Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Patrathu Patratru
Patrathu Patratru
Patrathu Patratru
Ebook117 pages46 minutes

Patrathu Patratru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

”அதனுள் உன்னைக் காண்பதே சிறுகதை” என்றான் ஒரு ஆங்கில அறிஞன். இந்தத் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே நீங்கள் உங்களையோ உங்களைச் சுற்றி இருப்பவர்களையோ காண முடியும்.. எல்லாமே நிதர்சனமான யதார்த்தங்கள்..
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580142306697
Patrathu Patratru

Read more from Sl Naanu

Related to Patrathu Patratru

Related ebooks

Reviews for Patrathu Patratru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Patrathu Patratru - SL Naanu

    https://www.pustaka.co.in

    பற்றது பற்றற்று

    Patrathu Patratru

    Author:

    SL நாணு

    SL Naanu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sl-naanu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    1.பற்றது பற்றற்று

    2.வெங்கு மாமா

    3.அப்பாவின் கடிதங்கள்

    4.யதார்த்தம்

    5.வலி

    6.அன்பிற்கும் உண்டோ..

    7.அந்த மூன்று நாட்கள்

    8.மாற்றம்

    9.குப்பை

    10.ஆத்மா

    சமர்ப்பணம்

    என்னை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்திய எனது தகப்பனார் திரு. சகஸ்ரநாமன் மற்றும் எனது தாயார் திருமதி சிவகாமி அவர்களுக்கு

    1.பற்றது பற்றற்று

    1

    மும்பை நகரத்து சாலைகளின் அவசரத்தை விஞ்சும் வேகத்தில் ஸ்கூட்டியை செலுத்தினாள் அகல்யா.. அவள் முகத்தில் அளவுக்கதிகமான கலவரம்.. ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போன்ற தவிப்பு..

    ஜூஹூ பீச்சில் கிடைத்த இடத்தில் அவசரமாக ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு பதட்டத்துடன் மணலில் விரைந்தாள்.. அவள் கண்கள் நாலா பக்கமும் அஞ்சுவைத் தேடின.. பல தலைகளை ஒதுக்கிய பிறகு தூரத்தில் அஞ்சு தெரிந்தாள்..

    அஞ்சு.. அஞ்சு மல்ஹோத்ரா .. அகல்யாவின் ஆருயிர் தோழி..

    ஒரு மணி நேரம் முன்னால் அஞ்சு மொபைலில் சொன்ன விஷயம் தான் அகல்யாவை இப்படிப் பதட்டப் பட்டு அவசர அவசரமாக விரைந்து வரும்படி செய்திருந்தது.. அதைக் கேட்டதிலிருந்து கூடாது.. அஞ்சு அப்படிப் பண்ணக் கூடாது என்று அவள் மனம் திரும்பத் திரும்பப் புலம்பிக் கொண்டிருந்தது.

    அஞ்சுவின் அருகில் சென்ற அகல்யா இடுப்பில் கை வைத்து அவளை சுட்டெறிப்பது போல் பார்த்தாள்..

    அஞ்சு எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக உட்காரு என்றாள்..

    நான் உட்கார வரலை? நீ எடுத்திருக்கிற முடிவு பைத்தியக்-காரத்தனம்னு சொல்லத் தான் வந்தேன்? என்று அகல்யா கத்தினாள்..

    கத்தாதே.. மொதல்ல உட்காரு.. உட்காருங்கறேன்ல.. என்று அமைதியாகச் சொன்னாள் அஞ்சு.

    அகல்யா படபடப்பு அடங்க கொஞ்சம் நிதானித்தாள்.. பிறகு அஞ்சுவின் அருகில் உட்கார்ந்து மெதுவாக..

    அஞ்சு.. என்னால இதை ஏத்துக்க முடியலை என்றாள்..

    ஏத்துக்கிட்டுத் தான் ஆகணும் அகல்யா.. வேற வழியில்லை

    சதீஷ் போன்லயே கன்னா பின்னான்னு கத்தினான்

    சதீஷ் கிட்ட நான் பேசிப் புரிய வெக்கறேன்

    இது தான் உன் முடிவா?

    இந்த முடிவுல ஒரு ஆரம்பம் இருக்கே..

    அந்த ஆரம்பம் உன் எதிர்காலத்துக்கு ஒரு முடிவா இருக்கலாம்

    இப்ப நான் அதைப் பத்தி நினைக்கக் கூடிய நிலமைல இல்லை.. நினைக்கவும் கூடாது.. இப்ப என் ப்ரியாரிட்டி என்னன்னு உனக்கேத் தெரியும்..

    அதில்லை.. அஞ்சு

    எங்கம்மாவைத் தவிற எனக்குன்னு சொல்லிக்க நீயும் உன் புருஷன் சதீஷும் தான் இருக்கீங்க.. நான் எடுத்த இந்த முடிவை அம்மா கிட்டச் சொல்ல முடியாது. அதான் உங்ககிட்டச் சொல்ல-ணும்னு தோணித்து.. சொல்லிட்டேன்.. அவ்ளவு தான்

    இருந்தாலும்..

    அகல்யா ஆரம்பிப்பதற்குள் அஞ்சு அவளை அடக்கினாள்..

