
வீட்டினுள் நுழைந்தாள்.
வாசலில் சின்ன வராந்தா... அதை ஒட்டி பெரிய ஹால். பாத்ரூம் அட்டாச்சுடன் இரண்டு பெட்ரூம், சின்னதாக ஒரு சமையலறை. அதையொட்டினாற்போல சாப்பிடும் அறை.
"இப்பதாம்மா மனசுக்கு பிடிச்ச மாதிரி வீடு அமைஞ்சிருக்கு.’’
‘‘ஆமாம் வித்யா. நானும் தேடி, தேடி அலுத்துப்போயிட்டேன்...
நீ காலேஜ் முடித்து வர்றதுக்குள்ளே அந்த ஒண்டு குடித்தன வீட்டை காலி பண்ணனும்னு நினைச்சேன். ஆறு மாசமாக தேடி பத்து நாள் முன்னாலதான் வரமுடிஞ்சுது."
‘‘எனக்கும் ஹாஸ்டலில் இருந்து வந்ததற்கு பெரிய ரிலீப்பா இருக்கு". சொன்னவள் ஹாலில் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்.
மாடியில் யாரும்மா, ஓனர்தான் இருக்காங்களா.
ஆமாம். அந்தம்மா வீட்டுக்காரர் இல்லை போலிருக்கு. நான் எப்படி தனி ஆளாக இருக்கேனோ அதே மாதிரி அவங்க இருக்காங்க. படிச்சு முடிச்சுட்டு ஒரு மகன் இருக்கான் போலிருக்கு. வேலை தேடிட்டிருக்கான்னு நினைக்கிறேன். அடிக்கடி பைக்கை எடுத்துட்டு வெளியே போவான்.’’
நமக்கும் அதே நிலைமைதான். அவங்க பையன் வேலை தேடறான். இங்கே உன் மகள் வேலை தேட போறா
இருக்கட்டும் வித்யா. என்ன அவசரம்? கொஞ்ச நாள் நிம்மதியா வீட்டில் இரு. ஏதோ, தோப்பு, துறவுன்னு கிராமத்தில் உங்காப்பாக்கு சொத்து பத்து இருந்ததாலே, விற்று காசாக்கி பேங்கில் போட்டு இன்னைக்கு வரைக்கும் கெளரவமாக இருக்கோம். என் கடைசி காலம் வரைக்கும் நிம்மதியா வாழற அளவுக்கு பணம் இருக்கு. ஏதோ புருஷனை இழந்தாலும் இந்த அளவுக்கு வாழறதுக்கு கொடுப்பினை இருக்கே. அதுக்கே கடவுளுக்கு நன்றி சொல்லணும்.
மாடியில் டமாலென்று நாற்காலி கீழே விழும் சப்தம் கேட்க.
அதைத் தொடர்ந்து,
"நீ என்ன நினைச்சுட்டிருக்கே. உன்கிட்டே பிச்சை கேட்கிறேன்னு நினைச்சியா.
சோறு போட்டு வளர்த்திருக்கேன். அந்த விசுவாசம் வேண்டாம். உங்கப்பனை கல்யாணம் பண்ணி என்ன சுகத்தை கண்டேன். மூணு வருஷத்திலே என் பூவையும் பொட்டையும் பறிச்சுட்டு போய் சேர்ந்திட்டாரு.
நீ, உன் தங்கச்சி, அந்த மனுஷனை நம்பி பெத்தேனே ஒருத்தனை, அவன், உங்க மூணு பேரையும் தனி மனுஷியா ஆளாக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்கேன். அதையெல்லாம் நினைச்சு பார்க்க வேண்டாமா. என்னமோ பிச்சை போடற மாதிரி நினைச்சுக்கிட்டு பேசற"
கனத்த குரலில், கத்தி பேசும் அந்த பெண்மணியின் வார்த்தைகள் ஒன்றுவிடாமல் கீழே எதிரொலிக்க,
"என்னம்மா இது... பேசறதுதான் வீட்டுக்காரம்மாவா... யார்கிட்டே பேசறாங்க’’
"ஆமாம். அந்த பங்கஜம்தான் பேசறா. கொஞ்சம் சிடுசிடுத்த குணம்தான். மூத்த தாரத்து பையன் வந்திருக்கான் போலிருக்கு. ரொம்ப அமைதியான பையன். அவங்க குடும்ப விஷயம் நமக்கென்ன தெரியும். சரி நீ குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்.’’
2
குளித்துவிட்டு தலையை காய வைத்தபடி வெளியே வந்த வித்யா, படிகளில் இறங்கி வரும் இளைஞனை பார்த்தாள்.
சுருண்ட முடி, அடர்த்தியான மீசை, மாநிறம். பார்ப்பதற்கு கண்ணியமான குணத்துடன் இருந்தான். வாசலில் நிறுத்தியிருந்த மாருதி காரில் ஏறி புறப்பட்டு செல்லும் அவனை பார்த்தபடி நின்றாள் வித்யா.
சவுந்தர்யாம்மா, உள்ளேதான் இருக்கீங்களா
‘‘வாங்க, உட்காருங்க"
"இருக்கட்டும். சீனி இருந்தா ஒரு டம்ளர் கொடுங்க. என் புள்ளை செல்வத்துக்கிட்டே நேத்து சொல்லி அனுப்பினேன். மறந்துட்டான். இன்னைக்கு வரும்போது வாங்கிட்டு வந்துடுவான். தந்திடறேன்.’’
இருக்கட்டுமா. இருங்க கொண்டு வரேன்
உள்ளே செல்ல,
பேச்சு சப்தம் கேட்குதே. காலேஜ் ஹாஸ்டலில் இருந்த உங்க மகள் படிப்பு முடிச்சு வந்துட்டா போலிருக்
ஆமாம். காலையில்தான் வந்தா... வித்யா..... வித்யா இங்கே வாம்மா. வீட்டுக்காரம்மா வந்திருக்காங்க.
உள் அறையிலிருந்து வெளிப்பட்ட வித்யாவை மேலும், கீழும் பார்த்தாள்.
ஆளை அசத்தும் அழகு. செளந்தர்யாவுக்கு நேர்மாறாக சிவந்த நிறம். நீண்ட விழிகளும், எடுப்பான