மணம் வீசும் மலர்கள்
()
About this ebook
“விக்ரம், ஊருக்கு போய்ட்டு வந்தாலே, உன் மூடு சரியாக இரண்டு நாளாகுது. இஷ்டமில்லாமல் ஏன் போற.”
“அப்படி விட முடியலைடா. என் தங்கைக்காகதான் போறேன்.”
“சரி, வா, இன்னைக்கு ஹாஸ்டலில் மட்டன் சாப்பாடாம். போய் சாப்பிடலாம்.”
“நான் வரலை குமார். நீ போ. எனக்கு கொஞ்சம் ‘ப்ராஜெக்ட்’ வேலை இருக்கு. முடிச்சுட்டு மெதுவா சாப்பிடறேன்.”
“ஆமாம், நீ இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தா, வெறும் தயிர் சாதம் தான் கிடைக்கும். சொன்னா கேளு...” கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் குமார்.
“சரி, இப்படி பெத்தவரை விஷமாக வெறுக்கிறியே, படிப்பு முடிஞ்சதும் என்ன செய்யப்போற. ஊர் பக்கம் போய்தானே ஆகணும்.”
சாப்பிட்டபடி கேட்கும் நண்பனை பார்த்தவன்,
“அதை பத்தி நானும் யோசிச்சுட்டு இருக்கேன். ஏதாவது கிடைக்கிற வேலையை தேடிக்கிட்டு, எங்காவது போகப்போறேன். நிச்சயமாக ஊர் பக்கம் போகமாட்டேன்.”
“நீ சொல்ற. உன் அப்பா அப்படி விட்டுடுவாறா. இல்லை, அவங்களுக்காக உன் தங்கையைதான் வேண்டாம்னு விட்டுடுவியா.”
“புரியலை குமார். பாவம் வித்யா... பொம்பளபுள்ளை. அவங்க சொல்றபடி கேட்டு இருந்துதான் ஆகணும். அப்பாவோட ஒய்ப்போடு சேர்ந்து வீட்டுவேலையெல்லாம் செய்யறாஅப்பாவுக்கு கடையில் வியாபாரம் இல்லையாம். ப்ளஸ்டு படிச்சது போதும்னு படிப்பை நிறுத்தப்போறாங்க. இதில் கல்யாணமும் பண்ணப் போறாங்களாம். எப்ப ஒழிச்சுக் கட்டுவோம்னு அந்த கிராதகி நினைச்சுட்டு இருக்கா. இப்போதைக்கு என்னாலும் எதுவும் செய்ய முடியலை. அதான் வருத்தமாக இருக்கு.”
“சரி, நீ சொல்றதை பார்த்தா, உன் தங்கையும் உங்க சித்திக்கிட்டே கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கா போலிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்ல விஷயம்தானே. அதுக்கப்புறமாவது அவங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் இல்லையா.”
குமார் சொல்ல, அவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாக இருக்குமென்று விக்ரமிற்கு படுகிறது.
கண்ணாடி முன் நின்று தலை சீவுகிறான் முகுந்தன். சுருளான முடி படிய மறுக்கிறது.
கருப்பாக இருந்தாலும் பார்க்க அழகாகதான் இருக்கிறேன். தனக்குள் சிரித்தவன்,
“அம்மா, அம்மா...” என்றான்.
“எதுக்கு முகுந்தா கூப்பிடறே. இப்பதான் அடுப்பில் குழம்பை வச்சேன். என்ன விஷயம் சொல்லு.” வருகிறாள் சாரதா.
“ஸ்கூலில் பி.டி. மாஸ்டராக இருக்கேன். பார்க்கவும் ஆஜானுபாகுவாக அழகாகவே இருக்கேன். எதுக்காக, பெண் வீட்டில் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”
“அட கடவுளே... அதுக்காக இவ்வளவு அவசரமாக கூப்பிட்டே. குறை உன்கிட்டே இல்லைபா. நமக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அப்பா இல்லாத பையன். கடைசி வரை குடும்ப பொறுப்பு உன் தலையில்... இவன் சம்பாத்தியத்தில் வீடு, வாசல் எல்லாம் வெறும் கனவுதான்னு... வேண்டாம்னு சொல்லிட்டதாக புரோக்கர் சொன்னாருப்பா.”
