Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunai Thedum Ullangal
Thunai Thedum Ullangal
Thunai Thedum Ullangal
Ebook114 pages41 minutes

Thunai Thedum Ullangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூன்று குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்த்த பெற்றோர்களை பற்றி சிறிதும் கவலைபடாமல் சொத்துக்களை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் பிள்ளைகள்.

தாயின் மனநிலை, அவளுடைய கடந்தகாலம் இவற்றை பாசம், பிரிவு, காதல் என்ற கலவைகளுடன் வித்தியாசமாக எழுதியுள்ளேன். இக்கதையின் முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137806163
Thunai Thedum Ullangal

Read more from Parimala Rajendran

Related to Thunai Thedum Ullangal

Related ebooks

Reviews for Thunai Thedum Ullangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thunai Thedum Ullangal - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    துணை தேடும் உள்ளங்கள்

    Thunai Thedum Ullangal

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அந்த அறை நிசப்தமாகயிருந்தது.

    ஃபேன் ஓடும் சப்தம் தவிர வேறு எந்த ஓசையும் இல்லை. அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் வாசுகி படுத்திருந்தாள்.

    வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருப்பவள். காலங்கள் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்துவிடுகிறது.

    உறவுகள் இருந்தும் பக்கத்தில் யாருமில்லாத தனிமை.

    வாசுகி நீ கொடுத்து வச்சவ. இரண்டு ஆண், ஒரு பெண். வரமாக மூன்று பிள்ளைகள். கடைசி காலம் உனக்கு பிள்ளை, பெண், மருமகள் மருமகன், பேரன், பேத்தின்னு சந்தோஷமாக போகும். வீடு நிறைய உறவுகள் இருந்து சேர்ந்து வாழற இனிமையை அனுபவிக்கப் போற. அவள் மாமியார் பார்வதி சொல்லும் வார்த்தைகள்.

    கனவு காணும் வாழ்க்கை எல்லோருக்கும் கைவசம் ஆவதில்லையே

    வாசுகி அப்படியொன்னும் ஒன்றுமில்லாத குடும்பத்திலிருந்து வரவில்லை. அப்பா மிராசுதாரர். அவரின் ஒரே செல்ல மகள் வாசுகி. அந்த காலத்திலேயே அறுபது பவுன் நகை போட்டு சீர்கொடுத்து விமரிசையாக கல்யாணம் பண்ணிவைத்தார்.

    அவளை கைப்பிடித்த கேசவனும் திறமைசாலிதான். சிமெண்ட் வியாபாரம். தொழில் தெரிந்தவன். வாழ்க்கையில் ஓரளவு முன்னேறினான்.

    வீடு, வாசல், குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்ந்தவள், இப்போது யாருமில்லாத தனிமையில் முதியோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறாள்.

    கதவு திறக்கும் சப்தம். உள்ளே வருகிறாள் லட்சுமி

    அம்மா எழுந்தாச்சா?

    ம். அப்பவே முழிச்சுட்டேன். எழுந்து பெருசா என்னால் எதுவும் செய்ய முடியலை. அதான் நேரம் கழிச்சு எழுந்து வருவோம்னு படுத்திருந்தேன்.

    எழுந்து வாங்கம்மா. உங்க வயசுள்ளவங்க மரத்தடியில் பெஞ்சில் உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க. நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம். அடுத்தவங்களோடு மனசுவிட்டு பேசலாமே. வந்து ஒரு வருஷமாகப் போகுது. இன்னும் சகஜமாக யாருகிட்டேயும் பேச மாட்டேன்கிறீங்க. இங்க இருப்பவங்க எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டவங்கதான் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக நாலு வார்த்தை பேசிக்கலாமே.

    தினமும் லட்சுமி இதை ஒரு முறையாவது அவளிடம் சொல்லி விடுவாள். சிரிக்க சிரிக்க பேசுபவள் தான் வாசுகி. இன்று சிரிப்பையே தொலைத்துவிட்டு நிற்கிறாள். என் சோகம், வேதனை என்னோடு போகட்டும். மெல்ல படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறாள்.