    ப்ளீஸ் அகல்யா.. வேண்டாம்.. எனக்கு வேற ஆப்ஷன் இல்லை.. நான் முடிவு பண்ணியாச்சு.. இதுக்கு மேல இதைப் பத்திப் பேச வேண்டாம்..

    அகல்யாவுக்குக் கோபம் வந்தது.. சட்டென்று எழுந்தாள்..

    எனக்குப் பிடிக்கலை.. உன் முடிவு எனக்குப் பிடிக்கலை.. பைத்தியக் காரத் தனம்.. ஏதோ விபரீதம் இருக்குன்னு என் உள் மனசு சொல்றது. அதையும் மீறி நீ பிடிவாதம் பிடிச்சா.. கோ டு ஹெல் என்று கத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.. அவள் மனதில் இருந்த பதட்டம் நடையில் தெரிந்தது.

    அஞ்சுவுக்குத் தெரியும்.. அகல்யாவுக்கு அவளிடம் அளவு கடந்த பாசம். அந்தப் பாசத்தின் வெளிப்பாடு தான் அவளின் கோபம்.

    யோசனையுடன் கடலையே வெரித்துப் பார்த்தபடி உட்கார்ந்-திருந்தாள் அஞ்சு...

    கடந்த இருபது நாட்களில் என்னென்னமோ நடந்து விட்டன. அதைப் பற்றி நினைக்க நினைக்க நடந்ததெல்லாம் கனவா இல்லை நினைவா என்று அவள் மனதில் சந்தேகம் எழுந்தது.

    2

    அந்த எட்டு மாடி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் Seven Systems என்று நீல கலரில் கண்ணாடியில் எழுதியிருக்கும் அலுவலகத்தின் வரவேற்பில் சிஸ்டத்தைத் தூங்க வைத்து.. போர்டை ஆட்டோ மோடில் செலுத்தி கைப் பையை தோளில் மாட்டிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள் அஞ்சு மல்ஹோத்ரா. சட்டென்று ஞாபகம் வந்தவளாக மேனேஜர் வாடேகரின் அறைக் கதவைத் தட்டி தலையை நீட்ட.. முன் வழுக்கையுடன் லேப்-டாப்பில் மூழ்கியிருந்த வாடேகர் நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தார்.

    ரிமைண்டர்.. நாளைக்கு நான் லீவ்.. என்கிறாள்..

    என்ன Boy friendஓட ஊர் சுத்தப் போறயா?

    வாடேகரின் குரலில் கிண்டல்..

    அம்மாவை ரெகுலர் செக்-அப் கூட்டிட்டுப் போகப் போறேன்

    அவர் பதிலுக்குக் காத்திராமல் கதவைப் பட்டென்று மூடி லிப்டை நோக்கி நகர்ந்தாள் அஞ்சு.

    வெளியே வானம் கருத்து மழை பெய்துக் கொண்டிருந்தது.. அலுவலகத்துக்குள் மழையின் சுவடே தெரியாதது ஆச்சர்யம்..

    வேறு வழி இல்லாமல் மற்றவர்களுடன் அலுவலக வாசலில் மழை நிற்பதற்காக காத்திருந்தாள்.. வீட்டில் அம்மா கவலைப் படுவாளே என்று தோன்றவே செல்லில் அம்மாவை அழைக்க முயற்சி செய்தாள். வழக்கம் போல் நாட் ரீச்சபிள் செய்தியை ஆங்கிலம் கலந்த மராட்டியில் ஒரு பெண் அறிவித்தாள். அவள் வீடு ஒரு சந்துக்குள் இருந்ததால் எப்போதும் சிக்னல் பிரச்சனை தான்.

    வானம் கொஞ்சம் தெளிவானவுடன் அவசரமாக பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைந்து ஏற்கனவே நிரம்பி வழிந்த பஸ்ஸில் தன்னையும் பொருத்திக் கொண்டாள்.. வழக்கமான இடுபாடுகளை சமாளித்து இறங்க வேண்டிய ஸ்டாப்பில் ட்யூபிலிருந்து வெளிப்படும் பேஸ்டைப் போல் வெளியேறினாள்.

    மழை விட்டிருந்தது. போகும் வழியில் சப்ஜி மணிடியிலிருந்து காய் வாங்கிக் கொண்டாள்.

    அவள் நினைத்தது போலவே அம்மா சகுந்தலா தேவி ரொம்பவே கவலையோடு காத்திருந்தாள்.

    ஏன் இவ்வளவு லேட்டு?

    மகளைப் பார்த்தவுடன் பொறுக்க முடியாமல் கேட்டாள்.

    மழை.. என்ன பண்ணறது?.. சொல்லலாம்னா வழக்கம் போல உன் போன் ரீச் ஆகலை.. என்று செருப்பைக் கழட்டி ஷெல்பில் வைத்து கைப் பையை மேஜையில் வீசியபடி சொன்னாள் அஞ்சு.

    கவலையா இருந்தது

    என்ன கவலை.. காணாமப் போக நான் என்ன குழந்தையா

    அம்மாவை ஆதரவாக அணைத்தபடி தைரியம் சொல்லி அறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1