“அப்படியா சொன்னாங்க. ஏதோ நீ சொன்னியேன்னு பார்க்க சுமாராக இருந்தாலும், போட்டோவை பார்த்துட்டு சரின்னு சொன்னேன்.”“பெரிய கோடீஸ்வர வீட்டில் சம்பந்தம் பண்ணட்டும். சரி, விடு. நமக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப்போறா. பார்ப்போம்.”
“முகுந்தா, நான் சொல்றேன்னு கோபப்படாதே. நீ ஏன் லோன் போட்டு வீடு ஏதாவது வாங்கக்கூடாது.
இந்த காலத்தில் சொந்த வீடு இல்லைன்னா, ஒரு படி, மட்டமாகதான் நினைக்கிறாங்கப்பா.”
கட்டிலில் உட்கார்ந்தவன், அம்மாவை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்கிறான்.
“அம்மா, அவசரப்படவேண்டாம். என் சம்பாத்தியத்தில் கடன் எதுவும் இல்லாமல் குடும்பம் நடந்தறோம். ஏதோ கையிலும் கொஞ்ச காசு இருக்கு. இப்ப லோன் போட்டு, பணத்தை லோனுக்கு கட்டி சிரமப்படணுமா சொல்லு. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நாம் நிம்மதியைதான் தக்க வச்சுக்கணுமே தவிர, அடுத்தவங்களுக்காக வாழணும்னு நினைச்சா... நிம்மதி பறி போயிடும்மா.”
“நீ சொல்றதும் சரிதான்னு தோணுது. இருந்தாலும் நல்ல இடத்தில் பெண் வரமாட்டேங்குதே. அதான் மனசுக்கு யோசனையாக இருக்கு.”
“நீ ஏன் பெரிசா யோசிக்கிறே. நம்மை மாதிரி இருக்கிற இடத்தில் பெண் பாரு. உனக்கு பிடிச்சிருந்தால் போதும். தாலி கட்டி கூட்டிட்டு வரேன்.
எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னுதான் ஆசைப்பட்டியே தவிர, பெரிய இடத்து சம்பந்தம் வரணும்னு ஆசைப்பட்டியாம்மா.”
“அப்படியெல்லாம் இல்லை முகுந்தா. நல்ல பெண்ணாக மனசுக்கு பிடிச்சவளாக அமைந்தால் போதும்.”
“அப்புறம் என்னம்மா. போ. போய் அடுப்பில் வச்ச குழம்பை பாரு. கரிகிடப் போகுது.”
வெண் பற்கள் தெரிய சிரிக்கும் மகனை பார்த்தபடி உள்ளே போகிறாள் சாரதா.
Read more from பரிமளா ராஜேந்திரன்
தெய்வம் தந்த பூவே Rating: 0 out of 5 stars0 ratingsதேடி வந்த தென்றல் Rating: 0 out of 5 stars0 ratingsகாலங்களில் அவள் வசந்தம் Rating: 0 out of 5 stars0 ratingsதிசை மாறும் தென்றல் Rating: 0 out of 5 stars0 ratingsகலைந்து போகும் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகாலமெல்லாம் உன்னோடு Rating: 0 out of 5 stars0 ratingsதிருமகள் தேடி வந்தாள் Rating: 0 out of 5 stars0 ratingsமயங்குகிறாள் ஒரு மாது Rating: 0 out of 5 stars0 ratingsகாவலை மீறிய காற்று Rating: 0 out of 5 stars0 ratingsஓசையின்றி மலரும் Rating: 0 out of 5 stars0 ratingsதிசைமாறி பாயும் நதி Rating: 0 out of 5 stars0 ratingsகல்யாணமாலை Rating: 0 out of 5 stars0 ratingsமணமகளே மருமகளே வா Rating: 0 out of 5 stars0 ratingsமகரந்த மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதென்றலாக நீ வருவாயா Rating: 0 out of 5 stars0 ratingsதாய்மடி தேடி Rating: 0 out of 5 stars0 ratingsதென்றல் வந்து என்னை தொடும் Rating: 0 out of 5 stars0 ratingsகனவுகள் தந்தாய் எனக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஒளி தரும் உதயம்... Rating: 0 out of 5 stars0 ratingsகூடு தேடும் பறவைகள் Rating: 0 out of 5 stars0 ratingsகனவு காணும் வாழ்க்கை Rating: 0 out of 5 stars0 ratingsதாலாட்டும் பூங்காற்று Rating: 0 out of 5 stars0 ratingsமலர்ந்த விழிகள் Rating: 0 out of 5 stars0 ratingsதள்ளி போகச் சொல்லாதே Rating: 0 out of 5 stars0 ratings
Related to மணம் வீசும் மலர்கள்
Related ebooks