    எல்லோரும் அமர்ந்திருக்கும் இடத்திற்கு போகாமல், வேப்ப மரத்தடியில் இருந்த மேடையில் உட்காருகிறாள்.

    வாசுகியை பார்த்தியா விசாலம், எப்போதும் தனிமை தான். எப்படி இவளால் நேரத்தை ஓட்ட முடிகிறது?

    அவ மனசில் இருக்கும் சோகம் அப்படி என்ன செய்யறது?

    யாருக்குத்தான் சோகம் இல்லை. இங்கே இருக்கிற எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு தானே இருக்கிறோம். இப்படி இருந்தால் இன்னும் வேதனை தான் அதிகமாகும்.

    அவர்கள் பேசுவது வாசுகியின் காதில் விழத்தான் செய்கிறது. சுபாவத்திலேயே அமைதியானவள் தான் வாசுகி. அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை வெளிப்படையாக பேசமாட்டாள்.

    கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்கிறாள் வாசுகி.

    ***

    அவள் ரேங்க் கார்டை பார்க்கிறார் சடகோபன்.

    என்னம்மா இது. கணக்கில் இவ்வளவு குறைச்சலாக மார்க் வாங்கியிருக்கே. நான்தான் படிக்கல. என் மகள் நீயாது பெரிய படிப்பு படிக்கணும்னு நினைக்கிறேன். நாற்பதை தாண்ட மாட்டேங்கிறே.

    பதினாறு வயது இளம் மங்கையாக கன்னத்தில் குழி விழ சிரிக்கிறாள்.

    அப்பா இதுவே அதிகம். சார் சொல்லித் தர்றது எனக்கு புரியலை. என்ன செய்ய சொல்றீங்க?

    ரொம்ப நல்லாயிருக்குறது நீ பதில் சொல்ற லட்சணம், உன் சிநேகிதி மோகனா 80 மார்க் வாங்கியிருக்கான்னு அவ அம்மா சொன்னா... சொல்லியபடி வருகிறாள் சங்கரி.

    அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? அவளுக்கு காலேஜ் படிக்கிற அண்ணன் இருக்கான். புரியாததை சொல்லி தர்றான். எனக்கு யார் இருக்கா? எனக்கு தெரிஞ்சதை போடறேன், போம்மா என்னையே குறை சொல்லாதே...

    பார்த்தீங்களா அவ சொல்றதை - கணவனை பார்க்க...

    அவ சொல்றது எனக்கு சரியாகத்தான்படுது சங்கரி. புரியாததை சொல்லித் தர அவளுக்கு யாருமில்லை. டியூஷன் ஏதாவது ஏற்பாடு பண்ணணும்.

    எதுக்கு டியூஷன்? மோகனா அம்மாகிட்டே நான் இவ மார்க்கை சொல்லி வருத்தப்பட்டப்ப, நீங்க வாசுகியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க, என் மகன் ராமுவையே அவளுக்கும் சொல்லித்தர சொல்றேன்னு சொன்னாங்க. பேசாமல் அங்கே அனுப்புவோம் மோகனாவுடன் சேர்ந்து இவளும் படிக்கட்டும்.

    நீ என்னம்மா சொல்ற?

    சரிப்பா போறேன்.

    கன்னத்தில் குழி விழ தங்கையோடு சிரித்து பேசியபடி வரும் வாசுகியை பார்க்கிறான் ராமு.

    வாசுகியை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறான். இப்போது தான் முதன்முறையாக அருகில் பார்க்கிறான்.

    புதிதாக மலர்ந்த ரோஜா மலர்போல பளிச்சென்று பிரகாசமாக இருக்கிறாள். பாவாடை தாவணியில் இமை படபடக்க அவள் பேசும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது.

    அண்ணா என் பிரெண்டு வாசுகிக்கும் இனி நீதான் சொல்லித் தரணும். அம்மாவின் ஆர்டர்...

    ம்... அம்மா சொன்னாங்க...

    சொன்னவன் தங்கையின் அருகில் நிற்கும் வாசுகியை பார்க்கிறான்.

    உனக்கு கணக்கு வராதா?

    ஏன் வருமே...

    "அப்புறம்

    Enjoying the preview?
    Page 1 of 1