Manam Veesum Malargal Rating: 4 out of 5 stars4/5தென்றல் வந்து என்னை தொடும் Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Thodum Rating: 5 out of 5 stars5/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5Kangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsகனவுகள் தந்தாய் எனக்கு Rating: 0 out of 5 stars0 ratingsKanavukal Thandhaai Enakku Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsஉனக்காக வாழ நினைக்கிறேன்... Rating: 0 out of 5 stars0 ratingsThaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsஒளி தரும் உதயம்... Rating: 0 out of 5 stars0 ratingsOli Tharum Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருப்பேன் நான் உனக்காக... Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Raagam Thedum Pallavi Rating: 0 out of 5 stars0 ratingsManamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsமணமகளே மருமகளே வா Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsஎல்லே... இளங்கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsElle Ilankiliye Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Sollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsThunai Thedum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Kanavan Amaivathellam Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Gangai Rating: 5 out of 5 stars5/5Kalaindhu Pogum Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for மணம் வீசும் மலர்கள்
0 ratings0 reviews
Book preview
மணம் வீசும் மலர்கள் - பரிமளா ராஜேந்திரன்
1
மொட்டை மாடியின் கைப்பிடி சுவரில் உட்கார்ந்திருக்கிறான் விக்ரம். திருவண்ணாமலையில் ஏற்றி வைத்த மகா தீபம் செந்நிற கதிர்களுடன் ஒளி தரும் காட்சி, கண்ணெதிரே அற்புதமாய் தெரிகிறது.
தன்னையறியாமலேயே அவன் கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதன்பின் ஒரு வேலை தேடிக்கொண்டு, இந்த ஊரையே மறந்துவிட வேண்டும்.
ஹாஸ்டலில் இருந்து படிக்கிற பையன். லீவுக்கு கூட வீட்டுப்பக்கம் வராமல் இருக்கிறியேப்பா.
குரல் தாழ்த்தி பவ்யமாக கேட்கும் அப்பாவை எரிச்சலுடன் பார்க்கிறான்.
எதுக்கு வரணும். ஒரேடியாக உங்களையெல்லாம் விட்டு ஒழிஞ்சுபோக இன்னும் நாள் வரலையேன்னு காத்திட்டு இருக்கேன்.
அமிலமாய் வார்த்தைகள் வந்து விழ, மேல் துண்டால் முகத்தை துடைத்தபடி இடத்தை விட்டு நகர்வார் மாணிக்கம்.
மனைவி இறந்த ஆறு மாதத்தில் இன்னொருத்தியை தாலி கட்டி கூட்டி வந்தவர்தானே... மிருக ஜென்மம். ப்ளஸ்டூ படிக்கும் மகன். வயதுக்கு வரும் பருவத்தில் மகள்... இந்த வயதில் இன்னொரு கல்யாணம் தேவையா...?
அதுவும் கல்யாணமான பத்தாவது மாதத்தில் அவள் மூலமாக இன்னொரு குழந்தை. இப்போது அவனுக்கு ஐந்து வயது.
அப்பாவை நினைக்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
இதேபோல ஒரு கார்த்திகை மாதம். அப்போது விக்ரம் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தான்.
அம்மா அழகாக கொண்டை போட்டு, அதில் முல்லை சரத்தை வளைவாக வைத்திருந்தாள். அகன்ற நெற்றியில் குங்குமப் பொட்டு, அதன் மேல் சிறுகீற்றாய் விபூதி. சிகப்பு நிற காட்டன் சேலை அவள் நிறத்தை கூட்டிக் காட்டியது.
என் அம்மா... மகாலட்சுமி போல் அவ்வளவு அழகு. பார்க்கும் போதெல்லாம் மனதில் தோன்றும் எண்ணம்.
என்ன விக்ரம் - அம்மாவை புதுசா பார்ப்பது போல அப்படி பார்க்கிறே.
அம்மா நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா
அவளருகில் வந்து தலையை கோதுகிறாள்.
நீ கூடத்தான் அழகா இருக்கே...
அதற்கு மேல் பேச முடியாமல் வழக்கமாக வரும் தொடர் இருமல் வர,
சட்டென்று எழுந்தவன்,
இரும்மா போய் தண்ணி எடுத்துட்டு வரேன்
அவள் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடுகிறான்.
இப்ப எப்படிம்மா இருக்கு.
அவள் நெஞ்சை மெல்ல நீவி விடும் அவன் கைகளை பிடித்தவள்,
அம்மா மேலே உனக்கு அவ்வளவு பிரியமா விக்ரம்
என்றாள்.
அதோ தெரியுதே மலை, அதை விட அதிகமான அளவு உன்னை பிடிக்கும்மா...
பளபளக்கும் அவன் கண்களை பார்த்தவள், மகனை தழுவுகிறாள்.
அம்மா, அண்ணாமலையார் கோவிலுக்கு போறேன். நீ சமர்த்தா உட்கார்ந்து படிக்கிறியா விக்ரம். வித்யா பக்கத்து வீட்டில் விளையாடறா... வந்தா கை, கால் அலம்பிட்டு படிக்கச் சொல்றியா.
சரிம்மா... நீ சீக்கிரம் வந்துடு... அம்மா... தினமும்தான் கோவிலுக்கு போறே... சுவாமின்னா... உனக்கு அவ்வளவு பிடிக்குமா.
"சிறு பிள்ளைத்தனமாக கேட்கிறியே விக்ரம். நான் இந்த ஊரிலேயே பிறந்து, வளர்ந்து, இங்கேயே உன் அப்பாவை கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் காரணம், நான் கும்பிடற அண்ணாமலையார்தான், தெரியுமா?
அதுவும் இது கார்த்திகை மாதம். நாளைக்கு மலையில் மகா தீபம் ஏத்துவாங்க. அதையெல்லாம் அருகில் இருந்து தரிசனம் பண்ண கொடுத்து வச்சிருக்கோம் தெரியுமா?"
அம்மா, நம்ப ஊரில் நிறைய கோவில் இருக்கு இல்லையாமா?
ம்... ஆமாம் அப்பா வர இன்னைக்கு லேட்டாகும்னு சொல்லிட்டு போயிருக்காரு. அம்மா சீக்கிரம் வந்து டிபன் செய்து தரேன்.
சொன்னவள், இரும தொடங்க,
ஏன்ம்மா... உனக்கு இந்த இருமல் அடிக்கடி வருது. டாக்டர்கிட்டே போய் காண்பிக்க கூடாதாம்மா.
விக்ரம் கண்ணா, அம்மா டாக்டர்கிட்டே காண்பிச்சு மருந்து சாப்பிட்டுகிட்டுதான் இருக்கேன். இந்த இருமல் என்கூடவே பிறந்தது. சரியாகும்போது ஆகட்டும்.
அம்மா இங்கேயிருந்து கோபுரம் தெரியுதுதானே. அதை பார்த்து கும்பிடும்மா... கோவிலுக்கு போக வேண்டாம். அப்பாவும் இல்லை... நீ வீட்டில் இரும்மா.
கெஞ்சுதலாக கேட்கும் மகனை பார்த்தவள்,
சரி, இன்னைக்கு உனக்காக இங்கேயே இருக்கேன். சந்தோஷமா விக்ரம்.
அருகில் உட்காரும் அம்மாவின் மடி மீது தலை வைத்து படுக்கிறான்.
தினமும் கோவிலுக்கு போறியே. அந்த சாமியை பத்தி சொல்லும்மா...
"சரி சொல்றேன் கவனமாக கேட்கணும். அந்த கோவிலில் வீற்றிருக்கும் தெய்வம் அண்ணாமலையார். பெண் தெய்வம் அபிதகுஜலாம்பாள், உண்ணா முலையாள்னு அழைப்பாங்க.
லிங்கமே மலையாக அமைந்த ஊர்தான், திருவண்ணாமலை.
ஒன்பது கோபுரம், ஏழு பிரகாரங்கள் இருக்கு. கோவில் இருக்கிற இடம் 25 ஏக்கர்.
மலையில் நிறைய சித்தர்கள் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கிறதாக சொல்றாங்க."
அம்மா, உனக்கு நிறைய விஷயங்கள் தெரியுதே, எப்படிம்மா.
தலையில் செல்லமாக தட்டியவள், "இந்த